மேலும் அறிய

Edappadi Palaniswamy: ”தமிழகத்தில் யாருக்குமே பாதுகாப்பு இல்லை” - திமுக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்

Edappadi Palaniswamy: தமிழ்நாட்டில் சட்ட - ஒழுங்கு சீர்கேடுகளை தடுக்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கேடுகள் தொடர்கதையாகி வருவதாகவும்,  தனக்குத் தானே கண்டனம் தெரிவித்து தப்பிக்க நினைக்கும் முதலமைச்சர் ஸ்டாலினை கடுமையாக கண்டிப்பதாகவும், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

எடப்பாடி பழனிசாமி கண்டன அறிக்கை:

எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,திமுக அரசு பொறுப்பேற்ற நாள் முதலே தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு குழிதோண்டிப் புதைக்கப்பட்டுவிட்டது. தமிழகத்தில் தொடரும் சட்டம்-ஒழுங்கு சீர்கேடுகள் குறித்தும், பெருகி வரும் போதைப் பொருள் புழக்கம் குறித்தும்  தொடர்ச்சியாகத் தெரிவித்து, உரிய நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி வந்தும், இதுவரை காவல் துறை எந்தவித ஆக்கப்பூர்வமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. "தினசரி நாளிதழ்களைப் படியுங்கள்" என்று ஊருக்கெல்லாம் உபதேசம் செய்யும் இந்த  முதலமைச்சர், தங்கள் கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி தவிர்த்து எந்த நாளிதழையும் படிப்பதாகத் தெரியவில்லை. படித்திருந்தால், தனது அலங்கோல விடியா ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சவக் குழியில் இருப்பதை நிச்சயம் உணர்ந்திருப்பார். மேலும், இந்த வாரம் நிகழ்ந்த சட்டம்-ஒழுங்கு சீர்கேடுகளில் முக்கியமானவை என, திருப்பூர் மாவட்டம், பல்லடம் NEWS 7 தமிழ் செய்தியாளர் தாக்கப்பட்டது உள்ளிட்ட நிகழ்வுகளை பட்டியலிட்டுள்ளார்.

 

 

”போதைப் பொருட்களே காரணம்”

இதுமட்டுமன்றி, பிற மாநிலங்களைச் சேர்ந்த கொள்ளையர்களின் ஊடுருவலும் குற்றச் செயல்களும் தமிழகத்தில் அதிகரித்துள்ளதாக செய்திகள் வருகின்றன. குழந்தைகள், பெண்கள், முதியோர், பொதுமக்கள், பத்திரிகையாளர்கள், அரசு ஊழியர்கள் என யாருக்குமே பாதுகாப்பு இல்லாத சூழலே நிலவி வருகிறது. இதுபோன்ற குற்றச் செயல்கள் அதிகரிக்க, கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள் புழக்கமும் ஒரு முக்கிய காரணமாக அமைகிறது. போதைப் பொருள் புழக்கத்தைத் தடுப்பதற்கு "ஆபரேஷன் கஞ்சா" ஆரம்பித்ததாகச் சொன்ன தமிழகக் காவல் துறை DGP, 2.ஒ, 3.ஒ, 4.ஓ என "ஓ" மட்டுமே போட்டாரே தவிர, போதைப் பொருள் புழக்கம் குறைந்ததாகத் தெரியவில்லை.

”தூங்கும் காவல்துறை”

திமுக ஆட்சியில், சமூக விரோதிகள் எந்தவித அச்சமோ, தயக்கமோ, சட்ட நடவடிக்கை மீதான பயமோ இன்றி குற்றச் செயல்களில் ஈடுபட,  முதலமைச்சர் ஸ்டாலின் போலவே கும்பகர்ண தூக்கத்தில் இருப்பது வருத்தத்திற்கும், கடும் கண்டனத்திற்கும் உரியது. பத்திரிகையாளர் தாக்கப்பட்டதை ஒரு "சிறப்பு நிகழ்வாக" கருதி நிதி அளிப்பதாக, வினோதமான ஒரு அறிக்கையை வெளியீட்டிருக்கிறார் ஸ்டாலின். அதோடு, தன்னுடைய கட்டுப்பாட்டில் இருக்கும் காவல் துறையின் அலட்சியப் போக்கையும், தன்னுடைய நிர்வாகத் திறமையின்மையையும் ஒப்புக்கொள்ள மனமில்லாமல் தப்பித்துக்கொள்ள தனக்குத்தானே கண்டனம் வேறு தெரிவித்துக்கொள்கிறார்.

எதில் நம்பர் 1:

கண்ணாடியைப் பார்த்துதான் தன்னைத்தானே நம்பர் 1 முதலமைச்சர் என்று சொல்லிக்கொள்கிறார் ஸ்டாலின். அவர் எதில் எல்லாம் நம்பர் 1 என்பதை மீண்டும் ஒருமுறை நினைவுபடுத்த விழைகிறேன்.

  •  கடன் வாங்குவதில் நம்பர் 1 முதலமைச்சர்;
  • சட்டம்-ஒழுங்கு சீர்கேட்டில் நம்பர் 1 முதலமைச்சர்;
  • தமிழகத்தின் மோசமான முதலமைச்சர்கள் பட்டியலில் முதன்மையான முதலமைச்சர்.

இதுமட்டுமல்லாமல், எதிர்வரும் தேர்தல்களில் அதிகமாக தோல்வியுற்ற தொகுதிகள் பட்டியலிலும் நம்பர் 1 இடத்தைதான் பிடிக்கப்போகிறார்.

காவல்துறைக்கு வலியுறுத்தல்:

இனியும் இந்த முதலமைச்சரை நம்பி “எந்தப் பயனும் இல்லை" என்று தெளிவாகத் தெரிந்துவிட்டது. அதனால், தமிழகக் காவல் துறை அதிகாரிகள்,  சட்டம்-ஒழுங்கு சீர்கெடும் வண்ணம் குற்றச் செயல்களில் ஈடுபடுவோரை தாமதமின்றி உடனடியாகக் கைது செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகள மேற்கொள்ள” எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

வேட்பாளர்களை அறிவிக்கும் விஜய் ?சர்ப்ரைஸ் கொடுக்க போகும் மதுரை தவெக மாநாடு!
வேட்பாளர்களை அறிவிக்கும் விஜய் ?சர்ப்ரைஸ் கொடுக்க போகும் மதுரை தவெக மாநாடு!
வேல்முருகன் பரபரப்பு குற்றச்சாட்டு! தமிழீழம், வட இந்தியர் வருகை, 2026 தேர்தல்: அதிர்வலைகளை கிளப்பிய பேச்சு!
வேல்முருகன் பரபரப்பு குற்றச்சாட்டு! தமிழீழம், வட இந்தியர் வருகை, 2026 தேர்தல்: அதிர்வலைகளை கிளப்பிய பேச்சு!
TVK Madurai Manadu: தடங்கலுக்கு மேல் தடங்கல்.. கீழே விழுந்த 100 அடி உயர கொடிக்கம்பம்.. தாக்கத்தை ஏற்படுத்துமா தவெக மாநாடு?
TVK Madurai Manadu: தடங்கலுக்கு மேல் தடங்கல்.. கீழே விழுந்த 100 அடி உயர கொடிக்கம்பம்.. தாக்கத்தை ஏற்படுத்துமா தவெக மாநாடு?
ஸ்டண்ட் கலைஞர்களுக்கு சூர்யா உதவி செய்யவில்லை.. வெளியான அதிர்ச்சி தகவல்.. மோகன் ஜி பகிர்ந்த வீடியோ
ஸ்டண்ட் கலைஞர்களுக்கு சூர்யா உதவி செய்யவில்லை.. வெளியான அதிர்ச்சி தகவல்.. மோகன் ஜி பகிர்ந்த வீடியோ
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

CM-ஐ கன்னத்தில் அறைந்த நபர் முடியை இழுத்து தாக்குதல் டெல்லியில் நடந்தது என்ன? | Rekha Gupta Attacked
“கால உடைச்சிட்டாங்க அம்மா”காரின் முன்பு விழுந்த விவசாயி ஆக்‌ஷன் எடுத்த ஆட்சியர் | Pudukkottai Farmer Issue
சிக்கி தவிக்கும் தேர்தல் ஆணையம் வெச்சு செய்யும் எதிர்க்கட்சிகள் பாயிண்ட்ஸ் எப்ப வரும் SIR? | Congress | Rahul Gandhi vs ECI
ED raid Dmk ministers : ED வலையில் 3 அமைச்சர்கள்?நெருங்கும் சட்டமன்ற தேர்தல்நெருக்கடி கொடுக்கும் பாஜக
”கொங்கு-னா நாங்கதான்” CPR-ஐ வைத்து மோடி ஸ்கெட்ச்! செந்தில் பாலாஜிக்கு செக்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
வேட்பாளர்களை அறிவிக்கும் விஜய் ?சர்ப்ரைஸ் கொடுக்க போகும் மதுரை தவெக மாநாடு!
வேட்பாளர்களை அறிவிக்கும் விஜய் ?சர்ப்ரைஸ் கொடுக்க போகும் மதுரை தவெக மாநாடு!
வேல்முருகன் பரபரப்பு குற்றச்சாட்டு! தமிழீழம், வட இந்தியர் வருகை, 2026 தேர்தல்: அதிர்வலைகளை கிளப்பிய பேச்சு!
வேல்முருகன் பரபரப்பு குற்றச்சாட்டு! தமிழீழம், வட இந்தியர் வருகை, 2026 தேர்தல்: அதிர்வலைகளை கிளப்பிய பேச்சு!
TVK Madurai Manadu: தடங்கலுக்கு மேல் தடங்கல்.. கீழே விழுந்த 100 அடி உயர கொடிக்கம்பம்.. தாக்கத்தை ஏற்படுத்துமா தவெக மாநாடு?
TVK Madurai Manadu: தடங்கலுக்கு மேல் தடங்கல்.. கீழே விழுந்த 100 அடி உயர கொடிக்கம்பம்.. தாக்கத்தை ஏற்படுத்துமா தவெக மாநாடு?
ஸ்டண்ட் கலைஞர்களுக்கு சூர்யா உதவி செய்யவில்லை.. வெளியான அதிர்ச்சி தகவல்.. மோகன் ஜி பகிர்ந்த வீடியோ
ஸ்டண்ட் கலைஞர்களுக்கு சூர்யா உதவி செய்யவில்லை.. வெளியான அதிர்ச்சி தகவல்.. மோகன் ஜி பகிர்ந்த வீடியோ
ராமலிங்கம் படுகொலை: NIA அதிரடி சோதனை! திண்டுக்கல்லில் SDPI பிரமுகர் வீட்டில் செல்போன், அடையாள அட்டை பறிமுதல்!
ராமலிங்கம் படுகொலை: NIA அதிரடி சோதனை! திண்டுக்கல்லில் SDPI பிரமுகர் வீட்டில் செல்போன், அடையாள அட்டை பறிமுதல்!
ஒரு முறை சார்ஜ் செய்தால் 579 கி.மீட்டர்.. OLA களமிறக்கும் Roadster Pro இ பைக் - விற்பனை எப்போ?
ஒரு முறை சார்ஜ் செய்தால் 579 கி.மீட்டர்.. OLA களமிறக்கும் Roadster Pro இ பைக் - விற்பனை எப்போ?
Kim Jong Un's Order: சொன்னா கேக்க மாட்ட.? தென் கொரியாவை மிரட்ட வட கொரிய அதிபர் போட்ட அதிரடி உத்தரவு
சொன்னா கேக்க மாட்ட.? தென் கொரியாவை மிரட்ட வட கொரிய அதிபர் போட்ட அதிரடி உத்தரவு
இன்னும் 10 நாள்தான் இருக்கு.. i20 முதல் Venue வரை.. ரூ.85 ஆயிரம் வரை தள்ளுபடி -அத்தனையும் பட்ஜெட் கார்
இன்னும் 10 நாள்தான் இருக்கு.. i20 முதல் Venue வரை.. ரூ.85 ஆயிரம் வரை தள்ளுபடி -அத்தனையும் பட்ஜெட் கார்
Embed widget