மேலும் அறிய

NCW தலைவர் குறித்து சர்ச்சை கருத்து.. மஹுவா மொய்த்ராவுக்கு வினையாக மாறிய ட்வீட்!

தேசிய மகளிர் ஆணையத்தின் (NCW) தலைவர் ரேகா ஷர்மாவை இழிவுபடுத்தும் வகையில் பதிவிட்டதாக திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா மீது டெல்லி போலீஸார் இன்று வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தேசிய மகளிர் ஆணையத்தின் (NCW) தலைவர் ரேகா ஷர்மாவை இழிவுபடுத்தும் வகையில் சமூக வலைதளத்தில் பதிவு வெளியிட்டதாக எழுந்த குற்றச்சாட்டில் திரிணாமுல் காங்கிரஸ் (டிஎம்சி) நாடாளுமன்ற உறுப்பினர் மஹுவா மொய்த்ரா மீது டெல்லி போலீஸார் இன்று வழக்கு பதிவு செய்துள்ளனர்.

புதிதாக இயற்றப்பட்ட பாரதிய நியாய சன்ஹிதா (பிஎன்எஸ்) சட்டப்பிரிவு 79 (பெண்ணை இழிவுப்படுத்தும் வகையில் செயல்பட்டது) கீழ் மொய்த்ரா மீது  வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவர் ரேகா சர்மா அளித்த புகாரின் அடிப்படையில் முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆர்) பதிவு செய்யப்பட்டது.

மஹுவா மொய்த்ராவுக்கு வினையாக மாறிய ட்வீட்: கடந்த ஜூலை 2 ஆம் தேதி, உத்தரப் பிரதேசம் ஹத்ராஸில் நடைபெற்ற ஆன்மீக சொற்பொழிவு நிகழ்ச்சியின்போது கூட்ட நெரிசல் ஏற்பட்டு 121 பேர் கொல்லப்பட்டனர். அங்கு ஆய்வு செய்வதற்காக தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவர் சென்றார்.

இதையடுத்து, சமூக ஊடகத்தில் வீடியோ ஒன்று வைரலானது. அதில், ஹத்ராஸில் ஆய்வு செய்தபோது, ரேகா ஷர்மா நடந்து செல்வதும் அவருக்கு ஒருவர் குடை பிடிப்பதும் பதிவாகியிருந்தது. தன்னுடைய குடையை அவரே பிடிக்க மாட்டாரா மற்றொருவர்தான் பிடிக்க வேண்டுமா என பலர் கேள்வி எழுப்பியிருந்தனர்.

அப்போது, ரேகா ஷர்மாவை அவமதிக்கும் வகையில் திரிணாமுல் காங்கிரஸ் (டிஎம்சி) எம்.பி. மஹுவா மொய்த்ரா பதிவு வெளியிட்டிருந்தார். "தன்னுடைய முதலாளியின் பைஜாமாவை தூக்கி பிடிப்பதில் அவர் பிஸியாக இருந்தார்" என மொய்த்ரா குறிப்பிட்டிருந்தார்.

தேசிய மகளிர் ஆணைய தலைவர் குறித்து என்ன பேசினார்? இந்த கமெண்ட்-க்கு கடுமையான எதிர்வினையாற்றிய தேசிய மகளிர் ஆணையம், "இந்த கருத்துக்கள் ஒரு பெண்ணின் கண்ணியத்தை மீறும் வகையில் உள்ளது. பாரதிய நியாய சந்ஹிதா, 2023, சட்டப்பிரிவு 79 கீழ் வழக்கு பதிவு செய்யலாம் என ஆணையம் கருதுகிறது.

இதற்கு பதில் அளித்த மஹுவா மொய்த்ரா, முடிந்தால் தனக்கு எதிராக டெல்லி காவல்துறை நடவடிக்கை எடுக்கட்டும் என சவால் விடுத்திருந்தார். "நான் இப்போது நாடியாவில் இருக்கிறேன். என்னை விரைந்து கைது செய்ய வேண்டுமானால் அங்குதான் அடுத்த மூன்று நாள்களுக்கு இருப்பேன். எனது குடையை என்னை பிடிக்க முடியும்" என்றார்.

பாஜகவுக்கு எதிராகவும் அதானி குழுமம் தொடர்பாகவும் நாடாளுமன்றத்தில் கேள்விகளை எழுப்புவதற்கு திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விவகாரம் தொடர்பாக, கடந்தாண்டு அவர் மக்களவை உறுப்பினராக பதவி நீக்கம் செய்யப்பட்டார். 

எந்த தொகுதி மக்களவை உறுப்பினராக பதவி நீக்கம் செய்யப்பட்டாரோ அதே தொகுதியில் போட்டியிட்டு மஹுவா மொய்த்ரா வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Weather: இன்று இரவு 6 மாவட்டங்களில் மழை இருக்கு-  நாளைய வானிலை எப்படி?
இன்று இரவு 6 மாவட்டங்களில் மழை இருக்கு- நாளைய வானிலை எப்படி?
அடுத்தடுத்த நாளில் அடுத்தடுத்து கொலைகள்! அதிர்ச்சியில் தமிழக மக்கள்! பிடியை இறுக்குமா காவல்துறை?
அடுத்தடுத்த நாளில் அடுத்தடுத்து கொலைகள்! அதிர்ச்சியில் தமிழக மக்கள்! பிடியை இறுக்குமா காவல்துறை?
CISF Recruitment 2025: 10-வது தேர்ச்சி பெற்றவரா? 1161 பணியிடங்கள்! மத்திய அரசுப் பணி; விவரம் இதோ!
CISF Recruitment 2025: 10-வது தேர்ச்சி பெற்றவரா? 1161 பணியிடங்கள்! மத்திய அரசுப் பணி; விவரம் இதோ!
Rajinikanth: ரஜினியை பார்த்து பைத்தியக்காரன் என்ற பிரபல இயக்குனர்! பார்த்திபன் பகிர்ந்த ஷாக்!
Rajinikanth: ரஜினியை பார்த்து பைத்தியக்காரன் என்ற பிரபல இயக்குனர்! பார்த்திபன் பகிர்ந்த ஷாக்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Sunita williams Return | சுனிதாவை பாராட்டாத மோடி 2007-ல் நடந்தது என்ன? வெளியான பகீர் பின்னணி..! | Haren PandyaSenthil Balaji Delhi Visit | TASMAC ஊழல்.. துரத்தும் ED டெல்லி பறந்த செந்தில் பாலாஜி திடீர் விசிட்! பின்னணி என்ன?Sunita Williams: 27 ஆயிரம் KM Speed! 1927 டிகிரி செல்சியஸ்! Real Wonder Woman சுனிதா வில்லியம்ஸ்DMDK Alliance DMK |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Weather: இன்று இரவு 6 மாவட்டங்களில் மழை இருக்கு-  நாளைய வானிலை எப்படி?
இன்று இரவு 6 மாவட்டங்களில் மழை இருக்கு- நாளைய வானிலை எப்படி?
அடுத்தடுத்த நாளில் அடுத்தடுத்து கொலைகள்! அதிர்ச்சியில் தமிழக மக்கள்! பிடியை இறுக்குமா காவல்துறை?
அடுத்தடுத்த நாளில் அடுத்தடுத்து கொலைகள்! அதிர்ச்சியில் தமிழக மக்கள்! பிடியை இறுக்குமா காவல்துறை?
CISF Recruitment 2025: 10-வது தேர்ச்சி பெற்றவரா? 1161 பணியிடங்கள்! மத்திய அரசுப் பணி; விவரம் இதோ!
CISF Recruitment 2025: 10-வது தேர்ச்சி பெற்றவரா? 1161 பணியிடங்கள்! மத்திய அரசுப் பணி; விவரம் இதோ!
Rajinikanth: ரஜினியை பார்த்து பைத்தியக்காரன் என்ற பிரபல இயக்குனர்! பார்த்திபன் பகிர்ந்த ஷாக்!
Rajinikanth: ரஜினியை பார்த்து பைத்தியக்காரன் என்ற பிரபல இயக்குனர்! பார்த்திபன் பகிர்ந்த ஷாக்!
தமிழ்நாடு அரசு பள்ளி மாணவர்கள் தாக்கிக்கொள்வதாகப் பரவும் காணொளி.. உண்மையா?
அரசு பள்ளி மாணவர்கள் தாக்கிக்கொள்வதாகப் பரவும் காணொளி.. உண்மையா?
இனி பாலுக்கு பிரச்னையே இருக்காது.. விவசாயிகளுக்கு அடிச்சது ஜாக்பாட்.. தெரிஞ்சுக்கோங்க!
இனி பாலுக்கு பிரச்னையே இருக்காது.. விவசாயிகளுக்கு அடிச்சது ஜாக்பாட்.. தெரிஞ்சுக்கோங்க!
GATE Result 2025: மாணவர்களே அலர்ட்.. கேட் தேர்வு முடிவுகள் வெளியீடு; காண்பது எப்படி? முதலிடம் யாருக்கு?
GATE Result 2025: மாணவர்களே அலர்ட்.. கேட் தேர்வு முடிவுகள் வெளியீடு; காண்பது எப்படி? முதலிடம் யாருக்கு?
100 நாள் சவால்- அரசுப்பள்ளி மாணவர்களின் வாசிப்புத் திறன் சோதனை- கல்வித்துறை அறிவிப்பு
100 நாள் சவால்- அரசுப்பள்ளி மாணவர்களின் வாசிப்புத் திறன் சோதனை- கல்வித்துறை அறிவிப்பு
Embed widget