மேலும் அறிய

Coimbatore : கோவை அரசு அலுவலங்களில் இலஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை - 38 ஆயிரம் பறிமுதல்

கோவையில் க.க. சாவடி பகுதியில் உள்ள போக்குவரத்து துறை சோதனை சாவடி மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலகத்தில் இலஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு முழுவதும் திருவாரூர், நாமக்கல், கோவை உள்ளிட்ட 27 மாவட்டங்களில் உள்ள அரசு அலுவலகங்களில் இலஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

பத்திரப் பதிவு துறை, ஊரக வளர்ச்சித் துறை, வருவாய்த் துறை, தொழில்துரை, வட்டார போக்குவரத்துத் துறை, நெடுஞ்சாலைத் துறை, வனத்துறை, வணிக வரித்துறை, மாசு கட்டுப்பாட்டு வாரியம், தீயணைப்புத் துறை, நுகர்பொருள் வாணிபக் கழகம், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், நகர ஊரமைப்புத் துறை, வேளாண்மைத் துறை, மதுபானம் மற்றும் ஆயத்தீர்வை துறை, மதுவிலக்கு அமலாக்கத் துறை ஆகிய 16 துறை சார்ந்த அரசு அலுவலகங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டது.

தீபாவளி பண்டிகை நெருங்குவதை முன்னிட்டு பணம் வசூல் செய்து வருவதாக எழுந்த புகாரின் பேரில், இந்த சோதனை நடத்தப்பட்டது. இதில் ஒரு கோடியே 12 இலட்சத்து 57 ஆயிரத்து 803 ரூபாய் பணம் மற்றும் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது.

இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டம் க.க. சாவடி பகுதியில் உள்ள போக்குவரத்து துறை சோதனை சாவடியில் இலஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையில் கணக்கில் வராத 32 ஆயிரத்து 680 ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக மோட்டார் வாகன ஆய்வாலர் ஈஸ்வரி மற்றும் உதவியார் யுவராஜ் ஆகியோர் மீது இலஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கோவை மாவட்ட குழந்தைகள் நல அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த அலுவலகத்தில் பணியாற்றும் குழந்தைகள் நல பாதுகாப்பு உறுப்பினர் தனலட்சுமி மற்றும் ஊழியர் கார்த்திக் ஆகியோர் காப்பகத்தில் உள்ள ஒரு குழந்தையை வீட்டுக்கு அனுப்ப சான்றிதழ் வழங்க 5 ஆயிரம் ரூபாய் இலஞ்சம் கேட்டதாக இலஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகளுக்கு புகார் வந்தது.

இந்த புகாரின் பேரில் அந்த அலுவலகத்தில் இலஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது சான்றிதழ் வழங்க இலஞ்சம் வாங்கிய இருவரையும் கையும், களவுமாக பிடித்த அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். பின்னர் இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்த இலஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அரசு அலுவலகங்களில் நடந்த இலஞ்ச ஒழிப்புத் துறை சோதனை பரபரப்பை ஏற்படுத்தியது.

இதேபோல திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஊத்துக்குழி தாலுக்கா அலுவலகத்திலும் இலஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். இதில் கணக்கில் வராத 80 ஆயிரம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் பகுதியில் உள்ள வட்டார போக்குவரத்துத் துறை அலுவலகத்தில் நடந்த சோதனையில் கணக்கில் வராத ஒரு இலட்சத்து 27 ஆயிரம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Seeman Case: சீமானுக்கு போலீஸ் சம்மன்: பிப்.27, காலை 10 மணிக்கு ஆஜராக வேண்டும்: நடிகை பாலியல் புகார் வழக்கு..
சீமானுக்கு போலீஸ் சம்மன்: பிப்.27, காலை 10 மணிக்கு ஆஜராக வேண்டும்: நடிகை பாலியல் புகார் வழக்கு..
TN Rain: வானிலையில் ட்விஸ்ட்.! தமிழ்நாட்டின் 9 மாவட்டங்களில் கனமழை வெளுக்கப்போகுது.!
வானிலையில் ட்விஸ்ட்.! தமிழ்நாட்டின் 9 மாவட்டங்களில் கனமழை வெளுக்கப்போகுது.! லிஸ்ட் இதோ.!
சோலி முடிஞ்சு.. சாம்பியன்ஸ் டிராபியில் இருந்து பாகிஸ்தான் அவுட்! கண்ணீர் விடவைத்த நாகின் பாய்ஸ்!
சோலி முடிஞ்சு.. சாம்பியன்ஸ் டிராபியில் இருந்து பாகிஸ்தான் அவுட்! கண்ணீர் விடவைத்த நாகின் பாய்ஸ்!
சாம்பியன்ஸ் டிராபியில் தாக்குதல் நடத்த சதி? அம்பலமானது தீவிரவாதிகள் திட்டம் - போட்டிகள் இடமாற்றமா?
சாம்பியன்ஸ் டிராபியில் தாக்குதல் நடத்த சதி? அம்பலமானது தீவிரவாதிகள் திட்டம் - போட்டிகள் இடமாற்றமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Sengottaiyan: Three Language Policy | மாநில அதிகாரம் பறிப்புசெக் வைத்த மத்திய அரசுCBSE-ல் நடக்கும் ட்விஸ்ட் | Hindi | DMK | UdhayanidhiDurai Murugan Slams Vijay: போட்டுடைத்த கமல்  ”விஜய்க்கு 2026-ல புரியும்” டார்கெட் செய்த சாட்டை!PM Modi with pawan kalyan:  காவி உடையில் ENTRY! மோடி சொன்ன வார்த்தை? உண்மையை உடைத்த பவன்கல்யாண்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Seeman Case: சீமானுக்கு போலீஸ் சம்மன்: பிப்.27, காலை 10 மணிக்கு ஆஜராக வேண்டும்: நடிகை பாலியல் புகார் வழக்கு..
சீமானுக்கு போலீஸ் சம்மன்: பிப்.27, காலை 10 மணிக்கு ஆஜராக வேண்டும்: நடிகை பாலியல் புகார் வழக்கு..
TN Rain: வானிலையில் ட்விஸ்ட்.! தமிழ்நாட்டின் 9 மாவட்டங்களில் கனமழை வெளுக்கப்போகுது.!
வானிலையில் ட்விஸ்ட்.! தமிழ்நாட்டின் 9 மாவட்டங்களில் கனமழை வெளுக்கப்போகுது.! லிஸ்ட் இதோ.!
சோலி முடிஞ்சு.. சாம்பியன்ஸ் டிராபியில் இருந்து பாகிஸ்தான் அவுட்! கண்ணீர் விடவைத்த நாகின் பாய்ஸ்!
சோலி முடிஞ்சு.. சாம்பியன்ஸ் டிராபியில் இருந்து பாகிஸ்தான் அவுட்! கண்ணீர் விடவைத்த நாகின் பாய்ஸ்!
சாம்பியன்ஸ் டிராபியில் தாக்குதல் நடத்த சதி? அம்பலமானது தீவிரவாதிகள் திட்டம் - போட்டிகள் இடமாற்றமா?
சாம்பியன்ஸ் டிராபியில் தாக்குதல் நடத்த சதி? அம்பலமானது தீவிரவாதிகள் திட்டம் - போட்டிகள் இடமாற்றமா?
Seeman: இப்போ காளியம்மாளும் காலி.. அடிமேல் அடி வாங்கும் அண்ணன்! என்ன செய்யப்போகிறார் சீமான்?
Seeman: இப்போ காளியம்மாளும் காலி.. அடிமேல் அடி வாங்கும் அண்ணன்! என்ன செய்யப்போகிறார் சீமான்?
NCET 2025: ஒருங்கிணைந்த ஆசிரியர் படிப்புக்கு நுழைவுத் தேர்வு; மார்ச் 16 வரை விண்ணப்பிக்கலாம்- எப்படி?
NCET 2025: ஒருங்கிணைந்த ஆசிரியர் படிப்புக்கு நுழைவுத் தேர்வு; மார்ச் 16 வரை விண்ணப்பிக்கலாம்- எப்படி?
எம்பி சுதா குறித்து அன்புமணி ராமதாஸ் பேச்சு... சூடான எம்பி - என்ன நடந்தது...?
எம்பி சுதா குறித்து அன்புமணி ராமதாஸ் பேச்சு... சூடான எம்பி - என்ன நடந்தது...?
NZ vs BAN: பாகிஸ்தானுக்கு நம்பிக்கைத் தரும் பங்களா பாய்ஸ்! ஆசையில் மண்ணை அள்ளிப்போடுமா நியூசிலாந்து?
NZ vs BAN: பாகிஸ்தானுக்கு நம்பிக்கைத் தரும் பங்களா பாய்ஸ்! ஆசையில் மண்ணை அள்ளிப்போடுமா நியூசிலாந்து?
Embed widget