மேலும் அறிய

சென்னையில் வலி நிவாரணி மாத்திரைகள், குட்கா கடத்தல் - அதிரடி கைதுகள்! போலீசார் தீவிர விசாரணை

சட்டவிரோதமாக உடல் வலி நிவாரண மாத்திரைகள் வைத்திருந்த 3 நபர்கள் கைது. 119 வலி நிவாரண மாத்திரைகள் மற்றும் 2 சிரஞ்சுகள் பறிமுதல்

பிளாஸ்டிக் பையில் வலி நிவாரண மாத்திரைகள்

சென்னை பெருநகர காவல் P-6 கொடுங்கையூர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் தனிப்படை போலீசார் கொடுங்கையூர் R.V.நகர் மயானம் அருகே கண்காணிப்பு பணியில் இருந்த போது , அங்கு கையில் பிளாஸ்டிக் பையுடன் நின்று கொண்டிருந்த ஒரு நபரை பிடித்து விசாரணை செய்த போது , அவர் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்தார்.

மாத்திரைகள் பறிமுதல்

சந்தேகத்தின் பேரில் அவரது கையிலிருந்த பிளாஸ்டிக் பையை சோதனை செய்த போது , சட்ட விரோதமாக விற்பனைக்காக உடல் வலி நிவாரண மாத்திரைகள் வைத்திருந்தது தெரிய வந்தது. அதன் பேரில் சட்டவிரோதமாக உடல் வலி நிவாரண மாத்திரைகளை விற்பனைக்காக வைத்திருந்த கொடுங்கையூர் பகுதியை சேர்ந்த குருமூர்த்தி (எ) குரு ( வயது 19 ) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து  60 TYDOL உடல் வலி நிவாரண மாத்திரைகள் மற்றும் 2 சிரிஞ்சுகள் பறிமுதல் செய்யப்பட்டது. 

இதே போல R-7  கே.கே.நகர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் , காவல் குழுவினர் முருகேசன் தெரு , வேம்புலியம்மன் கோயில் தெரு சந்திப்பு அருகில் கண்காணித்து , அங்கு சட்ட விரோதமாக உடல் வலி நிவாரண மாத்திரைகள் வைத்திருந்த ஆழ்வார் திருநகர் பகுதியை சேர்ந்த கோவிந்தராஜ் ( வயது 23 ) , அசோக்நகர் பகுதியை சேர்ந்த விஜய் ( வயது 25 ) ஆகிய இருவரை கைது செய்தனர்.

அவர்களிடமிருந்து 59 TYDOL  மற்றும் NITRAVET  உடல் வலி நிவாரண மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் விசாரணையில் எதிரி கோவிந்தராஜ் மீது 1 வழக்கும், விஜய் மீது 4 வழக்குகள் உள்ளதும் தெரிய வந்தது.  
கைது செய்யப்பட்ட மூவரும் விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு , நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.

ஆட்டோவில் , குட்கா புகையிலை பொருட்கள் கடத்தல். 94 கிலோ குட்கா புகையிலை பொருட்கள் மற்றும் 1 ஆட்டோ பறிமுதல்.

சென்னையில் போதைப் பொருட்களுக்கு எதிரான நடவடிக்கை துரிதப்படுத்தப்பட்டு தீவிரமாக கண்காணித்து குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக, S-8 ஆதம்பாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் காவல் குழுவினர் ஆதம்பாக்கம்,  அம்பேத்கர் நகர் மெயின் ரோடு, அருகே வாகனசோதனை பணியிலிருந்த போது , அங்கு சந்தேகத்திற்கிடமாக வந்த ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்த போது , ஆட்டோவில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்களை கடத்தி வந்தது தெரிய வந்தது.

அதன் பேரில், S-8 ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, சட்டவிரோதமாக குட்கா புகையிலை பொருட்களை ஆட்டோவில் கடத்தி வந்த இராமநாதபுரம் திருவாடனை பகுதியை சேர்ந்த அசாரூதின் (வயது 26) ,  பார்டர் தோட்டம் பகுதியை சேர்ந்த அப்பு ( வயது 38)  மற்றும் அஜித்குமார் (வயது 26) ஆகிய மூன்று நபர்களை கைது செய்தனர். அவர்களிடமிருந்து ஹான்ஸ் , கூலிப், உட்பட மொத்தம் சுமார் 94 கிலோ கிராம் எடை கொண்ட குட்கா புகையிலை பொருட்கள் மற்றும் குற்றச் சம்பவத்திற்கு பயன்படுத்திய  1 ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் விசாரணையில் ஏற்கனவே அசாரூதின் மீது 1 வழக்கும் மற்றும் அஜித்குமார் மீது 1 வழக்கு உள்ளதும் தெரிய வந்தது. கைது செய்யப்பட்ட மூவரும் விசாரணைக்குப் பின்னர் (04.07.2025) நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

CM Stalin Speech: “நீங்களும் ஜெயித்து வாருங்கள்.. நாங்களும் ஜெயித்து வருகிறோம்“ மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி முதல்வர் பேச்சு
“நீங்களும் ஜெயித்து வாருங்கள்.. நாங்களும் ஜெயித்து வருகிறோம்“ மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி முதல்வர் பேச்சு
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "இந்த மடிக்கணினி உங்கள் வாழ்க்கையின் கேம் சேஞ்சர்.." உத்வேகம் தந்த உதயநிதி ஸ்டாலின்
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் மாயம்: சிபிஐ விசாரணை! அதிர்ச்சி தரும் திருப்பம், உண்மை என்ன?
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் மாயம்: சிபிஐ விசாரணை! அதிர்ச்சி தரும் திருப்பம், உண்மை என்ன?
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "பேப்பர், பேனா இருந்தாலே தமிழ்நாடு மாணவர்கள் சாதிப்பார்கள்.." புகழாரம் சூட்டிய உதயநிதி
ABP Premium

வீடியோ

Minister Moorthy Issue | அமைச்சர் மூர்த்தியைசுத்துப்போட்ட மக்கள்!மதுரையில் பரபரப்பு
DMK MLA Lakshmanan Kabbadi | ’’கபடி..கபடி..’’ கில்லி விஜய் ஆக மாறிய MLA.. வியந்து பார்த்த திமுகவினர்
Pongal Gift 2026 | பொங்கல் பரிசு ரூ.3000 !முதல்வர் அதிரடி அறிவிப்பு யாருக்கெல்லாம் கிடைக்கும்?
MP Jothimani angry | ”காங்கிரஸ் அழிஞ்சுட்டு இருக்கு
Kachabeswarar Temple | கச்சபேஸ்வரர் கோயிலில் சிறப்பு ஆருத்ரா தரிசனம்பக்தர்கள் மனமுருகி வழிபாடு

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Stalin Speech: “நீங்களும் ஜெயித்து வாருங்கள்.. நாங்களும் ஜெயித்து வருகிறோம்“ மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி முதல்வர் பேச்சு
“நீங்களும் ஜெயித்து வாருங்கள்.. நாங்களும் ஜெயித்து வருகிறோம்“ மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி முதல்வர் பேச்சு
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "இந்த மடிக்கணினி உங்கள் வாழ்க்கையின் கேம் சேஞ்சர்.." உத்வேகம் தந்த உதயநிதி ஸ்டாலின்
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் மாயம்: சிபிஐ விசாரணை! அதிர்ச்சி தரும் திருப்பம், உண்மை என்ன?
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் மாயம்: சிபிஐ விசாரணை! அதிர்ச்சி தரும் திருப்பம், உண்மை என்ன?
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "பேப்பர், பேனா இருந்தாலே தமிழ்நாடு மாணவர்கள் சாதிப்பார்கள்.." புகழாரம் சூட்டிய உதயநிதி
All-New Tata Punch Turbo: வந்துட்டேன்னு சொல்லு, பவரா வந்துட்டேன்னு சொல்லு; புதிய டாடா பஞ்ச் டர்போ - சக்திவாய்ந்த எஞ்சினுடன்
வந்துட்டேன்னு சொல்லு, பவரா வந்துட்டேன்னு சொல்லு; புதிய டாடா பஞ்ச் டர்போ - சக்திவாய்ந்த எஞ்சினுடன்
The AQI Illusion: காற்று தரக் குறியீடு மாயை: தரவுகள் பற்றாக்குறையால் சரிந்துவரும் இந்தியாவின் மாசுபாடு போராட்டம்
காற்று தரக் குறியீடு மாயை: தரவுகள் பற்றாக்குறையால் சரிந்துவரும் இந்தியாவின் மாசுபாடு போராட்டம்
Trump's Next Target: ட்ரம்ப்பின் அடுத்த டார்கெட்; இரண்டு நாடுகளுக்கு குறி; பீதியில் ஐரோப்பா; அமைதி காக்கும் உலக நாடுகள்
ட்ரம்ப்பின் அடுத்த டார்கெட்; இரண்டு நாடுகளுக்கு குறி; பீதியில் ஐரோப்பா; அமைதி காக்கும் உலக நாடுகள்
சபரிமலை: மகரஜோதி நாளில் 900 பேருந்துகள் இயக்கம்! பக்தர்களுக்கு குட் நியூஸ் அறிவித்த அமைச்சர்!
சபரிமலை: மகரஜோதி நாளில் 900 பேருந்துகள் இயக்கம்! பக்தர்களுக்கு குட் நியூஸ் அறிவித்த அமைச்சர்!
Embed widget