மேலும் அறிய

RSS To துணை குடியரசுத் தலைவர் யார் இந்த CP ராதாகிருஷ்ணன்? ஆதரவு தருவாரா ஸ்டாலின்? | CP Radhakrishnan Profile

RSS To துணை குடியரசுத் தலைவர்

யார் இந்த சிபி ராதாகிருஷ்ணன்?

ஆதரவு தருவாரா ஸ்டாலின்?

எம்.பியாக இருந்து பின்னர் ஜார்க்கண்ட், மகாராஷ்டிரா மாநிலங்களுக்கு ஆளுநராக செயல்பட்ட சி.பி.ராதாகிருஷ்ணன் துணை ஜனாதிபதி பதவியை அலங்கரிக்க இருக்கிறார். தமிழகத்தில் காளுன்ற திணறிவரும் சூழலில் தமிழக மக்களின் கவனத்தை ஈர்க்க சி.பி ராதாகிருஷ்ணனின் முகம் உதவலாம் எனக் கூறப்படுகிறது. தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் குடியரசு துணைத்தலைவர் வேட்பாளராக தமிழகத்தை சேர்ந்த சி.பி ராதாகிருஷணன் பாஜக கூட்டணி சார்பில் போட்டியிடுவார் எனத் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய நாட்டின் குடியரசு துணைத்தலைவராக பதவி வகித்து வந்த ஜெகதீப் தன்கர் திடீர் ராஜினாமா செய்தது நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்த நிலையில், அடுத்த குடியரசு துணைத்தலைவர் யார் என்ற கேள்வி எழத் தொடங்கியது. இந்நிலையில் இந்த ரேஸில் பாஜகவின் மூத்த தலைவர்கள் முதல் காங்கிரஸை சேர்ந்த ஒருவர் வரை இருப்பதாக பரபரப்பு தகவல் வெளியானது. இந்த நிலையில் தான் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் குடியரசு துணைத்தலைவர் வேட்பாளராக  மகாராஷ்டிரா ஆளுநரும் தமிழகத்தை சேர்ந்தவருமான சி.பி ராதாகிருஷணன் போட்டியிடுவார் என பாஜக தலைவர் ஜே.பி நட்டா அறிவித்துள்ளார். சி.பி.ராதாகிருஷ்ணனை வேட்பாளராக அறிவிக்கும் முடிவை பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட மூத்த தலைவர்கள் கலந்துகொண்ட கூட்டத்தில் எடுத்துள்ளனர்.

பாஜகவில் சேர்ந்து கடுமையாக உழைத்து படிப்படியாக உயர்ந்து, அக்கட்சியின் மாநில தலைவர் பொறுப்பை வகித்தார் சி.பி ராதாகிருஷணன்.  இவர் பாஜகவின் மாநிலத் தலைவராக இருந்த காலத்தில், கன்னியாகுமரியிலிருந்து சென்னை வரை 19,000 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரத யாத்திரை நடத்தினார். தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா கட்சியை வளர்க்கவும், வலுப்படுத்தவும் இந்த யாத்திரை ஊக்கமாக அமைந்தது. 

கொங்கு மண்டலத்தில் தனக்கென தனி செல்வாக்கை சி.பி. ராதாகிருஷ்ணன் உருவாக்கிக் கொண்டார். அதன் விளைவாக, 1988 கோவை குண்டுவெடிப்பிற்கு பிறகு 1998 மற்றும் 1999 பொதுத்தேர்தல்களில் பாஜக சார்பில் போட்டியிட்டு பிரமாண்ட வெற்றி பெற்று பலரையும் வியப்பில் ஆழ்த்தினார்.  குறிப்பாக பாஜக அதிமுக கூட்டணி சார்பாக 1998-ல் நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்டு சுமார் 1,50,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். பின் ஒரு வருடத்தில் ஆட்சி கலய பாஜக திமுக கூட்டணியில் 1999 தேர்தலில் போட்டியிட்டு 55,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று , இரண்டாவது முறை நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். திமுக- பாஜக கூட்டணி அமைந்ததற்கு பின்னணியில் சி.பி ராதாகிருஷ்ணன் இருந்ததாக பேச்சு இருக்கிறது. இதன் மூலம் திமுக பாஜகவின் நட்பு உறவை காட்டியது. 2004 ஆம் ஆண்டு, ராதாகிருஷ்ணன் நாடாளுமன்றக் குழுவில் ஒரு பகுதியாக ஐ.நா. பொதுச் சபையில் உரையாற்றினார்.  

1999-க்கும் பிறகு மூன்று முறை நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் போட்டியிட்டுள்ளார். ஆனால், இந்த அனைத்து தேர்தல்களிலும் அவருக்கு இரண்டாம் இடம்தான் கிடைத்தது. 2019ம் ஆண்டு பொதுத்தேர்தலில் கோயம்புத்தூர் தொகுதியில் 5வது முறையாக போட்டியிட்டு, 3 லட்சத்து 92 ஆயிரம் வாக்குகளை பெற்றார். குறிப்பாக தமிழ்நாட்டின் இரண்டு பெரிய கட்சிகளான திமுக மற்றும் அதிமுகவின் கூட்டணி இல்லாமலேயே, 2014ம் ஆண்டு பொதுத்தேர்தலில் போட்டியிட்டு 3 லட்சத்து 89 ஆயிரம் வாக்குகளை பெற்று இரண்டாவது இடம் பிடித்தார். அந்த தேர்தலில் சி.பி. ராதாகிருஷ்ணன் தோல்வியை சந்தித்து இருந்தாலும், கொங்கு பகுதியில் அவருக்கும், பாஜகவிற்கும் இருக்கும் செல்வாக்கை அந்த தேர்தல் வெளிச்சம் போட்டு காட்டியது. 

இந்நிலையில் ஜார்கண்ட் மாநில ஆளுநராக, சி.பி. ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டார். புதுச்சேரி துணைநிலை ஆளுநர் மற்றும் தெலுங்கானா ஆளுநர் பதவியில் இருந்த தமிழிசை சவுந்தரராஜன், மக்களவை தேர்தலில் போட்டியிடுவதற்காக, தனது பதவியை ராஜினாமா செய்தபோது, தெலங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணைநிலைஆளுநர் கூடுதல் பொறுப்பு, ஜார்க்கண்ட் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு வழங்கப்பட்டது. பின்னர் மகாராஷ்டிர மாநில ஆளுநராக மாற்றப்பட்டார் சி.பி.ராதாகிருஷ்ணன். எந்த மாநிலத்தில் இருந்தாலும் தொடர்ந்து தமிழக அரசியலை கவனிப்பவராகவும், கருத்துகள் தெரிவிப்பவராகவும் இருந்துள்ளார் ராதாகிருஷ்ணன்.

மகாராஷ்டிரா ஆளுநராக உள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த சிபி ராதாகிருஷ்ணனுக்கு துணை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைத்துள்ளது. பாஜக கூட்டணிக்கு பெரும்பான்மை வாக்குகள் உள்ளதால் சி.பி.ராதாகிருஷ்ணன், அடுத்த துணை ஜனாதிபதியாக தேர்வு செய்யப்படுவார் எனத் தெரிகிறது. இவரது தேர்வு பாஜகவுக்கு அரசியல் ரீதியாக பலனளிக்கக் கூடும் எனவும் தமிழகத்தில் காளுன்ற திணறிவரும் சூழலில் தமிழக மக்களின் கவனத்தை ஈர்க்க சி.பி ராதாகிருஷ்ணனின் முகம் உதவலாம் எனக் கூறப்படுகிறது.

மேலும் படிக்க
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Dharmapuri power cut: தருமபுரியில் நாளை (10-09-2026) எங்கெல்லாம் மின் தடை? - மின்வாரியம் வெளியிட்ட பட்டியல்
தருமபுரியில் நாளை (10-09-2026) எங்கெல்லாம் மின் தடை? - மின்வாரியம் வெளியிட்ட பட்டியல்
coimbatore power cut: கோவையில் நாளை (10-09-2026) எங்கெல்லாம் பவர் கட்? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (10-09-2026) எங்கெல்லாம் பவர் கட்? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
TN By Election 2026: மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு.! யார் இந்த பரந்தாமன், சுகன்யா.?
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு.! யார் இந்த பரந்தாமன், சுகன்யா.?
LIVE | Kerala Lottery Result Today (09.09.2026): புதன்கிழமை; கேரளா லாட்டரில தனலட்சுமியை அள்ளிப்போறது யாரு?
LIVE | Kerala Lottery Result Today (09.09.2026): புதன்கிழமை; கேரளா லாட்டரில தனலட்சுமியை அள்ளிப்போறது யாரு?

வீடியோ

Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK Protest:: ”ஸ்டாலினை கொச்சைப்படுத்திய ஏமாற்றி ஆட்சியை பிடித்த மைனாரிட்டி CM விஜய்” - திமுக கண்டன ஆர்பாட்டம்
”ஸ்டாலினை கொச்சைப்படுத்திய ஏமாற்றி ஆட்சியை பிடித்த மைனாரிட்டி CM விஜய்” - திமுக கண்டன ஆர்பாட்டம்
TN By Election 2026: மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு.! யார் இந்த பரந்தாமன், சுகன்யா.?
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு.! யார் இந்த பரந்தாமன், சுகன்யா.?
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்.! இபிஎஸ்யின் முதல் சாய்ஸ் யார்? உத்தேச வேட்பாளர் பட்டியல் இதோ..
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்.! இபிஎஸ்யின் முதல் சாய்ஸ் யார்? உத்தேச வேட்பாளர் பட்டியல் இதோ..
SP Velumani vs EPS : தாராபுரத்தை EPS-க்காக தட்டி தூக்குவாரா.? விஜய்க்காக விட்டுக்கொடுப்பாரா.? எஸ்.பி.வேலுமணி பிளான் என்ன.?
தாராபுரத்தை EPS-க்காக தட்டி தூக்குவாரா.? விஜய்க்காக விட்டுக்கொடுப்பாரா.? எஸ்.பி.வேலுமணி பிளான் என்ன.?
Dharapuram: தாராபுரம் தொகுதி எப்படி? சாதக, பாதகம், வாக்காளர்கள் விவரம்? இடைத்தேர்தலில் யார் கொடி பறக்கும்?
தாராபுரம் தொகுதி எப்படி? சாதக, பாதகம், வாக்காளர்கள் விவரம்? இடைத்தேர்தலில் யார் கொடி பறக்கும்?
CM Vijay: மீண்டும் மதுரை வரும் விஜய்.. உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் காத்திருக்கும் சம்பவம்.. எப்போ தெரியுமா?
CM Vijay: மீண்டும் மதுரை வரும் விஜய்.. உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் காத்திருக்கும் சம்பவம்.. எப்போ தெரியுமா?
பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம்? விஜய்க்கு வந்தது புதிய தலைவலி? களமிறங்கும் 9 மீனவ கிராமங்கள்
பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம்? விஜய்க்கு வந்தது புதிய தலைவலி? களமிறங்கும் 9 மீனவ கிராமங்கள்
Nirmalkumar: ”திமுகவின் தவறுகளை இன்றைய தலைமுறை அறியவே CM விஜய் உரை” - நிர்மல்குமார் விளக்கம்
”திமுகவின் தவறுகளை இன்றைய தலைமுறை அறியவே CM விஜய் உரை” - நிர்மல்குமார் விளக்கம்
Embed widget