மேலும் அறிய

Family Planning Death Issue: குடும்பக் கட்டுப்பாடு செய்த பெண் உயிரிழப்பு... உறவினர்கள் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு

தவறான சிகிச்சை வழங்கிய அரசு மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆட்சியர் அலுவலக நுழைவாயில் அமர்ந்து உறுப்பினர்கள் தர்ணா.

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள பனைமடல் பகுதியைச் சேர்ந்தவர் லாரி ஓட்டுனரான முருகன். இவரது மனைவி செல்லம். இந்த தம்பதிகளுக்கு ஏற்கனவே நான்கு குழந்தைகள் உள்ள நிலையில் ஐந்தாவதாக கடந்த 14 ஆம் தேதி ஆத்தூர் அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. சுகப்பிரசவமாக குழந்தை பிறந்த நிலையில் செல்லத்திற்கு குடும்பக் கட்டுப்பாடு ஆபரேஷனை மருத்துவர்கள் செய்துள்ளனர். இதில் அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக செல்லத்தை அனுமதித்தனர். 

Family Planning Death Issue: குடும்பக் கட்டுப்பாடு செய்த பெண் உயிரிழப்பு... உறவினர்கள் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு

தொடர்ந்து செல்லம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். எதற்கு ஆத்தூர் அரசு மருத்துவமனையில் அளிக்கப்பட்ட குடும்ப கட்டுப்பாடு ஆபரேஷன் தான் காரணம் எனக் கூறி அவரது உறவினர்கள் நேற்று கருமந்துறை - ஏத்தாப்பூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் உயிரிழந்த செல்லம் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும் எனக் கூறி சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த ஆத்தூர் டி.எஸ்.பி., சதீஷ்குமார், மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பி வைத்தார். மறியல் காரணமாக அப்பகுதியில் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் இன்று இரண்டாவது நாளாக சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு நூற்றுக்கும் மேற்பட்ட உறவினர்கள் தவறான சிகிச்சை வழங்கிய அரசு மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். உயிரிழந்த பெண்ணிற்கு உடற்கூறு ஆய்வு மருத்துவக் குழு மூலம் செய்ய வேண்டும். குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆட்சியர் அலுவலக நுழைவாயில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. தொடர்ந்து அங்கு குவிக்கப்பட்டிருந்த உதவி கமிஷனர் தலைமையிலான காவல்துறையினர் அனைவரையும் பேச்சுவார்த்தை நடத்தி அப்புறப்படுத்தினர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"நீங்க எங்களுக்குப் பாடம் எடுக்க வேணா" சட்டப்பேரவையில் கொதித்த முதல்வர் ஸ்டாலின்!
"நாங்க இருக்கோம்" தோழனுக்கு தோள் கொடுத்த மம்தா.. இனி கெஜ்ரிவாலுக்கு நல்ல நேரம்தான் போல!
திக் திக்.. நிலக்கரி சுரங்கத்தில் சிக்கி தவிக்கும் தொழிலாளர்கள்.. களத்தில் இறங்கிய இந்திய கடற்படை!
திக் திக்.. நிலக்கரி சுரங்கத்தில் சிக்கி தவிக்கும் தொழிலாளர்கள்.. களத்தில் இறங்கிய இந்திய கடற்படை!
மது பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி: இந்த பீர்கள் இனி கிடைக்காது.! எங்கே? எதனால்?
மது பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி: இந்த பீர்கள் இனி கிடைக்காது.! எங்கே? எதனால்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ISRO Narayanan Profile | ISRO தலைவராகும் தமிழர்! சந்திராயன் 3-ன் SUPER HERO..யார் இந்த வி.நாராயணன்?Erode By Election | ஈரோடு இடைத்தேர்தல் சீட் கேட்கும் EVKS மகன் மக்கள் ராஜன் போர்க்கொடி  DMK AllianceKanguva in Oscar | OSCAR ரேஸில் கங்குவா தேர்வான பின்னணி என்ன? விமர்சனங்களுக்கு சூர்யா பதிலடி!Allu arjun meet Sritej | ”பையனை நான் பாத்துக்குறேன்”தந்தையிடம் கண் கலங்கிய அல்லு அர்ஜுன் | Pushpa 2

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"நீங்க எங்களுக்குப் பாடம் எடுக்க வேணா" சட்டப்பேரவையில் கொதித்த முதல்வர் ஸ்டாலின்!
"நாங்க இருக்கோம்" தோழனுக்கு தோள் கொடுத்த மம்தா.. இனி கெஜ்ரிவாலுக்கு நல்ல நேரம்தான் போல!
திக் திக்.. நிலக்கரி சுரங்கத்தில் சிக்கி தவிக்கும் தொழிலாளர்கள்.. களத்தில் இறங்கிய இந்திய கடற்படை!
திக் திக்.. நிலக்கரி சுரங்கத்தில் சிக்கி தவிக்கும் தொழிலாளர்கள்.. களத்தில் இறங்கிய இந்திய கடற்படை!
மது பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி: இந்த பீர்கள் இனி கிடைக்காது.! எங்கே? எதனால்?
மது பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி: இந்த பீர்கள் இனி கிடைக்காது.! எங்கே? எதனால்?
Coolie Release Date : ஜெயிலர் தேதியில் கூலி? இணையத்தில் தீயாய் பரவும் தகவல்
Coolie Release Date : ஜெயிலர் தேதியில் கூலி? இணையத்தில் தீயாய் பரவும் தகவல்
அச்சு வெல்லமே... அச்சு வெல்லமே: தயாரிப்பு பணிகள் வெகு மும்முரம்
அச்சு வெல்லமே... அச்சு வெல்லமே: தயாரிப்பு பணிகள் வெகு மும்முரம்
TNPSC Group 4: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வர்களே.. ஜன.22 முதல்- வெளியான முக்கிய அறிவிப்பு!
TNPSC Group 4: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வர்களே.. ஜன.22 முதல்- வெளியான முக்கிய அறிவிப்பு!
"இனி பணமே தேவை இல்ல" சாலை விபத்தில் சிக்கியவர்கள் நோ டென்ஷன்!
Embed widget