மேலும் அறிய

19(1)(a) Movie Review: மலையாளத்தில் ஜெயித்தாரா விஜய் சேதுபதி? மனங்களை வென்றாரா நித்யா மேனன்?

பொதுவாகவே மலையாள படங்களில் இருக்கும், அந்த மவுனம், பொறுமை, அழகு எல்லாமே இந்த படத்திலும் இருக்கிறது.

19(1)(a) என்கிற படத்தின் தலைப்பை பார்க்கும் போதே தெரிந்திருக்கும் இது எது மாதிரியான படம் என்று. இந்திய அரசியலமைப்பில் பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்தை குறிக்கும் பிரிவை சுட்டிக்காட்டி வைக்கப்பட்டுள்ள தலைப்பு. யாருடைய கருத்து? யாருடைய பேச்சு?என்பதை வைத்து வலம் வருகிறது கதை.
கேரளாவின் இடுக்கியைச் சேர்ந்த தமிழரான விஜய் சேதுபதி, அந்மாநிலத்தின் புகழ் பெற்ற எழுத்தாளர்.
அவரின் கருத்துக்கள் பலருக்கு ஏற்கனவே தலைவலியை தந்திருப்பதால், அவரது அடுத்த படைப்பும் பரபரப்பாக பேசப்படுகிறது.

19(1)(a) Movie Review: மலையாளத்தில் ஜெயித்தாரா விஜய் சேதுபதி? மனங்களை வென்றாரா நித்யா மேனன்?
இதற்கிடையில், நகரில் தனது தந்தையோடு வசிக்கும் நித்யா மேனன், ஜெராக்ஸ் கடை நடத்தி வருகிறார். அவரது கடைக்கு வரும் விஜய் சேதுபதி, தான் எழுதியவற்றை கொடுத்து சில பிரதிகள் எடுக்க கூறுகிறார். அவர் யார், அவர் கொடுத்தது என்னவென்று தெரியாமல், அவற்றை வாங்கிக் கொள்கிறார் நித்யா.
பின்னர் வாங்கிக் கொள்வதாக அங்கிருந்து புறப்படும் விஜய் சேதுபதி, மறுநாள் சுட்டுக்கொல்லப்படுகிறார். இதை அறிந்த நித்யாவிற்கு பேரதிர்ச்சி. நேற்று வந்து சென்றவர், இன்று இல்லை. அவர் ஏன் கொலை செய்யப்பட்டார் என்கிற பரபரப்பான விவாதங்கள் சேனல்களில் சென்று கொண்டிருக்க, அவரது படைப்பு தான் அவரது கொலைக்கு காரணம் பரபரப்பான செய்திகள் வருகிறது. 
அப்படி என்ன அவர் எழுதினார் என்பதை அறிய மாநிலமே எதிர்பார்க்கிறது. ஒருபுறம் சிறப்பு புலனாய்வு குழு விசாரித்துக் கொண்டிருக்க, மறுபுறம் மீடியாக்கள் புலனாய்வு செய்து கொண்டிருக்கிறார்கள். இதற்கிடையில் ஒரு தரப்பினர் கொள்கை ரீதியாக மறைந்த விஜய் சேதுபதியின் வீர மரணத்தை போற்றி கொண்டாடுகிறார்கள். 
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by 19(1)(a) Movie (@19_1_a)

இவர்கள் யாருக்கும் தெரியாத உண்மை, ஜெராக்ஸ் கடை நடத்தும் நித்யாவிற்கு மட்டும் தெரிகிறது. காரணம், அவரிடம் விஜய் சேதுபதி எழுதிய கதையின் முழு அடக்கமும் இருக்கிறது. 
தன்னிடம் உள்ள ஆதாரங்களை நித்யா மேனன் என்ன செய்தார்? விஜய் சேதுபதி மரணத்திற்கு நீதி கிடைத்ததா? என்பது தான் கதை.
முதலில் நித்யா மேனனுக்கு வருவோம். தமிழ் சினிமாவில் காட்டப்படும் நித்யா மேனனா இவர்? அவ்வளவு அழகு... அவ்வளவு எளிமை... அவ்வளவு லட்சணம்! இதையெல்லாம் கேரள சினிமாக்கள் தான் பிரதிபலிக்கின்றன. ஒரு மிடில் கிளாஸ் மகளாக, அவரது நடிப்பு, வேறு ஒரு பரிணாமத்தை காட்டுகிறது. 
விஜய் சேதுபதி... நாம் இங்கு பார்க்கும், பாராட்டும் விஜய் சேதுபதி அல்ல, இவர். ரொம்ப ரொம்ப ரொம்ப எதார்த்தமான பாத்திரம். இங்கு அவர் செய்ததை விட, பல மடங்கு எதார்த்தமான பாத்திரம். சிரித்த முகத்தோடு, மரணத்தை கூட முத்தமிடும் கதாபாத்திரம். இந்த கதாபாத்திரத்திற்கு விஜய் சேதுபதி தேவையா என தோன்றலாம்... ஆனால் , அதை விஜய் சேதுபதி கூட செய்ய முடியும் என நிரூபித்ததில் தான் அவரது நடிப்புத் திறமை இருக்கிறது.
பொதுவாகவே மலையாள படங்களில் இருக்கும், அந்த மவுனம், பொறுமை, அழகு எல்லாமே இந்த படத்திலும் இருக்கிறது. கருத்து சுதந்திரத்திற்கு கிடைத்த பரிசும், அதை வெளிப்படுத்த எடுக்கும் முயற்சியும் தான் கதை. அதை நேர்த்தியாக கேரள பாணியில் சொல்லி முடித்திருக்கிறார்கள்.
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by 19(1)(a) Movie (@19_1_a)

பெண் இயக்குனர் இந்து வி.எஸ்., தன் பணியை சிறப்பாக செய்திருக்கிறார். விருதுகளை குறி வைத்து எடுக்கப்பட்ட படம் என்பது அப்பட்டமாக தெரிகிறது. மணீஸ் மாதவனின் ஒளிப்பதிவும் சரி, கோவிந்த் வசந்தவின் இசையும், பின்னணியும் கதையோடு நம்மை பயணிக்க வைக்கிறது.
மலையாளத்தில் வெளியாகியிருக்கும் இந்தப்படம், டிஸ்னி ஹாட் ஸ்டாரில் தற்போது வெளியாகியிருக்கிறது. மலையாளப்படம் என்றாலும், விஜய் சேதுபதியின் வசனங்கள் தமிழில் தான் உள்ளன. மற்றவர்களின் பேச்சு, ஆங்கில சப்டைட்டிலோடோ பார்க்கலாம். மலையாள சினிமாவில், விஜய் சேதுபதிக்கு இந்தபடம் நல்ல துவக்கம். 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சிEB Office Alcohol | அலுவலகத்தில் மது அருந்திய மின்சார வாரிய ஊழியர்கள்!’’ஏய்..டம்ளர் எடுத்துட்டு வா’’

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Seeman: “தம்பி விஜய் ஏன் என்னை மாதிரி பேச வேண்டும்.. அவருக்கு இன்னும் ஒரு படம் இருக்கு” - கொந்தளித்த சீமான்!
“தம்பி விஜய் ஏன் என்னை மாதிரி பேச வேண்டும்.. அவருக்கு இன்னும் ஒரு படம் இருக்கு” - கொந்தளித்த சீமான்!
Embed widget