மேலும் அறிய

Crime: நெல்லை அருகே பயங்கரம்: கோவில் கொடைவிழா தகராறில் இரட்டைக்கொலை..

Thirunelveli Crime : ”கோவில் கொடை விழா தகராறில்  நள்ளிரவில் அண்ணன், தம்பி ஆகிய இருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் குடும்பத்தினரிடையே சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது”

நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ளது காரம்பாடு கிராமம். இங்குள்ள ஓடைக்கரை சுடலைமாடசாமி திருக்கோவில் நேற்று கோவில் கொடை விழா வெகு சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. இரவில் கொடை விழாவில் கரகாட்ட நிகழ்ச்சி நடைபெற்றுக்கொண்டிருந்தது. அப்போது கிராம மக்கள் குழுமியிருந்து நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டிருந்தனர். அச்சமயத்தில் ஒரே சமுதாயத்தைச் சேர்ந்த  இரு பிரிவினருக்கு  இடையே  தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. 

அப்போது வாய்த்தகராறு முற்றவே அது இருபிரிவினருக்குமிடையே கைகலப்பாக மாறியுள்ளது. இதில் ஒருபிரிவைச் சேர்ந்த இளைஞர் கத்தியால் மற்றொரு பிரிவை சேர்ந்த மூன்று பேரை சரமாரியாக குத்தி உள்ளார். இதில் இருவர் இரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தனர்.

மற்றொருவர் படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


Crime: நெல்லை அருகே பயங்கரம்: கோவில் கொடைவிழா தகராறில் இரட்டைக்கொலை..

இது தொடர்பாக தகவலறிந்த திசையன்விளை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். கொலையானவர்களின் உடலைக்கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் முதற்கட்ட விசாரணையில் கோவில் கொடை விழாவில் பிளக்ஸ் போர்டு வைப்பது, கரகாட்டம், கணியான் கூத்து கலைஞர்களுக்கு பரிசு கொடுப்பது போன்றவற்றில் யார் பெரியவன் என்ற போட்டியில் தகராறு நடந்ததாகவும், கத்திக்குத்தில் உயிரிழந்த மதிராஜா (35), மதியழகன் (40) ஆகிய இருவரும் சகோதர்கள் என்றும் தெரிய வந்துள்ளது.

மேலும் படுகாயமடைந்த மகேஷ்வரன் (41) ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் ஏற்கனவே இவர்களுக்கும் பிரச்சினையில் ஈடுபட்ட மற்றொரு தரப்பை சேர்ந்த குடும்பத்தினருக்கும் முன்பகை இருந்ததாகவும் சொல்லப்படுகிறது. இருப்பினும் இது தான் காரணமா? அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா என கொலைக்கான உண்மையான காரணங்கள் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 


Crime: நெல்லை அருகே பயங்கரம்: கோவில் கொடைவிழா தகராறில் இரட்டைக்கொலை..

அதோடு இக்கொலை சம்பவத்தில் ஈடுபட்ட பருன் (27), ராஜ்குமார் (28), விபின் (27), ஆகியோர் தப்பியோடிய நிலையில் திசையன்விளை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும் இரட்டைகொலை சம்பவம் குறித்து கொலை நடைபெற்ற இடம், மற்றும் கொடை விழா குழுவினர் வசிக்கும் திசையன்விளை கக்கன் நகர் பகுதிகளிலும் தீவிர விசாரணை செய்து வருகின்றனர். அதோடு சம்பவ இடத்தில் காவல்துறையினர் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.

நெல்லை மாவட்ட எஸ் பி சிலம்பரசன் விடுப்பில் இருப்பதால் குமரி மாவட்ட எஸ்பி தலைமையில் காவல்துறையினர் தீவிர விசாரணை செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர். கோவில் கொடை விழா தகராறில்  நள்ளிரவில் அண்ணன், தம்பி ஆகிய இருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் குடும்பத்தினரிடையே சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Periyar University Issue: மீண்டும் சர்ச்சையில் பெரியார் பல்கலை.- புதிய கல்விக் கொள்கை அமலா? நடந்தது என்ன?
Periyar University Issue: மீண்டும் சர்ச்சையில் பெரியார் பல்கலை.- புதிய கல்விக் கொள்கை அமலா? நடந்தது என்ன?
NEET UG Registration: தொடங்கும் நீட் தேர்வு விண்ணப்பப் பதிவு; என்ன தகுதி? இதையெல்லாம் மறக்காதீங்க!
NEET UG Registration: தொடங்கும் நீட் தேர்வு விண்ணப்பப் பதிவு; என்ன தகுதி? இதையெல்லாம் மறக்காதீங்க!
DGP on Kalpana Nayak Issue: கூடுதல் டிஜிபி கல்பனா நாயக் மீது கொலை முயற்சி ஏதும் நடக்கவில்லை.. அடித்துச் சொல்லும் காவல்துறை...
கூடுதல் டிஜிபி கல்பனா நாயக் மீது கொலை முயற்சி ஏதும் நடக்கவில்லை.. அடித்துச் சொல்லும் காவல்துறை...
UGC NET Answer Key: யுஜிசி நெட் ஆன்சர் கீ; ஆட்சேபிக்க இன்றே கடைசி! விவரம்
UGC NET Answer Key: யுஜிசி நெட் ஆன்சர் கீ; ஆட்சேபிக்க இன்றே கடைசி! விவரம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

பேச விடாத எதிர்க்கட்சியினர்! கடுப்பாகி எழுந்த அமைச்சர்! கண்டித்த சபாநாயகர்வளர்ப்பு மகளுக்கு திருமணம்! கண்கலங்கிய ராதாகிருஷ்ணன்! தந்தையாக நின்ற தருணம்”முருகனுக்கு அரோகரா” தமிழில் பேசிய மோடி! பூரித்து போன அதிபர்Vijay TVK | பொறுப்பு கொடுத்த விஜய் பொறுப்பில்லாத தவெக மா.செ!ஸ்தம்பித்த சென்னை அம்பத்தூர்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Periyar University Issue: மீண்டும் சர்ச்சையில் பெரியார் பல்கலை.- புதிய கல்விக் கொள்கை அமலா? நடந்தது என்ன?
Periyar University Issue: மீண்டும் சர்ச்சையில் பெரியார் பல்கலை.- புதிய கல்விக் கொள்கை அமலா? நடந்தது என்ன?
NEET UG Registration: தொடங்கும் நீட் தேர்வு விண்ணப்பப் பதிவு; என்ன தகுதி? இதையெல்லாம் மறக்காதீங்க!
NEET UG Registration: தொடங்கும் நீட் தேர்வு விண்ணப்பப் பதிவு; என்ன தகுதி? இதையெல்லாம் மறக்காதீங்க!
DGP on Kalpana Nayak Issue: கூடுதல் டிஜிபி கல்பனா நாயக் மீது கொலை முயற்சி ஏதும் நடக்கவில்லை.. அடித்துச் சொல்லும் காவல்துறை...
கூடுதல் டிஜிபி கல்பனா நாயக் மீது கொலை முயற்சி ஏதும் நடக்கவில்லை.. அடித்துச் சொல்லும் காவல்துறை...
UGC NET Answer Key: யுஜிசி நெட் ஆன்சர் கீ; ஆட்சேபிக்க இன்றே கடைசி! விவரம்
UGC NET Answer Key: யுஜிசி நெட் ஆன்சர் கீ; ஆட்சேபிக்க இன்றே கடைசி! விவரம்
TN Toll Gate: வளர்ச்சியே வேண்டாம்..! கதறும் தமிழக மக்கள், 90 ஆக உயரும் சுங்கச் சாவடிகளின் எண்ணிக்கை, எங்கெங்கு?
TN Toll Gate: வளர்ச்சியே வேண்டாம்..! கதறும் தமிழக மக்கள், 90 ஆக உயரும் சுங்கச் சாவடிகளின் எண்ணிக்கை, எங்கெங்கு?
John Vs Aadhav :  ”ஜான் ஆரோக்கியசாமி ஆடியோவை வெளியிட்டது ஆதவ் அர்ஜூனா?” வெளியான புதுத் தகவல்..!
John Vs Aadhav : ”ஜான் ஆரோக்கியசாமி ஆடியோவை வெளியிட்டது ஆதவ் அர்ஜூனா?” வெளியான புதுத் தகவல்..!
Rajasthan Anti Conversion Bill: சட்டவிரோத மதமாற்றத்திற்கு ஆப்பு வைக்கும் ராஜஸ்தான்... சிக்குனா ஜெயில்தான்...
சட்டவிரோத மதமாற்றத்திற்கு ஆப்பு வைக்கும் ராஜஸ்தான்... சிக்குனா ஜெயில்தான்...
Vengaivayal Case: என்னது.. வேங்கைவயல் விவகாரம் வன்கொடுமை இல்லையா.? வழக்கு வேறு நீதிமன்றத்திற்கு மாற்றம்...
என்னது.. வேங்கைவயல் விவகாரம் வன்கொடுமை இல்லையா.? வழக்கு வேறு நீதிமன்றத்திற்கு மாற்றம்...
Embed widget