மேலும் அறிய

கோவையை நகை உற்பத்தில் ஒரு சிறப்பு பொருளாதார மண்டலமாக மாற்ற முயற்சி எடுப்போம் - அண்ணாமலை வாக்குறுதி

நம்முடைய தேர்தல் அறிக்கையிலும் கூட இருக்கும் ஒரு சிறப்பு பொருளாதார மண்டலமாக கோவையை அறிவிக்க வேண்டும் என்பது இடம்பெறும்.

கோவை தெற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட செட்டி வீதியில் பாஜக மாநில தலைவரும், கோவை தொகுதி வேட்பாளருமான அண்ணாமலை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பரப்புரை வாகனத்தில் ஊர்வலமாக மக்களை சந்தித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது பேசிய வானதி சீனிவாசன், ”நம்முடைய தொகுதி இந்தியாவிலேயே கவர்ச்சிக்கு மயங்காத தொகுதி. தாமரை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவதற்கு,  நாம் அத்தனை பேரும் கடுமையாக உழைக்க வேண்டும். பாரதிய ஜனதா கட்சியினுடைய வேட்பாளரை கோவையின் வருங்கால வளர்ச்சிக்காக பிரதமர் மோடி கொடுத்துள்ளார்.


கோவையை நகை உற்பத்தில் ஒரு சிறப்பு பொருளாதார மண்டலமாக மாற்ற முயற்சி எடுப்போம் - அண்ணாமலை வாக்குறுதி

மூன்றாவது முறையாக பிரதமர் மோடி பதவியேற்கும் போது நம்முடைய ஊரின் உடைய பிரதிநிதியாக நாம் தேர்ந்தெடுத்து அனுப்ப வேண்டும். அவர் பிரதமர் மோடி திட்டங்களை கொண்டு வந்து சேர்க்க வேண்டும். கடந்த 2014 மற்றும் 2019 ல் நாம் அத்தனை பேரும் கடுமையான உழைப்பை கொடுத்தும் கூட, பிரதமர் மோடி அவர்களுக்கு கோவையின் உடைய எம்பியை நம்மால் கொடுக்க முடியவில்லை. மக்கள் தீர்மானமாக இருக்கிறார்கள் கோயமுத்தூர் என்றால் அது அண்ணாமலைக்கு என்றும், அவர்களுடைய வாக்கு என தீர்மானமாக இருக்கிறார்கள். மீண்டும் மூன்றாவது முறையாக பிரதமர் நரேந்திர மோடி தான் ஆட்சி அமைக்க போகிறார். இதில் எந்த மாற்றமும் இல்லை.  வாக்கு பெட்டியில் நமக்கு எந்த எண்? அதில் நாம் தான் முதல் இடத்தில இருக்கிறோம். இந்த முதல் இடத்தை நாம் ஜூன் நான்காம் தேதி வெற்றி பெறுகின்ற பொழுது அதை உறுதி செய்ய வேண்டும். பிரதமர் மோடி அவர்களுடைய கரத்தை வலுப்படுத்த கோவையிலிருந்து நம் அண்ணாமலையை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும். கோவை பாஜகவின் அசைக்க முடியாத கோட்டை என்பதை நாம் மீண்டும் நிரூபிக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.

அண்ணாமலை வாக்குறுதி

பின்னர் பேசிய அண்ணாமலை, “கோவை தெற்கு தொகுதி மக்களை பொருத்தவரை நேர்மையின் பக்கம் நிற்போம் என்பார்கள். வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி எப்படி நம்முடைய கோயம்புத்தூர் தெற்கு தொகுதியில் தாமரை மலர்ந்ததோ, அதேபோல நம்முடைய கோயம்புத்தூர் பாராளுமன்றத்தினுடைய எல்லா மக்களும் தாமரை மலர செய்வார்கள் என நம்புகிறேன். பாஜகவிற்கு பதிவு செய்யக்கூடிய வாக்கு சதவீதத்தை அதிகளவில் இங்கு கொடுப்பீர்கள் என்ற முழு நம்பிக்கை எனக்கு இருக்கிறது.  நாம் இருக்க கூடிய பகுதி மிக முக்கியமான பகுதி, காரணம் இந்தியாவினுடைய மிக முக்கியமான நம்முடைய எல்லா தொழிலும் கூட நடக்கின்ற பகுதி. நகை தொழிலாளராக இருக்கட்டும், அந்த நகை சம்பந்தப்பட்ட எல்லா நுணுக்கமான வேலைகளாக நடக்கும் இடம். இந்த பகுதியை தென்னிந்தியாவினுடைய மான்செஸ்டர் என்று சொல்லுவோம். அப்படிப்பட்ட அற்புதமான இடத்தில் நின்று கொண்டிருக்கின்றோம். பிரதமர் நரேந்திர மோடி அனுதினமும் கூட மக்களை எப்படி மேம்படுத்த வேண்டும் முன்னேற்ற வேண்டும் என்பதற்காக திட்டங்களை கொடுத்துக் கொண்டிருக்கிறார். மூன்றாவது முறை பிரதமர் 400 பாராளுமன்ற உறுப்பினர்களை தாண்டி வருவார். பாராளுமன்ற தேர்தலுக்கு வாக்கு சேகரிப்பது நம்முடைய அக்கா வானதி சீனிவாசன் சட்டமன்ற உறுப்பினராக செய்திருக்கக்கூடிய பணியை உங்கள் முன்னால் வைத்தே நாங்கள் வாக்கு கேட்கின்றோம்.


கோவையை நகை உற்பத்தில் ஒரு சிறப்பு பொருளாதார மண்டலமாக மாற்ற முயற்சி எடுப்போம் - அண்ணாமலை வாக்குறுதி

மற்றவர்களைப் போல் இதை செய்வோம் அதை செய்வோம் என்று சொல்வதை விட, இது செய்து இருக்கின்றோம், இன்னும் அதிகமாக செய்வதற்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள் என்று தான் கோயம்புத்தூர் தெற்கு தொகுதியினுடைய மக்களிடையே வேண்டுகோள் விடுகின்றோம். ஸ்மார்ட் சிட்டி  திட்டத்தை முழுமையாக செயல்படுத்துவதற்கு முயற்சி எடுத்து வருகிறார். அதையும் மக்களும் பார்த்துக் கொண்டிருக்கின்றீர்கள். சட்டமன்ற உறுப்பினர்கள் செய்திருக்கக்கூடிய சாதனைகள் சில துளிகள் தான். நகை உற்பத்தியில் கோவையை ஒரு சிறப்பு பொருளாதார மண்டலமாக கொண்டு வருவதற்கான எல்லா முயற்சியும் எடுப்போம். எல்லா தொழிலாளர்களுக்கும் நிறுவனங்களுக்கும் கூட இந்த நேரத்திலே நாங்கள் சொல்லிக் கொள்கின்றோம். நம்முடைய தேர்தல் அறிக்கையிலும் கூட இருக்கும் ஒரு சிறப்பு பொருளாதார மண்டலமாக கோவையை அறிவிக்க வேண்டும் என்பது இடம்பெறும்” எனத் தெரிவித்தார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

PM Modi: ”10 ஆண்டுகளாக இதனால் தான் செய்தியாளர்களை சந்திக்கவில்லை” - பிரதமர் மோடி விளக்கம்
”10 ஆண்டுகளாக இதனால் தான் செய்தியாளர்களை சந்திக்கவில்லை” - பிரதமர் மோடி விளக்கம்
T20 World Cup 2024: இந்தியா - பாகிஸ்தான் மோதும் போட்டி.. அதிர்ச்சியூட்டும் டிக்கெட் விலை!
T20 World Cup 2024: இந்தியா - பாகிஸ்தான் மோதும் போட்டி.. அதிர்ச்சியூட்டும் டிக்கெட் விலை!
Election Movie Review: தேர்தல் களத்தில் வென்றாரா விஜயகுமார்? - எலக்சன் படத்தின் விமர்சனம் இதோ!
Election Movie Review: தேர்தல் களத்தில் வென்றாரா விஜயகுமார்? - எலக்சன் படத்தின் விமர்சனம் இதோ!
Kutralam Falls: குற்றால அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு; வெள்ளத்தில் சிக்கிய சிறுவன் சடலமாக மீட்பு
Kutralam Falls: குற்றால அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு; வெள்ளத்தில் சிக்கிய சிறுவன் சடலமாக மீட்பு
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Dhoni Last Match IPL 2024  : ”தோனி தரிசனம் இருக்கு கவலை படாதீங்க தல FANS” Hussey கொடுத்த அப்டேட்PM Modi Speech  : ’’ராமர் கோயிலை புல்டோசர் வைத்து இடிப்பார்கள்’’சர்ச்சையை கிளப்பும் மோடி!Jharkhand Minister arrest : எதிர்க்கட்சிகளுக்கு நெருக்கடி காங்கிரஸ் அமைச்சர் கைது அதிரடி காட்டும் EDModi on muslim fact check  : பொய் சொன்னாரா மோடி?ஆதாரம் இதோ!முஸ்லீம் குறித்து சர்ச்சை கருத்து

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PM Modi: ”10 ஆண்டுகளாக இதனால் தான் செய்தியாளர்களை சந்திக்கவில்லை” - பிரதமர் மோடி விளக்கம்
”10 ஆண்டுகளாக இதனால் தான் செய்தியாளர்களை சந்திக்கவில்லை” - பிரதமர் மோடி விளக்கம்
T20 World Cup 2024: இந்தியா - பாகிஸ்தான் மோதும் போட்டி.. அதிர்ச்சியூட்டும் டிக்கெட் விலை!
T20 World Cup 2024: இந்தியா - பாகிஸ்தான் மோதும் போட்டி.. அதிர்ச்சியூட்டும் டிக்கெட் விலை!
Election Movie Review: தேர்தல் களத்தில் வென்றாரா விஜயகுமார்? - எலக்சன் படத்தின் விமர்சனம் இதோ!
Election Movie Review: தேர்தல் களத்தில் வென்றாரா விஜயகுமார்? - எலக்சன் படத்தின் விமர்சனம் இதோ!
Kutralam Falls: குற்றால அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு; வெள்ளத்தில் சிக்கிய சிறுவன் சடலமாக மீட்பு
Kutralam Falls: குற்றால அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு; வெள்ளத்தில் சிக்கிய சிறுவன் சடலமாக மீட்பு
NEET Exam Results: 2024 நீட் தேர்வு முடிவுகளை வெளியிட தடையா?- மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
NEET Exam Results: 2024 நீட் தேர்வு முடிவுகளை வெளியிட தடையா?- மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
Arvind Kejriwal: கெஜ்ரிவால், ஆம் ஆத்மி கட்சி மீது அமலாக்கத்துறை கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல்; இதுவே முதல்முறை!
Arvind Kejriwal: கெஜ்ரிவால், ஆம் ஆத்மி கட்சி மீது அமலாக்கத்துறை கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல்; இதுவே முதல்முறை!
TN Weather Update: அடுத்த 5 நாட்களுக்கு ஆரஞ்சு அலர்ட்.. கொட்டித்தீர்க்கப்போகும் மழை ..
TN Weather Update: அடுத்த 5 நாட்களுக்கு ஆரஞ்சு அலர்ட்.. கொட்டித்தீர்க்கப்போகும் மழை ..
Sabarimala Aravana Payasam : பக்தர்கள் மனசு புண்படக்கூடாது : ரூ.6.65 லட்சம் அரவணை பாயாச டின்களை அழிக்க உத்தரவு
பக்தர்கள் மனசு புண்படக்கூடாது : ரூ.6.65 லட்சம் அரவணை பாயாச டின்களை அழிக்க உத்தரவு
Embed widget