மேலும் அறிய

TN 12th Exam: பிளஸ் 2 தேர்வு... சேலத்தில் 151 மையங்களில் 37,938 மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர்

சேலம் மாவட்டத்தை பொறுத்தவரை, 320 அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளை 20,206 மணவர்களும், 17,732 மாணவிகளும் என மொத்தம் 37,938 பேர், நடப்பாண்டு பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதுகின்றனர்.

தமிழகத்தில் இன்று தொடங்கிய பிளஸ் 2 பொதுத்தேர்வை, சேலம் மாவட்டத்தில் 151 மையங்களில் 37,938 மாணவர்கள் எழுதுகின்றனர். பொதுத்தேர்வு பணிக்காக 3,500 ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் நடப்பு 2024-2025ஆம் கல்வியாண்டிற்கான பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் இன்று தொடங்கியது. தமிழ்நாடு முழுவதும் 8.21 லட்சம் பேர் எழுதும் இத்தேர் வுக்காக 3,316 மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அரசு தேர்வுகள் இயக்ககம் சார்பில், தேர்வுக்கான விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

TN 12th Exam: பிளஸ் 2 தேர்வு... சேலத்தில் 151 மையங்களில் 37,938 மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர்

சேலம் மாவட்டத்தை பொறுத்தவரை, 320 அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளை 20,206 மணவர்களும், 17,732 மாணவிகளும் என மொத்தம் 37,938 பேர், நடப்பாண்டு பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதுகின்றனர். இதில் 932 மாற்றுத்திறன் மாணவர்களுக்கு சொல்வதை கேட்டு எழுதுபவர் உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது. இவர்களுக்காக சேலம் மாவட்டம் முழுவதும் அரசு மேல் நிலைப்பள்ளிகளில் 151 தேர்வு மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

நடப்பாண்டு பிளஸ் 2 பொதுத்தேர்வு பணியில், மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதுகலை ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர். குறிப்பாக, 151 முதன்மைக் கண்காணிப்பாளர்கள், 151 துறை அலுவலர்கள், 300க்கும் மேற்பட்ட பறக்கும்படை அலுவலர்கள், 3,100க்கும் மேற்பட்ட அறைக்கண்காணிப்பாளர்கள் என 3,500க்கும் அதிகமானோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

TN 12th Exam: பிளஸ் 2 தேர்வு... சேலத்தில் 151 மையங்களில் 37,938 மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர்

இதுகுறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கபீர் கூறுகையில், “சேலம் மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வினை சிறப்பாக நடத்த பள்ளி தேர்வு மையங்கள் மற்றும் சிறை தேர்வு மையம் என அனைத்து மையங்களிலும் தகுந்த முன்னேற்பாட்டு பணிகள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, தேர்வு எழுதும் மாணவர்களுக்கான இருக்கை வசதி, குடிநீர், தடையில்லா மின்சாரம், சுகாதார வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதற்காக ஏற்கனவே மாவட்ட அளவிலான முன்னேற்பாடு ஒருங்கிணைப்பு கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் காவல்துறை, சுகாதாரத் துறை, மாநகராட்சி, மின் வாரியம், போக்குவரத்து கழகம், தீயணைப்புதுறை, மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம், கல்வித்துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர். இதில் தடையில்லா மின்சாரம் வழங்கவும், தேர்வு மையங்களில் போலீஸ் பாதுகாப்பு அளிக்கவும், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரவும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு, மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார். 

பொதுத்தேர்வு அறைக்குள் செல்போன், ஸ்மார்ட் வாட்ச் உள்ளிட்ட எந்தவித எலக்ட்ரானிக் சாதனங்கள் எடுத்து செல்ல அனுமதியில்லை. தேர்வு பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கும் கடும் சுட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, ஆசிரியர்கள் தேர்வு மைய கண்காணிப்பாளர் அறையில், தங்களது செல்போனை ஒப்படைத்து செல்ல வேண்டும். தேர்வர்களோ அல்லது ஆசிரியர்களோ செல்போன் உள்ளிட்ட தகவல் தொடர்பு சாதனங்கள் வைத்திருந்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. தனியார் பள்ளிகளில் அமையும் தேர்வு மையங்களில், ஏதேனும் ஒழுங்கீனச் செயல்களில் ஈடுபட்டாலோ உடந்தையாக இருந்து ஊக்கப்படுத்தினாலோ சம்மந்தப்பட்ட மையம் ரத்து செய்யப்படுவதுடன் பள்ளி அங்கீகாரத்தை ரத்து செய்யவும் பரிந்துரைத்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டும் என தேர்வுகள் இயக்கக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Anna University: அப்போ ஞானசேகரன்..இப்போ ஞானவேல் பாபு; அண்ணா பல்கலை. பேராசிரியர் பாலியல் புகாரில் சஸ்பெண்ட்!
Anna University: அப்போ ஞானசேகரன்..இப்போ ஞானவேல் பாபு; அண்ணா பல்கலை. பேராசிரியர் பாலியல் புகாரில் சஸ்பெண்ட்!
1- 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டு இறுதித்தேர்வு...முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பள்ளிக் கல்வித்துறை
1- 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டு இறுதித்தேர்வு...முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பள்ளிக் கல்வித்துறை
இனி 1 ஹவர்தான்; 7 மணிக்கு பின் நோ! செல்போன், இணைய மோகத்தை கட்டுப்படுத்த புதிய கொள்கை வெளியீடு
இனி 1 ஹவர்தான்; 7 மணிக்கு பின் நோ! செல்போன், இணைய மோகத்தை கட்டுப்படுத்த புதிய கொள்கை வெளியீடு
Thervukalam App: போட்டித் தேர்வர்களுக்கு சூப்பர் வாய்ப்பு! தேர்வுக்களம் செயலி- TNPSC, TRB, TNUSRB தேர்வுகளுக்கு ரெடியாகுங்க!
Thervukalam App: போட்டித் தேர்வர்களுக்கு சூப்பர் வாய்ப்பு! தேர்வுக்களம் செயலி- TNPSC, TRB, TNUSRB தேர்வுகளுக்கு ரெடியாகுங்க!
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | Monday

ABP Premium

வீடியோ

PTR Palanivel Thiagarajan | புதிய நீதிக்கட்சிக்கு மதுரை மத்திய தொகுதி ஒதுக்கிய ADMK? PTR-க்கு யார் போட்டி?
Mayor Priya election | மேயர் பிரியாவுக்கு சீட்? திருவிக நகரில் போட்டியா! திமுக தலைமை MASTERPLAN
Gold Price Drop|பவுனுக்கு ரூ. 25,000 சரிவு! தங்கம் வாங்க இது சரியான நேரமா? நிபுணர்கள் சொல்வது என்ன?
Donald Trump Warns Iran | ’’2 நாள் தான் TIME அடிச்சு நொறுக்கிடுவேன்’’ஈரானுக்கு டிரம்ப் மிரட்டல்
Election commission | 3 நாளில் ரூ.42 கோடி பறிமுதல் வேட்டையில் பறக்கும் படை தேர்தல் ஆணையம் அதிரடி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Nainar Nagendran: சாத்தூர் தொகுதியில் போட்டி; அண்ணாமலை கதி என்ன?- பாஜக மேலிடம் சொல்வதற்கு முன்பே அறிவித்த நயினார்!
Nainar Nagendran: சாத்தூர் தொகுதியில் போட்டி; அண்ணாமலை கதி என்ன?- பாஜக மேலிடம் சொல்வதற்கு முன்பே அறிவித்த நயினார்!
Tamil Manila Congress Candidates: தமாகா வேட்பாளர்களை அறிவித்த ஜி.கே. வாசன்.! திமுகவிற்கு டஃப் கொடுக்கப்போகும் அந்த 5 பேர் யார்.?
தமாகா வேட்பாளர்களை அறிவித்த ஜி.கே. வாசன்.! திமுகவிற்கு டஃப் கொடுக்கப்போகும் அந்த 5 பேர் யார்.?
Petrol Diesel Price: வரிய குறைச்சும், பலன் வரலையே? தேர்தல் - விலையேற்றத்திற்கு சிக்னல் கொடுத்த மத்திய அரசு?
Petrol Diesel Price: வரிய குறைச்சும், பலன் வரலையே? தேர்தல் - விலையேற்றத்திற்கு சிக்னல் கொடுத்த மத்திய அரசு?
ADMK EPS: கூட்டணி கட்சிகளுக்கு பாடம் புகட்டும் எடப்பாடி? கொங்கின் கிங், வஞ்சகமா? எதிர்காலத்திற்கான ஸ்கெட்ச்
ADMK EPS: கூட்டணி கட்சிகளுக்கு பாடம் புகட்டும் எடப்பாடி? கொங்கின் கிங், வஞ்சகமா? எதிர்காலத்திற்கான ஸ்கெட்ச்
மீண்டும் மீண்டுமா? அண்ணா பல்கலை.யில் 2 ஆண்டாக பாலியல் தொல்லை- புகாரளித்த மாணவி!
மீண்டும் மீண்டுமா? அண்ணா பல்கலை.யில் 2 ஆண்டாக பாலியல் தொல்லை- புகாரளித்த மாணவி!
Tata Altroz iCNG Review: கார், எரிபொருள் ரெண்டுக்குமே ரொம்ப கம்மியான செலவுதான்; டாடா ஆல்ட்ரோஸ் iCNG எப்படி இருக்கு.?
கார், எரிபொருள் ரெண்டுக்குமே ரொம்ப கம்மியான செலவுதான்; டாடா ஆல்ட்ரோஸ் iCNG எப்படி இருக்கு.?
பொன்ராஜ், எஸ்வி சேகர்.. பெண்களை இழிவுசெய்வோரை கைது செய்யாதது ஏன்? திமுக ஆதரவா? அன்புமணி கேள்வி
பொன்ராஜ், எஸ்வி சேகர்.. பெண்களை இழிவுசெய்வோரை கைது செய்யாதது ஏன்? திமுக ஆதரவா? அன்புமணி கேள்வி
TASMAC Holiday: தமிழகத்தில் 4 நாட்கள் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு.! எப்போ தெரியுமா.? மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்
தமிழகத்தில் 4 நாட்கள் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு.! எப்போ தெரியுமா.? மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்
Embed widget