மேலும் அறிய

Volvo Crash: வரி இருக்கு, நல்ல சாலை இருக்கா? விதிகள் எங்கே? வால்வோ நொறுங்கி 6 பேர் பலி, குவியும் கண்டனங்கள்

Volvo Crash: இந்தியாவில் சாலை பாதுகாப்பு மோசமானதாக இருப்பதாக நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வர

Volvo Crash: சாலை விபத்தில் காரில் பயணித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கார் விபத்தில் குடும்பமே பலி:

சனிக்கிழமையன்று நடந்த வோல்வோ எஸ்யூவி கார் விபத்தில், பெங்களூருவை தளமாகக் கொண்ட நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் உயிரிழந்தனர். நெல்மங்களா-தும்குரு நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தபோது, கண்டெய்னர் லாரி ஒன்று, கார் பாதுகாப்பிற்கான பிரீமியம் வாகனங்களில் ஒன்றாக கருதப்படும் வால்வோ XC90-ன் மீது கவிழ்ந்தது. இதில் கார் அப்பளமாக நொறுங்கியது. இதில் ஐஏஎஸ்டி சாப்ட்வேர் சொல்யூஷன்ஸ் நிறுவனத்தின் 48 வயதான தலைமை நிர்வாக அதிகாரி சந்திரம் யெகாபகோல் மற்றும் அவரது மனைவி கவுராபாய், மகன் கியான், மகள் தீக்ஷா, மைத்துனர் விஜயலட்சுமி மற்றும் விஜயலட்சுமியின் மகள் ஆர்யா ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 

விபத்து நடந்தது எப்படி?

இரண்டு மாதங்களுக்கு முன்பாக வாங்கிய தனது காரில், சந்திரம் குடும்பத்தினருடன் சொந்த ஊரான மகாராஷ்டிராவிற்கு பயணித்துக் கொண்டிருந்தார். அப்போது, பெங்களூரு அருகே நெல்மங்களா-தும்குரு நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த நீல நிற கார் ஒன்று திடீரென பிரேக் அடிக்க, அதனை தொடர்ந்து வந்த கண்டெய்னர் டிரக்கின் ஓட்டுனரும் விபத்தை தடுக்கும் நோக்கில் பிரேக் அடித்துள்ளார். ஆனாலும், டிரக் கட்டுப்பாடின்றி செல்ல, உடனே வலது பக்கத்தை திருப்பியுள்ளார். அப்போது டிவைடரில் மோதிய டிரக், சாலையின் மறுபக்கம் சென்று கொண்டிருந்த பால் லாரி மீது இடித்துவிட்டு அருகே சந்திரம் குடும்பத்துடன் பயணித்த வால்வோ காரின் மீது கவிழ்ந்துள்ளது.

வழக்குப்பதிவு

விபத்து தொடர்பாக பாரதீய நியாய சன்ஹிதாவின் கீழ், அலட்சியத்தால் மனித உயிருக்கும் மரணத்திற்கும் ஆபத்தை விளைவிக்கும் வகையில், அவசரமாக வாகனம் ஓட்டுதல் மற்றும் அலட்சியமாக இருந்த குற்றச்சாட்டின் கீழ் நெல்மங்களா போக்குவரத்து காவல்துறையால் ஆரிஃப் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது. அதேநேரம், சாலையில் திடீரென பிரேக் அடித்த அந்த நீல நிற காரின் ஓட்டுனரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

குவியும் கண்டனங்கள்:

விபத்து தொடர்பான தகவல் வெளியான தொடங்கியதில் இருந்து, சாலைகள் பாதுகாப்பானதாக மாற்றப்படாவிட்டால், பாதுகாப்பான கார்கள் மட்டும் இருந்து என்ன பலன்? எப்படி விபத்துகளைத் தடுக்க முடியும்? என்ற விவாதத்தைத் தூண்டியுள்ளது. ஒருவர் வெளியிட்டுள்ள பதிவில், “சாலையில் பாதுகாப்பாக இருப்பது பாதுகாப்பான காரால் மட்டும் அடைய முடியாது என்பதை இந்த படம் நினைவூட்டுகிறது. பாதுகாப்பான சாலைகள் + பாதுகாப்பான ஓட்டுநர் + பாதுகாப்பான கார்: இவை மூன்றுமே பாதுகாப்பிற்கு அவசியம்” என குறிப்பிட்டுள்ளார். மற்றொரு பயனரோ, ”போக்குவரத்து விதிகள், மோசமான குடிமை உணர்வு மற்றும் செலுத்தும் வரிக்கு ஏற்ற தரமான சாலை போன்ற உள்கட்டமைப்பு வசதி ஆகியவை இந்தியாவில் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளது” என சாடியுள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

CM Fund: ரயிலிலிருந்து தள்ளிவிடப்பட்ட கர்ப்பிணியின் மருத்துவ செலவை ஏற்கும் அரசு... நிதியுதவியும் அறிவித்த முதலமைச்சர்...
ரயிலிலிருந்து தள்ளிவிடப்பட்ட கர்ப்பிணியின் மருத்துவ செலவை ஏற்கும் அரசு... நிதியுதவியும் அறிவித்த முதலமைச்சர்...
தமிழ்நாட்டில் 38 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து அரசு அதிரடி அறிவிப்பு...
தமிழ்நாட்டில் 38 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து அரசு அதிரடி அறிவிப்பு...
சோகம்! மறுவீட்டிற்குச் சென்ற மாப்பிள்ளை! கல்யாணம் முடிந்த 5 நாளில் பறிபோன உயிர்!
சோகம்! மறுவீட்டிற்குச் சென்ற மாப்பிள்ளை! கல்யாணம் முடிந்த 5 நாளில் பறிபோன உயிர்!
Delhi Election: கெஜ்ரிவாலுக்கு முன்பே ஜெயலலிதா - தேர்தல் தோல்வி, இது தெரியாமா போச்சே, நீளும் CM லிஸ்ட்
Delhi Election: கெஜ்ரிவாலுக்கு முன்பே ஜெயலலிதா - தேர்தல் தோல்வி, இது தெரியாமா போச்சே, நீளும் CM லிஸ்ட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Tirupathur: தாய்க்கு பாலியல் தொல்லை.. திமுக நிர்வாகிக்கு வெட்டு! சித்தியை கொலை செய்த இளைஞர்!Sivagangai Police: ”விசிகவினர் அடிச்சுட்டாங்க” நாடகம் ஆடிய பெண் SI! உண்மையை உடைத்த காவல்துறை!Delhi Next CM: டெல்லியின் அடுத்த முதல்வர்? முதலிடத்தில் பர்வேஷ் வர்மா! வெளியான லிஸ்ட்!Aravind kejriwal: ”டெல்லி மக்கள் கொடுத்த TWIST”தோல்விக்கு பின் உருக்கம் கெஜ்ரிவால் திடீர் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Fund: ரயிலிலிருந்து தள்ளிவிடப்பட்ட கர்ப்பிணியின் மருத்துவ செலவை ஏற்கும் அரசு... நிதியுதவியும் அறிவித்த முதலமைச்சர்...
ரயிலிலிருந்து தள்ளிவிடப்பட்ட கர்ப்பிணியின் மருத்துவ செலவை ஏற்கும் அரசு... நிதியுதவியும் அறிவித்த முதலமைச்சர்...
தமிழ்நாட்டில் 38 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து அரசு அதிரடி அறிவிப்பு...
தமிழ்நாட்டில் 38 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து அரசு அதிரடி அறிவிப்பு...
சோகம்! மறுவீட்டிற்குச் சென்ற மாப்பிள்ளை! கல்யாணம் முடிந்த 5 நாளில் பறிபோன உயிர்!
சோகம்! மறுவீட்டிற்குச் சென்ற மாப்பிள்ளை! கல்யாணம் முடிந்த 5 நாளில் பறிபோன உயிர்!
Delhi Election: கெஜ்ரிவாலுக்கு முன்பே ஜெயலலிதா - தேர்தல் தோல்வி, இது தெரியாமா போச்சே, நீளும் CM லிஸ்ட்
Delhi Election: கெஜ்ரிவாலுக்கு முன்பே ஜெயலலிதா - தேர்தல் தோல்வி, இது தெரியாமா போச்சே, நீளும் CM லிஸ்ட்
திமுகவில் இருந்து விலகிய நிர்வாகி; போஸ்ட் ஒட்டிய பாஜகவினர் - மயிலாடுதுறையில் பரபரப்பு...!
திமுகவில் இருந்து விலகிய நிர்வாகி; போஸ்டர் ஒட்டிய பாஜகவினர் - மயிலாடுதுறையில் பரபரப்பு...!
Trump Government's Mass Arrest: ட்ரம்ப் சார்...இப்படி டார்கெட் செட் பண்ணி கைது பண்றது நியாயமா.?
ட்ரம்ப் சார்...இப்படி டார்கெட் செட் பண்ணி கைது பண்றது நியாயமா.?
LIC Warning: எல்ஐசி பயனாளர்கள் அதிர்ச்சி..! அம்பலமான மோசடி, பாதிக்கப்பட்டவர்கள் என்ன செய்யலாம்? பறந்த உத்தரவு
LIC Warning: எல்ஐசி பயனாளர்கள் அதிர்ச்சி..! அம்பலமான மோசடி, பாதிக்கப்பட்டவர்கள் என்ன செய்யலாம்? பறந்த உத்தரவு
Priyanka Chopra: மரகத நெக்லஸில் மூச்சடைக்க வைத்த பிரியங்கா சோப்ரா...  வாயடைக்க வைத்த விலை.. இத்தனை கோடியா.?!!
மரகத நெக்லஸில் மூச்சடைக்க வைத்த பிரியங்கா சோப்ரா... வாயடைக்க வைத்த விலை.. இத்தனை கோடியா.?!!
Embed widget