TVK Vijay: “ராகுல் உள்ளிட்டோர் கைது கடும் கண்டனத்திற்குரியது“ - தவெக தலைவர் விஜய்யின் பதிவு என்ன.?
டெல்லியில் இன்று ராகுல் உள்ளிட்ட எம்.பி-க்கள் கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ள தவெக தலைவர் விஜய், சுதந்திரமான, நியாயமான முறையில் தேர்தல் நடைபெறுவது உறுதி செய்யப்பட வேண்டும் என கூறியுள்ளார்.

டெல்லியில் இன்று ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி-க்கள் கைது செய்யப்பட்டதற்கு, தவெக தலைவர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்ட விஜய், ஜனநாயகத்தை காக்கும் வகையில், சுதந்திரமான மற்றம் நியாயமான முறையில் தேர்தல் நடைபெறுவது உறுதி செய்யப்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
ராகுல் காந்தி உள்ளிட்டோர் கைது
டெல்லியில், வாக்காளர் பட்டியல் முறைகேடு குறித்து விசாரணை நடத்தவும், பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், இன்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தலைமையில், இண்டியா கூட்டணி எம்.பி-க்கள், நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து, இந்திய தலைமை தேர்தல் ஆணையம் நோக்கி பேரணி சென்றனர்.
இந்நிலையில், அவர்களை தடுத்து நிறுத்திய டெல்லி காவல்துறையினர், ராகுல் காந்தி உள்ளிட்ட எம்.பி-க்களை கைது செய்னர்.
“எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டது கண்டனத்திற்குரியது“
இது குறித்து தவெக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், சுதந்திரமான மற்றும் நியாயமானத் தேர்தலை வலியுறுத்தியும், பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும், டெல்லியில் இன்று நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து தலைமைத் தேர்தல் ஆணையம் நோக்கி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் ஊர்வலமாகச் சென்ற நாடாளுமன்ற எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டது, கடும் கண்டனத்திற்குரியது என தெரிவித்துள்ளார்.
அதோடு, கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற "எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்" புத்தக வெளியீட்டு விழாவில் பேசியபோது, “நம் நாடு முழு வளர்ச்சியை அடைய வேண்டும் என்றால் ஜனநாயகம் காக்கப்பட வேண்டும் என்றும், அப்படி ஜனநாயகம் காக்கப்பட வேண்டும் என்றால், அரசியலமைப்புச் சட்டம் காக்கப்பட வேண்டும் என்றும், அதற்கான பொறுப்பும் கடமையும் நம் ஒவ்வொருவரிடமும் இருக்க வேண்டும் எனவு, ஜனநாயகத்தின் ஆணிவேர் சுதந்திரமான மற்றும் நியாயமானத் தேர்தல்” (Free and Fair Election) என்று அப்பொழுதே ஆணித்தரமாகத் தெரிவித்திருந்தோம் எனவும் விஜய் கூறியுள்ளா. அத்தோடு, தேர்தல் ஆணையர்கள் ஒருமித்த கருத்தோடு தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்றும் கூறியிருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
“சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல் நடைபெறுவதை உறுதி செய்க“
மேலும், பீகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தம் நடைபெற உள்ளதாகத் தகவல் வெளியானதும், அந்த நடைமுறையானது ஜனநாயக உரிமைகளைக் கேள்விக்குறியாக்கும் என்று, தமிழ்நாட்டில் இருந்து தமிழக வெற்றிக் கழகம்தான் முதன்முதலாகக் குரல் எழுப்பியதாகவும் விஜய் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஏற்கெனவே தாம் கூறியது போல, அனைவருக்கும் நம்பிக்கை ஏற்படும் விதமாக, ஜனநாயகத்தைக் காக்கும் வகையில் சுதந்திரமான மற்றும் நியாயமான முறையில் தேர்தல் (Free and Fair Election) நடைபெறுவது உறுதி செய்யப்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்வதாகவும், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
சுதந்திரமான மற்றும் நியாயமானத் தேர்தலை வலியுறுத்தியும், பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும் டெல்லியில் இன்று நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து தலைமைத் தேர்தல் ஆணையம் நோக்கி மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் திரு. ராகுல் காந்தி அவர்கள்…
— TVK Vijay (@TVKVijayHQ) August 11, 2025





















