மேலும் அறிய

காஞ்சியில் நீங்கள் பார்த்தாக வேண்டிய முக்கிய கோயில்.. உலகளந்த பெருமாள் கோயில் சிறப்பம்சங்கள் என்ன ?

ulagalantha perumal temple kanchipuram : 108 திவ்ய தேசங்களில் ஒன்றான உலகளந்த பெருமாள் கோயில் காஞ்சிபுரத்தில் மிகவும் பழமையான கோயில்களில் ஒன்றாக உள்ளது 

காஞ்சிபுரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றாக உலகை அளந்த பெருமாள் கோயில் விளங்கி வருகிறது.

கோயில் நகரம் காஞ்சிபுரம் 

கோயில் நகரமாக காஞ்சிபுரம் இருந்து வருகிறது. காஞ்சிபுரத்தில் சிவன், விஷ்ணு, அம்மன், முருகன் உள்ளிட்ட ஏராளமான கோயில்கள் உள்ளதால் வருடம் முழுவதும் திருவிழாக்களால் நிறைந்திருக்கும். அந்த வகையில் காஞ்சிபுரத்தில் 108 திவ்ய தேசங்கள் என அழைக்கப்பட கோயில்களும் இருக்கின்றன. 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக இருக்கக்கூடிய உலகளந்த பெருமாள் கோயிலைப் பற்றி பார்க்க உள்ளோம். 


காஞ்சியில் நீங்கள் பார்த்தாக வேண்டிய முக்கிய கோயில்.. உலகளந்த பெருமாள் கோயில் சிறப்பம்சங்கள் என்ன ?

உலகளந்த பெருமாள் கோயில் - காஞ்சிபுரம் 

108 திவ்ய தேசங்களில் ஒன்றாக இருக்கக்கூடிய, காஞ்சிபுரத்தில் உள்ள உலகளந்த பெருமாள் கோயில் மூலவர் சிலை பாறையில் செதுக்கப்பட்டுள்ளது. பெருமாள் சுமார் 35 அடி உயரமும், 24 அடியும் அகலம் கொண்ட பிரம்மாண்டமாக காட்சியளிக்கிறார். தனது இடது காலை விண்ணை நோக்கி தூக்கியும், வலது காலை பூமியில் வைத்தவாறு காட்சியளிக்கிறார். பெருமாள் சன்னதி அருகே, ஆதிசேஷன் சேவை சாதிக்கிறார். 

தல வரலாறு கூறுவது என்ன?

மகாவிஷ்ணுவிற்கு 10 அவதாரங்கள் என புராணங்கள் கூறுகின்றன. அசுர மன்னன் மகாபலி என்பவன் மூன்று உலகங்களையும் ஆண்டு வந்ததாக புராணங்கள் கூறுகின்றன. இதனால் தேவர்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளானார்கள். தேவர்கள் திருமாலிடம் தங்களுக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்து திருமாலிடம் முறையிட்டனர். 

மகாபலி ஒரு காலத்தில் மிகப்பெரிய யாகத்தை மேற்கொண்டு வந்தான். அப்பொழுது யாகத்தில் கலந்து கொள்ள, வருபவர்களுக்கு இல்லை என்று சொல்லாமல் தானங்களை வாரி வழங்கி வந்தான். அப்படி தானங்கள் வழங்கினால்தான் யாகம் வெற்றி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சமயத்தில் திருமால் வாமன அவதாரம் எடுத்து மகாபலி மன்னரிடம், தான் தியானம் செய்வதற்கு இடம் வேண்டும் என மகாபலி இடம் கோரிக்கை வைத்தார். 


காஞ்சியில் நீங்கள் பார்த்தாக வேண்டிய முக்கிய கோயில்.. உலகளந்த பெருமாள் கோயில் சிறப்பம்சங்கள் என்ன ?

எவ்வளவு இடம் வேண்டும் என கேட்டதற்கு, சிறுவன் வடிவில் வாமனன் அதைத்தானே தனது கால்களால் மூன்று அடி அளந்து எடுத்துக் கொள்வதாக கூறினார். மகாபலி இதற்கு ஒப்புக்கொண்டார். உடனே திருமால் பிரம்மாண்ட உருவம் எடுத்தார் . முதல் அடியில் கீழ் உலகத்தையும், இரண்டாவது அடியில் மேல் உலகத்தையும் அளந்தார். மூன்றாவது அடி அளக்க இடமில்லை என மகாபலியை பார்த்து திருமால் கேட்க, எனது தலை இருக்கிறது என தலையை கொடுத்தார். இதன் மூலம் மூன்று உலகத்தையும் மீட்டு தேவர்களிடம் திருமால் ஒப்படைத்தார்.

கோயில் வரலாறு 

மூன்றாம் நந்திவர்மன் காலத்து கல்வெட்டு கோயிலில் கிடைத்திருப்பதால், குறைந்தது இந்த கோயில் 1200 ஆண்டுகள் பழமையானது என வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இக்கோயில் முதலாம் ராஜேந்திர சோழனால் பல்வேறு திருப்பணிகள் செய்யப்பட்டுள்ளன.‌ முதலாம் குலோத்துங்கன் சோழன் காலத்தில் , அவர் கோயிலுக்கு வந்து நிலம் வழங்கியது குறித்த கல்வெட்டுகளும் இடம்பெற்றுள்ளன. இரண்டாம் ராஜாதி ராஜா சோழன், மூன்றாம் இராஜராஜ சோழன் ஆகியோர் கல்வெட்டுகளும் உள்ளன. இது போக தமிழ்நாட்டை ஆண்ட கடைசி தமிழ் மன்னர் என கருதக்கூடிய சம்புவராயர் ஆட்சிக்காலத்திலும் திருப்பணிகள் நடைபெற்றுள்ளன ‌‌


காஞ்சியில் நீங்கள் பார்த்தாக வேண்டிய முக்கிய கோயில்.. உலகளந்த பெருமாள் கோயில் சிறப்பம்சங்கள் என்ன ?

 

பக்தர்களின் நம்பிக்கை 

உலக அளந்த பெருமாளாக காட்சியளிக்கும் திருமாலை வணங்கினால், அனைத்து பாவங்களும் மன்னிக்கப்பட்டு, வாழ்க்கையில் வளம் கிடைக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது. மகாபலி மன்னரின் ஆணவம் அழிக்கப்பட்ட அவதார திருக்கோலத்தில் காட்சியளிப்பதால், இப்பெருமாளை வணங்கினால் மனதில் இருக்கும் தீய எண்ணங்கள் வெளியேறி, நல்ல எண்ணங்கள் துளிர்க்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Trump India: ”அது ஒரு பேரழிவு, ஒருதலைபட்சமானது..” இந்தியா உடனான வர்த்தகத்தை சாடும் அதிபர் ட்ரம்ப்
Trump India: ”அது ஒரு பேரழிவு, ஒருதலைபட்சமானது..” இந்தியா உடனான வர்த்தகத்தை சாடும் அதிபர் ட்ரம்ப்
August Car Sale:  ஆகஸ்டில் கார் விற்பனை எப்படி? மாருதி, ஹுண்டாயில் அசத்தியது யார்? கம்பேக் கொடுத்த டாடா
August Car Sale: ஆகஸ்டில் கார் விற்பனை எப்படி? மாருதி, ஹுண்டாயில் அசத்தியது யார்? கம்பேக் கொடுத்த டாடா
PM Modi: ட்ரம்புக்கு ஆப்பு சீவிய மோடி.. ரஷ்யா, சீனாதான் இனி துருப்புச்சீட்டு! இனி புது ரூட்டு!
PM Modi: ட்ரம்புக்கு ஆப்பு சீவிய மோடி.. ரஷ்யா, சீனாதான் இனி துருப்புச்சீட்டு! இனி புது ரூட்டு!
Viral Video: சிக்கி தவித்த மக்கள்.. 20 கிமீ தூரம் அணிவகுத்து நின்ற வாகனங்கள்? கடும் போக்குவரத்து நெரிசல்
Viral Video: சிக்கி தவித்த மக்கள்.. 20 கிமீ தூரம் அணிவகுத்து நின்ற வாகனங்கள்? கடும் போக்குவரத்து நெரிசல்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Madhampatti Rangaraj : ’Oii பொண்டாட்டி...மாதம்பட்டி அட்ராசிட்டி!’’வீடியோ வெளியிட்ட ஜாய்
போடியில் களமிறங்கும் அதிமுகவினர் வளர்த்தவர்களே எதிராக சதி ராமநாதபுரமே செல்லும் OPS? | OPS Ramanathapuram
”தமிழ் நடிகர்களை விட இந்தியில்...மட்டம் தட்டிய ஜோதிகா”பதிலடி கொடுக்கும் ரசிகர்கள் Jyotika on Tamil actors
சங்கர் ஜிவாலுக்கு புது பதவி! பொறுப்பை ஒப்படைத்த ஸ்டாலின்
Mohan Bhagwat on Modi : ’’75 வயதில் ஓய்வு?நான் அப்படி சொல்லல’’RSS தலைவர் அந்தர்பல்டி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trump India: ”அது ஒரு பேரழிவு, ஒருதலைபட்சமானது..” இந்தியா உடனான வர்த்தகத்தை சாடும் அதிபர் ட்ரம்ப்
Trump India: ”அது ஒரு பேரழிவு, ஒருதலைபட்சமானது..” இந்தியா உடனான வர்த்தகத்தை சாடும் அதிபர் ட்ரம்ப்
August Car Sale:  ஆகஸ்டில் கார் விற்பனை எப்படி? மாருதி, ஹுண்டாயில் அசத்தியது யார்? கம்பேக் கொடுத்த டாடா
August Car Sale: ஆகஸ்டில் கார் விற்பனை எப்படி? மாருதி, ஹுண்டாயில் அசத்தியது யார்? கம்பேக் கொடுத்த டாடா
PM Modi: ட்ரம்புக்கு ஆப்பு சீவிய மோடி.. ரஷ்யா, சீனாதான் இனி துருப்புச்சீட்டு! இனி புது ரூட்டு!
PM Modi: ட்ரம்புக்கு ஆப்பு சீவிய மோடி.. ரஷ்யா, சீனாதான் இனி துருப்புச்சீட்டு! இனி புது ரூட்டு!
Viral Video: சிக்கி தவித்த மக்கள்.. 20 கிமீ தூரம் அணிவகுத்து நின்ற வாகனங்கள்? கடும் போக்குவரத்து நெரிசல்
Viral Video: சிக்கி தவித்த மக்கள்.. 20 கிமீ தூரம் அணிவகுத்து நின்ற வாகனங்கள்? கடும் போக்குவரத்து நெரிசல்
எந்த கார் வாங்கலாம்? Tata Punch EV யா? Tata Nexon EV யா? இரண்டில் பெஸ்ட் எது?
எந்த கார் வாங்கலாம்? Tata Punch EV யா? Tata Nexon EV யா? இரண்டில் பெஸ்ட் எது?
Coolie Box Office Collection: முக்கி முக்கி 300 கோடியை கடந்த கூலி.. எந்த மாநிலத்தில் ரஜினிக்கு எவ்வளவு வசூல்?
Coolie Box Office Collection: முக்கி முக்கி 300 கோடியை கடந்த கூலி.. எந்த மாநிலத்தில் ரஜினிக்கு எவ்வளவு வசூல்?
உயர்கல்வி மாணவர் சேர்க்கை 77%; அசத்தும் அரசு- சாத்தியமானது எப்படி?
உயர்கல்வி மாணவர் சேர்க்கை 77%; அசத்தும் அரசு- சாத்தியமானது எப்படி?
மதுரை வலையங்குளத்தில் அதிர்ச்சி! டிரம்ஸ் வாசித்த இளைஞர் கொடூர கொலை, காரணம் என்ன?
மதுரை வலையங்குளத்தில் அதிர்ச்சி! டிரம்ஸ் வாசித்த இளைஞர் கொடூர கொலை, காரணம் என்ன?
Embed widget

We use cookies to improve your experience, analyze traffic, and personalize content. By clicking "Allow All Cookies", you agree to our use of cookies.