மேலும் அறிய

Rahul Warns EC: “காலம் மாறும்.. எங்க கிட்ட இருந்து தப்ப முடியாது“ - ராகுல் காந்தியின் எச்சரிக்கை யாருக்கு தெரியுமா.?

பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தில் நடைபெற்றுள்ள முறைகேடுகள் குறித்து நேற்று தரவுகளுடன் பேசிய ராகுல் காந்தி, தற்போத எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். அவர் என்ன கூறியுள்ளார் தெரியுமா.?

பீகாரில், இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொண்ட வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு, காங்கிரஸ் உள்ளிட் எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், நேற்று பல தரவுகளுடன், தேர்தல் ஆணையம் மீது சரமாரி குற்றச்சாட்டுகளை முன் வைத்தார், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி. அதைத் தொடர்ந்து, தற்போத தேர்தல் ஆணையத்திற்கு அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். அவர் என்ன கூறியுள்ளார் என்பது குறித்து தற்போது பார்க்கலாம்.

ராகுல் காந்தி விடுத்துள்ள எச்சரிக்கை என்ன.?

இது குறித்து ராகுல் காந்தி வெளியிட்ட பதிவில், வாக்கு திருட்டு என்பது வெறும் தேர்தல் மோசடி மட்டுமல்ல, அரசியலமைப்பு மற்றும் ஜனநாயகத்தை குழி தோண்டி புதைக்கும் செயல் என சாடியுள்ளார்.

மேலும், ஒரு நாள் எதிர்க்கட்சி, ஆளும் கட்சியாக மாறும் என்றும், அப்போது நீங்கள்(தேர்தல் ஆணைய அதிகாரிகள்) யாரும் தப்ப முடியாது என்றும் ராகுல் காந்தி எச்சரித்துள்ளார். அதோடு, இந்தியாவின் தேசத் தந்தைகள் கட்டமைத்த அஸ்திவாரத்தை அசத்துப் பார்த்துள்ளீர்கள் என்றும், இனி உங்களை தொட விட மாட்டோம் என்றும் அவர் கூறியுள்ளார்.

தேர்தல் ஆணையம் முழு விவரங்களையும் எங்களுக்கு வழங்க வேண்டும் என்றும், இல்லாவிட்டால் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் ராகுல் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதை செய்த ஒவ்வொரு தேர்தல் அதிகாரியும் பிடிபடுவார்கள் என்று கூறியுள்ள ராகுல், உயர் பதவியில் இருந்தாலும் சரி, கடைநிலையில் பணியாற்றினாலும் சரி, அவர்களை தண்டிப்பது நிச்சயம் என்று சூளுரைத்துள்ளார்.

ராகுல் வைத்த குற்றச்சாட்டுகள் என்னென்ன.?

டெல்லியில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த ராகுல், சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தம் ஜனநாயகத்திற்கு எதிரானது என்று விமர்சித்தார். பீகார் வாக்காளர் பட்டியலில் முறைகேடு உள்ளதாகவும், மென்பொருள் மூலம் ஆய்வு செய்யக்கூடிய வகையில் வாக்காளர் பட்டியலை வழங்க தேர்தல் ஆணையம் மறுப்பதாகவும் குற்றம்சாட்டினார்.

தேர்தல்கள் ஜோடிக்கப்படுவதாகவும், தேர்தல்கள் தொடர்பாக பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளதாகவும், தேர்தல் ஆணையத்துடன் இணைந்து பாஜக வாக்குகளை திருடுவதாகவும் அவர் பகீர் குற்றச்சாட்டை முன்வைத்தார். மேலும், நாட்டின் நலனுக்க எதிரான குற்றச் செயலில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளதாகவும் ராகுல் காந்தி குற்றம்சாட்டினார்.

பல தரவுகளுடன் பேசிய அவர், ஒரு நபருக்கு பல மாநிலங்களில் வாக்கு உள்ளதாகவும், கர்நாடகாவின் மஹாதேவபுரா பகுதியில், சுமார் 12,000 போலி வாக்குகள் பதிவாகியுள்ளதாகவும், குறிப்பிட்டார். மேலும், கடந்த 2024-ம் ஆண்டு தேர்தலில், 25 தொகுதிகளில் வெறும் 33,000 வாக்குகளைவிட குறைவான வாக்கு வித்தியாசத்தில் தான் பாஜக வெற்றி பெற்றதாக அவர் தெரிவித்தார். அதேபோல், பல்வேறு தொகுதிகளில் பல ஆயிரக்கணக்கான வாக்காளர்கள் போலியாக சேர்க்கப்பட்டிருப்பதும் தனது தரவுகள் மூலம் தெரியவந்துள்ளதாகவும் கூறினார்.

மேலும், முதன் முறை வாக்காளர்களில் பெரும்பாலானோர் 18-20 வயது உடையவர்கள் இல்லை என்றும், 80 வயது நபர் ஒருவர் முதல் முறை வாக்காளர்களில் சேர்க்கப்பட்டுள்ளார் என்றும் தெரியவருவதாக ராகுல் கூறியுள்ளார். அதேபோல், ஒரே விலாசத்தில் 45 வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும், சில வாக்காளர்களுக்கு புகைப்படங்களே இல்லை என்றும் குறிப்பிட்டார்.

வாக்காளர் பட்டியலில் கொடுக்கப்பட்ட முகவரியில் 40,009 பேர் இல்லை என்றும், ஒரே வாக்காளரின் பெயர் பல்வேறு வாக்குச்சாவடிகளில் இடம்பெற்றுள்ளதாகவும், பல வாக்காளர்களுக்கு தந்தை, தாய் பெயர்கள் இல்லை எனவும், பல வாக்காளர்களுக்கு புகைப்படங்கள் பதிவாகவில்லை என்றும், பதிவானவைகளும் அடையாளம் காணும்படி இல்லை எனவும் சரமாரியாக குற்றச்சாட்டுகளை முன்வைத்தார் ராகுல். ஆயிரக்கணக்கான வாக்காளர்கள் இப்படியாக பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

 

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TVK Erode Meeting: ஈரோட்டில் நாளை தவெக பொதுக் கூட்டம்; QR கோட், பாஸ் தேவையா.? செங்கோட்டையன் கூறியது என்ன.?
ஈரோட்டில் நாளை தவெக பொதுக் கூட்டம்; QR கோட், பாஸ் தேவையா.? செங்கோட்டையன் கூறியது என்ன.?
IPS Officers Transfer : ’பட்டியல் தயார்’ இந்த மாத இறுதியில் வருகிறது ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்..! யார், யாருக்கு என்ன பதவி ?
’பட்டியல் தயார்’ இந்த மாத இறுதியில் வருகிறது ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்..!
PM Modi Ethiopia: பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவில் கிடைத்த கவுரவம்; உயரிய விருதை பெற்ற முதல் உலகத் தலைவர்
பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவில் கிடைத்த கவுரவம்; உயரிய விருதை பெற்ற முதல் உலகத் தலைவர்
Kaithi 2: ரூ.75 கோடியை எடுத்து வச்சாதான் கைதி 2! லோகேஷ் கனகராஜ் மீது தயாரிப்பாளர் பகிரங்க குற்றச்சாட்டு
Kaithi 2: ரூ.75 கோடியை எடுத்து வச்சாதான் கைதி 2! லோகேஷ் கனகராஜ் மீது தயாரிப்பாளர் பகிரங்க குற்றச்சாட்டு
ABP Premium

வீடியோ

TN IPS Officers Transfer | அருண் ஐபிஎஸ் மாற்றம்? டேவிட்சனுக்கு முக்கிய பதவி.. தயாரான ஐபிஎஸ் பட்டியல்
Virugambakkam DMK Candidate | விருகம்பாக்கம் சீட் யாருக்கு? பிரபாகர்ராஜாவா? தனசேகரனா? திமுகவில் காத்திருக்கும் Twist
கோவை தெற்கில் போட்டி? செந்தில் பாலாஜி MASTERPLAN! பின்னணி என்ன?
குட்டி பும்ரா யாக்கர் கிங் மங்கேஷ் யாதவ் தட்டி தூக்கிய RCB | Virat Kholi | IPL Auction 2026 | Mangesh Yadav
தங்கம் விலை குறையுமா? மத்திய அரசு சொல்வது என்ன தங்கத்தை குவித்துள்ள இந்தியா | Gold Rate Hike

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Erode Meeting: ஈரோட்டில் நாளை தவெக பொதுக் கூட்டம்; QR கோட், பாஸ் தேவையா.? செங்கோட்டையன் கூறியது என்ன.?
ஈரோட்டில் நாளை தவெக பொதுக் கூட்டம்; QR கோட், பாஸ் தேவையா.? செங்கோட்டையன் கூறியது என்ன.?
IPS Officers Transfer : ’பட்டியல் தயார்’ இந்த மாத இறுதியில் வருகிறது ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்..! யார், யாருக்கு என்ன பதவி ?
’பட்டியல் தயார்’ இந்த மாத இறுதியில் வருகிறது ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்..!
PM Modi Ethiopia: பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவில் கிடைத்த கவுரவம்; உயரிய விருதை பெற்ற முதல் உலகத் தலைவர்
பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவில் கிடைத்த கவுரவம்; உயரிய விருதை பெற்ற முதல் உலகத் தலைவர்
Kaithi 2: ரூ.75 கோடியை எடுத்து வச்சாதான் கைதி 2! லோகேஷ் கனகராஜ் மீது தயாரிப்பாளர் பகிரங்க குற்றச்சாட்டு
Kaithi 2: ரூ.75 கோடியை எடுத்து வச்சாதான் கைதி 2! லோகேஷ் கனகராஜ் மீது தயாரிப்பாளர் பகிரங்க குற்றச்சாட்டு
செங்கல்பட்டு: PM YASASVI கல்வி உதவித்தொகை! கடைசி தேதி 31/12/2025! விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம்!
செங்கல்பட்டு: PM YASASVI கல்வி உதவித்தொகை! கடைசி தேதி 31/12/2025! விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம்!
TATA Sierra Bookings: மாருதி, ஹூண்டாயை கதறவிட்ட டாடா சியாரா; ஒரே நாளில் 70,000 முன்பதிவுகளை பெற்று அசத்தல்
மாருதி, ஹூண்டாயை கதறவிட்ட டாடா சியாரா; ஒரே நாளில் 70,000 முன்பதிவுகளை பெற்று அசத்தல்
Job Fair: 10,000+ வேலைவாய்ப்புகள்! 150+ நிறுவனங்கள்- டிச. 20-ல் பிரம்மாண்ட வேலைவாய்ப்பு முகாம்! மிஸ் பண்ணிடாதீங்க!
Job Fair: 10,000+ வேலைவாய்ப்புகள்! 150+ நிறுவனங்கள்- டிச. 20-ல் பிரம்மாண்ட வேலைவாய்ப்பு முகாம்! மிஸ் பண்ணிடாதீங்க!
TATA Sierra Dealership: டாடா சியரா டீலர்ஷிப்பை பெறுவது எப்படி.? அதுல எவ்வளவு பணம் சம்பாதிக்க முடியும் தெரியுமா?
டாடா சியரா டீலர்ஷிப்பை பெறுவது எப்படி.? அதுல எவ்வளவு பணம் சம்பாதிக்க முடியும் தெரியுமா?
Embed widget