Weekend Spl. Bus: வாரக் கடைசில ஊருக்கு போறீங்களா.? சிறப்புப் பேருந்துகளை அறிவித்த அரசு - முழு விவரம்
வார இறுதி நாட்களை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக, அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது. அது குறித்த முழு விவரங்களை காணலாம்.

வார இறுதி நாட்களில் சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகளின் வசதிக்காக, அரசு போக்குவரத்துக் கழகங்கள் மூலம், சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுவதாக, அரசு விரைவுப் போக்குவரத்துக்கழக மேலாண் இயக்குநர் தெரிவித்துள்ளார். சிறப்புப் பேருந்துகள் குறித்த முழு விவரங்களை தற்போது காணலாம்.
வார இறுதி நாட்களில் சிறப்புப் பேருந்துகள் இயக்கம்
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், 22/08/2025(வெள்ளிக்கிழமை), 23/08/2025(சனிக்கிழமை) மற்றும் 24/08/2025(ஞாயிற்றுக் கிழமை) வார விடுமுறை நாட்களை முன்னிட்டு, சென்னையிலிருந்தும், இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனை கருத்தில் கொண்டு, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருத்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிட்டுள்ளது.
கிளாம்பாக்கத்திலிருந்து இயக்கப்படும் பேருந்துகள்
சென்னை கிளம்பாக்கத்திலிருந்து, திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு 22/08/2025 வெள்ளிக்கிழமை அன்று 340 பேருந்துகளும், 23/08/2025 (சனிக்கிழமை) 350 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
கோயம்பேட்டிலிருந்து இயக்கப்படும் பேருந்துகள்
சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 22/08/2025 வெள்ளிகிழமை அன்று 55 பேருந்துகளும், 23/08/2025 சனிக்கிழமை அன்று 55 பேருந்துகளும் மேற்கூறிய இடங்களிலிருந்தும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது மற்றும் பெங்களூரு, திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும், பல்வேறு இடங்களுக்கும் 200 சிறப்புப் பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மாதவரத்திலிருந்தும் சிறப்புப் பேருந்துகள்
மாதவரத்திலிருந்து 22/08/2026 அன்று 20 பேருந்துகளும் 23/08/2025 அன்று 20 பேருந்துகளும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.
மேலும், ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக, பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த வார இறுதியில் வெள்ளிக்கிழமை அன்று 6,233 பயணிகளும், சனிக்கிழமை 2,966 பயணிகளும் மற்றும் ஞாயிறு அன்று 5,510 பயணிகளும் பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்துள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால், தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் Mobile App மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இச்சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க, அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே, பயணிகள் மேற்கூறிய வசதியினை பயன்படுத்தி, தங்களது பயணத்தினை மேற்கொள்ள இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வார இறுதி நாட்களை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கம். -அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் அவர்களின் தகவல்.#ArasuBus | #TamilNadu | #TransportDepartment | #BusOperation | #SETC | #TNSTC | #WeekendOperation… pic.twitter.com/pZ2ndUK2Nb
— ArasuBus (@arasubus) August 19, 2025





















