Breaking News Tamil LIVE: விசாரணை கைதி ராஜசேகரை போலீசார் தாக்கவில்லை- சென்னை வடக்கு மண்டல கூடுதல் ஆணையர்
Breaking News Tamil LIVE Updates: தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை ஏபிபி நாடு லைவ் ப்ளாக்கில் உடனுக்குடன் கீழே காணலாம்.
LIVE

Background
விசாரணை கைதி ராஜசேகரை போலீசார் தாக்கவில்லை- சென்னை வடக்கு மண்டல கூடுதல் ஆணையர்
கொடுங்கையூரில் விசாரணை கைதி ராஜசேகரை போலீசார் தாக்கவில்லை என்றும், அதற்கு பிரேத பரிசோதனை அறிக்கையே சாட்சி என்றும் சென்னை வடக்கு மண்டல கூடுதல் ஆணையர் அன்பு தெரிவித்துள்ளார்.ராஜசேகர் மரணத்திற்கும் காவல்துறைக்கும் எந்த சம்பந்தம் இல்லை என சென்னை வடக்கு மண்டல கூடுதல் ஆணையர் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நாளை மறுநாள் நடைபெற இருந்த காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் ஒத்திவைப்பு
டெல்லியில் நாளை மறுநாள் நடைபெற இருந்த காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் ஜீன் 23ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு எதிர்ப்பு தெரிவித்த நிலையில் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும் மேகதாது விவகாரம் குறித்து கூட்டத்தில் விவாதிக்க கூடாது என முதலமைச்சர் ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது
அதிமுகவில் ஒற்றைத்தலைமை; எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை..!
அதிமுகவில் ஒற்றை தலைமையை கொண்டு வருவது தொடர்பாக எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.
தமிழகத்தில் இன்றும் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் - மா.சுப்பிரமணியன்
தமிழகத்தில் இன்றும் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் என்று மா.சுப்பிரமணியன் பேசியுள்ளார்.
குடும்பத்தலைவிகளுக்கு விரைவில் ரூ.1000 வழங்கப்படும் - நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்
குடும்பத்தலைவிகளுக்கு விரைவில் ரூ.1000 வழங்கப்படும் - நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

