மேலும் அறிய

பள்ளியில் வந்த பிரசவ வலி! பெண் குழந்தையை பெற்ற 11ம் வகுப்பு மாணவி - நாமக்கல்லில் ஷாக்!

ஈரோடு மாவட்டத்தில் பள்ளிக்குச் சென்ற 11ம் வகுப்பு மாணவி திடீரென பிரசவ வலி ஏற்பட்டு, பெண் குழந்தையை பெற்றெடுத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ளது பள்ளிப்பாளையம். அந்த பகுதியில்  உள்ள கிராமத்தில் பெற்றோருடன் வசித்து வருபவர் 16 வயது மாணவி. இந்த மாணவி அங்குள்ள அரசுபள்ளியில் 11ம் வகுப்பு படித்து வருகிறார்.

பள்ளியில் 11ம் வகுப்பு மாணவிக்கு பிரசவ வலி:

இந்த நிலையில், மாணவி தினசரி பள்ளிக்குச்சென்று வந்த நிலையில், நேற்றும் வழக்கம்போல பள்ளிக்குச் சென்றார். உணவு இடைவேளையின்போது மாணவி சக மாணவிகளுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது, திடீரென மாணவிக்கு வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. மாணவி வலியில் துடிப்பதை பார்த்த சக மாணவிகள் ஆசிரியர்களிடம் கூறியுள்ளனர்.

அவர்கள் மாணவி வலியில் துடிப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர். அவர்கள் உடனடியாக மாணவியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். பின்னர், மாணவியின் பெற்றோர்களுக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். மருத்துவமனையில் மாணவியை பரிசோதித்த மருத்துவர்கள் மாணவி கர்ப்பமாக இருப்பதாக கூறினர்.

பிறந்தது பெண் குழந்தை:

இதைக்கேட்ட ஆசிரியர்களும், மாணவியின் பெற்றோர்களும் அதிர்ச்சியில் உறைந்தனர். அதேசமயம், மாணவிக்கு வலி அதிகரித்துள்ளது. மாணவிக்கு ஏற்பட்டது பிரசவ வலி என்பதை பெற்றோர்களிடமும், ஆசிரியர்களிடமும் மருத்துவர்கள் கூறிய நிலையில், மாணவியை பிரசவ வார்டில் அனுமதித்தனர். பிரசவ வலியில் துடித்த 11ம் வகுப்பு மாணவிக்கு பெண் குழந்தை பிறந்தது.

மேலும், இந்த விவகாரம் தொடர்பாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் மாணவியும், அவருடைய 28 வயதான இளைஞர் ஒருவரும் நெருக்கமாக பழகிவந்தது தெரியவந்துள்ளது. இதன் காரணமாக மாணவி கர்ப்பமாகியதும் தெரியவந்தது.

உறவினர் கைது:

மாணவி 18 வயதுக்கு கீழே உட்பட்டவர் என்பதால் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர், மாணவியின் கர்ப்பத்திற்கு காரணமான இளைஞரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இந்த விவகாரம் தொடர்பாக நாமக்கல் குழந்தைகள் காப்பக அலுவலர்களும் விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவி நிறைமாத கர்ப்பணியாக இருந்தது தெரியாமல் பெற்றோர்களும், பள்ளி நிர்வாகமும் இருந்தது தொடர்பாகவும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பள்ளிக்குச் சென்ற மாணவி வயிறு வலியில் துடித்ததும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த மாணவி பெண் குழந்தையை பெற்றெடுத்ததும் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 11ம் வகுப்பு மாணவிக்கு தற்போது மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக அரசு அதிகாரிகளும், காவல்துறையினரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.  

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

US Tariff: எதையுமே விட்டு வைக்காத ட்ரம்ப்.. அதிகபட்சமாக 63% வரி, இறாலுக்கு கூடவா? மொத்த லிஸ்ட்
US Tariff: எதையுமே விட்டு வைக்காத ட்ரம்ப்.. அதிகபட்சமாக 63% வரி, இறாலுக்கு கூடவா? மொத்த லிஸ்ட்
Nirmala Sitharaman: நிதியமைச்சர் எங்கே? அச்சத்தில் தொழில்துறையினர், சைலண்ட் மோடில்  நிர்மலா - ஆக்‌ஷன் வருமா?
Nirmala Sitharaman: நிதியமைச்சர் எங்கே? அச்சத்தில் தொழில்துறையினர், சைலண்ட் மோடில் நிர்மலா - ஆக்‌ஷன் வருமா?
India Replies Trump: ''ட்ரம்ப்பின் வரி விதிப்பு நியாயமற்றது''; தேச நலனை காக்கும் வகையில் நடவடிக்கை என இந்தியா பதில்
''ட்ரம்ப்பின் வரி விதிப்பு நியாயமற்றது''; தேச நலனை காக்கும் வகையில் நடவடிக்கை என இந்தியா பதில்
Ramadoss Vs Anbumani: அய்யா, உங்க மோதலுக்கு முடிவே இல்லையா.? அன்புமணி கூட்டும் பொதுக்குழுவிற்கு எதிராக ராமதாஸ் வழக்கு
அய்யா, உங்க மோதலுக்கு முடிவே இல்லையா.? அன்புமணி கூட்டும் பொதுக்குழுவிற்கு எதிராக ராமதாஸ் வழக்கு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kaliyammal In TVK | திமுக - அதிமுகவிற்கு NO.. தவெகவில்  காளியம்மாள்? தேதி குறித்த விஜய்!
சங்கீதா - கிரிஷ் விவாகரத்து? INSTAGRAM-ல் பெயர் மாற்றம்! கோலிவுட்டில் அடுத்த பூகம்பம்  | Sangeetha Kirsh Divorce
”ஏய் என்ன பேசிட்டு இருக்க”மேயருக்கு எதிராக போர்க்கொடி!அடித்துக் கொண்ட கவுன்சிலர்கள்
”ஷாருக்கானுக்கு தேசிய விருது ஒரு நியாயம் வேண்டாமா?”கொந்தளித்த நடிகை ஊர்வசி | Urvashi On  National Awards
காலியாகி கிடக்கும் கிராமம் ஒற்றை ஆளாய் நிற்கும் தாத்தா நாட்டாகுடியின் கண்ணீர் கதை | Sivagangai News

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
US Tariff: எதையுமே விட்டு வைக்காத ட்ரம்ப்.. அதிகபட்சமாக 63% வரி, இறாலுக்கு கூடவா? மொத்த லிஸ்ட்
US Tariff: எதையுமே விட்டு வைக்காத ட்ரம்ப்.. அதிகபட்சமாக 63% வரி, இறாலுக்கு கூடவா? மொத்த லிஸ்ட்
Nirmala Sitharaman: நிதியமைச்சர் எங்கே? அச்சத்தில் தொழில்துறையினர், சைலண்ட் மோடில்  நிர்மலா - ஆக்‌ஷன் வருமா?
Nirmala Sitharaman: நிதியமைச்சர் எங்கே? அச்சத்தில் தொழில்துறையினர், சைலண்ட் மோடில் நிர்மலா - ஆக்‌ஷன் வருமா?
India Replies Trump: ''ட்ரம்ப்பின் வரி விதிப்பு நியாயமற்றது''; தேச நலனை காக்கும் வகையில் நடவடிக்கை என இந்தியா பதில்
''ட்ரம்ப்பின் வரி விதிப்பு நியாயமற்றது''; தேச நலனை காக்கும் வகையில் நடவடிக்கை என இந்தியா பதில்
Ramadoss Vs Anbumani: அய்யா, உங்க மோதலுக்கு முடிவே இல்லையா.? அன்புமணி கூட்டும் பொதுக்குழுவிற்கு எதிராக ராமதாஸ் வழக்கு
அய்யா, உங்க மோதலுக்கு முடிவே இல்லையா.? அன்புமணி கூட்டும் பொதுக்குழுவிற்கு எதிராக ராமதாஸ் வழக்கு
இந்தியாவை போட்டுத் தாக்கிய ட்ரம்ப்; 50% வரி விதிப்பு - என்ன செய்யப் போகிறது மத்திய அரசு.?
இந்தியாவை போட்டுத் தாக்கிய ட்ரம்ப்; 50% வரி விதிப்பு - என்ன செய்யப் போகிறது மத்திய அரசு.?
PM Modi SCO Summit: ஆகஸ்ட் 31-ல் சீனா செல்லும் பிரதமர்; கல்வான் தாக்குதலுக்குப் பின் முக்கியத்துவம் வாய்ந்த முதல் பயணம்
ஆகஸ்ட் 31-ல் சீனா செல்லும் பிரதமர்; கல்வான் தாக்குதலுக்குப் பின் முக்கியத்துவம் வாய்ந்த முதல் பயணம்
புத்தக திருவிழாவில் சினிமா நடிகர்- நடிகைளுக்கு அழைப்பு! குவியும் எதிர்ப்புகள்- அரசு சொல்வது என்ன?
புத்தக திருவிழாவில் சினிமா நடிகர்- நடிகைளுக்கு அழைப்பு! குவியும் எதிர்ப்புகள்- அரசு சொல்வது என்ன?
திருப்பூரில் எஸ்.ஐ. படுகொலை: சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியா? எடப்பாடி, அண்ணாமலை கண்டனம்!
திருப்பூரில் எஸ்.ஐ. படுகொலை: சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியா? எடப்பாடி, அண்ணாமலை கண்டனம்!
Embed widget