மேலும் அறிய

பீகார் தேர்தல் முடிவுகள் 2025

(Source:  ECI | ABP NEWS)

Tajmahal Flood: காதல் சின்னம் தாஜ்மஹாலுக்கு வந்த சோகம்..45 வருடங்களில் இல்லாத அவலம்.. அடங்காத வெள்ளம்

உத்தரபிரதேசத்தில் உள்ள உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹாலின் சுற்றுச்சுவரை, யமுனை நதியில் கரைபுரண்டு ஓடும் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

உத்தரபிரதேசத்தில் உள்ள உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹாலின் சுற்றுச்சுவரை, யமுனை நதியில் கரைபுரண்டு ஓடும் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

தாஜ்மஹாலை சூழ்ந்த வெள்ளம்:

வடமாநிலங்களில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக கனமழை கொட்டி தீர்த்தது. இதையடுத்து, யமுனை நதியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. அதோடு, யமுனை நதியில் வெள்ளப்பஎருக்கு தொடர்ந்து அதிகரித்து வருவதால், திங்கட்கிழமை அன்று யமுனை வெள்ளம் தாஜ்மஹாலின் பின்புற சுவரை  தொட்டவாறு பாய்ந்தோடுகிறது. தாஜ்மஹாலுக்கு பின்புறம் உள்ள தோட்டம் பகுதியளவு நீரில் மூழ்கியுள்ளது.  இத்தகைய சம்பவம் நிகழ்வது கடந்த 45 ஆண்டுகளில் இதுவே முதன்முறையாகும். யமுனை நதியில் தற்போதைய சூழலில் 497.7 அடி உயரத்திற்கு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

45 ஆண்டுகளுக்கு முன்பு..!

1978 ஆம் ஆண்டில், யமுனையின் நீர்மட்டம் 508 அடியாக உயர்ந்தது. இது ஆக்ராவில் உள்ள அந்த யமுனை ஆற்றின் அதிகபட்ச வெள்ள அளவாகும். இந்த அளவீடானது தாஜ்மஹாலின் வடக்குப்பகுதியில் உள்ள பாசாய் காட் புர்ஜின் சுவரில் குறிக்கப்பட்டுள்ளது. அந்த நேரத்தில், நினைவுச்சின்னத்தின் அடித்தளத்தில் உள்ள 22 அறைகளுக்குள் தண்ணீர் புகுந்து, சேறும் சகதியுமாக மாறியது. பின்னர், தொல்லியல் துறையினரால் அங்கிருந்த மரக்கதவுகள் அகற்றப்பட்டு, பாசாய் மற்றும் துஷெரா கண்வாய் பகுதிகளில் இருந்த நுழைவாயில்களில் சுவர்கள் அமைக்கப்பட்டன.

தொல்லியல் துறை நம்பிக்கை:

தற்போதைய சூழல் தொடர்பாக பேசியுள்ள தொல்லியல் துறை அதிகாரிகள் “அதிக வெள்ளத்தின் போது கூட பிரதான கல்லறைக்குள் தண்ணீர் வராத வகையில் தாஜ்மஹால் உருவாக்கப்பட்டுள்ளது” என நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

தாஜ் மஹால் வரலாறு:

முகலாய பேரரசர்களில் ஒருவரான ஷாஜகான், தனது காதல் மனைவி மும்தாஜ் உயிரிழந்ததை அடுத்து, அவரை நினைவுகூறும் வகையில் பெரும் பொருட்செலவில் தாஜ் மஹாலை கட்டி எழுப்பினார். இதற்காக திபெத் மற்றும் சீனா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து பொருட்கள் கொண்டு வரப்பட்டு தாஜ் மகால் வடிவமைக்கப்பட்டு உள்ளது. சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர முக்கிய காரணம் தாஜ் மஹாலின் கட்டட அமைப்பு மட்டுமின்றி,  அதன் அழகை மேம்படுத்த பொருத்தப்பட்டுள்ள உலகின் அதிக விலை உயர்ந்த பல்வேறு விதமான பளிங்கு கற்களும் தான். 

குறிப்பாக தாஜ் மஹாலில் பொருத்தப்பட்டுள்ள வெள்ளை நிற கற்கள் அதிக விலை உயர்ந்தவை. இந்த கற்களின் சூரிய ஒளியை பிரதிபலிக்கும்  தன்மையை கொண்ட காரணத்தால் தான், காலை, மாலை மற்றும் இரவு என 3 வேளைகளிலும் தாஜ் மஹால் வெவ்வேறு நிறங்களில் பிரதிபலிக்கிறது.  அதன்படி,  காலையில் பிங்க் நிறத்திலும், மாலையில் பால் நிறத்திலும்  ஒளிரும் தாஜ் மஹால், இரவில் நிலா ஒளியில் தங்க நிறத்திலும் தோற்றமளித்து  கண்களுக்கு விருந்தளிக்கிறது. இந்த அழகியலை காண ஒவ்வொரு ஆண்டும் வெளிநாட்டவர்கள் உட்பட, லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் ஆக்ரா வந்து செல்வது குறிப்பிடத்தக்கது. 

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

முதல்வர் ஸ்டாலின் மாஸ்டர்பிளான்..! திமுகவில் முதன்முறையாக பிராமணருக்கு கட்சிப் பதவி.!
முதல்வர் ஸ்டாலின் மாஸ்டர்பிளான்..! திமுகவில் முதன்முறையாக பிராமணருக்கு கட்சிப் பதவி.!
Edappadi Palanisamy: ’’இங்கு ஒவ்வொரு தொகுதியிலும் 50 ஆயிரம் போலி வாக்காளர்கள்’’ - பகீர் கிளப்பிய எடப்பாடி பழனிசாமி
’’இங்கு ஒவ்வொரு தொகுதியிலும் 50 ஆயிரம் போலி வாக்காளர்கள்’’ - பகீர் கிளப்பிய எடப்பாடி பழனிசாமி
Prashant Kishor: கணக்குப் போட்டவர் கோட்டை விட்டார்; டக் அவுட் ஆன பிரசாந்த் கிஷோர் - அரசியலை விட்டு விலகலா.?
கணக்குப் போட்டவர் கோட்டை விட்டார்; டக் அவுட் ஆன பிரசாந்த் கிஷோர் - அரசியலை விட்டு விலகலா.?
செங்கல்பட்டு அருகே பயிற்சி விமானம் நொறுங்கியது! இறுதியில் உயிர் தப்பிய விமானி! நடந்தது என்ன?
செங்கல்பட்டு அருகே பயிற்சி விமானம் நொறுங்கியது! இறுதியில் உயிர் தப்பிய விமானி! நடந்தது என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Tirupattur School Caste issue | சாதி பெயரை சொல்லி திட்டிய சத்துணவு பெண்!சிறுவன் கண்ணீர் வாக்குமூலம்
Rahul vs Tejashwi Yadav | காங்கிரஸ் கவலைக்கிடம்!ஆத்திரத்தில் தேஜஸ்வி தரப்பு!தோல்விக்கான காரணம் என்ன?
Bihar Election 2025 | மீண்டும் அரியணையில் நிதிஷ்?36 வயதில் சாதிப்பாரா தேஜஸ்வி!காங்கிரஸ் நிலைமை என்ன?
Tejashwi Yadav | பெற்றோரை CM ஆக்கிய தொகுதி! தேஜஸ்விக்கு கைகொடுக்குமா? ராகோபூர் தொகுதி சுவாரஸ்யம்
Sundar c quits thalaivar 173|என்னால முடியல’’சுந்தர்.சி-யின் திடீர் முடிவு!ரஜினியின் அடுத்த DIRECTOR?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
முதல்வர் ஸ்டாலின் மாஸ்டர்பிளான்..! திமுகவில் முதன்முறையாக பிராமணருக்கு கட்சிப் பதவி.!
முதல்வர் ஸ்டாலின் மாஸ்டர்பிளான்..! திமுகவில் முதன்முறையாக பிராமணருக்கு கட்சிப் பதவி.!
Edappadi Palanisamy: ’’இங்கு ஒவ்வொரு தொகுதியிலும் 50 ஆயிரம் போலி வாக்காளர்கள்’’ - பகீர் கிளப்பிய எடப்பாடி பழனிசாமி
’’இங்கு ஒவ்வொரு தொகுதியிலும் 50 ஆயிரம் போலி வாக்காளர்கள்’’ - பகீர் கிளப்பிய எடப்பாடி பழனிசாமி
Prashant Kishor: கணக்குப் போட்டவர் கோட்டை விட்டார்; டக் அவுட் ஆன பிரசாந்த் கிஷோர் - அரசியலை விட்டு விலகலா.?
கணக்குப் போட்டவர் கோட்டை விட்டார்; டக் அவுட் ஆன பிரசாந்த் கிஷோர் - அரசியலை விட்டு விலகலா.?
செங்கல்பட்டு அருகே பயிற்சி விமானம் நொறுங்கியது! இறுதியில் உயிர் தப்பிய விமானி! நடந்தது என்ன?
செங்கல்பட்டு அருகே பயிற்சி விமானம் நொறுங்கியது! இறுதியில் உயிர் தப்பிய விமானி! நடந்தது என்ன?
பீகார் முடிவு... செம குஷியில் திமுக.! காங்கிரஸ் இனி வாலாட்ட முடியாது
பீகார் முடிவு... செம குஷியில் திமுக.! காங்கிரஸ் இனி வாலாட்ட முடியாது
Gold Rate Nov. 14th: உன்னால சந்தோஷம் கூட தர முடியுமா.? ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,280 குறைந்த தங்கம் - தற்போது விலை என்ன.?
உன்னால சந்தோஷம் கூட தர முடியுமா.? ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,280 குறைந்த தங்கம் - தற்போது விலை என்ன.?
Chennai Power Shutdown: சென்னையில நவம்பர் 15-ம் தேதி எங்கெங்க மின்சார தடை ஏற்படப் போகுது தெரியுமா.? விவரம் இதோ
சென்னையில நவம்பர் 15-ம் தேதி எங்கெங்க மின்சார தடை ஏற்படப் போகுது தெரியுமா.? விவரம் இதோ
Congress: கைவிட்ட பீகார்.! ராஜஸ்தான், தெலங்கானாவில் பாஜகவை 3வது இடத்திற்கு தூக்கியடித்த காங்கிரஸ்
கைவிட்ட பீகார்.! ராஜஸ்தான், தெலங்கானாவில் பாஜகவை 3வது இடத்திற்கு தூக்கியடித்த காங்கிரஸ்
Embed widget