மேலும் அறிய

M Karunanidhi: சனாதனம் என்றால் என்ன? அன்றே புட்டு புட்டு வைத்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி..!

சனாதன தர்மம் குறித்து உதயநிதி பேசியது வெறுப்பு பிரச்சாரம் என ஒரு தரப்பும், சாதிய ஏற்றத்தாழ்வுக்கு எதிராகத்தான் அவர் பேசியுள்ளார் என மற்றொரு தரப்பும் வாதிட்டு வருகிறது.

சனாதனம் என்ற ஒற்றை வார்த்தை நாடு முழுவதும் பெரும் பரபரப்பை கிளப்பி வருகிறது. சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி தெரிவித்த கருத்து, அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.

தேசிய அளவில் பேசுபொருளான சனாதனம்:

சென்னையில் நடைபெற்ற நிகழ்சி ஒன்றில் பேசிய அமைச்சர் உதயநிதி, “சனாதனம் சமத்துவத்திற்கும், சமூக நீதிக்கும் எதிராக உள்ளது. டெங்கு, மலேரியா, கொரோனாவை போன்று அதை முற்றிலும் ஒழிக்க வேண்டும்” என பேசியிருந்தார். 

ஆனால், உதயநிதியின் இந்த கருத்தை எக்ஸ் வலைதளத்தில் திரித்து பதிவிட்ட பாஜக தேசிய ஐடி பிரிவு பொறுப்பாளர் அமித் மாளவியா, "இனப்படுகொலை செய்ய உதயநிதி அழைப்பு விடுப்பதாக" கூறினார். இதை தொடர்ந்து, இந்த விவகாரம் பெரும் சர்ச்சையானது. இந்து மக்களுக்கு எதிராக அமைச்சர் உதயநிதி பேசுவதாக கருத்து பரவியது.

இதை தொடர்ந்து, பாஜகவை சேர்ந்த பல தலைவர்களும் உதயநிதிக்கு கடும் எதிர்ப்புகளை பதிவு செய்தனர். டெல்லி, பிகாரில் அமைச்சர் உதயநிதிக்கு எதிராக வழக்கும் தொடரப்பட்டுள்ளது. அயோத்தி சாமியார் என்பவர் அமைச்சர் உதயநிதிக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

சனாதனம் என்றால் என்ன?

சனாதன தர்மம் குறித்து உதயநிதி பேசியது வெறுப்பு பிரச்சாரம், இந்து மத உணர்வுகளை புண்படுத்தும் விதமாக உள்ளது என ஒரு தரப்பும், சாதிய ஏற்றத்தாழ்வுக்கு எதிராகத்தான் அவர் பேசியுள்ளார் என மற்றொரு தரப்பும் வாதிட்டு வருகிறது. இதனால், பொதுமக்கள் மத்தியில், உண்மையில் சனாதனம் என்றால் என்ன? அதற்கு இந்து மதத்திற்கு என்ன தொடர்பு? என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்த நிலையில், சனாதனம் குறித்து முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பேசிய வீடியோ ஒன்று, தற்போது வைரலாகி வருகிறது. அதில், சனாதனம், மனுதர்மம் குறித்து கருணாநிதி விரிவாக எடுத்துரைத்துள்ளார்.

அதில் கருணாநிதி பேசியதாவது, "சூத்திரன் சும்மா படிக்கக்கூடாது என்றால் கேட்போமா அதனால், படித்தால் பாவம் என்றார்கள். வெறும் பாவம் என்றால் பயப்படமாட்டோம் அல்லவா, அதனால் படித்தால் நரகத்திற்கு போவோம் என்றார்கள். அதையும் மிஞ்சி யாராவது படிக்க வந்தால், அவரை பிடித்து அவரின் நாக்கை இழுத்து வைத்து கொல்லிக்கட்டையால், பழுக்க காய்ச்சிய இரும்பால் சுட்டார்கள். 

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி சொன்னது என்ன?

இது செய்தியாக மாத்திரம் அல்ல. இன்றைக்குக்கூட நீங்க மனுதரம் சாஸ்திரத்தை எடுத்து படித்து பாருங்கள். அதில் என்ன எழுதி இருக்கிறது என்றால் சூத்திரன் ஒருவன் படித்தால், அவனது நாக்கை இழுத்து வைத்து பழுக்க காய்ச்சிய இரும்பால் சுட்டு பொசுக்க வேண்டும் என எழுதப்பட்டிருக்கும். 

அந்த மனுதரம் சாஸ்திரம் இன்றும் கொளுத்தப்படாமல் நூலகத்தில் இருக்கிறது என்பதை நீங்கள் மறந்துவிடக்கூடாது. அது கொளுத்தப்படவில்லையே தவிர, அதில் உள்ள கருத்துக்களை கொளுத்தியவர் பெரியார். அதில் உள்ள கருத்துக்களை காலில் போட்டு மிதித்தவர் அண்ணா. அதில் உள்ள கருத்துக்களை கடலில் தூக்கி எறிந்தவர் அம்பேத்கர். இவர்களை எல்லாம் நீங்கள் மறந்துவிடக்கூடாது" என குறிப்பிட்டுள்ளார்.

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Trichy: மத்திய மண்டலத்தில் நடப்பாண்டில் மட்டும் 1.45 லட்சம் சட்டவிரோத மது பறிமுதல்! பெரும் அதிர்ச்சி
Trichy: மத்திய மண்டலத்தில் நடப்பாண்டில் மட்டும் 1.45 லட்சம் சட்டவிரோத மது பறிமுதல்! பெரும் அதிர்ச்சி
Anushka: அனுஷ்காவுக்கு இப்படி ஒரு பாதிப்பா? ஷூட்டிங்கே நின்றுவிடுமாம் - என்னங்க சொல்றீங்க!
Anushka: அனுஷ்காவுக்கு இப்படி ஒரு பாதிப்பா? ஷூட்டிங்கே நின்றுவிடுமாம் - என்னங்க சொல்றீங்க!
பெருத்த சவால்! 3 அடி உயரம் உள்ள பெண்ணுக்கு பிறந்த குழந்தை - சாதித்த அரசு மருத்துவர்கள்
பெருத்த சவால்! 3 அடி உயரம் உள்ள பெண்ணுக்கு பிறந்த குழந்தை - சாதித்த அரசு மருத்துவர்கள்
பாஜகவில் சாதி லாபியா? தமிழிசை, அண்ணாமலை, எஸ்.வி.சேகர் மீது ஏன் நடவடிக்கை இல்லை?- திருச்சி சூர்யா கேள்வி
பாஜகவில் சாதி லாபியா? தமிழிசை, அண்ணாமலை, எஸ்.வி.சேகர் மீது ஏன் நடவடிக்கை இல்லை?- திருச்சி சூர்யா கேள்வி
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Mamata banerjee campaign for Priyanka | பிரியங்காவுக்காக வரும் மம்தா! I.N.D.I.A கூட்டணியின் ப்ளான்Salem leopard | இறந்து கிடக்கும் ஆடுகள்! சிறுத்தை பீதியில் மக்கள்! வனத்துறைக்கு கோரிக்கைChennai's Amirtha  : சென்னைஸ் அமிர்தாவின் 8வது பட்டமளிப்பு விழா 250 மாணவர்கள் தேர்ச்சி!Chandrababu naidu assembly :மந்திரங்கள் முழங்க ENTRY! விழுந்து வணங்கிய சந்திரபாபு! கட்டியணைத்த பவன்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trichy: மத்திய மண்டலத்தில் நடப்பாண்டில் மட்டும் 1.45 லட்சம் சட்டவிரோத மது பறிமுதல்! பெரும் அதிர்ச்சி
Trichy: மத்திய மண்டலத்தில் நடப்பாண்டில் மட்டும் 1.45 லட்சம் சட்டவிரோத மது பறிமுதல்! பெரும் அதிர்ச்சி
Anushka: அனுஷ்காவுக்கு இப்படி ஒரு பாதிப்பா? ஷூட்டிங்கே நின்றுவிடுமாம் - என்னங்க சொல்றீங்க!
Anushka: அனுஷ்காவுக்கு இப்படி ஒரு பாதிப்பா? ஷூட்டிங்கே நின்றுவிடுமாம் - என்னங்க சொல்றீங்க!
பெருத்த சவால்! 3 அடி உயரம் உள்ள பெண்ணுக்கு பிறந்த குழந்தை - சாதித்த அரசு மருத்துவர்கள்
பெருத்த சவால்! 3 அடி உயரம் உள்ள பெண்ணுக்கு பிறந்த குழந்தை - சாதித்த அரசு மருத்துவர்கள்
பாஜகவில் சாதி லாபியா? தமிழிசை, அண்ணாமலை, எஸ்.வி.சேகர் மீது ஏன் நடவடிக்கை இல்லை?- திருச்சி சூர்யா கேள்வி
பாஜகவில் சாதி லாபியா? தமிழிசை, அண்ணாமலை, எஸ்.வி.சேகர் மீது ஏன் நடவடிக்கை இல்லை?- திருச்சி சூர்யா கேள்வி
NEET UG row: விஸ்வரூபம் எடுக்கும் நீட் தேர்வு விவகாரம்: சிபிஐ வசம் விசாரணை ஒப்படைப்பு- வழக்குப் பதிவு
NEET UG row: விஸ்வரூபம் எடுக்கும் நீட் தேர்வு விவகாரம்: சிபிஐ வசம் விசாரணை ஒப்படைப்பு- வழக்குப் பதிவு
அப்பளம் போல நொறுங்கிய கார்! ஆந்திராவைச் சேர்ந்த 2 பக்தர்கள் மரணம் - பெரும் சோகம்
அப்பளம் போல நொறுங்கிய கார்! ஆந்திராவைச் சேர்ந்த 2 பக்தர்கள் மரணம் - பெரும் சோகம்
Cinema Headlines: இந்தியன் 2 ட்ரெய்லர்.. தி கோட் விஜய்யுடன் த்ரிஷா பகிர்ந்த செல்ஃபி.. சினிமா ரவுண்ட்-அப்!
Cinema Headlines: இந்தியன் 2 ட்ரெய்லர்.. தி கோட் விஜய்யுடன் த்ரிஷா பகிர்ந்த செல்ஃபி.. சினிமா ரவுண்ட்-அப்!
Breaking News LIVE: கள்ளச்சாராய மரண வழக்கில் சி.பி.ஐ. விசாரணை  தேவை - நிர்மலா சீதாராமன்
Breaking News LIVE: கள்ளச்சாராய மரண வழக்கில் சி.பி.ஐ. விசாரணை தேவை - நிர்மலா சீதாராமன்
Embed widget