மேலும் அறிய

ரூ.4.71 லட்சம், 31 கிராம் தங்கம்: காணியம்மன் கோவில் உண்டியலில் விழுந்த காணிக்கை

பாப்பிரெட்டிப்பட்டி அருகே பிரசித்தி பெற்ற காணியம்மன் கோவில் உண்டியலில் ரூ.4.71 லட்சம் பணம், 31 கிராம் தங்கம், காணிக்கையாக பக்தர்கள் செலுத்தினர்.

பாப்பிரெட்டிப்பட்டி அருகே பிரசித்தி பெற்ற காணியம்மன் கோவில் உண்டியலில் ரூ.4.71 லட்சம் பணம், 31 கிராம் தங்கம், காணிக்கையாக பக்தர்கள் செலுத்தினர்.

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டி அடுத்த இருளப்பட்டி கிராமத்தில் பிரசித்தி பெற்ற காணியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்து அறநிலைத்துறைக்கு சொந்தமான இந்த கோயிலில், இருளப்பட்டி, அ.பள்ளிப்பட்டி, கவுண்டம்பட்டி, மாரியம்ப்ட்டி, மூக்காரெட்டிப்பட்டி, எச்.புதுப்பட்டி, நடூர், சுற்று வட்டார பகுதிகளைச் சார்ந்த 20-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் ஆண்டுதோறும் ஆவணி மாதத்தில் தேர் திருவிழாவை வெகு விமர்சையாக நடத்தி வருகின்றனர்.  இந்த நிலையில் 10 நாட்கள் நடைபெறும் இந்த தேர் திரீவிழாவில், தினமும் சிறப்பு அபிஷேகம், உபயம், அன்னதானம் நடத்தப்படுகிறது. இதில் தினமும் ஒரு சமூகத்தினர் உபயம், சிறப்பு அபிஷேகம், அன்னதானம் வழங்கி வருகின்றனர்.

இந்த திருவிழா முடிந்தவுடன் ஆண்டுதோறும் கோயிலில் உள்ள உண்டியலில் பக்தர்கள் செலுத்தும் காணிக்கைகள் எண்ணப்படுவது வழக்கம். இந்த நிலையில் நேற்று முன்தினம் ஆவணி தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்ற முடிந்தது. இதனை அடுத்து நேற்று காலை பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கைகள் எண்ணும் பணி நடைபெற்றது. இந்த உண்டியல் எண்ணும் பணியில் காணியம்மன் கோவில் செயல் அலுவலர் கீர்த்தனா, உதவி ஆணையர் முன்னிலையில்,  இந்து அறநிலைத்துறை ஊழியர்கள், உள்ளூரில் உள்ள கோவில் அறங்காவல் குழுவினர், பெரியவர்கள்,  பொதுமக்கள் என 10-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர். 

இந்த நிலையில் காலை சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கோயில் கருவறை மற்றும் கோயில் வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த நான்கு உண்டியலில் பொதுமக்கள் முன்னிலையில் உடைக்கப்பட்டது. சில்லறை காசுகள் தனியாகவும் ரூபாய் நோட்டுக்களை தனித் தனியாக பிரித்து அடுக்கி வைத்தனர்.

இதில் 500, 200, 100, 50, 20, 10 ரூபாய் நோட்டுகள் தனித்தனியாக கட்டப்பட்டது. மேலும் சில்லரைக் காசுகள் ஐந்து, இரண்டு, ஒரு ரூபாய் நாணயங்கள் தனித்தனியாக பிளாஸ்டிக் கவரில் கட்டி வைக்கப்பட்டது. தொடர்ந்து கடந்த ஓராண்டில் கோயிலில் வைக்கப்பட்டிருந்த நான்கு உண்டியலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கையாக ரூ.4.71 லட்சம் பணம் இருந்தது. மேலும் கடந்த ஓராண்டில் கோவிலுக்கு பக்தர்கள் கொண்டு வந்த குத்துவிளக்கு, தங்கம் உள்ளிட்டவைகள் 31 கிராம் இருந்தது.

ஆனால் வெள்ளிப் பொருட்கள் எதுவும் உண்டியலில் காணிக்கையாக வரவில்லை. தொடர்ந்து உண்டியலில் இருந்த பணம் முழுவதும், பொதுமக்கள் முன்னிலையில், வீடியோ பதிவுடன் எண்ணப்பட்டு இந்து அறநிலையத் துறை அலுவலர்கள் மூலம் கருவூலத்தில் செலுத்தப்பட்டது.

தொடர்ந்து மீண்டும் கோவிலில் வைக்கப்பட்டுள்ள உண்டியல்களுக்கு பொதுமக்கள் முன்னிலையில் சீல் வைத்து, பக்தர்கள் காணிக்கை செலுத்தும் வகையில் கோயில் கருவறை மற்றும் வளாகத்தில் ஆங்காங்கே வைக்கப்பட்டது. இந்த உண்டியல் எண்ணும் பணியில் இந்து அறநிலைய துறை அதிகாரிகள், இருளப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் குமார், புதுப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் உள்ளிட்ட ஊர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TVK Vijay: த.வெ.க. முதல் அரசியல் மாநாடு எப்போது? இன்று தேதியை அறிவிக்கிறார் நடிகர் விஜய்
TVK Vijay: த.வெ.க. முதல் அரசியல் மாநாடு எப்போது? இன்று தேதியை அறிவிக்கிறார் நடிகர் விஜய்
Chidambaram Accident: காலையிலேயே சோகம் - சிதம்பரம் அருகே கோர விபத்து - ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழப்பு
Chidambaram Accident: காலையிலேயே சோகம் - சிதம்பரம் அருகே கோர விபத்து - ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழப்பு
Cabinet Ministry: இனி கவலை வேண்டாம் - 70 வயதை கடந்தவர்களுக்கும் ரூ.5 லட்சம் வரை இலவச மருத்துவ காப்பீடு - மத்திய அரசு
Cabinet Ministry: இனி கவலை வேண்டாம் - 70 வயதை கடந்தவர்களுக்கும் ரூ.5 லட்சம் வரை இலவச மருத்துவ காப்பீடு - மத்திய அரசு
Breaking News LIVE: பொங்கல் பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று தொடக்கம்
Breaking News LIVE: பொங்கல் பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று தொடக்கம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vinesh phogat on PT Usha | ”பாஜகவின் அரசியல்” ஒலிம்பிக்கில் நடந்தது என்ன? வினேஷ் போகத் பகீர்Rahul Gandhi slams PM Modi | ”திறமை இல்லாத மோடி” வெளுத்து வாங்கிய ராகுல்.. தீப்பொறி PressmeetAarti Ravi on Divorce : விவாகரத்து!’’எனக்கே தெரியாது’’ஆர்த்தி ரவி குற்றச்சாட்டுKanimozhi Advice : ”ஏன் இப்படி வர்றீங்க”கனிமொழி அன்பு கட்டளை உடனே OK சொன்ன இளைஞர்கள்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay: த.வெ.க. முதல் அரசியல் மாநாடு எப்போது? இன்று தேதியை அறிவிக்கிறார் நடிகர் விஜய்
TVK Vijay: த.வெ.க. முதல் அரசியல் மாநாடு எப்போது? இன்று தேதியை அறிவிக்கிறார் நடிகர் விஜய்
Chidambaram Accident: காலையிலேயே சோகம் - சிதம்பரம் அருகே கோர விபத்து - ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழப்பு
Chidambaram Accident: காலையிலேயே சோகம் - சிதம்பரம் அருகே கோர விபத்து - ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழப்பு
Cabinet Ministry: இனி கவலை வேண்டாம் - 70 வயதை கடந்தவர்களுக்கும் ரூ.5 லட்சம் வரை இலவச மருத்துவ காப்பீடு - மத்திய அரசு
Cabinet Ministry: இனி கவலை வேண்டாம் - 70 வயதை கடந்தவர்களுக்கும் ரூ.5 லட்சம் வரை இலவச மருத்துவ காப்பீடு - மத்திய அரசு
Breaking News LIVE: பொங்கல் பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று தொடக்கம்
Breaking News LIVE: பொங்கல் பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று தொடக்கம்
மதுரையில் பிரிட்ஜ் வெடித்து பெண்கள் விடுதியில் தீ விபத்து.. 2 பேர் உயிரிழந்த சோகம்..
மதுரையில் பிரிட்ஜ் வெடித்து பெண்கள் விடுதியில் தீ விபத்து.. 2 பேர் உயிரிழந்த சோகம்..
JUDO: சென்னையில் தொடங்கியது கேலோ இந்தியா ஜூடோ போட்டி: நேதாஜிக்கு அர்ப்பணிப்பு..!
சென்னையில் தொடங்கியது கேலோ இந்தியா ஜூடோ போட்டி: நேதாஜிக்கு அர்ப்பணிப்பு..!
அதிரடி ஆக்‌ஷன் எடுத்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் : கலங்கிப்போன அரசு அதிகாரிகள்
அதிரடி ஆக்‌ஷன் எடுத்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் : கலங்கிப்போன அரசு அதிகாரிகள்
Nalla Neram Today Sep 12: நல்ல நேரம் எப்போது? இன்றைய பஞ்சாங்கம்! சுபகாரியங்கள் எப்போ செய்யலாம்?
Nalla Neram: நல்ல நேரம் எப்போது? இன்றைய பஞ்சாங்கம்! சுபகாரியங்கள் எப்போ செய்யலாம்?
Embed widget