மேலும் அறிய

Coimbatore : கோவை அரசு அலுவலங்களில் இலஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை - 38 ஆயிரம் பறிமுதல்

கோவையில் க.க. சாவடி பகுதியில் உள்ள போக்குவரத்து துறை சோதனை சாவடி மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலகத்தில் இலஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு முழுவதும் திருவாரூர், நாமக்கல், கோவை உள்ளிட்ட 27 மாவட்டங்களில் உள்ள அரசு அலுவலகங்களில் இலஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

பத்திரப் பதிவு துறை, ஊரக வளர்ச்சித் துறை, வருவாய்த் துறை, தொழில்துரை, வட்டார போக்குவரத்துத் துறை, நெடுஞ்சாலைத் துறை, வனத்துறை, வணிக வரித்துறை, மாசு கட்டுப்பாட்டு வாரியம், தீயணைப்புத் துறை, நுகர்பொருள் வாணிபக் கழகம், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், நகர ஊரமைப்புத் துறை, வேளாண்மைத் துறை, மதுபானம் மற்றும் ஆயத்தீர்வை துறை, மதுவிலக்கு அமலாக்கத் துறை ஆகிய 16 துறை சார்ந்த அரசு அலுவலகங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டது.

தீபாவளி பண்டிகை நெருங்குவதை முன்னிட்டு பணம் வசூல் செய்து வருவதாக எழுந்த புகாரின் பேரில், இந்த சோதனை நடத்தப்பட்டது. இதில் ஒரு கோடியே 12 இலட்சத்து 57 ஆயிரத்து 803 ரூபாய் பணம் மற்றும் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது.

இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டம் க.க. சாவடி பகுதியில் உள்ள போக்குவரத்து துறை சோதனை சாவடியில் இலஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையில் கணக்கில் வராத 32 ஆயிரத்து 680 ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக மோட்டார் வாகன ஆய்வாலர் ஈஸ்வரி மற்றும் உதவியார் யுவராஜ் ஆகியோர் மீது இலஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கோவை மாவட்ட குழந்தைகள் நல அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த அலுவலகத்தில் பணியாற்றும் குழந்தைகள் நல பாதுகாப்பு உறுப்பினர் தனலட்சுமி மற்றும் ஊழியர் கார்த்திக் ஆகியோர் காப்பகத்தில் உள்ள ஒரு குழந்தையை வீட்டுக்கு அனுப்ப சான்றிதழ் வழங்க 5 ஆயிரம் ரூபாய் இலஞ்சம் கேட்டதாக இலஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகளுக்கு புகார் வந்தது.

இந்த புகாரின் பேரில் அந்த அலுவலகத்தில் இலஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது சான்றிதழ் வழங்க இலஞ்சம் வாங்கிய இருவரையும் கையும், களவுமாக பிடித்த அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். பின்னர் இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்த இலஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அரசு அலுவலகங்களில் நடந்த இலஞ்ச ஒழிப்புத் துறை சோதனை பரபரப்பை ஏற்படுத்தியது.

இதேபோல திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஊத்துக்குழி தாலுக்கா அலுவலகத்திலும் இலஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். இதில் கணக்கில் வராத 80 ஆயிரம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் பகுதியில் உள்ள வட்டார போக்குவரத்துத் துறை அலுவலகத்தில் நடந்த சோதனையில் கணக்கில் வராத ஒரு இலட்சத்து 27 ஆயிரம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

பஹ்ரைன் கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள்.. டெல்லிக்கு பறந்த கடிதம்!
பஹ்ரைன் கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள்.. டெல்லிக்கு பறந்த கடிதம்!
சிறையிலிருந்து வெளியே வந்த செந்தில் பாலாஜியின் முதல் பேட்டி: முதல்வர் ஸ்டாலின்  குறித்து பேசிய அந்த வார்த்தை.!
சிறையிலிருந்து வெளியே வந்த செந்தில் பாலாஜியின் முதல் பேட்டி: முதல்வர் ஸ்டாலின் குறித்து பேசிய அந்த வார்த்தை.!
Senthil Balaji: திமுகவினருக்கு முன்கூட்டியே தீபாவளி.! சிறையிலிருந்து வெளியே வந்தார் செந்தில்பாலாஜி.!
Senthil Balaji: திமுகவினருக்கு முன்கூட்டியே தீபாவளி.! சிறையிலிருந்து வெளியே வந்தார் செந்தில்பாலாஜி.!
Breaking News LIVE, Sep 26: அண்ணா மற்றும் கலைஞர் நினைவிடங்களில் செந்தில் பாலாஜி மரியாதை
Breaking News LIVE, Sep 26: அண்ணா மற்றும் கலைஞர் நினைவிடங்களில் செந்தில் பாலாஜி மரியாதை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

VCK Issue : திருமாவுக்கு எதிராக சதி?ரவிக்குமார் வீட்டில் Meeting..ஆதவ்-க்கு கடும் எதிர்ப்புBigil Mani Surrender : ”ENCOUNTER பண்ணிடாதீங்க” ACTION-ல் இறங்கிய அருண் IPS! பீதியில் சரணடைந்த ரவுடி!Tirupati laddu case : ”மாட்டு கொழுப்பு நெய்..”தமிழகத்தில் ஆந்திர போலீஸ் சிக்கலில் திண்டுக்கல் நிறுவனம்Karti chidambaram on Chennai Rains : ”ரேஸ் ரோடு vs மெயின் ரோடு” உதய்யை வம்பிழுக்கும் கார்த்தி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பஹ்ரைன் கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள்.. டெல்லிக்கு பறந்த கடிதம்!
பஹ்ரைன் கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள்.. டெல்லிக்கு பறந்த கடிதம்!
சிறையிலிருந்து வெளியே வந்த செந்தில் பாலாஜியின் முதல் பேட்டி: முதல்வர் ஸ்டாலின்  குறித்து பேசிய அந்த வார்த்தை.!
சிறையிலிருந்து வெளியே வந்த செந்தில் பாலாஜியின் முதல் பேட்டி: முதல்வர் ஸ்டாலின் குறித்து பேசிய அந்த வார்த்தை.!
Senthil Balaji: திமுகவினருக்கு முன்கூட்டியே தீபாவளி.! சிறையிலிருந்து வெளியே வந்தார் செந்தில்பாலாஜி.!
Senthil Balaji: திமுகவினருக்கு முன்கூட்டியே தீபாவளி.! சிறையிலிருந்து வெளியே வந்தார் செந்தில்பாலாஜி.!
Breaking News LIVE, Sep 26: அண்ணா மற்றும் கலைஞர் நினைவிடங்களில் செந்தில் பாலாஜி மரியாதை
Breaking News LIVE, Sep 26: அண்ணா மற்றும் கலைஞர் நினைவிடங்களில் செந்தில் பாலாஜி மரியாதை
Meiyazhagan Movie Review: கார்த்தி - அரவிந்த்சுவாமி கூட்டணி வென்றதா? மெய்யழகன் படத்தின் விமர்சனம் இதோ..
Meiyazhagan Movie Review : கார்த்தி - அரவிந்த்சுவாமி கூட்டணி வென்றதா? மெய்யழகன் படத்தின் விமர்சனம் இதோ..
இப்ப எல்லாம் மோடியோட முகம் எப்படி இருக்கு தெரியுமா? தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி
இப்ப எல்லாம் மோடியோட முகம் எப்படி இருக்கு தெரியுமா? தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி
அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல்: ரூ. 40 ஆயிரத்தில் iPhone 13, ரூ.15 ஆயிரத்தில் Samsung Galaxy M35
அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல்: ரூ. 40 ஆயிரத்தில் iPhone 13, ரூ.15 ஆயிரத்தில் Samsung Galaxy M35
செந்தில்பாலாஜிக்கு ஜாமீன்: முதல்வர், ராமதாஸ், வானதி சீனிவாசன், சீமான், செல்வப்பெருந்தகை சொன்னது என்ன.?
செந்தில்பாலாஜிக்கு ஜாமீன்: முதல்வர், ராமதாஸ், வானதி சீனிவாசன், சீமான், செல்வப்பெருந்தகை சொன்னது என்ன.?
Embed widget