மேலும் அறிய

மதுரையை எரித்த கண்ணகி விண்ணுலகம் சென்ற பத்தினிக்கோட்டை - இது கம்பம் நகரம் உருவான கதை!

சிலப்பதிகாரத்தில் மதுரையை எரித்த கண்ணகி வைகை கரை வழியே மேற்கு நோக்கி நடந்து வந்து கம்பம் நகர் அருகே உள்ள பத்தினி கோட்டையில் விண்ணேறினால் என்பது வரலாறு கூறும் சான்று.

தேனி மாவட்டத்தில் உள்ள பழமையான நகரங்களில் கம்பமும் ஒன்று. சிலப்பதிகாரத்தில் மதுரையை எரித்த கண்ணகி வைகை கரை வழியே மேற்கு நோக்கி நடந்து வந்து கம்பம் நகர் அருகே உள்ள பத்தினி கோட்டையில் விண்ணேறினால் என்பது வரலாறு கூறும் சான்று. கம்பம் என்ற பெயரே வித்தியாசமானதுதான், கம்பம் என்பதன் பொருள் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.  கம்ப நாயக்கன் மற்றும் உத்தம நாயக்கன் என்ற இரு குறுநில அரசர்கள் ஆட்சி செய்த பகுதி என்பதால் கம்பம் என்றும் உத்தமபுரம் என்றும் பெயர் வந்ததாக கூறப்படுகிறது. தற்போது கம்பம், உத்தமபுரம் ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய நகராட்சியாக கம்பம் நகராட்சி விளங்குகிறது.

மதுரையை எரித்த கண்ணகி விண்ணுலகம் சென்ற பத்தினிக்கோட்டை - இது கம்பம் நகரம் உருவான கதை!

விஜயநகர சாம்ராஜ்ஜியதில் இருந்த  கம்பநாயக்கர், தமிழகத்தின் தென்பகுதிகள் மீது கிபி 1374 படை எடுத்தார். இப்பகுதியை ஆண்ட  மன்னனை வென்று இப்பகுதியில் பெரிய கோட்டை கட்டி ஆட்சி செய்ததால் கம்பம் என்று பெயர் வந்ததாக வரலாற்று சான்றுகள் கூறுகின்றன. மதுரையை ஆண்ட விஸ்வநாத நாயக்கர் கம்பம், கூடலூர் பகுதியை கைப்பற்ற தனது படைத் தளபதி ராம்பத்திர நாயக்கரை அனுப்பியுள்ளார். அப்போது கம்பத்தை ஆண்ட மன்னனுக்கும், ராம்பத்திர நாயகருக்கும் இடையே கம்பம், கூடலூர் பகுதியை  கைப்பற்ற பெரும் போர் ஏற்பட்டு உள்ளது. போர் முடிந்த பின் வெற்றி பெற்ற மன்னன், கம்பத்தில் ஒரு கோட்டையைக் கட்டி அந்தக் கோட்டைக்குள் கம்பராயப்பெருமாள்,  காசிவிஸ்வநாதர் கோயிலை கட்டி உள்ளார்.

மதுரையை எரித்த கண்ணகி விண்ணுலகம் சென்ற பத்தினிக்கோட்டை - இது கம்பம் நகரம் உருவான கதை!

கோயிலை சுற்றி பெரிய கோட்டை கட்டப்பட்டு அந்த கோட்டையில் முன்பகுதியில் போர்வீரர்கள் தங்குவதற்கு கட்டிடங்களையும் கட்டியுள்ளார் அந்தக் கட்டிடங்கள் மீது எதிரிகளை கண்காணிக்க கண்காணிப்பு கோபுரங்களும் கட்டப்பட்டுள்ளது.

மதுரையை எரித்த கண்ணகி விண்ணுலகம் சென்ற பத்தினிக்கோட்டை - இது கம்பம் நகரம் உருவான கதை!

அந்த கண்காணிப்பு கோபுரம் ஒன்று தற்போது மொட்டையாண்டி கோயிலாக உள்ளது.  இந்தக் கோயில் கம்பம், உத்தமபுரம் என்ற இரண்டு கிராமங்களின் மையப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. இரண்டு கிராமங்களையும் பிரிக்கும் மையமாகவும் இங்கு உள்ளது. அதோடு விஸ்வநாதர் ஆட்சிக்காலத்தில் கம்ப நாயக்கர், உத்தம நாயக்கர் என்ற இரண்டு ஜமீன்தார்கள் சகோதரர்களாக இருந்து இப்பகுதியை ஆண்டுள்ளனர்.

மதுரையை எரித்த கண்ணகி விண்ணுலகம் சென்ற பத்தினிக்கோட்டை - இது கம்பம் நகரம் உருவான கதை!

கம்பராமாயண பெருமாள், காசி விசுவநாதர் கோவிலும், கம்பம் கௌமாரியம்மன் திருக்கோவிலும் கம்பத்தின் அடையாளமாக விளங்குகிறது. தமிழக கேரள எல்லையை இணைக்கும் முக்கிய நகரமாக இருப்பதாலும் இந்த நகரத்தின் வளர்ச்சி வெகு விரைவாக வளர்ச்சி அடைந்து வருகிறது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"நெஞ்சில் குடியிருக்கும் இஸ்லாமிய பெருமக்கள்" விஜய் சொன்னவுடன் அதிர்ந்த ஒய்எம்சிஏ மைதானம்!
பாய் குல்லா அணிந்து.. லுங்கியுடன் என்ட்ரி கொடுத்த தவெக தலைவர் விஜய்!
பாய் குல்லா அணிந்து.. லுங்கியுடன் இப்தார் நோன்பு திறந்த தவெக தலைவர் விஜய்!
பாஜக நோட்டா என கிண்டலடித்தார்கள், ஆனால் இப்போ பாருங்க.!...இபிஎஸ் தாக்கிய அண்ணாமலை.!
"இந்த அநியாயத்தை ஏத்துக்க மாட்டோம்" பாஜகவை எதிர்க்க பாஜகவிடமே ஆதரவு கேட்ட ஸ்டாலின்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Daughter in law Surprise: வைர நெக்லஸ்..தங்க கட்டிகள்..1 கோடியில் BIRTHDAY GIFT!மாமியாருக்கு SURPRISESarathkumar BJP : அண்ணாமலைக்கு ஆப்பு! பாஜக தலைவர் சரத்குமார்? கடுப்பில் சீனியர்ஸ்Chandrababu Naidu Praises Tamilnadu : ’’தமிழர்கள் TOP-ல இருக்காங்கதமிழ்நாடு தான் BEST’’புகழ்ந்து தள்ளிய சந்திரபாபுPolice vs Drunken lady : தலைக்கேறிய போதை !நடுரோட்டில் இளம்பெண் அலப்பறை திணறிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"நெஞ்சில் குடியிருக்கும் இஸ்லாமிய பெருமக்கள்" விஜய் சொன்னவுடன் அதிர்ந்த ஒய்எம்சிஏ மைதானம்!
பாய் குல்லா அணிந்து.. லுங்கியுடன் என்ட்ரி கொடுத்த தவெக தலைவர் விஜய்!
பாய் குல்லா அணிந்து.. லுங்கியுடன் இப்தார் நோன்பு திறந்த தவெக தலைவர் விஜய்!
பாஜக நோட்டா என கிண்டலடித்தார்கள், ஆனால் இப்போ பாருங்க.!...இபிஎஸ் தாக்கிய அண்ணாமலை.!
"இந்த அநியாயத்தை ஏத்துக்க மாட்டோம்" பாஜகவை எதிர்க்க பாஜகவிடமே ஆதரவு கேட்ட ஸ்டாலின்!
திருத்தணியில் பேருந்து, லாரி நேருக்கு நேர் மோதி விபத்து.. 5 பேர் பலியான சோகம்!
திருத்தணியில் பேருந்து, லாரி நேருக்கு நேர் மோதி விபத்து.. 5 பேர் பலியான சோகம்!
Local Train Cancelled: அலர்ட் பயணிகளே.. ஞாயிறன்று ரத்தாகும் புறநகர் ரயில்கள்.. எந்த வழித்தடம் தெரியுமா?
Local Train Cancelled: அலர்ட் பயணிகளே.. ஞாயிறன்று ரத்தாகும் புறநகர் ரயில்கள்.. எந்த வழித்தடம் தெரியுமா?
பள்ளி மாணவர்களிடம் பிஸ்கட் கொடுத்து ஏமாற்றும் பாஜகவினர்! – அன்பில் மகேஸ் கொடுக்கும் எச்சரிக்கை
பள்ளி மாணவர்களிடம் பிஸ்கட் கொடுத்து ஏமாற்றும் பாஜகவினர்! – அன்பில் மகேஸ் கொடுக்கும் எச்சரிக்கை
Chennai Madurai Expressway: அடி தூள்.. இனி சென்னை டு மதுரை 6 மணி நேரம்தான்.. தொடங்கிய எக்ஸ்பிரஸ் வே பணிகள்...
அடி தூள்.. இனி சென்னை டு மதுரை 6 மணி நேரம்தான்.. தொடங்கிய எக்ஸ்பிரஸ் வே பணிகள்...
Embed widget