மேலும் அறிய

Aadi Perukku 2023: காவிரி ஆற்றங்கரையில் களைகட்டிய ஆடிப்பெருக்கு விழா.. ஏராளமான புதுமண தம்பதியினர் பங்கேற்பு

ஆடி பெருக்கை முன்னிட்டு கரூர் மாவட்டத்தின் காவிரி ஆற்றில் பொதுமக்கள், புதுமண தம்பதியினர் தேங்காய், பழம், அரிசி படையலிட்டு காவிரி தாயை வழிபட்டனர்.

ஆடி பெருக்கை முன்னிட்டு கரூர் மாவட்டத்தின் காவிரி ஆற்றில் பொதுமக்கள், புதுமண தம்பதியினர் தேங்காய், பழம், அரிசி படையலிட்டு காவிரி தாயை வழிபட்டனர்.

நீரின்றி அமையாது உலகு என்றார் வள்ளுவர். அவரின் கூற்றுப்படி இயற்கை நமக்களித்த கொடைகளில் ஒன்று நீர் நிலைகள். காலப்போக்கில் மனிதர்களின் தேவைக்கேற்றபடி அதன் வடிவம் மாறினாலும் நீரின் தேவை என்றும் மாறாமலே உள்ளது. அப்படியான நீருக்கு நன்றி தெரிவிக்கும் விழாவாக ஆடிப்பெருக்கு கொண்டாடப்படுகிறது. ஆடி மாதம் 18 ஆம் தேதி தமிழகத்தின் அனைத்து நீர் நிலைகளில் ஆடிப்பெருக்கு விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டாலும், காவிரி ஆற்றங்கரையில் கொண்டாடப்படும் ஆடிபெருக்கு விழா சிறப்பு வாய்ந்தது. 


Aadi Perukku 2023: காவிரி ஆற்றங்கரையில் களைகட்டிய ஆடிப்பெருக்கு விழா.. ஏராளமான புதுமண தம்பதியினர் பங்கேற்பு

பொதுவாக ஆடிப்பெருக்கு வரும் காலக்கட்டத்தில்  காவிரி ஆறு இருகரைகளையும் தொட்டபடி பெருகி ஓடுவதைப் போல  மக்கள் மனங்களில் மகிழ்ச்சி வெள்ளம் பெருகி ஓடும் என்பது ஐதீகம். அதன்படி நடப்பாண்டுக்கான ஆடிப்பெருக்கு விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு கரூர் மாவட்டம், வாங்கல், நெரூர், குளித்தலை, கிருஷ்ணராயபுரம், மாயனூர், லாலாபேட்டை ஆகிய பகுதிகளில்பொதுமக்கள் புதுமண தம்பதியினர் காவிரி ஆற்றில் வழிபாடு செய்தனர். மேலும் தேங்காய், அரிசி, பழங்களை படையலிட்டு தங்களது மாங்கல்யத்தினை வைத்து பூஜை செய்து காவிரி அன்னையை வழிபட்டனர்.


Aadi Perukku 2023: காவிரி ஆற்றங்கரையில் களைகட்டிய ஆடிப்பெருக்கு விழா.. ஏராளமான புதுமண தம்பதியினர் பங்கேற்பு

மேலும், பெண்கள் தங்களது மாங்கல்ய கயிறை புதிதாக மாற்றியும்,  திருமணமான புதுமண தம்பதியினர் தங்களது கல்யாணம் மாலையை காவிரி ஆற்றில் விட்டும் காவிரி அன்னையை வழிபட்டனர். தங்களது குடும்பம் நோய் நொடியின்றி செல்வ செழிப்புடனும் வாழையடி வாழையாக தங்களது குடும்பம் வளர வேண்டும் என்றும், அனைத்து மக்களும் நன்மை பெற வேண்டியும், விவசாயம் செழித்திடவும் காவிரி ஆற்றங்கரையில் பூஜை செய்து காவிரி அன்னையை வழிபடுவதாகவும், தங்களது முன்னோர்களின் ஆசி தங்களது குடும்பத்திற்கு பரிபூரணமாக கிடைக்க ஆடிப்பெருக்கென்று காவிரி ஆற்றில் பூஜை செய்து வழிபடுவதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

இதற்கிடையில் திருச்சியிலும் ஆடிப்பெருக்கு விழா பொதுமக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.  இன்று மாலை ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறையில் ஸ்ரீரங்கம் நம்பெருமாள் எழுந்தருள உள்ளார். பொதுமக்கள் அதிகளவில் கூடுவதால் ஸ்ரீரங்கம் உதவி ஆணையர் நிவேதிதா லட்சுமி தலைமையில் சுமார் 172 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் குறிப்பிடத்தக்கது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ரூ.9 ஆயிரம் கோடியில் டாடா கார் ஆலை; 5 ஆயிரம் பேருக்கு வேலை: அடிக்கல் நாட்டிய முதல்வர்
ரூ.9 ஆயிரம் கோடியில் டாடா கார் ஆலை; 5 ஆயிரம் பேருக்கு வேலை: அடிக்கல் நாட்டிய முதல்வர்
Breaking News LIVE 28th Sep 2024: கூகுள் மேப்பை பயன்படுத்தி ஏடிஎம் தேர்வு செய்த மேவாட் கொள்ளையர்கள்: வெளியான தகவல்
Breaking News LIVE 28th Sep 2024: கூகுள் மேப்பை பயன்படுத்தி ஏடிஎம் தேர்வு செய்த மேவாட் கொள்ளையர்கள்: வெளியான தகவல்
Hosur Fire Accident: ஓசூரில் டாடா செல்போன் உற்பத்தி ஆலையில் பயங்கர தீ விபத்து - பதறி ஓடிய தொழிலாளர்கள்
Hosur Fire Accident: ஓசூரில் டாடா செல்போன் உற்பத்தி ஆலையில் பயங்கர தீ விபத்து - பதறி ஓடிய தொழிலாளர்கள்
Exclusive: “திமுக ஆட்சியில் பங்கு?” மனம் திறந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை..!
“திமுக ஆட்சியில் பங்கு?” மனம் திறந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை..!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Rahul Gandhi | கேள்வி கேட்டா அசிங்க படுத்துவீங்களா? நான்வருவேன் அப்போ தெரியும்! நாள் குறித்த ராகுல்!Thrissur ATM Robbery | GUNSHOT.. CHASING.. ஹரியானா கொள்ளையர்கள் சிக்கியது எப்படி? Namakkal ContainerThiruchendur temple : முருகனை பார்க்க ஆயிரமா? கொந்தளிக்கும் பக்தர்கள்!திருச்செந்தூரில் நடப்பது என்ன?Rowdy John : ”கேட்ட இழுத்து மூடு டா” நீதிமன்றத்துக்குள் புகுந்த போலீஸ்! தட்டி தூக்கப்பட்ட ரவுடி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரூ.9 ஆயிரம் கோடியில் டாடா கார் ஆலை; 5 ஆயிரம் பேருக்கு வேலை: அடிக்கல் நாட்டிய முதல்வர்
ரூ.9 ஆயிரம் கோடியில் டாடா கார் ஆலை; 5 ஆயிரம் பேருக்கு வேலை: அடிக்கல் நாட்டிய முதல்வர்
Breaking News LIVE 28th Sep 2024: கூகுள் மேப்பை பயன்படுத்தி ஏடிஎம் தேர்வு செய்த மேவாட் கொள்ளையர்கள்: வெளியான தகவல்
Breaking News LIVE 28th Sep 2024: கூகுள் மேப்பை பயன்படுத்தி ஏடிஎம் தேர்வு செய்த மேவாட் கொள்ளையர்கள்: வெளியான தகவல்
Hosur Fire Accident: ஓசூரில் டாடா செல்போன் உற்பத்தி ஆலையில் பயங்கர தீ விபத்து - பதறி ஓடிய தொழிலாளர்கள்
Hosur Fire Accident: ஓசூரில் டாடா செல்போன் உற்பத்தி ஆலையில் பயங்கர தீ விபத்து - பதறி ஓடிய தொழிலாளர்கள்
Exclusive: “திமுக ஆட்சியில் பங்கு?” மனம் திறந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை..!
“திமுக ஆட்சியில் பங்கு?” மனம் திறந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை..!
”திமுக அரசை கண்டித்து அக்டோபர் 9ல் உண்ணாவிரதம்” போராட்டத்தை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி..!
“திமுக அரசுக்கு எதிர்ப்பு - அக்டோபர் 9ல் உண்ணாவிரதம்” அறிவித்தார் EPS..!
திருடுபோன வாகனத்தை மீட்ட காவல்துறை: அதிர்ச்சி அடைந்த உரிமையாளர் - சினிமாவை மிஞ்சிய சம்பவம்
திருடுபோன வாகனத்தை மீட்ட காவல்துறை: அதிர்ச்சி அடைந்த உரிமையாளர் - சினிமாவை மிஞ்சிய சம்பவம்
முதல்வர் வருகை.. 2 வருட போராட்டம்.. அனுமதியை மீறி பேரணி.. பரபரப்பில் காஞ்சிபுரம்
முதல்வர் வருகை.. 2 வருட போராட்டம்.. அனுமதியை மீறி பேரணி.. பரபரப்பில் காஞ்சிபுரம்
108 வயதில் காலமானார் பாப்பம்மாள் பாட்டி - முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்!
108 வயதில் காலமானார் பாப்பம்மாள் பாட்டி - முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்!
Embed widget