மேலும் அறிய

மத்திய அரசுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு! கர்நாடகாவை தொடர்ந்து தமிழ்நாடு அரசு அதிரடி!

வெள்ள நிவாரண தொகை கோரி மத்திய அரசுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு தொடர்ந்துள்ளது.

மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் மத்திய அரசு நடந்து கொள்வதாக எதிர்க்கட்சிகள் கடும் குற்றச்சாட்டை சுமத்தி வருகின்றன. குறிப்பாக, எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு தேவையான நிதி உதவியை வழங்குவதில்லை என மத்திய அரசு மீது புகார் எழுந்த வண்ணம் உள்ளது.

உச்ச நீதிமன்றத்தை நாடும் மாநில அரசுகள்:

கடன் வழங்கும் அளவை உயர்த்தக் கோரி கேரள அரசும் வறட்சி நிவாரண தொகை வழங்கக் கோரி கர்நாடக அரசும் மத்திய அரசுக்கு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அந்த வரிசையில் தற்போது தமிழ்நாடு அரசும் இணைந்துள்ளது. 

கடந்தாண்டு டிசம்பர் மாதம், மிக்ஜாம் புயலால் தமிழ்நாட்டில் மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டது. மிக்ஜாம் புயலை தொடர்ந்து, தென் தமிழ்நாட்டில் வரலாறு காணாத கனமழை பெய்தது. எனவே, மிக்ஜாம் புயல் பாதிப்பால் ஏற்பட்ட சேதத்திற்கு 19,692.69 கோடி ரூபாயும் தென் தமிழ்நாட்டில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புக்கு நிவாரணமாக 18,214.52 கோடி ரூபாய் வழங்க வேண்டும் என மத்திய அரசிடம் தமிழ்நாடு அரசு கோரிக்கை விடுத்தது.

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கடந்தாண்டு டிசம்பர் மாதம் 19ஆம் தேதியும் தமிழ்நாடு தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா இந்தாண்டு ஜனவரி மாதம் 10ஆம தேதியும் இதுதொடர்பாக மத்திய அரசுக்கு கடிதம் எழுதினர். 

சட்டப் போராட்டத்துக்கு தயாரான தமிழ்நாடு:

நிவாரண நடவடிக்கைகள் மற்றும் தற்காலிக மறுசீரமைப்பு பணிகளை மேற்கொள்ள இடைக்கால நிவாரண நிதியாக 2 ஆயிரம் கோடி ரூபாய் வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இயற்கை பேரிடருக்கான நிவாரண தொகையை மத்திய அரசு நிறுத்தி வைத்திருப்பதாக தமிழ்நாடு அரசு குற்றஞ்சாட்டியுள்ளது.

தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மனுவில், "மிக்ஜாம் புயல் மற்றும் தென் மாவட்டங்களில் பெய்த வரலாறு காணாத கனமழை என இரட்டை பேரிடர்களால் பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டுக்கு நிவாரணம் வழங்கப்படவில்லை. பல முறை முறையிட்டும் இந்திய அரசு தேசிய பேரிடர் நிவாரண நிதியில் (NDRF) இருந்து எந்த நிதியும் வழங்கவில்லை.

நிவாரண நிதி வழங்குவது தொடர்பாக மத்திய அரசு எந்த முடிவும் எடுக்கவில்லை. இந்திய அரசியலமைப்பு 14 மற்றும் 21வது பிரிவுகளின் கீழ் மக்களின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளது. இது சட்டவிரோதமானது.  தன்னிச்சையானது.
 
தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து நிவாரணத் தொகைக்கு ஒப்புதல் அளிக்கவும், தமிழ்நாட்டுக்கு நிதியை வழங்கவும் உயர்மட்டக் குழுக் கூட்டத்தைக் கூட்டுவதில் உள்துறை அமைச்சகம் தாமதம் செய்துள்ளது. இது, மாநிலத்தின் வளர்ச்சியைத் தடுக்கும் வகையில் உள்ளது. பாதிக்கப்பட்ட குடிமக்களுக்கு மன உளைச்சல் மற்றும் சிரமத்தை ஏற்படுத்துகிறது" என குறிப்பிட்டுள்ளது.

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

CM Stalin: முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்த கூட்டணி கட்சித் தலைவர்கள் - கூடுதல் கட்சிகளை இணைக்க ஆலோசனை
முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்த கூட்டணி கட்சித் தலைவர்கள் - கூடுதல் கட்சிகளை இணைக்க ஆலோசனை
EPS Vs Mutharasan: “உங்க அப்பாவே வந்தாலும் தோற்கடிக்க முடியாது“ - முத்தரசனுக்கு EPS பதிலடி
“உங்க அப்பாவே வந்தாலும் தோற்கடிக்க முடியாது“ - முத்தரசனுக்கு EPS பதிலடி
Weekend Spl. Bus: வாரக் கடைசில ஊருக்கு போறீங்களா.? சிறப்புப் பேருந்துகளை அறிவித்த அரசு - முழு விவரம்
வாரக் கடைசில ஊருக்கு போறீங்களா.? சிறப்புப் பேருந்துகளை அறிவித்த அரசு - முழு விவரம்
EPS Campaign : ’34 நாட்கள், 10 ஆயிரம் கி.மீ, 100 தொகுதிகள்’ மாஸ் காட்டும் எடப்பாடி பழனிசாமி..!
’34 நாட்கள், 10 ஆயிரம் கி.மீ, 100 தொகுதிகள்’ மாஸ் காட்டும் எடப்பாடி பழனிசாமி..!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”கொங்கு-னா நாங்கதான்” CPR-ஐ வைத்து மோடி ஸ்கெட்ச்! செந்தில் பாலாஜிக்கு செக்?
ம.செ குஷி மோகன் முகத்தில் சாணி அடித்த தவெக நிர்வாகிகள் விழுப்புரம் தவெகவில் அதிருப்தி | Villupuram TVK Fight
துணை ஜனாதிபதி தேர்தல்.. தமிழகத்தின் C.P.ராதாகிருஷ்ணன் பாஜக வேட்பாளராக அறிவிப்பு | CP Radhakrishnan
RSS To துணை குடியரசுத் தலைவர் யார் இந்த CP ராதாகிருஷ்ணன்? ஆதரவு தருவாரா ஸ்டாலின்? | CP Radhakrishnan Profile
Mayiladuthurai DMK | அடிதடி , களேபரம்.. திமுகவில் கோஷ்டி பூசல் மயிலாடுதுறையில் பரபரப்பு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Stalin: முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்த கூட்டணி கட்சித் தலைவர்கள் - கூடுதல் கட்சிகளை இணைக்க ஆலோசனை
முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்த கூட்டணி கட்சித் தலைவர்கள் - கூடுதல் கட்சிகளை இணைக்க ஆலோசனை
EPS Vs Mutharasan: “உங்க அப்பாவே வந்தாலும் தோற்கடிக்க முடியாது“ - முத்தரசனுக்கு EPS பதிலடி
“உங்க அப்பாவே வந்தாலும் தோற்கடிக்க முடியாது“ - முத்தரசனுக்கு EPS பதிலடி
Weekend Spl. Bus: வாரக் கடைசில ஊருக்கு போறீங்களா.? சிறப்புப் பேருந்துகளை அறிவித்த அரசு - முழு விவரம்
வாரக் கடைசில ஊருக்கு போறீங்களா.? சிறப்புப் பேருந்துகளை அறிவித்த அரசு - முழு விவரம்
EPS Campaign : ’34 நாட்கள், 10 ஆயிரம் கி.மீ, 100 தொகுதிகள்’ மாஸ் காட்டும் எடப்பாடி பழனிசாமி..!
’34 நாட்கள், 10 ஆயிரம் கி.மீ, 100 தொகுதிகள்’ மாஸ் காட்டும் எடப்பாடி பழனிசாமி..!
Pitbull Dog Bite: சென்னையில் அதிர்ச்சி - பிட்புல் நாய் கடித்துக் குதறியதில் ஒருவர் பலி; வளர்த்துவந்த பெண்ணையும் கடித்தது
சென்னையில் அதிர்ச்சி - பிட்புல் நாய் கடித்துக் குதறியதில் ஒருவர் பலி; வளர்த்துவந்த பெண்ணையும் கடித்தது
Sudarshan Reddy: இந்தியா கூட்டணி வேட்பாளர் சுதர்சன் ரெட்டி: யார் இவர்? எதிர்பார்ப்பை எகிற வைத்த அறிவிப்பு!
Sudarshan Reddy: இந்தியா கூட்டணி வேட்பாளர் சுதர்சன் ரெட்டி: யார் இவர்? எதிர்பார்ப்பை எகிற வைத்த அறிவிப்பு!
Pattabiram Metro: அப்பாடா.! கோயம்பேட்டிலிருந்து பட்டாபிராமிற்கு இனி NO Traffic - மெட்ரோவுக்கு நிதி ஒதுக்கிய அரசு
அப்பாடா.! கோயம்பேட்டிலிருந்து பட்டாபிராமிற்கு இனி NO Traffic - மெட்ரோவுக்கு நிதி ஒதுக்கிய அரசு
Mahindra Vision T vs Thar Roxx: மஹிந்திரா விஷன் T-க்கும் - Thar ராக்ஸுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா.? வாங்க தெரிஞ்சுக்கலாம்
மஹிந்திரா விஷன் T-க்கும் - Thar ராக்ஸுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா.? வாங்க தெரிஞ்சுக்கலாம்
Embed widget