மேலும் அறிய

Fake SBI Bank: போலி SBI வங்கி:அதிர்ச்சியில் கிராம மக்கள்:கண்டுபிடிக்கப்படது எப்படி?

Chhattisgarh Fake SBI Bank: போலியான ஸ்டேட் ஆஃப் இந்தியா வங்கி தொடங்கப்பட்டு , கண்டுபிடிக்கப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எப்படி கண்டுபிடிக்கப்பட்டது என பார்ப்போம்.

சத்தீஸ்கர் மாநிலம் சக்தி மாவட்டத்தில் சப்போரா என்ற கிராமம் இருக்கிறது. இங்கு, இரண்டு வாரங்களுக்கு முன்பு ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கி கிளை என்ற பெயரில் வங்கி திறக்கப்பட்டிருக்கிறது . இதையறிந்த , சப்போரா கிராம மக்கள், வங்கி சேவைகள் தொடர்பாக மிக நீண்ட தூரம் செல்ல தேவையில்லை என மிகவும் மகிழ்ச்சியடைந்தனர்.  ஆனால், தற்போது போலியான வங்கி , எஸ்.பி.ஐ பெயரில் நடத்தி வந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

போலியான வங்கி கண்டறியப்பட்டது எப்படி?

சப்போரா கிரமத்தைச் சேர்ந்த அஜய் அகர்வால் என்பவர், தனது கிராமத்திற்கு வங்கி கிளையை அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்திருக்கிறார். ஆனால், இந்த வங்கி கிளை அமைந்தது அவருக்கே தெரியவில்லை. இதையடுத்து, வங்கி அதிகாரிகளிடமே சென்று , இதுகுறித்து கேட்டப்போது, அவருக்கு சந்தேகம் எழுந்தது. 

இதையடுத்து, அருகில் உள்ள தப்ரா வங்கி கிளை மேலாளரிடம் கேட்டிருக்கிறார். ஆனால், அவருக்கும் இதுகுறித்து தெரியவில்லை. மேலும், தமக்கு தெரியாமல், எப்படி வங்கி கிளை தொடங்கப்பட்டது என அவருக்கும் சந்தேகம் எழுந்தது.  பின்னர், இதுகுறித்து ஸ்டேட் வங்கி உயர் அதிகாரிகளிடம் இதுகுறித்து தெரிவித்தபோது, அவர்களும் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக அடுத்த நாளே, காவல்துறையினருடன் வந்து சோதனை நடத்தியதில், போலியான வங்கியானது அனைவருக்கும் தெரியவந்தது. 

புகார்:

இந்நிலையில், வங்கியின் மேலாளர் என்று அழைக்கப்படும் பங்கஜ் சாஹீ தலைமறைவாகியுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன. 

இதையடுத்து, கடந்த செப்டம்பர் 18 ஆம் தேதி ஸ்டேட்  பேங்க் ஆஃப் இந்தியா சார்பில், புகார் அளிக்கப்பட்டிருக்கிறது. இதையடுத்து அனிஸ் பாஸ்கர் என்ற நபர் கைது செய்யப்பட்டிருக்கிறார். மேலும், சுமார் 8 பேரை போலீசார் தேடி வருவதாகவும் தகவல் தெரிவிக்கின்றன. 

போலியான வங்கி:



Fake SBI Bank: போலி SBI வங்கி:அதிர்ச்சியில் கிராம மக்கள்:கண்டுபிடிக்கப்படது எப்படி?

இந்த போலியான வங்கியானது , கடந்த செப்டம்பர் மாதம் 18 ஆம் தேதி திறக்கட்டிருக்கிறது.  ரூ. 7000க்கு வாடகை கட்டடத்தில் எடுத்து நடத்தப்பட்டு வந்திருக்கிறது.  இந்த வங்கியில் 6 பேர் வேலை செய்து வந்ததாகவும், அவர்களுக்கும் போலியான வேலை நியமன ஆணைகளும் கொடுக்கப்பட்டதாகவும் தகவல் தெரிவிக்கின்றன.
இது குறித்து , அங்கு வேலை செய்தவர்கள் தெரிவிக்கையில், போலியான வங்கி என்பது எங்களுக்கே அதிர்ச்சியாக உள்ளது என்றும், வேலைக்காக ரூ. 6 லட்சம் வரை பணம் கொடுத்ததாகவும் தெரிவிக்கின்றனர்.

இதில் மேலாளராக இருந்தவர் தலைமறையாகியுள்ளார். மேலும், இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அனில் பாஸ்கர் , பல மோசடி வழக்கிலும் இருப்பது தெரிய வந்துள்ளது. இவர் ரயில்வே துறையிலும் வேலை வாங்கி தருவதாக ஏமாற்றியுள்ள புகாரும் உள்ளது. 

நல்ல வேளையாக , வங்கி தொடங்கப்பட்டு 2 வாரங்களுக்குள் போலியானது என கண்டறியப்பட்டதால், மக்கள் யாரும் அதற்குள் பணம் டெபாசிட் செய்யவில்லை என்ற தகவல் தெரிவிக்கின்றன.  காலம் தாழ்த்தப்பட்டிருந்தால், சாமானியர்கள் பலர் ஏமாற்றப்பட்டிருக்கிலாம். இந்த சம்பவமானது, அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

Trump Tariffs: இந்தியாவிற்கு 50%, மற்ற நாடுகளுக்கு ட்ரம்ப் விதித்துள்ள வரிகள் எவ்வளவு தெரியுமா.? பட்டியல் இதோ
இந்தியாவிற்கு 50%, மற்ற நாடுகளுக்கு ட்ரம்ப் விதித்துள்ள வரிகள் எவ்வளவு தெரியுமா.? பட்டியல் இதோ
Putin India Visit: இந்தியா வரும் ரஷ்ய அதிபர் புதின்; ட்ரம்ப்புடனும் சந்திப்பு - இந்தியாவிற்கு விடிவு கிடைக்குமா.?
இந்தியா வரும் ரஷ்ய அதிபர் புதின்; ட்ரம்ப்புடனும் சந்திப்பு - இந்தியாவிற்கு விடிவு கிடைக்குமா.?
Varalakshmi Vratham 2025: கடன் தொல்லையா? குழந்தை பாக்கியமா? வேண்டியது கிடைக்க இந்த மாதிரி வரலட்சுமி விரதம் இருங்க
கடன் தொல்லையா? குழந்தை பாக்கியமா? வேண்டியது கிடைக்க இந்த மாதிரி வரலட்சுமி விரதம் இருங்க
State Education Policy: நாளை வெளியாகும் மாநில கல்விக் கொள்கை; வெளியிடுவது யார்? என்ன சிறப்பம்சங்கள்?
State Education Policy: நாளை வெளியாகும் மாநில கல்விக் கொள்கை; வெளியிடுவது யார்? என்ன சிறப்பம்சங்கள்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kaliyammal In TVK | திமுக - அதிமுகவிற்கு NO.. தவெகவில்  காளியம்மாள்? தேதி குறித்த விஜய்!
சங்கீதா - கிரிஷ் விவாகரத்து? INSTAGRAM-ல் பெயர் மாற்றம்! கோலிவுட்டில் அடுத்த பூகம்பம்  | Sangeetha Kirsh Divorce
”ஏய் என்ன பேசிட்டு இருக்க”மேயருக்கு எதிராக போர்க்கொடி!அடித்துக் கொண்ட கவுன்சிலர்கள்
”ஷாருக்கானுக்கு தேசிய விருது ஒரு நியாயம் வேண்டாமா?”கொந்தளித்த நடிகை ஊர்வசி | Urvashi On  National Awards
காலியாகி கிடக்கும் கிராமம் ஒற்றை ஆளாய் நிற்கும் தாத்தா நாட்டாகுடியின் கண்ணீர் கதை | Sivagangai News

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trump Tariffs: இந்தியாவிற்கு 50%, மற்ற நாடுகளுக்கு ட்ரம்ப் விதித்துள்ள வரிகள் எவ்வளவு தெரியுமா.? பட்டியல் இதோ
இந்தியாவிற்கு 50%, மற்ற நாடுகளுக்கு ட்ரம்ப் விதித்துள்ள வரிகள் எவ்வளவு தெரியுமா.? பட்டியல் இதோ
Putin India Visit: இந்தியா வரும் ரஷ்ய அதிபர் புதின்; ட்ரம்ப்புடனும் சந்திப்பு - இந்தியாவிற்கு விடிவு கிடைக்குமா.?
இந்தியா வரும் ரஷ்ய அதிபர் புதின்; ட்ரம்ப்புடனும் சந்திப்பு - இந்தியாவிற்கு விடிவு கிடைக்குமா.?
Varalakshmi Vratham 2025: கடன் தொல்லையா? குழந்தை பாக்கியமா? வேண்டியது கிடைக்க இந்த மாதிரி வரலட்சுமி விரதம் இருங்க
கடன் தொல்லையா? குழந்தை பாக்கியமா? வேண்டியது கிடைக்க இந்த மாதிரி வரலட்சுமி விரதம் இருங்க
State Education Policy: நாளை வெளியாகும் மாநில கல்விக் கொள்கை; வெளியிடுவது யார்? என்ன சிறப்பம்சங்கள்?
State Education Policy: நாளை வெளியாகும் மாநில கல்விக் கொள்கை; வெளியிடுவது யார்? என்ன சிறப்பம்சங்கள்?
அரசு பள்ளி மாணவிகள் 'ஓவர் கோட்' அணிய வேண்டும் - கல்வித்துறை அதிரடி உத்தரவு!
அரசு பள்ளி மாணவிகள் 'ஓவர் கோட்' அணிய வேண்டும் - கல்வித்துறை அதிரடி உத்தரவு!
Rahul Slams BJP, EC: “தேர்தல் ஆணையத்துடன் இணைந்து பாஜக வாக்குகளை திருடுகிறது“ - புகார்களை அடுக்கிய ராகுல் காந்தி
“தேர்தல் ஆணையத்துடன் இணைந்து பாஜக வாக்குகளை திருடுகிறது“ - புகார்களை அடுக்கிய ராகுல் காந்தி
PM Modi On Tariff: நாங்க ரெடி, என்ன வந்தாலும் பாத்துக்கலாம்.. ட்ரம்புக்கு வார்னிங் கொடுத்த பிரதமர் மோடி
PM Modi On Tariff: நாங்க ரெடி, என்ன வந்தாலும் பாத்துக்கலாம்.. ட்ரம்புக்கு வார்னிங் கொடுத்த பிரதமர் மோடி
Chennai Power Cut: சென்னை மக்களே.! ஆகஸ்ட் 8-ம் தேதி வெள்ளிக்கிழமை எங்கெங்க மின் தடை ஏற்படப் போகுது தெரியுமா.?
சென்னை மக்களே.! ஆகஸ்ட் 8-ம் தேதி வெள்ளிக்கிழமை எங்கெங்க மின் தடை ஏற்படப் போகுது தெரியுமா.?
Embed widget