மேலும் அறிய

திண்டுக்கலில் அடித்துச் செல்லப்பட்ட தரைப்பாலம் - தனித்தீவாக மாறிய ஆத்துப்பட்டி கிராமம்

’’ஆத்துப்பட்டி கிராமத்தில் விரைவில் புதிய தரைப்பாலம் கட்டித்தரப்படும் என அமைச்சர் இ.பெரியசாமி உறுதி’’

திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு பேரூராட்சி ஆத்துப்பட்டி அருகே குடகனாறு செல்கிறது. இந்த ஆற்றை கடந்துதான் ஆத்துப்பட்டி கிராம மக்கள் வெளியூருக்கு சென்று வருகின்றனர். இந்த ஊருக்கு தெற்கே சந்தானவர்த்தினி ஆறும், வடக்கே வரட்டாறும் செல்கிறது. இதனால் மழை காலத்தில் ஆறுகளில் தண்ணீர் வரும்போது இந்த ஊர் தனித்தீவு போன்று காணப்படும். இதனால் மழை காலத்தில் இந்த ஊரை சேர்ந்த பொதுமக்கள் அன்றாட தேவைகளுக்கு கூட வெளியே வர முடியாத நிலை இருந்தது. 


திண்டுக்கலில் அடித்துச் செல்லப்பட்ட தரைப்பாலம் - தனித்தீவாக மாறிய ஆத்துப்பட்டி கிராமம்

இதையடுத்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன் மண்ணால் ஆன தற்காலிக தரைப்பாலம் ஒன்று அமைக்கப்பட்டது. இந்தநிலையில் கடந்த சில நாட்களாக பெய்த மழையால் குடகனாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அரிப்பு ஏற்பட்டு நேற்று முன்தினம் இரவு ஆத்துப்பட்டி தரைப்பாலம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. இதை தொடர்ந்து பொதுமக்கள் வெளியே எங்கும் செல்ல முடியாமல் தவிப்படைந்தனர். மேலும் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

திண்டுக்கலில் அடித்துச் செல்லப்பட்ட தரைப்பாலம் - தனித்தீவாக மாறிய ஆத்துப்பட்டி கிராமம்
 
இது குறித்து தகவல் அறிந்ததும் நேற்று கூட்டுறவுத் துறை அமைச்சர் இ.பெரியசாமி, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் விசாகன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது பொதுமக்கள் அமைச்சரிடம் பாலம் கட்டி தருமாறு மறுகரையில் இருந்தவாறே கோரிக்கை விடுத்தனர். இதைத்தொடர்ந்து அமைச்சர் பேசுகையில், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு தி.மு.க. ஆட்சியில் அய்யம்பாளையம் செல்லும் வழியில் குடகனாற்றின் குறுக்கே சுமார் 8 கோடி மதிப்பில் ஒரு பாலம் கட்டப்பட்டது. கடந்த 10 ஆண்டு கால அ.தி.மு.க. ஆட்சியில் இதுகுறித்து கோரிக்கை வைத்தபோது பாலம் கட்டி தரவில்லை.

திண்டுக்கலில் அடித்துச் செல்லப்பட்ட தரைப்பாலம் - தனித்தீவாக மாறிய ஆத்துப்பட்டி கிராமம்
 
புதிய பாலம் கட்டுவது தொடர்பாக நீர்ப்பாசனத்துறை அமைச்சர் துரைமுருகன் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு ஆகியோரிடம் பேசியுள்ளேன். முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று உடனடியாக ஆத்துப்பட்டி கிராமத்துக்கு புதிய பாலம் கட்டி தரப்படும் என்று உறுதி அளிக்கிறேன். மேலும் ரேஷன் கடை அமைக்கவும் ஏற்பாடு செய்து தருகிறேன் என்றார். பின்னர் அவர் பாலம் கட்டுவதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
 
இந்தநிலையில் நேற்று காலை முதல் தீயணைப்பு படையினர், வருவாய் துறையினர் சம்பவ இடத்தில் முகாமிட்டு மீட்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் அடித்து செல்லப்பட்ட தரைப்பாலத்தை தற்காலிகமாக சரிசெய்யும் பணியையும், அப்பகுதியில் மேலும் மண்அரிப்பு ஏற்படாதவகையில் பாதுகாக்கும் பொருட்டு மணல் மூட்டைகளை அடுக்கும் பணியையும் தாடிக்கொம்பு பேரூராட்சி பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
 
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சிEB Office Alcohol | அலுவலகத்தில் மது அருந்திய மின்சார வாரிய ஊழியர்கள்!’’ஏய்..டம்ளர் எடுத்துட்டு வா’’

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Seeman: “தம்பி விஜய் ஏன் என்னை மாதிரி பேச வேண்டும்.. அவருக்கு இன்னும் ஒரு படம் இருக்கு” - கொந்தளித்த சீமான்!
“தம்பி விஜய் ஏன் என்னை மாதிரி பேச வேண்டும்.. அவருக்கு இன்னும் ஒரு படம் இருக்கு” - கொந்தளித்த சீமான்!
Embed widget