மேலும் அறிய

Tajmahal Flood: காதல் சின்னம் தாஜ்மஹாலுக்கு வந்த சோகம்..45 வருடங்களில் இல்லாத அவலம்.. அடங்காத வெள்ளம்

உத்தரபிரதேசத்தில் உள்ள உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹாலின் சுற்றுச்சுவரை, யமுனை நதியில் கரைபுரண்டு ஓடும் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

உத்தரபிரதேசத்தில் உள்ள உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹாலின் சுற்றுச்சுவரை, யமுனை நதியில் கரைபுரண்டு ஓடும் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

தாஜ்மஹாலை சூழ்ந்த வெள்ளம்:

வடமாநிலங்களில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக கனமழை கொட்டி தீர்த்தது. இதையடுத்து, யமுனை நதியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. அதோடு, யமுனை நதியில் வெள்ளப்பஎருக்கு தொடர்ந்து அதிகரித்து வருவதால், திங்கட்கிழமை அன்று யமுனை வெள்ளம் தாஜ்மஹாலின் பின்புற சுவரை  தொட்டவாறு பாய்ந்தோடுகிறது. தாஜ்மஹாலுக்கு பின்புறம் உள்ள தோட்டம் பகுதியளவு நீரில் மூழ்கியுள்ளது.  இத்தகைய சம்பவம் நிகழ்வது கடந்த 45 ஆண்டுகளில் இதுவே முதன்முறையாகும். யமுனை நதியில் தற்போதைய சூழலில் 497.7 அடி உயரத்திற்கு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

45 ஆண்டுகளுக்கு முன்பு..!

1978 ஆம் ஆண்டில், யமுனையின் நீர்மட்டம் 508 அடியாக உயர்ந்தது. இது ஆக்ராவில் உள்ள அந்த யமுனை ஆற்றின் அதிகபட்ச வெள்ள அளவாகும். இந்த அளவீடானது தாஜ்மஹாலின் வடக்குப்பகுதியில் உள்ள பாசாய் காட் புர்ஜின் சுவரில் குறிக்கப்பட்டுள்ளது. அந்த நேரத்தில், நினைவுச்சின்னத்தின் அடித்தளத்தில் உள்ள 22 அறைகளுக்குள் தண்ணீர் புகுந்து, சேறும் சகதியுமாக மாறியது. பின்னர், தொல்லியல் துறையினரால் அங்கிருந்த மரக்கதவுகள் அகற்றப்பட்டு, பாசாய் மற்றும் துஷெரா கண்வாய் பகுதிகளில் இருந்த நுழைவாயில்களில் சுவர்கள் அமைக்கப்பட்டன.

தொல்லியல் துறை நம்பிக்கை:

தற்போதைய சூழல் தொடர்பாக பேசியுள்ள தொல்லியல் துறை அதிகாரிகள் “அதிக வெள்ளத்தின் போது கூட பிரதான கல்லறைக்குள் தண்ணீர் வராத வகையில் தாஜ்மஹால் உருவாக்கப்பட்டுள்ளது” என நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

தாஜ் மஹால் வரலாறு:

முகலாய பேரரசர்களில் ஒருவரான ஷாஜகான், தனது காதல் மனைவி மும்தாஜ் உயிரிழந்ததை அடுத்து, அவரை நினைவுகூறும் வகையில் பெரும் பொருட்செலவில் தாஜ் மஹாலை கட்டி எழுப்பினார். இதற்காக திபெத் மற்றும் சீனா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து பொருட்கள் கொண்டு வரப்பட்டு தாஜ் மகால் வடிவமைக்கப்பட்டு உள்ளது. சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர முக்கிய காரணம் தாஜ் மஹாலின் கட்டட அமைப்பு மட்டுமின்றி,  அதன் அழகை மேம்படுத்த பொருத்தப்பட்டுள்ள உலகின் அதிக விலை உயர்ந்த பல்வேறு விதமான பளிங்கு கற்களும் தான். 

குறிப்பாக தாஜ் மஹாலில் பொருத்தப்பட்டுள்ள வெள்ளை நிற கற்கள் அதிக விலை உயர்ந்தவை. இந்த கற்களின் சூரிய ஒளியை பிரதிபலிக்கும்  தன்மையை கொண்ட காரணத்தால் தான், காலை, மாலை மற்றும் இரவு என 3 வேளைகளிலும் தாஜ் மஹால் வெவ்வேறு நிறங்களில் பிரதிபலிக்கிறது.  அதன்படி,  காலையில் பிங்க் நிறத்திலும், மாலையில் பால் நிறத்திலும்  ஒளிரும் தாஜ் மஹால், இரவில் நிலா ஒளியில் தங்க நிறத்திலும் தோற்றமளித்து  கண்களுக்கு விருந்தளிக்கிறது. இந்த அழகியலை காண ஒவ்வொரு ஆண்டும் வெளிநாட்டவர்கள் உட்பட, லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் ஆக்ரா வந்து செல்வது குறிப்பிடத்தக்கது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

RR vs KKR: சுழலில் சிக்கிய ராஜஸ்தான்.. காப்பாற்றிய துருவ் ஜூரல்.. கொல்கத்தாவுக்கு இலக்கு என்ன?
RR vs KKR: சுழலில் சிக்கிய ராஜஸ்தான்.. காப்பாற்றிய துருவ் ஜூரல்.. கொல்கத்தாவுக்கு இலக்கு என்ன?
கிளாம்பாக்கம் வேண்டாம்.. இனி கேரளா-கோவைக்கு கோயம்பேட்டில் இருந்தே போகலாம்..  என்ன சொல்றீங்க? முழு விவரம்
கிளாம்பாக்கம் வேண்டாம்.. இனி கேரளா-கோவைக்கு கோயம்பேட்டில் இருந்தே போகலாம்.. என்ன சொல்றீங்க? முழு விவரம்
ரூ.2.5 கோடி ஒப்பந்தம்: மகளிர் சுயஉதவிக்குழுக்களின் பொருட்கள்னாலே தரம்தான்
ரூ.2.5 கோடி ஒப்பந்தம்: மகளிர் சுயஉதவிக்குழுக்களின் பொருட்கள்னாலே தரம்தான்
Bharathiraja: கவுண்டமணியை அடித்த பாரதிராஜா..! ஏன் நடந்தது இந்த காரியம்?
Bharathiraja: கவுண்டமணியை அடித்த பாரதிராஜா..! ஏன் நடந்தது இந்த காரியம்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

EPS Delhi Visit: டெல்லிக்கு பறந்த EPSதனியாக சென்ற SP வேலுமணி உறுதியாகிறதா பாஜக கூட்டணி? |ADMK | BJPEPS போட்ட கண்டிஷன்! OK சொன்ன அமித்ஷா! குஷியில் வானதி, நயினார்Manoj Bharathiraja | பாரதிராஜாவின் மகன் மரணம்! திரையுலகில் அதிர்ச்சி... காரணம் என்ன?EPS Amit Shah:  இபிஎஸ் - அமித்ஷா சந்திப்பு.. மீண்டும் அதிமுக, பாஜக கூட்டணி? தலைவலியில் திமுக கூட்டணி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
RR vs KKR: சுழலில் சிக்கிய ராஜஸ்தான்.. காப்பாற்றிய துருவ் ஜூரல்.. கொல்கத்தாவுக்கு இலக்கு என்ன?
RR vs KKR: சுழலில் சிக்கிய ராஜஸ்தான்.. காப்பாற்றிய துருவ் ஜூரல்.. கொல்கத்தாவுக்கு இலக்கு என்ன?
கிளாம்பாக்கம் வேண்டாம்.. இனி கேரளா-கோவைக்கு கோயம்பேட்டில் இருந்தே போகலாம்..  என்ன சொல்றீங்க? முழு விவரம்
கிளாம்பாக்கம் வேண்டாம்.. இனி கேரளா-கோவைக்கு கோயம்பேட்டில் இருந்தே போகலாம்.. என்ன சொல்றீங்க? முழு விவரம்
ரூ.2.5 கோடி ஒப்பந்தம்: மகளிர் சுயஉதவிக்குழுக்களின் பொருட்கள்னாலே தரம்தான்
ரூ.2.5 கோடி ஒப்பந்தம்: மகளிர் சுயஉதவிக்குழுக்களின் பொருட்கள்னாலே தரம்தான்
Bharathiraja: கவுண்டமணியை அடித்த பாரதிராஜா..! ஏன் நடந்தது இந்த காரியம்?
Bharathiraja: கவுண்டமணியை அடித்த பாரதிராஜா..! ஏன் நடந்தது இந்த காரியம்?
Manoj Bharathiraja: இறுதிவரை அந்த ஒரு விஷயத்திற்காக போராடிய மனோஜ் பாரதிராஜா..!
Manoj Bharathiraja: இறுதிவரை அந்த ஒரு விஷயத்திற்காக போராடிய மனோஜ் பாரதிராஜா..!
TN 12th Exam: முடிந்த பிளஸ் 2 பொதுத்தேர்வு; விடைத்தாள் திருத்தம் எப்போது? தேர்வு முடிவுகள்?
TN 12th Exam: முடிந்த பிளஸ் 2 பொதுத்தேர்வு; விடைத்தாள் திருத்தம் எப்போது? தேர்வு முடிவுகள்?
CBSE: இனி பொதுத்தேர்வுகளில் கால்குலேட்டர் அனுமதி, டிஜிட்டல் முறையில் மதிப்பீடு; சிபிஎஸ்இ அதிரடி!
CBSE: இனி பொதுத்தேர்வுகளில் கால்குலேட்டர் அனுமதி, டிஜிட்டல் முறையில் மதிப்பீடு; சிபிஎஸ்இ அதிரடி!
பஞ்சப்பூரில் படக்குன்னு பிளாட்டை வாங்கினா... நீங்கதான் அதிர்ஷ்டசாலி: ஏன் தெரியுங்களா?
பஞ்சப்பூரில் படக்குன்னு பிளாட்டை வாங்கினா... நீங்கதான் அதிர்ஷ்டசாலி: ஏன் தெரியுங்களா?
Embed widget