மேலும் அறிய

Seeman Case : தப்பித்தாரா சீமான்? நடிகை மீதான வழக்கில் தடை விதித்தது உச்ச நீதிமன்றம்

Seeman Case : நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக நடிகை ஒருவர் கடந்த 2011 ஆன் ஆண்டு சென்னை வளசரவாக்கத்தில் உள்ள காவல் நிலையத்தில் புகாரளித்தார்.

நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு வழக்கை விசாரிக்க ஆணையிட்ட சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கும் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது உச்சநீதிமன்றம்

சீமான் வழக்கு: 

நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக நடிகை ஒருவர் கடந்த 2011 ஆன் ஆண்டு சென்னை வளசரவாக்கத்தில் உள்ள காவல் நிலையத்தில் புகாரளித்தார். ஆனால் 2012 ஆம் ஆண்டு அதே வழக்கை திரும்ப பெற்றுக்கொண்டார். இந்த நிலையில் இந்த வழக்கை மீண்டும் விசாரணைக்கு எடுத்தது சென்னை உயர்நீதிமன்றம். 

இதனால் இந்த வழக்கை ரத்து செய்ய கோரி சீமான் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்,  சில நாட்களுக்கு முன்பு இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற  நீதிபதி ஜிகே இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது,அப்போது சீமானின் வழக்கை ரத்து செய்ய முடியாது நீதிபதி தீர்ப்பளித்திருந்தார். 

மேலும் இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி வழக்கின் விசாரணையை 12 வாரங்களுக்கு  முடிக்க வேண்டும் என  உயர்நீதிமன்றம் காவல்துறைக்கு உத்தரவிட்டது. இதையடுத்து,  வழக்கின் விசாரணையை துரிதப்படுத்திய காவல்துறை, சீமானுக்கு நேரில் ஆஜராகுமாறு, வளசரவாக்கம் காவல்துறை  சம்மன் அனுப்பியது. 

இதையும் படிங்க: EPS Statement: ஒண்ணு பொய்-ங்கற உண்மைய ஒத்துக்கோங்க.. இல்ல ரகசியத்த சொல்லுங்க #Daddy_Son...

சீமான் மேல்முறையீடு:

உயர்நீதிமன்றம் வழக்கை ரத்து செய்ய மறுத்ததை தொடர்ந்து, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார் சீமான். அந்த மேல்முறையீட்டு மனுவில் 12 வாரங்களுக்குள் வழக்கின் விசாரணையை நிறுத்தி வைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. 

தடை விதித்த உச்சநீதிமன்றம்:

இந்த நிலையில் இவ்வழக்கின் விசாரணையானது உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.பி நாகரத்தினா, சதீஷ் சந்திர வர்மா ஆகியோர் அமர்வின் முன்பு விசாரணைக்கு வந்தது. 

அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள் சீமான் தரப்பு வாதங்களை கேட்டறிந்தனர். அப்போது பதிலளித்த சீமான் இந்த விவகாரத்தில் நான் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளேன் என்றும் வழக்கை இதுவரை மூன்று முறை திரும்ப பெற்றுள்ளதாக வாதிட்டது. 

இதற்கு பதிலளித்த நீதிபதிகள் “இந்த விவகாரத்தில் ஒரு முடிவு வேண்டும் என்றும் ஏன் இரு தரப்பும் பேசி ஒரு சுமூக முடிவு எடுக்கக்கூடாது?" என்று கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த சீமான் தரப்பு வழக்கறிஞர், சுமூக முயற்சி எடுப்பதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாகக் தெரிவித்தார்

இதற்கு பிறகு கருத்து தெரிவித்த நீதிபதிகள் தமிழ்நாடு காவல்துறை மற்றும் எதிர் தரப்பினருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர், மேலும் 12 வாரங்களில் வழக்கை விசாரிக்க ஆணையிட்ட சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கும் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர்.  தொடர்ந்து இரு தரப்புக்கும் பேச்சு வார்த்தை மூலம் சுமுக தீர்வு ஏற்ப்பட முடியுமா என்பதை ஆராய வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

About the author ஜேம்ஸ்

I, James, am a passionate journalist with 3 years of experience in the media industry. I studied Digital Journalism, driven by a strong desire to excel in this field. I began my career as a Video Producer and have since evolved into a dedicated and enthusiastic content writer, with a strong focus on sports and crime reporting. In addition, I cover infrastructure, politics, entertainment, and other important world events, striving to deliver accurate and engaging news to the public. I currently work as an Assistant Producer at the ABP NADU Tamil website.
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TN Weather Update: சென்னைக்கு வார்னிங்..! 4 மாவட்டங்களில் மிக கனமழை, 10 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு - இன்றைய தமிழக வானிலை
TN Weather Update: சென்னைக்கு வார்னிங்..! 4 மாவட்டங்களில் மிக கனமழை, 10 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு - இன்றைய தமிழக வானிலை
Parasakthi : சிவகார்த்திகேயனின் பராசக்தி காட்சிகள் ரத்து..அதிர்ச்சியில் ரசிகர்கள்
Parasakthi : சிவகார்த்திகேயனின் பராசக்தி காட்சிகள் ரத்து..அதிர்ச்சியில் ரசிகர்கள்
Sridhar Vembu: விவாகரத்து..! மனைவிக்கு கல்தா, சொத்துகளை மாற்றிய ஸ்ரீதர் வேம்பு? ரூ.15,278 கோடியை செலுத்த உத்தரவு
Sridhar Vembu: விவாகரத்து..! மனைவிக்கு கல்தா, சொத்துகளை மாற்றிய ஸ்ரீதர் வேம்பு? ரூ.15,278 கோடியை செலுத்த உத்தரவு
Kia EV2: ப்ராண்டின் குட்டி மின்சார கார்..! கியா புதிய எஸ்யுவி மாடலின் அம்சங்கள், ரேஞ்ச்? இந்தியாவில் எப்போது?
Kia EV2: ப்ராண்டின் குட்டி மின்சார கார்..! கியா புதிய எஸ்யுவி மாடலின் அம்சங்கள், ரேஞ்ச்? இந்தியாவில் எப்போது?
ABP Premium

வீடியோ

Aarti Ravi vs Ravi Mohan | ”சுயமரியாதை பத்தி நீ பேசலாமா?”ஒரு உண்மையை சொல்றேன்”ரவி மோகன் Vs ஆர்த்தி
Blinkit Delivery boy saves Girl |BLINKIT ORDER-ல் எலிமருந்து! ஹீரோவாக மாறிய DELIVERY BOY
Saaniya Chandhok | அர்ஜுன் டெண்டுல்கருக்கு டும்..டும்..!BUSINESS MAGNATE-ன் பேத்தியார் இந்த சானியா?
ஜனநாயகன் புது ரிலீஸ் தேதி அதிரடி காட்டும் விஜய் ரசிகர்களுக்கு GOOD NEWS | Jana Nayagan New Release Date
Girish Chodankar On DMK Alliance | பிரவீன் விஜய்யுடன் சந்திப்புராகுல் கொடுத்த ஐடியாவா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather Update: சென்னைக்கு வார்னிங்..! 4 மாவட்டங்களில் மிக கனமழை, 10 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு - இன்றைய தமிழக வானிலை
TN Weather Update: சென்னைக்கு வார்னிங்..! 4 மாவட்டங்களில் மிக கனமழை, 10 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு - இன்றைய தமிழக வானிலை
Parasakthi : சிவகார்த்திகேயனின் பராசக்தி காட்சிகள் ரத்து..அதிர்ச்சியில் ரசிகர்கள்
Parasakthi : சிவகார்த்திகேயனின் பராசக்தி காட்சிகள் ரத்து..அதிர்ச்சியில் ரசிகர்கள்
Sridhar Vembu: விவாகரத்து..! மனைவிக்கு கல்தா, சொத்துகளை மாற்றிய ஸ்ரீதர் வேம்பு? ரூ.15,278 கோடியை செலுத்த உத்தரவு
Sridhar Vembu: விவாகரத்து..! மனைவிக்கு கல்தா, சொத்துகளை மாற்றிய ஸ்ரீதர் வேம்பு? ரூ.15,278 கோடியை செலுத்த உத்தரவு
Kia EV2: ப்ராண்டின் குட்டி மின்சார கார்..! கியா புதிய எஸ்யுவி மாடலின் அம்சங்கள், ரேஞ்ச்? இந்தியாவில் எப்போது?
Kia EV2: ப்ராண்டின் குட்டி மின்சார கார்..! கியா புதிய எஸ்யுவி மாடலின் அம்சங்கள், ரேஞ்ச்? இந்தியாவில் எப்போது?
TVK VIJAY: சைலண்ட் மோடில் விஜய், ஆதவ் அர்ஜூனா.! வாயை திறக்காததற்கு இது தான் காரணமா.?
சைலண்ட் மோடில் விஜய், ஆதவ் அர்ஜூனா.! வாயை திறக்காததற்கு இது தான் காரணமா.?
TASMAC Holiday: தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு 3 நாள் விடுமுறை.! மதுப்பிரியர்களுக்கு ஷாக் கொடுத்த தமிழக அரசு
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு 3 நாள் விடுமுறை.! மதுப்பிரியர்களுக்கு ஷாக் கொடுத்த தமிழக அரசு
5 நாள் தொடர் விடுமுறை.! கோவை, நெல்லை, திருப்பூர், செங்கோட்டைக்கு சிறப்பு ரயில்- தெற்கு ரயில்வே அறிவிப்பு
5 நாள் தொடர் விடுமுறை.! கோவை, நெல்லை, திருப்பூர், செங்கோட்டைக்கு சிறப்பு ரயில்- தெற்கு ரயில்வே அறிவிப்பு
DMDK Alliance: முந்திரிக் கொட்டை மாதிரி சொல்லனுமா? கூட்டணி அறிவிப்பில் தொண்டர்களை ஏமாற்றிய பிரேமலதா விஜயகாந்த்
DMDK Alliance: முந்திரிக் கொட்டை மாதிரி சொல்லனுமா? கூட்டணி அறிவிப்பில் தொண்டர்களை ஏமாற்றிய பிரேமலதா விஜயகாந்த்
Embed widget