மேலும் அறிய

Seeman Case : தப்பித்தாரா சீமான்? நடிகை மீதான வழக்கில் தடை விதித்தது உச்ச நீதிமன்றம்

Seeman Case : நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக நடிகை ஒருவர் கடந்த 2011 ஆன் ஆண்டு சென்னை வளசரவாக்கத்தில் உள்ள காவல் நிலையத்தில் புகாரளித்தார்.

நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு வழக்கை விசாரிக்க ஆணையிட்ட சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கும் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது உச்சநீதிமன்றம்

சீமான் வழக்கு: 

நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக நடிகை ஒருவர் கடந்த 2011 ஆன் ஆண்டு சென்னை வளசரவாக்கத்தில் உள்ள காவல் நிலையத்தில் புகாரளித்தார். ஆனால் 2012 ஆம் ஆண்டு அதே வழக்கை திரும்ப பெற்றுக்கொண்டார். இந்த நிலையில் இந்த வழக்கை மீண்டும் விசாரணைக்கு எடுத்தது சென்னை உயர்நீதிமன்றம். 

இதனால் இந்த வழக்கை ரத்து செய்ய கோரி சீமான் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்,  சில நாட்களுக்கு முன்பு இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற  நீதிபதி ஜிகே இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது,அப்போது சீமானின் வழக்கை ரத்து செய்ய முடியாது நீதிபதி தீர்ப்பளித்திருந்தார். 

மேலும் இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி வழக்கின் விசாரணையை 12 வாரங்களுக்கு  முடிக்க வேண்டும் என  உயர்நீதிமன்றம் காவல்துறைக்கு உத்தரவிட்டது. இதையடுத்து,  வழக்கின் விசாரணையை துரிதப்படுத்திய காவல்துறை, சீமானுக்கு நேரில் ஆஜராகுமாறு, வளசரவாக்கம் காவல்துறை  சம்மன் அனுப்பியது. 

இதையும் படிங்க: EPS Statement: ஒண்ணு பொய்-ங்கற உண்மைய ஒத்துக்கோங்க.. இல்ல ரகசியத்த சொல்லுங்க #Daddy_Son...

சீமான் மேல்முறையீடு:

உயர்நீதிமன்றம் வழக்கை ரத்து செய்ய மறுத்ததை தொடர்ந்து, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார் சீமான். அந்த மேல்முறையீட்டு மனுவில் 12 வாரங்களுக்குள் வழக்கின் விசாரணையை நிறுத்தி வைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. 

தடை விதித்த உச்சநீதிமன்றம்:

இந்த நிலையில் இவ்வழக்கின் விசாரணையானது உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.பி நாகரத்தினா, சதீஷ் சந்திர வர்மா ஆகியோர் அமர்வின் முன்பு விசாரணைக்கு வந்தது. 

அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள் சீமான் தரப்பு வாதங்களை கேட்டறிந்தனர். அப்போது பதிலளித்த சீமான் இந்த விவகாரத்தில் நான் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளேன் என்றும் வழக்கை இதுவரை மூன்று முறை திரும்ப பெற்றுள்ளதாக வாதிட்டது. 

இதற்கு பதிலளித்த நீதிபதிகள் “இந்த விவகாரத்தில் ஒரு முடிவு வேண்டும் என்றும் ஏன் இரு தரப்பும் பேசி ஒரு சுமூக முடிவு எடுக்கக்கூடாது?" என்று கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த சீமான் தரப்பு வழக்கறிஞர், சுமூக முயற்சி எடுப்பதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாகக் தெரிவித்தார்

இதற்கு பிறகு கருத்து தெரிவித்த நீதிபதிகள் தமிழ்நாடு காவல்துறை மற்றும் எதிர் தரப்பினருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர், மேலும் 12 வாரங்களில் வழக்கை விசாரிக்க ஆணையிட்ட சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கும் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர்.  தொடர்ந்து இரு தரப்புக்கும் பேச்சு வார்த்தை மூலம் சுமுக தீர்வு ஏற்ப்பட முடியுமா என்பதை ஆராய வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

About the author ஜேம்ஸ்

I, James, am a passionate journalist with 3 years of experience in the media industry. I studied Digital Journalism, driven by a strong desire to excel in this field. I began my career as a Video Producer and have since evolved into a dedicated and enthusiastic content writer, with a strong focus on sports and crime reporting. In addition, I cover infrastructure, politics, entertainment, and other important world events, striving to deliver accurate and engaging news to the public. I currently work as an Assistant Producer at the ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

"எங்களைத் தவிர்த்துவிட்டு அரசியல் இல்லை" - செஞ்சி கல்லூரி விழாவில் கமல்ஹாசன் பேச்சு!
மேடையில் யாருமில்லை: அப்செட் ஆன அமைச்சர் நிர்மல்குமார் புறப்பட்டதால் பரபரப்பு!
மேடையில் யாருமில்லை: அப்செட் ஆன அமைச்சர் நிர்மல்குமார் புறப்பட்டதால் பரபரப்பு!
தமிழ்நாட்டிலோ எவ்வளவு காசு கொடுத்து எந்த எம்.எல்.ஏ-க்களை வாங்கலாம், யாரைக் கூட்டு வரலாம் என்ற கேவலமான பேரம் நடந்து கொண்டிருக்கிறது - அன்புமணி ராமதாஸ்.
தமிழ்நாட்டிலோ எவ்வளவு காசு கொடுத்து எந்த எம்.எல்.ஏ-க்களை வாங்கலாம், யாரைக் கூட்டு வரலாம் என்ற கேவலமான பேரம் நடந்து கொண்டிருக்கிறது - அன்புமணி ராமதாஸ்.
CM விஜய்கிட்ட ஒன்னுமே இல்லை..பாஜக தான் முழு பொறுப்பு, எடப்பாடி தவறவிட்டார்- கிருஷ்ணசாமி ஆவேசம்
CM விஜய்கிட்ட ஒன்னுமே இல்லை..பாஜக தான் முழு பொறுப்பு, எடப்பாடி தவறவிட்டார்- கிருஷ்ணசாமி ஆவேசம்

வீடியோ

Tiruppur Crime News : 4 மாத கர்ப்பிணி.. மனைவியை கொன்ற கணவன்... திருப்பூரை உலுக்கிய கொடூரம்
Theni Theft Murder : பாட்டி கொலையில் மர்மம்.. நாடகமாடிய பேரன், பேத்தி! போலீஸ் அதிரடி கைது!
Trichy VAO: போதையில் சட்டையின்றி தூக்கம்.. அலுவலகத்தில் சிக்கிய VAO! வைரலாகும் வீடியோ
RS Bharathi vs Minister Ramesh :
Senthil Balaji : செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்டத்தை ஆரம்பித்த CM விஜய்! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: தவெகவுக்கு திமுக பயப்படாது.. தூசி மாதிரி தட்டுவோம்.. உதயநிதி ஸ்டாலின் விளாசல்!
Udhayanidhi Stalin: தவெகவுக்கு திமுக பயப்படாது.. தூசி மாதிரி தட்டுவோம்.. உதயநிதி ஸ்டாலின் விளாசல்!
ஊருக்கு ஒரு ஆபீஸ்.. பள்ளிக்கல்வித்துறையில் நடந்த முறைகேடு.. போட்டுடைத்த அமைச்சர் ராஜ்மோகன்!
ஊருக்கு ஒரு ஆபீஸ்.. பள்ளிக்கல்வித்துறையில் நடந்த முறைகேடு.. போட்டுடைத்த அமைச்சர் ராஜ்மோகன்!
Iran Vs Trump: 'நீங்கள் கமெனியை கொன்றீர்கள், அவரது கொள்கைகளை அல்ல'; ட்ரம்ப்புக்கு சூடான பதிலடி கொடுத்த ஈரான்
'நீங்கள் கமெனியை கொன்றீர்கள், அவரது கொள்கைகளை அல்ல'; ட்ரம்ப்புக்கு சூடான பதிலடி கொடுத்த ஈரான்
திருப்பதியில் படியேறி சாமி தரிசனம் செய்த 116 வயது தமிழ்நாட்டு மூதாட்டி.. குவியும் வாழ்த்து!
திருப்பதியில் படியேறி சாமி தரிசனம் செய்த 116 வயது தமிழ்நாட்டு மூதாட்டி.. குவியும் வாழ்த்து!
8வது சம்பள கமிஷன்: மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பளம் உயர புதிய குடும்ப கணக்கீடு!
8வது சம்பள கமிஷன்: மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பளம் உயர புதிய குடும்ப கணக்கீடு!
Renault Kwid New Vs Old: புது லோகோ, குறைந்த விலை; 2026 ரெனால்ட் க்விட்டுக்கும், பழைய க்விட்டுக்கும் என்ன வித்தியாசம்.?
புது லோகோ, குறைந்த விலை; 2026 ரெனால்ட் க்விட்டுக்கும், பழைய க்விட்டுக்கும் என்ன வித்தியாசம்.?
Vaiko: திமுகவுக்கு என்னை பேச தகுதியே இல்ல.. கொந்தளித்த வைகோ.. மிரண்ட மதிமுக தொண்டர்கள்!
Vaiko: திமுகவுக்கு என்னை பேச தகுதியே இல்ல.. கொந்தளித்த வைகோ.. மிரண்ட மதிமுக தொண்டர்கள்!
தூத்துக்குடி மின்வெட்டு (07.07.2026): எந்த பகுதிகளில் எத்தனை மணி நேரம் மின்தடை?
தூத்துக்குடி மின்வெட்டு (07.07.2026): எந்த பகுதிகளில் எத்தனை மணி நேரம் மின்தடை?
Embed widget