மேலும் அறிய

TNPSC குரூப் - 1, 1ஏ தேர்வு ; ஆயிரக்கணக்கானோர் ஆப்சென்ட்... அதிர்ச்சி தரும் சேலம் , விழுப்புரம்

சேலம் : டிஎன்பிஎஸ்சி சார்பில் குரூப் - 1, 1ஏ பணியின் முதல்நிலை தேர்வுக்கான எழுத்துத்தேர்வு நடைபெற்றது, இதில் 3,326 பேர் வரவில்லை.

சேலம்: டிஎன்பிஎஸ்சி சார்பில் குரூப் - 1, 1ஏ பணியின் முதல்நிலை தேர்வுக்கான எழுத்துத்தேர்வு நடைபெற்றது, இதில் 3,326 பேர் வரவில்லை, இதேபோல் விழுப்புரம் மாவட்டத்தில் 2098 தேர்வர்கள் தேர்வெழுத வருகைபுரியவில்லை.

டிஎன்பிஎஸ்சி சார்பில் குரூப் - 1, 1ஏ தேர்வு

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் துணை ஆட்சியர், டி.எஸ்.பி., வணிக வரி உதவி ஆணையர், ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர் உள்பட குரூப்-1 பணியிடங்களில் 70 காலியிடங்களும், குரூப்-1ஏ பணியிடங்களில் உதவி வனப் பாதுகாவலர் பதவியில் 2 காலியிடங்களையும் நிரப்பும் வகையில் தேர்வு நடத்தப்படுகிறது. மொத்தம் 2 லட்சத்து 49 ஆயிரத்து 296 பேர் தேர்வு எழுதினர். இதற்காக மாநிலம் முழுவதும் 44 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 987 தலைமைக் கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டு, சென்னையில் 170 இடங்களில் 41,094 பேர் தேர்வு எழுதினர். 

டிஎன்பிஎஸ்சி சார்பில் குரூப் - 1, 1ஏ பணியின் முதல்நிலை தேர்வுக்கான எழுத்துத்தேர்வு, நேற்று நடந்தது. சேலம் மாவட்டத்தில் சேலம், சேலம் மேற்கு, தெற்கு, ஆத்துார் வட்டத்துக்கு உட்பட்ட, 41 மையங்களில், 55 கூடங்களில் தேர்வு நடத்தப்பட்டது. காலை, 8:30 முதல், 9:00 மணி வரை, தேர்வர்கள் மையங்களுக்குள் அனுமதிக்கப்பட்டனர். 14,291 பேரில், 10,965 பேர் தேர்வு எழுதினர். இது, 76.72 சதவீதம். 3,326 பேர் வரவில்லை. இது, 23.27 சதவீதம். தேர்வு மையங்களை, 14 நடமாடும் குழுவினரும் கண்காணித்தனர்.

 டி.என்.பி.எஸ்.சி., தேர்வில்  2867 பேர்  பங்கேற்பு

சேலத்தில் உள்ள தனியார் பள்ளியில் நடந்த தேர்வை, கலெக்டர் பிருந்தாதேவி பார்வையிட்டார். தேர்வாணைய விதிமுறைப்படி வினாத்தாள், விடைத்தாள் வழங்குதல், விடைத்தாள் சேகரித்தல், தேர்வு எழுதும் நேரம், தேர்வர்களின் நுழைவுச்சீட்டு சரிபார்த்தல் போன்ற பல்வேறு பணிகள் முறையாக மேற்கொள்ளப்பட்டதாக, கலெக்டர் தெரிவித்தார்.

விழுப்புரம் : 2098 தேர்வர்கள் தேர்வெழுத வருகை புரியவில்லை

இதேபோல், விழுப்புரம் மாவட்டத்தில், விழுப்புரம் அரசு சட்டக்கல்லூரி மற்றும் தெய்வாணை அம்மாள் மகளிர் கல்லூரி மையங்களில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில், ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு தொகுதி 1 மற்றும் 1A நடைபெற்றது.

விழுப்புரம் மாவட்டத்தில் விழுப்புரம் வட்டத்தினை தலைமையிடமாகக் கொண்டு 13 தேர்வு மையங்களில் 28 அறைகளிலும், திண்டிவனம் வட்டத்தினை தலைமையிடமாகக் கொண்டு 4 தேர்வு மையங்களில் 6 அறைகள் என மொத்தம் 17 தேர்வு மையங்களில் 34 அறைகளில் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு தொகுதி 1 மற்றும் 1A நடைபெற்று வருகிறது. இத்தேர்விற்கு 8493 தேர்வர்கள் விண்ணப்பித்த நிலையில், 6395 தேர்வர்கள் தேர்வெழுத வருகைபுரிந்துள்ளனர்.

2098 தேர்வர்கள் தேர்வெழுத வருகைபுரியவில்லை. அதாவது, 75.30 சதவீதம் தேர்வர்கள் தேர்வெழுதி வருகின்றனர். 24.70 சதவீதம் தேர்வர்கள் தேர்வெழுத வருகைபுரியவில்லை. மேலும், இத்தேர்வு பணியினை கண்காணித்திட பறக்கும் படை அலுவலர்கள், நடமாடும் குழு அலுவலர்கள் மற்றும் ஆய்வு அலுவலர்கள் ஈடுபடுபட்டனர்.

தலைப்பு செய்திகள்

பானிப்பூரி விற்ற கை… இனி ஸ்டெதஸ்கோப் பிடிக்கும்! நீட் தேர்வில் சாதித்த புதுச்சேரி அரசுப் பள்ளி மாணவி!
பானிப்பூரி விற்ற கை… இனி ஸ்டெதஸ்கோப் பிடிக்கும்! நீட் தேர்வில் சாதித்த புதுச்சேரி அரசுப் பள்ளி மாணவி!
M.Ed. admission : அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
பிரதமர் ரிசர்ச் ஃபெல்லோஷிப்: கோடிக்கணக்கில் மானியம், தகுதி, முன் அனுபவம்- விண்ணப்பிப்பது எப்படி?
பிரதமர் ரிசர்ச் ஃபெல்லோஷிப்: கோடிக்கணக்கில் மானியம், தகுதி, முன் அனுபவம்- விண்ணப்பிப்பது எப்படி?
மதுரை மன்னர் கல்லூரி மாணவர்களின் வாசிப்புப் புரட்சி: 512 நூல்கள், புதிய இளம் படைப்பாளர்கள்!
மதுரை மன்னர் கல்லூரி மாணவர்களின் வாசிப்புப் புரட்சி: 512 நூல்கள், புதிய இளம் படைப்பாளர்கள்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"ஓ.பி.எஸ்.ஐ சகோதரன் போல ஜெயலலிதா பார்த்தார்.." மனம் திறந்த முன்னாள் அதிமுக எம்பி
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
M.Ed. admission : அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
Archana Kalpathi Agoram : பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
CV Shanmugam Vs EPS: தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
Embed widget