மேலும் அறிய

Thiruvarur: நெல் விளையும் பூமியில் புல் விளையுது..! - கொங்கு மாவட்டத்தினருக்கு நிலத்தை குத்தகைக்குவிடும் விவசாயிகள்

ஆண்டுக்கு ஏக்கருக்கு 4 மூட்டை யூரியா, 3 மூட்டை டிஏபி உரங்களை தவறாமல் இட்டுவரும் பட்சத்தில் சுமார் 40 வருடங்களுக்கு தொடர்ந்து கோரை புல் கிடைக்கும்

கோரைப்புல் சாகுபடிக்காக  விளைநிலத்தை வெளிமாவட்ட வியாபாரிகளுக்கு குத்தகைக்கு விடும் திருவாரூர் மாவட்ட விவசாயிகள்
 
காவிரி டெல்டா மாவட்டமான திருவாரூரில் நெல் சாகுபடியே பிரதான விளைபொருளாக இருந்து வருகிறது. அம்மாவட்டத்தை பொறுத்தவரை குறுவை, சம்பா, தாளடி என முப்போக சாகுபடிகடந்த 2 ஆண்டு காலமாக நடந்து வருகிறது. திருவாரூர் மாவட்டம் முழுவதும் 70 சதவீகிதம் ஆற்றுப் பாசனத்தை நம்பியும் 30 சதவீகிதம் ஆழ்துளை கிணறு மூலமாகவும் நெல் சாகுபடி நடந்து வருகிறது.
 
இந்நிலையில் மாவட்டத்தில் ஆற்றுப் பாசனம் இல்லாத பகுதிகளில் ஆழ்துளை கிணறுகள் மூலமாக கோரை சாகுபடிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். 
 
நன்னிலம், கொத்தவாசல், ஸ்ரீவாஞ்சியம், தெக்கிராவெளி, அச்சுதமங்கலம் ஆகிய பகுதிகளில் கோரைப்புல் சாகுபடிக்காக தங்களது நிலங்களை கோவை, ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்ட விவசாயிகளிடம் குத்தகைக்கு விடத்தொடங்கியுள்ள திருவாரூர் மாவட்ட விவசாயிகள் குத்தகை மூலம் கணிசமான வருவாய் கிடைப்பதாக கூறுகின்றனர். இப்பகுதியில் சாகுபடி செய்யப்படும் கோரை புற்களை திருச்சி, முசிறி பகுதியில் இருந்து வரும் வியாபாரிகள் மொத்தமாக வாங்கிச்சென்று பாய் மற்றும் வீட்டு உபயோகப்பொருட்கள்  தயாரிப்பு நிறுவனங்களுக்கு விற்பனை  செய்கின்றனர்.

Thiruvarur: நெல் விளையும் பூமியில் புல் விளையுது..! - கொங்கு மாவட்டத்தினருக்கு நிலத்தை குத்தகைக்குவிடும் விவசாயிகள்
தண்ணீர் பாய வழியில்லாத, வளமற்ற நிலப்பகுதிகளில் கோரை சாகுபடி  ஆழ்த்துளை கிணற்றின் உதவியுடன் நடந்து வருகிறது. ஆண்டுக்கு ஏக்கருக்கு 4 மூட்டை யூரியா, 3 மூட்டை டிஏபி உரங்களை தவறாமல் இட்டுவரும் பட்சத்தில் சுமார் 40 வருடங்களுக்கு தொடர்ந்து கோரை புல் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. கோரைப்புற்களை அறுவடை செய்து கட்டு போடும் நபர்களுக்கு கட்டுக்கூலியாக 18 ரூபாய் வழங்கப்படுகிறது.
 
இதுகுறித்து திருவாரூர் மாவட்ட விவசாயிகள்  கூறுகையில்...
 
திருவாரூர் மாவட்டத்தில் மண்வளம் குன்றிய நிலங்களில் கோரை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. நெல்பயிர் மற்றும் பணப்பயிர் சாகுபடிக்கு வழியில்லாத நிலங்களை நவீன தொழில்நுட்பத்தின் வாயிலாக வேளாண்துறையினர் விளை நிலமாக மாற்றிக்கொடுத்தால் உணவுபொருள் உற்பத்தியை அதிகரிக்க முடியும்.
 
இதற்காக அட்மா திட்டம் 2005-06ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால், திருவாரூர் மாவட்டத்தில் இத்திட்டம் முடங்கியுள்ளது.  வேளாண்மை மற்றும் அதனை சார்ந்த துறைகளில் உள்ள தொழில்நுட்பங்களை விவசாயிகளுக்கு கொண்டு சேர்ப்பதே அட்மா திட்டத்தின் நோக்கமாகும். இந்நிலையில் மாவட்ட அதிகாரிகளின் ஆர்வமின்மையால் விளைநிலங்கள் கோரை சாகுபடிக்கு இலக்காகின்றன.

Thiruvarur: நெல் விளையும் பூமியில் புல் விளையுது..! - கொங்கு மாவட்டத்தினருக்கு நிலத்தை குத்தகைக்குவிடும் விவசாயிகள்
இதுகுறித்து விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் தெரிவித்தும் நடவடிக்கையில்லை. இதனால் நெல் பயிரிட வழியில்லாத நிலங்களை  வருடத்திற்கு ரூ.10 ஆயிரத்திற்கு  விவசாயிகள் வெளிமாவட்ட வியாபாரிகளுக்கு  குத்தகைக்கு விட வேண்டிய நிலமை ஏற்பட்டுள்ளதாக நிலத்தை குத்தகைக்கு விட்டுள்ள விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Mayor Priya: ரிப்பன் மாளிகை போராட்ட களமல்ல; தூய்மைப் பணியாளர்களுக்கு ஆக.31 வரை கெடு - மேயர் பிரியா கூறியது என்ன.?
ரிப்பன் மாளிகை போராட்ட களமல்ல; தூய்மைப் பணியாளர்களுக்கு ஆக.31 வரை கெடு - மேயர் பிரியா கூறியது என்ன.?
India China Vs US: இந்தியா வரும் சீன வெளியுறவு அமைச்சர்; மாறும் ரூட் - அமெரிக்காவுக்கு ஆப்பு கன்பார்ம்
இந்தியா வரும் சீன வெளியுறவு அமைச்சர்; மாறும் ரூட் - அமெரிக்காவுக்கு ஆப்பு கன்பார்ம்
Rahul Gandhi Vs EC: “இறந்தவர்களுடன் தேநீர் குடித்தேன்“; தேர்தல் ஆணையத்தை கலாய்த்த ராகுல் காந்தி - வீடியோ பதிவு
“இறந்தவர்களுடன் தேநீர் குடித்தேன்“; தேர்தல் ஆணையத்தை கலாய்த்த ராகுல் காந்தி - வீடியோ பதிவு
கட்சியில் பெயர் வாங்க கல்வி நிலையங்களை பயன்படுத்துவதா? ஆளுநரை புறக்கணித்த மாணவி- கொந்தளித்த அண்ணாமலை
கட்சியில் பெயர் வாங்க கல்வி நிலையங்களை பயன்படுத்துவதா? ஆளுநரை புறக்கணித்த மாணவி- கொந்தளித்த அண்ணாமலை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Independence Day 2025: சுதந்திர தின விழா கொண்டாட்டம் ஜொலிக்கும் சென்னை 10,000 போலீசார் குவிப்பு
வகுப்பறைக்கு வந்த மாணவன் மயங்கி விழுந்து உயிரிழப்பு பதற வைக்கும் CCTV காட்சி | Student Died Classroom
முதல் மனைவியுடன் மாதம்பட்டி 2-வது மனைவியின் நிலைமை? | Joy Crizildaa | Madhampatti Rangaraj Marriage
Independence Day Rehearsal : 79-வது சுதந்திர தின விழா காவல்துறை அணிவகுப்பு ஒத்திகை தயாராகும்  கோட்டை
Nagpur Couple Viral Video : விபத்தில் இறந்த மனைவிஉதவிக்கு வராத மக்கள் பைக்கில் எடுத்து சென்ற கணவர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Mayor Priya: ரிப்பன் மாளிகை போராட்ட களமல்ல; தூய்மைப் பணியாளர்களுக்கு ஆக.31 வரை கெடு - மேயர் பிரியா கூறியது என்ன.?
ரிப்பன் மாளிகை போராட்ட களமல்ல; தூய்மைப் பணியாளர்களுக்கு ஆக.31 வரை கெடு - மேயர் பிரியா கூறியது என்ன.?
India China Vs US: இந்தியா வரும் சீன வெளியுறவு அமைச்சர்; மாறும் ரூட் - அமெரிக்காவுக்கு ஆப்பு கன்பார்ம்
இந்தியா வரும் சீன வெளியுறவு அமைச்சர்; மாறும் ரூட் - அமெரிக்காவுக்கு ஆப்பு கன்பார்ம்
Rahul Gandhi Vs EC: “இறந்தவர்களுடன் தேநீர் குடித்தேன்“; தேர்தல் ஆணையத்தை கலாய்த்த ராகுல் காந்தி - வீடியோ பதிவு
“இறந்தவர்களுடன் தேநீர் குடித்தேன்“; தேர்தல் ஆணையத்தை கலாய்த்த ராகுல் காந்தி - வீடியோ பதிவு
கட்சியில் பெயர் வாங்க கல்வி நிலையங்களை பயன்படுத்துவதா? ஆளுநரை புறக்கணித்த மாணவி- கொந்தளித்த அண்ணாமலை
கட்சியில் பெயர் வாங்க கல்வி நிலையங்களை பயன்படுத்துவதா? ஆளுநரை புறக்கணித்த மாணவி- கொந்தளித்த அண்ணாமலை
Chennai Traffic Changes: சுதந்திர தின கொண்டாட்டம்; சென்னைல முக்கிய சாலைகள்ல போக்குவரத்து மாற்றம் - முழு விவரம்
சுதந்திர தின கொண்டாட்டம்; சென்னைல முக்கிய சாலைகள்ல போக்குவரத்து மாற்றம் - முழு விவரம்
BJP Vs CONG.: குடியுரிமை இல்லாத சமயத்தில் சோனியாவுக்கு ஓட்டுரிமை வந்தது எப்படி.?; ஆதாரத்துடன் பாஜக கேள்வி
குடியுரிமை இல்லாத சமயத்தில் சோனியாவுக்கு ஓட்டுரிமை வந்தது எப்படி.?; ஆதாரத்துடன் பாஜக கேள்வி
’’தமிழ்நாட்டுக்கு எதிரானவர்’’ ஆளுநரிடம் பட்டம் பெற மறுத்த மாணவி: நெல்லையில் அதிர்ச்சி சம்பவம்!
’’தமிழ்நாட்டுக்கு எதிரானவர்’’ ஆளுநரிடம் பட்டம் பெற மறுத்த மாணவி: நெல்லையில் அதிர்ச்சி சம்பவம்!
Pakistan PM: ‘அந்நியன்‘ போல் பேசும் பாகிஸ்தான்; தண்ணீருக்காக கெஞ்சவும் செய்யுறாங்க, மிரட்டவும் செய்யுறாங்க
‘அந்நியன்‘ போல் பேசும் பாகிஸ்தான்; தண்ணீருக்காக கெஞ்சவும் செய்யுறாங்க, மிரட்டவும் செய்யுறாங்க
Embed widget