மேலும் அறிய

Online Fraud: போலி நிறுவனங்கள் பெயரில் ஆன்லைன் மோசடி- சத்தீஸ்கர் இளைஞர் கைது

முகம் தெரியாத நபர்கள் தொடர்பு கொண்டு YouTube Review, movie Review, Location Review இதுபோன்று கூறினால் அவர்களை நம்பி பணத்தை முதலீடு செய்து மோசடி செய்பவர்களை நம்பி ஏமாற வேண்டாம்

தூத்துக்குடியில் பார்ட் டைம் ஜாப் என மெசேஜ் அனுப்பி அதன் மூலம் ரூ.46 லட்சம் பணம் மோசடி செய்த வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார்.


Online Fraud: போலி நிறுவனங்கள் பெயரில் ஆன்லைன் மோசடி- சத்தீஸ்கர் இளைஞர் கைது

தூத்துக்குடி மில்லர்புரம் சின்னமணிநகரை சேர்ந்த மாக்கன் மகன் தங்கதுரை (52) என்பவர் டெலிகிராம் ஆப் பயன்படுத்திய போது அதில் Part Time Job தேவையா என்ற விளம்பரம் வந்துள்ளது. இதனையடுத்து இந்த விளம்பரத்தை பார்த்து தங்கதுரை தனக்கு மெசேஜ் அனுப்பிய நபரிடம் பேசிய போது FROSCH Travel Management Company நிறுவனத்தில் பணிபுரிந்து வருவதாகவும், உலகம் முழுவதும் பல இடங்களில் செயல்பட்டு வருதாகவும், கொரோனா காலத்தில் தங்களுடைய கம்பெனியின் வருமானம் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், அதை மேம்படுத்துவதற்காக அதன் சம்பந்தப்பட்ட வலைதளத்தில் Star Ratings கொடுப்பதன் மூலம் மேற்படி கம்பெனியின் வருமானத்தை அதிகரிக்க முடியும் என்றும், அவ்வாறு Star Ratings கொடுத்தால் கமிஷன் தருவதாகவும் தங்கதுரையிடம் கூறியுள்ளனர். 


Online Fraud: போலி நிறுவனங்கள் பெயரில் ஆன்லைன் மோசடி- சத்தீஸ்கர் இளைஞர் கைது

இதனையடுத்து முதலில் 1100, 1500 இலாபம் கொடுப்பது போல் கொடுத்து தங்கதுரையை நம்ப வைத்து பின்பு அதிக கமிஷன் வேண்டுமென்றால் பணத்தை முதலீடு செய்து கூறும் பணிகளை (Task) செய்யும் படி தங்கதுரையிடம் கூறியுள்ளனர். இதனையடுத்து தங்கதுரை, கூறிய வளைதளத்தில் பணத்தை முதலீடு செய்து பல்வேறு பணிகளுக்கு(Task) பல்வேறு தவணைகளாக மொத்தம் ரூ.45,91,054/- பணத்தை தங்கதுரை இழந்துள்ளார். பின்னர் தான் மோசடி செய்யப்பட்டதையறிந்த தங்கதுரை இதுகுறித்து NCRPல் (National Cyber crime Reporting Portal) புகார் பதிவு செய்துள்ளார்.தங்கதுரை அளித்த புகாரின் அடிப்படையில் சைபர் கிரைம் காவல்துறை கூடுதல் இயக்குநர் சஞ்சய்குமார், சைபர் கிரைம் காவல் கண்காணிப்பாளர் தேவராணி மற்றும் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் ஆகியோரின் உத்தரவின்படி காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் மேற்பார்வையில் சைபர் குற்றப் பிரிவு காவல் ஆய்வாளர் சிவசங்கரன் தலைமையில் உதவி ஆய்வாளர் சுதாகரன் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படையினர் கடந்த 23.05.2023 அன்று தங்கதுரையை ஏமாற்றி மோசடியில் ஈடுபட்ட திருநெல்வேலி மாவட்டம் குப்பனாபுரம் பகுதியைச் சேர்ந்த கோவில்பிள்ளை மகன் எலியாஸ் பிரேம் குமார் (31) என்பவரை கைது செய்து சிறையிலடைத்தனர்.


Online Fraud: போலி நிறுவனங்கள் பெயரில் ஆன்லைன் மோசடி- சத்தீஸ்கர் இளைஞர் கைது

அவர் பல்வேறு நிறுவனங்களின் பெயரில் பல வங்கிகளில் 21 கணக்குகளை மோசடிக்காக பயன்படுத்தி ரூ 25 கோடி பணம் பரிவர்த்தனை செய்திருந்தது தெரியவந்தது. மேலும் அவரிடம் மேற்கொண்ட விசாரணையின் போது மற்றொரு வாட்ஸ் அப் எண்ணை தெரிவித்து உள்ளார். அதனடிப்படையில் விசாரித்த போது இந்த வழக்கில் சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த சத்தியம் விஷ்வகர்மா ஈடுபட்டு இருந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து சைபர் க்ரைம் போலீஸார் சத்திஸ்கர் மாநிலம் சென்று மேற்படி எதிரி சத்தியம் விஷ்வகர்மா (22) என்பவரை கடந்த 18.06.2023 அன்று அவரது வீட்டில் வைத்து கைது செய்து சத்திஸ்கர் மாநிலம் கார்பா முதல் வகுப்பு குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி உத்தரவு பெற்று பின்னர் தூத்துக்குடி அழைத்துவரப்பட்டு தூத்துக்குடி குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண் IV ல் ஆஜர்படுத்தி தூத்துக்குடி மாவட்டம் பேரூரணி சிறையில் அடைத்தனர். மேலும் அவரிடமிருந்து ஒரு லேப்டாப், 16 மொபைல் போன்கள், 8 ஏடிஎம் கார்டுகள், 79 சிம்கார்டுகள், 22 வங்கி செக் புக், ஒரு இன்டர்நெட் மோடம், 4 பென்டிரைவ் மற்றும் 16 போலி இரப்பர் முத்திரைகள் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.


Online Fraud: போலி நிறுவனங்கள் பெயரில் ஆன்லைன் மோசடி- சத்தீஸ்கர் இளைஞர் கைது

மேலும் இச்சம்பவம் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் கூறுகையில், இதுபோன்று பல்வேறு Like and Review Scam குற்றங்கள் Telegram மற்றும் Whatsapp மூலம் தொடர்பு கொள்ளப்பட்டு அப்பாவி பொதுமக்கள் பலர் பாதிக்கப்பட்டு பல புகார்கள் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் பதிவாகியுள்ளது. இதனால் Like and Review Scam சம்மந்தமாக உங்களை முகம் தெரியாத நபர்கள் தொடர்பு கொண்டு YouTube Review, movie Review, Location Review இதுபோன்று கூறினால் அவர்களை நம்பி பணத்தை முதலீடு செய்து மோசடி செய்பவர்களை நம்பி ஏமாற வேண்டாம் என பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Chennai Rain: சென்னையில் கொட்டப்போகும் கனமழை: நெருங்கி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி
Chennai Rain: சென்னையில் கொட்டப்போகும் கனமழை: நெருங்கி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி
2026 ஆட்டமே வேற! இபிஎஸ்க்கு பின்னால் ஆதவ்! ஸ்டாலினுக்கு செக்!
2026 ஆட்டமே வேற! இபிஎஸ்க்கு பின்னால் ஆதவ்! ஸ்டாலினுக்கு செக்!
ஈரோடு இடைத்தேர்தல்: முட்டிமோதும் திமுக, காங்கிரஸ்! என்ன செய்யப்போகுது அதிமுக
ஈரோடு இடைத்தேர்தல்: முட்டிமோதும் திமுக, காங்கிரஸ்! என்ன செய்யப்போகுது அதிமுக
"மொத்த நகத்தையும் வெட்டி எடுத்து சித்திரவதை" லவ்வருடன் இருந்த பெண்.. கோபத்தில் கொலை செய்த கணவர்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dharmendra Yadav: ’’நாலு தேர்தல் ஒழுங்கா நடத்தமுடில..நாடு முழுக்க நடத்த போறீங்களா?’’ கிழித்தெடுத்த சமாஜ்வாதி MPSupriya Sule: ”சுவிஸ் நிறுவனங்கள் ஓடுறாங்காபதில் சொல்லுங்க மோடி”வெளுத்து வாங்கிய சுப்ரியா சுலே!Tongue Splitting:  நாக்கை கிழித்து Tattooஇயற்கைக்கு மாறாக சம்பவம் தட்டி தூக்கிய போலீஸ்!Medical Waste :  டன் கணக்கில் மருத்துவ கழிவுகள்.. கேரள குப்பை தொட்டியா தமிழ்நாடு? கோபத்தில் மக்கள்!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Rain: சென்னையில் கொட்டப்போகும் கனமழை: நெருங்கி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி
Chennai Rain: சென்னையில் கொட்டப்போகும் கனமழை: நெருங்கி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி
2026 ஆட்டமே வேற! இபிஎஸ்க்கு பின்னால் ஆதவ்! ஸ்டாலினுக்கு செக்!
2026 ஆட்டமே வேற! இபிஎஸ்க்கு பின்னால் ஆதவ்! ஸ்டாலினுக்கு செக்!
ஈரோடு இடைத்தேர்தல்: முட்டிமோதும் திமுக, காங்கிரஸ்! என்ன செய்யப்போகுது அதிமுக
ஈரோடு இடைத்தேர்தல்: முட்டிமோதும் திமுக, காங்கிரஸ்! என்ன செய்யப்போகுது அதிமுக
"மொத்த நகத்தையும் வெட்டி எடுத்து சித்திரவதை" லவ்வருடன் இருந்த பெண்.. கோபத்தில் கொலை செய்த கணவர்!
Textbook Price: அடிதூள்… பள்ளி பாடநூல்கள் விலை 20% குறைப்பு- வெளியான அதிரடி அறிவிப்பு- எப்போது?
Textbook Price: அடிதூள்… பள்ளி பாடநூல்கள் விலை 20% குறைப்பு- வெளியான அதிரடி அறிவிப்பு- எப்போது?
“பாஜக கூட்டணியில் மீண்டும் சேரும் அதிமுக?” பொதுக்குழுவில் EPS காட்டிய சிக்னல் இதுதான்..!
“பாஜக கூட்டணியில் மீண்டும் சேரும் அதிமுக?” பொதுக்குழுவில் EPS காட்டிய சிக்னல் இதுதான்..!
"டி.ஆர். பாலு சொன்னதை செய்றேன்" ஒரு நாடு ஒரே தேர்தல் மசோதா.. அமித் ஷா செய்த காரியம்!
Aadhav Arjuna :  “ஆதவ் அர்ஜூனாவை கட்சியில் சேர்க்க விஜய் தயக்கம்?” புஸ்ஸி எதிர்ப்புதான் காரணமா..?
Aadhav Arjuna : “ஆதவ் அர்ஜூனாவை கட்சியில் சேர்க்க விஜய் தயக்கம்?” புஸ்ஸி எதிர்ப்புதான் காரணமா..?
Embed widget