மேலும் அறிய

"போரால சாகல.. பசியால சாகுறோம்" காசா அகதிகள் முகாமில் உணவின்றி தவிக்கும் குழந்தைகள்!

வடக்கு காசாவில் ஜபாலியா அகதிகள் முகாமில் போரின் காரணமாக உணவு தட்டுப்பாடு நிலவி வந்துள்ளது.

காசாவில் கடந்தாண்டு அக்டோபர் 7ஆம் தேதி தொடங்கிய போர் 4 மாதங்களாக தொடர்ந்து வருகிறது. இஸ்ரேல் மீது பாலஸ்தீனத்தை சேர்ந்த ஹமாஸ் அமைப்பு தாக்குதல் நடத்த அதற்கு பதில் தாக்குதல் நடத்துகிறோம் என்ற பெயரில், இஸ்ரேல் பாதுகாப்பு படைகள், பாலஸ்தீனத்தில் உள்ள காசாவில் ருத்ரதாண்டவம் ஆடி வருகிறது.

இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் இதுவரை கிட்டத்தட்ட 30,000 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்டவர்களில் பெரும்பான்மையானோர் பெண்களும் குழந்தைகளுமே ஆவர். போர் நிறுத்தம் அறிவிக்கக் கோரி உலக நாடுகள் கோரிக்கை விடுத்து வரும் நிலையில், இன்னும் பல மாதங்களுக்கு போர் நீடிக்க உள்ளதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எச்சரித்துள்ளார்.

காசாவில் உணவின்றி தவிக்கும் குழந்தைகள்:

கடந்த 1948ஆம் ஆண்டு, இஸ்ரேல் - பாலஸ்தீன பிரச்னை வெடித்த பிறகு, காசா பகுதி அகதிகள் முகாமாக மாற்றப்பட்டது. வெறும் 1.4 சதுர கிலோமீட்டரே ஆன காசா பகுதியில் போதுமான அடிப்படை வசதிகள் இன்றி லட்சக்கணக்கான பாலஸ்தீனியர்கள் வாழ்ந்து வருகின்றனர். அசுத்தமான குடிநீர், மின்வெட்டு, அலைமோதும் கூட்டம் என காசா மக்கள் பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வருகின்றனர்.

இப்படிப்பட்ட சூழலில், இஸ்ரேல் நடத்தி வரும் போர் காசாவை மேலும் நிலைகுலைய வைத்துள்ளது. இதற்கிடையே, வடக்கு காசாவில் ஜபாலியா அகதிகள் முகாமில் போரின் காரணமாக உணவு தட்டுப்பாடு நிலவி வந்துள்ளது. இதனால், அகதிகள் முகாமில் இருந்த நபர் ஒருவர், தனது குடும்பத்திற்கு உணவை வழங்க சொந்த குதிரையை அடித்து கொன்றுள்ளார்.

இதுகுறித்து அகதிகள் முகாமில் வசித்து வரும் அபு ஜிப்ரில் கூறுகையில், "குழந்தைகளுக்கு உணவளிக்க குதிரைகளை கொல்வதை தவிர வேறு வழியில்லை. பசி எங்களை கொல்கிறது" என்றார். இஸ்ரேல் போர் தொடங்கியதை அடுத்து, பெய்ட் ஹனுன் பகுதியில் இருந்து 60 வயதான ஜிப்ரில், தனது குடும்பத்துடன் அகதிகள் முகாமிக்கு சென்றுள்ளார்.

எச்சரிக்கும் ஐக்கிய நாடுகள் சபை:

காசாவில் வேலைவாய்ப்பு இல்லாத காரணத்தால் கடுமையான வறுமை நிலவி வருகிறது. தற்போது, போர் தொடர்ந்து வருவதால் காசாவுக்கு உணவு போன்ற அடிப்படை தேவைகளை எடுத்து செல்ல முடியாமல் ஐநா போன்ற சர்வசேத அமைப்புகள் திணறி வருகின்றன.

இதுவரை இல்லாத அளவுக்கு மக்கள் மத்தியில் அவநம்பிக்கை நிலவி வருவதாகவும் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பஞ்சத்தின் விளிம்பில் இருக்கின்றனர் என்றும் ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது. ஜபாலியாவிலிருந்து ஏழு கிலோமீட்டர்கள் (வெறும் நான்கு மைல்கள்) தொலைவில் உள்ள காசா நகரில் உள்ள மருத்துவமனையில் ஊட்டச்சத்து குறைபாட்டால் இரண்டு மாத குழந்தை இறந்தது.

இதுகுறித்து யுனிசெப் கூறுகையில், "உணவு பற்றாக்குறை, அதிகரித்து வரும் ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் நோய்கள் காசாவில் குழந்தை இறப்புகளை அதிகப்படுத்தலாம்" என எச்சரித்துள்ளது.

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Assembly Session LIVE: திட்டமிட்டு கலவரத்தை ஏற்படுத்த அதிமுக உறுப்பினர்கள் முயற்சி - முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு
TN Assembly Session LIVE: திட்டமிட்டு கலவரத்தை ஏற்படுத்த அதிமுக உறுப்பினர்கள் முயற்சி - முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு
Breaking News LIVE: ‘கேரளா' மாநிலத்தின் பெயரை ‘கேரளம்' என மாற்றும் தீர்மானம் அம்மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றம்!
Breaking News LIVE: ‘கேரளா' மாநிலத்தின் பெயரை ‘கேரளம்' என மாற்றும் தீர்மானம் அம்மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றம்!
Delhi Water Crisis: தண்ணீர் கொடுக்காத ஹரியானா.. தொடர் உண்ணாவிரதத்தால் டெல்லி அமைச்சர் மருத்துவமனையில் அனுமதி!
தண்ணீர் கொடுக்காத ஹரியானா.. தொடர் உண்ணாவிரதத்தால் டெல்லி அமைச்சர் மருத்துவமனையில் அனுமதி!
Fishermen Arrest: எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 10 மீனவர்கள் கைது - இலங்கை கடற்படை நடவடிக்கையால் அதிர்ச்சி
Fishermen Arrest: எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 10 மீனவர்கள் கைது - இலங்கை கடற்படை நடவடிக்கையால் அதிர்ச்சி
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Accident News :  BIKE-ல் மோதிய பேருந்து..தூக்கி வீசப்பட்ட இளைஞர் பதற வைக்கும் CCTV காட்சிNEET Exam  : நீட் மறு தேர்வு..எழுத வராத மாணவர்கள்! நடந்தது என்ன?Amudha IAS Transfer? : இப்படி பண்ணிட்டிங்களே. அமுதா IAS Transfer? அப்செட்டில் ஸ்டாலின்!Trichy Surya |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Assembly Session LIVE: திட்டமிட்டு கலவரத்தை ஏற்படுத்த அதிமுக உறுப்பினர்கள் முயற்சி - முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு
TN Assembly Session LIVE: திட்டமிட்டு கலவரத்தை ஏற்படுத்த அதிமுக உறுப்பினர்கள் முயற்சி - முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு
Breaking News LIVE: ‘கேரளா' மாநிலத்தின் பெயரை ‘கேரளம்' என மாற்றும் தீர்மானம் அம்மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றம்!
Breaking News LIVE: ‘கேரளா' மாநிலத்தின் பெயரை ‘கேரளம்' என மாற்றும் தீர்மானம் அம்மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றம்!
Delhi Water Crisis: தண்ணீர் கொடுக்காத ஹரியானா.. தொடர் உண்ணாவிரதத்தால் டெல்லி அமைச்சர் மருத்துவமனையில் அனுமதி!
தண்ணீர் கொடுக்காத ஹரியானா.. தொடர் உண்ணாவிரதத்தால் டெல்லி அமைச்சர் மருத்துவமனையில் அனுமதி!
Fishermen Arrest: எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 10 மீனவர்கள் கைது - இலங்கை கடற்படை நடவடிக்கையால் அதிர்ச்சி
Fishermen Arrest: எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 10 மீனவர்கள் கைது - இலங்கை கடற்படை நடவடிக்கையால் அதிர்ச்சி
Anbumani speech : திமுகவை ஒழிக்க எம்.ஜி.ஆர் விரும்பினார்.. அதிமுகவிடம் ஆதரவு கேட்ட அன்புமணி
திமுகவை ஒழிக்க எம்.ஜி.ஆர் விரும்பினார்.. அதிமுகவிடம் ஆதரவு கேட்ட அன்புமணி
T20 World Cup 2024: அரையிறுதியில் இங்கிலாந்தை எதிர்கொள்ளும் இந்தியா.. போட்டி நாளில் 88% மழைக்கு வாய்ப்பு..? என்ன நடக்கும்?
அரையிறுதியில் இங்கிலாந்தை எதிர்கொள்ளும் இந்தியா.. போட்டி நாளில் 88% மழைக்கு வாய்ப்பு..? என்ன நடக்கும்?
IND vs AUS Match Highlights: டி20 உலகக் கோப்பை.. ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இந்தியா..அரையிறுதி வாய்ப்பு உறுதி!
IND vs AUS Match Highlights: டி20 உலகக் கோப்பை.. ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இந்தியா..அரையிறுதி வாய்ப்பு உறுதி!
Tamayo Perry: கடித்து குதறிய சுறாக்கள்.. பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன் நடிகர் உயிரிழப்பு - ரசிகர்கள் இரங்கல்
கடித்து குதறிய சுறாக்கள்.. பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன் நடிகர் உயிரிழப்பு - ரசிகர்கள் இரங்கல்
Embed widget