மேலும் அறிய

Chennai Air Show Death: உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு ரூ.1 லட்சம்; குழந்தைகளின் கல்விச் செலவை ஏற்கிறோம்- காங்கிரஸ் அறிவிப்பு

Chennai Air Show 2024 Death: சென்னை மெரினா விமான சாகச நிகழ்வுக்குச் சென்று உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு ரூ.1 லட்சம் வழங்கப்படும் என்று காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப் பெருந்தகை அறிவித்துள்ளார்.

சென்னை மெரினா விமான சாகச நிகழ்வுக்குச் சென்று உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு ரூ.1 லட்சம் வழங்கப்படும் என்றும் இறந்தவர்களுடைய குழந்தைகளின் கல்விச் செலவை தமிழ்நாடு மாநில காங்கிரஸ் கமிட்டி ஏற்கும் என்றும் காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப் பெருந்தகை அறிவித்துள்ளார்.

விமான சாகச நிகழ்ச்சியில் விழிபிதுங்கிய மக்கள்

இந்திய விமானப் படை சார்பில் விமான சாகச நிகழ்ச்சி நேற்று காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு முன்னதாக, போலீஸாரும் சென்னை மாநகராட்சியும் இணைந்து தேவையான ஏற்பாடுகளைச் செய்தனர். காலை 7 மணி முதலே நிகழ்வு நடைபெறும் இடத்தில் மக்கள் குவிந்தனர். பார்க்கிங் வசதி தனியாக பல்வேறு சாலைகளில் செய்யப்பட்டு இருந்தது. காவல்துறையினர் கூட்டத்தைக் கட்டுக்குள் வைத்தனர்.

காலையில் முறையான திட்டமிடல் செய்யப்பட்டிருந்த நிலையில், மக்கள் கூட்டம் கட்டுக்குள் இருந்தது. மக்களும் வெவ்வேறு நேரங்களில் கடற்கரைக்கு வந்ததால், காவல் துறையினர் கட்டுப்படுத்துவதும் எளிதாக இருந்தது. எனினும் நிகழ்ச்சி முடிந்த பிறகு எல்லா மக்களும் ஒரே நேரத்தில் வெளியே வரத் தொடங்கினர். கடற்கரையில் இருந்து காமராஜர் சாலைக்கு வர வெவ்வேறு வழிகள் இருந்ததால், அனைத்து வழிகளிலும் மக்கள் கூட்டம் சாரை சாரையாகப் படையடுத்தது.

5 பேர் பலி, 102 பேர் மருத்துவமனையில் அனுமதி

இதனால் ஏற்கெனவே வந்த கூட்டத்துடன் புதிதாக வந்தவர்களின் எண்ணிக்கையும் சேர்ந்தது. திரும்பச் செல்லும்போது போலீஸார் யாரும் போக்குவரத்தை ஒருங்கிணைக்காததால், நேரம் செல்லச் செல்ல கூட்டம் தள்ளுமுள்ளாக மாறியது. இதில் ஏராளமான பொதுமக்கள் மாட்டிக் கொண்டனர். வெயில் மற்றும் கூட்ட நெரிசலில் 5 பேர் பலியாகினர். 102 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 

இதுகுறித்து எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட எதிர்க் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்த நிலையில், விசிக தலைவர் திருமாவளவன், மார்க்சிஸ்ட் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்களே உயர்மட்ட விசாரணை கோரி உள்ளனர். 

இந்த நிலையில், சாகச நிகழ்வுக்குச் சென்று உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு ரூ.1 லட்சம் வழங்கப்படும் என்றும் இறந்தவர்களுடைய குழந்தைகளின் கல்விச் செலவை தமிழ்நாடு மாநில காங்கிரஸ் கமிட்டி ஏற்கும் என்றும் காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப் பெருந்தகை அறிவித்துள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Ratan Tata: தொழிலதிபர் ரத்தன் டாடா மும்பை மருத்துவமனையில் திடீர் அனுமதி; என்ன ஆச்சு?
Ratan Tata: தொழிலதிபர் ரத்தன் டாடா மும்பை மருத்துவமனையில் திடீர் அனுமதி; என்ன ஆச்சு?
Lalu Prasad Yadav: பண மோசடி வழக்கு - லாலு பிரசாத் யாதவ், மகன்களுக்கு ஜாமின் வழங்கிய நீதிமன்றம்
Lalu Prasad Yadav: பண மோசடி வழக்கு - லாலு பிரசாத் யாதவ், மகன்களுக்கு ஜாமின் வழங்கிய நீதிமன்றம்
'மக்களைக் காக்க வேண்டியது அரசின் கடமை; உளவுத்துறை தோல்வி; கையலாகாத்தனம்'- ஈபிஎஸ் கடும் கண்டனம்
'மக்களைக் காக்க வேண்டியது அரசின் கடமை; உளவுத்துறை தோல்வி; கையலாகாத்தனம்'- ஈபிஎஸ் கடும் கண்டனம்
Amaran: சிவகார்த்திகேயனின் அமரன் படத்தை தயாரித்தது ஏன்? மனம் திறந்த கமல்ஹாசன்!
Amaran: சிவகார்த்திகேயனின் அமரன் படத்தை தயாரித்தது ஏன்? மனம் திறந்த கமல்ஹாசன்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Air show in Marina | கொடூர வெயில்! Traffic-ல் சிக்கிய ஆம்புலன்ஸ்கள்! அடுத்தடுத்து மயங்கிய மக்கள்Chennai Councillor Stalin | லஞ்சம் கேட்டாரா கவுன்சிலர்? திமுக தலைமை அதிரடி ஆக்‌ஷன்! நடந்தது என்ன?Haryana election Exit Poll | அடித்து ஆடும் Rahul... சறுக்கிய Modi! ஹரியானா தேர்தல் EXIT POLLVanathi Srinivasan | விஸ்வகர்மா விவகாரம்”சாதி முலாம் பூசும் திமுக”வெடிக்கும் வானதி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Ratan Tata: தொழிலதிபர் ரத்தன் டாடா மும்பை மருத்துவமனையில் திடீர் அனுமதி; என்ன ஆச்சு?
Ratan Tata: தொழிலதிபர் ரத்தன் டாடா மும்பை மருத்துவமனையில் திடீர் அனுமதி; என்ன ஆச்சு?
Lalu Prasad Yadav: பண மோசடி வழக்கு - லாலு பிரசாத் யாதவ், மகன்களுக்கு ஜாமின் வழங்கிய நீதிமன்றம்
Lalu Prasad Yadav: பண மோசடி வழக்கு - லாலு பிரசாத் யாதவ், மகன்களுக்கு ஜாமின் வழங்கிய நீதிமன்றம்
'மக்களைக் காக்க வேண்டியது அரசின் கடமை; உளவுத்துறை தோல்வி; கையலாகாத்தனம்'- ஈபிஎஸ் கடும் கண்டனம்
'மக்களைக் காக்க வேண்டியது அரசின் கடமை; உளவுத்துறை தோல்வி; கையலாகாத்தனம்'- ஈபிஎஸ் கடும் கண்டனம்
Amaran: சிவகார்த்திகேயனின் அமரன் படத்தை தயாரித்தது ஏன்? மனம் திறந்த கமல்ஹாசன்!
Amaran: சிவகார்த்திகேயனின் அமரன் படத்தை தயாரித்தது ஏன்? மனம் திறந்த கமல்ஹாசன்!
Chennai Air Show:
Chennai Air Show: "வெயில் கொடூரமாக இருந்தது! உயிரிழப்பில் அரசியல் வேண்டாம்" அமைச்சர் மா.சுப்பிரமணியன்
Breaking News LIVE 7 Oct : சென்னை மெரினாவில் மட்டும் 18.5 டன் குப்பைகள் அகற்றம்
Breaking News LIVE 7 Oct : சென்னை மெரினாவில் மட்டும் 18.5 டன் குப்பைகள் அகற்றம்
“டாஸ்மாக் மதுக் கடைகளை குறைக்கத் திட்டம்?” நாளைய அமைச்சரவை கூட்டத்தில் முக்கிய முடிவுகள்..!
“டாஸ்மாக் மதுக் கடைகளை குறைக்கத் திட்டம்?” நாளைய அமைச்சரவை கூட்டத்தில் முக்கிய முடிவுகள்..!
Chennai Airshow: சென்னை விமான சாகச உயிரிழப்பு; கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும்! கனிமொழி அட்வைஸ்
Chennai Airshow: சென்னை விமான சாகச உயிரிழப்பு; கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும்! கனிமொழி அட்வைஸ்
Embed widget