மேலும் அறிய

Narthamalai Sivan Temple: நார்த்தாமலையில் தண்ணீருக்குள் மூழ்கியிருக்கும் அற்புதமான சிவன் கோவில்

இந்த அரிய குடைவரைக் கோவிலுக்கு செல்ல அந்த சுனையில் பள்ளத்தில் இறங்கி செல்ல வேண்டும். அருகிலேயே கல்வெட்டுகளும் காணப்படுகின்றன.

நம் முன்னோர்கள் அனைத்து துறைகளிலும் சிறப்பு மிக்கவர்களாக விளங்கி வந்துள்ளனர். கட்டிடக்கலை, சிற்பக்கலை, ஓவியம், மருத்துவம், நீர் மேலாண்மை, வான்வெளி அறிவியல் என்று அனைத்திலும் திறமை மிக்க நிபுணர்களாக வலம் வந்துள்ளனர்.

அந்த வகையில் வரலாற்று சின்னங்களையும், சிறப்புகளையும் தன்னுள் கொண்டு சிறப்பிடம் பெற்றுள்ள புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலையில் தண்ணீருக்குள் மூழ்கியிருக்கும் அருமையான, அற்புதமான சிவன் கோவில் பற்றி தெரியுங்களா? தெரிந்து கொள்வோம் வாங்க.

புதுக்கோட்டை மாவட்டம் ஏராளமான வரலாற்று சின்னங்களையும், அளப்பெரிய சிறப்புகளையும் கொண்ட மாவட்டமாக திகழ்ந்து வருகிறது. இங்கிருக்கும் குடைவரைக் கோயில்களும், பல நூற்றாண்டுகளாக நீடித்து நிலைத்துவரும் இயற்கை வண்ண சுவரோவியங்கள் இதற்கு அருமையான சாட்சி.

இது மட்டுமில்லை...  அற்புதமான சிற்பங்களும், கோட்டைகளும், பழமைவாய்ந்த கோவில்களும், அகழ்வாராய்ச்சியில் கிடைத்த தொன்மைச் சான்றுகளும் புதுக்கோட்டை மாவட்டத்தை பற்றிய கண்ணோடத்தை ஆச்சரியப்படுத்துகிறது... வியப்பில் ஆழ்த்துகிறது என்றால் மிகையில்லை. அந்த வகையில் புதுக்கோட்டையிலிருந்து 17 கி.மீ. தொலைவில் இருக்கிறது நார்த்தாமலை மிகவும் புகழ்பெற்று விளங்குகிறது.
இங்கே, மேலமலை, கோட்டைமலை, பறையர் மலை, உவக்கன் மலை, ஆளுருட்டி மலை, மண்மலை, கடம்பர் மலை,பொம்மாடி மலை  மற்றும் பொன்மலை போன்ற ஒன்பது சிறிய மலைக் குன்றுகள் உள்ளன. சரிங்க இதில் என்ன இருக்க போகிறது என்கிறீர்களா. இருக்கே.


Narthamalai Sivan Temple: நார்த்தாமலையில் தண்ணீருக்குள் மூழ்கியிருக்கும் அற்புதமான சிவன் கோவில்

இந்த பகுதிக்கு மிக முக்கிய அடையாளமாகத் திகழ்கிறது மேலமலைதான். இங்கேதான் இருக்கிறது சிறப்பு மிக்க விஜயாலய சோழீஸ்வரம் கோவில். மேலமலை அடிவாரத்தில் இருந்து சுமார் அரை கிலோ மீட்டர் தூரம் உயரத்தில் அமைந்துள்ளது விஜயாலய சோழீஸ்வரம்.

இங்கே செல்லும் வழியில் தலையருவி சிங்கம் சுனை ஒன்று இருக்கிறது. இதுதான் மேற்குறிப்பிட்ட கோயில் உள்ள இடம். இங்கு சுமார் 15 அடி ஆழத்தில் சிவபெருமானுக்காக வெட்டப்பட்ட குடைவரைக் கோயில் ஒன்று உள்ளது. சிற்பக்கலையில் நம் முன்னோர்களின் திறமையை இன்று வரை பறைசாற்றிக் கொண்டு இருக்கிறது என்றால் மிகையில்லை. இந்த சுனைக்கு உள்ளே ஜீரஹரேஸ்வரர் என்னும் குடைவரைக் கோவிலில் குடைந்தே வடிக்கப்பட்ட அழகிய லிங்கம் இருக்கிறது.


Narthamalai Sivan Temple: நார்த்தாமலையில் தண்ணீருக்குள் மூழ்கியிருக்கும் அற்புதமான சிவன் கோவில்

இந்த லிங்கம் இந்த கோவிலைப் போலவே, பாறையிலேயே குடைந்து அமைக்கப்பட்டிருக்கிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். வழவழப்பாக அமைக்கப்பட்டுள்ள இந்த லிங்கம் சதுர வடிவிலான குடைவரைக் கோவிலுக்குள் சென்று வழிபடலாம். சுமார் 6 அடி கொண்ட அந்த கோலிலை பார்ப்பதற்கு அழகாகவும், வியப்பாகவும் இருக்கிறது. எப்படிப்பா இந்த கோயிலை வடிவமைச்சாங்க என்பதுதான் அது.

இந்த அரிய குடைவரைக் கோவிலுக்கு செல்ல அந்த சுனையில் பள்ளத்தில் இறங்கி செல்ல வேண்டும். அருகிலேயே கல்வெட்டுகளும் காணப்படுகின்றன. அதில் ஒரு கல்வெட்டில் 1857ஆம் ஆண்டு ராஜா ராமச்சந்திர தொண்டைமான் ராணியால் இந்த சுனை நீர் இறைக்கப்பட்டு சிவலிங்கம் தரிசிக்கப்பட்டது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த சுனை பெரும்பாலும் தண்ணீர் நிறைந்தே காணப்படும் எனவே இப்படி ஒரு சிறப்பு வாய்ந்த ஒரு கோவில் இருப்பது பலருக்கும் தெரியாது. இந்நிலையில் நடப்பாண்டில் உள்ளூர் மக்கள் ஒன்று சேர்ந்து, சுனையில் நிரம்பி இருந்த நீரை மோட்டார் மூலம் வெளியேற்றிவிட்டு, அங்கே சிவராத்திரி விழாவை எளிமையான முறையில் கொண்டாடி மகிழ்ந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Narthamalai Sivan Temple: நார்த்தாமலையில் தண்ணீருக்குள் மூழ்கியிருக்கும் அற்புதமான சிவன் கோவில்

இந்த பகுதியில் வரலாற்றுச் சிறப்பு மிக்க பல கல்வெட்டுகள் காணப்படுகின்றன. இங்கு வருபவர்கள் விஜயாலய சோழீஸ்வரம், விஷ்ணு குடவரை, பழியிலி ஈசுவரம் குடவரைக் கோயில் ஆகியவற்றையும் கண்டு தரிசிக்கலாம்.

மேலும், பல்வேறு சிறப்பு மிக்க சிற்பங்களையும் காணலாம். இந்த பகுதியில் இருக்கும் இடங்களை பார்த்து ரசித்து வியக்க ஒரு நாள் போதாது. இருப்பினும் ஏராளமான சுற்றுலாப்பயணிகள் இப்பகுதிக்கு தினமும் வந்து செல்கின்றனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

CSK Bowling Coach : KKR-க்கு தாவிய BRAVO CSK-க்கு வரும் மல்லிங்கா? SKETCH போடும் தோனிTN Cabinet Shuffle : ”PTR நீங்களே வாங்க!” மீண்டும் நிதித்துறை அமைச்சர்? ஸ்டாலின் பக்கா ஸ்கெட்ச்!Thrissur ATM Robbery | ”நாங்க திருடாத AREA-ஏ இல்ல” கொள்ளையர்கள் பகீர் வாக்குமூலம்!Pawan Kalyan |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
Second Moon: பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
Embed widget