மேலும் அறிய

கரூரில் விடிய விடிய கொட்டி தீர்த்த கனமழை... விவசாய நிலங்கள், வீடுகளுக்குள் புகுந்த மழை நீர்

கரூர் முழுவதும் பல்வேறு இடங்களில் விடிய விடிய கனமழை கொட்டி தீர்த்தது. வேலாயுதம்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாக விவசாய நிலங்கள் மற்றும் வீடுகளில் மழை நீர் புகுந்துள்ளது.

கரூர் அருகே வேலாயுதம்பாளையம் பகுதியில் விவசாய நிலங்கள் மற்றும் வீடுகளுக்குள் புகுந்த மழை நீரால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பாதிப்படைந்தனர். வாய்க்கால் சரியான முறையில் தூர்வாரப்படாததால் வீடுகள் மற்றும் விவசாய நிலங்களில் மழை நீர் புகுந்ததாக குற்றச்சாட்டு வைத்தனர்.

 


கரூரில் விடிய விடிய கொட்டி தீர்த்த கனமழை... விவசாய நிலங்கள், வீடுகளுக்குள் புகுந்த மழை நீர்

தென் தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்யும் என தமிழக வானிலை மையம் அறிவிப்பு வெளியிட்டிருந்த நிலையில், கரூர் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் விடிய விடிய கனமழை கொட்டி தீர்த்தது. குறிப்பாக வேலாயுதம்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாக விவசாய நிலங்கள் மற்றும் வீடுகளில் மழை நீர் புகுந்துள்ளது.

 


கரூரில் விடிய விடிய கொட்டி தீர்த்த கனமழை... விவசாய நிலங்கள், வீடுகளுக்குள் புகுந்த மழை நீர்

இப்பகுதியில் உள்ள கோரைப்புல் , வாழை, தென்னை உள்ளிட்ட விவசாய நிலங்களிலும், சரியான முறையில் பாப்புலர் முதலியார் வாய்க்காலை தூர்வாரபடாததால் வாய்க்கால் செல்லும் நீர்  வீடுகளுக்குள் வெள்ளம் போல் புகுந்துள்ளது. இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். மாவட்ட நிர்வாகம் உடனடியாக நேரில் ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், டி.என்.பி.எல் காகித  ஆலையிலிருந்து வெளியேறும்  கழிவு நீரை தடுக்க வேண்டும் என்றும், வாய்க்காலை சரியான முறையில் தூர்வார வேண்டும் என்றும் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 


கரூரில் விடிய விடிய கொட்டி தீர்த்த கனமழை... விவசாய நிலங்கள், வீடுகளுக்குள் புகுந்த மழை நீர்

இதுகுறித்து விவசாயி சுப்பிரமணியன் கூறுகையில், பாப்புலர் முதலியார் வாய்க்கால் முறையாக தூர்வார படவில்லை என்று மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. வாய்க்கால் சரியாக தூர்வாரப்படாத காரணத்தினால் தான் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்துள்ளது.  மழை காரணமாக பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் நடமாட்டம் இருந்தது. காகித ஆடையில் இருந்து மழைப்பொழிவின்போது அதிக அளவில் வெளியேறும் கழிவு நீரால் சுற்றுவட்டார பகுதியில் உள்ள விவசாய நிலங்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. பொதுப்பணி துறை அதிகாரிகள் அலட்சியத்தின் காரணமாக சரியான முறையில் வாய்க்கால் தூர்வரப்படாதால் வீடுகள் மற்றும் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளது” என குற்றச்சாட்டு வைத்துள்ளார்.

 

 

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IPL 2025 SRH vs LSG: ஐதரபாத்தை ஊதித்தள்ளிய பூரண்! அசால்டாக அடிச்சு ஜெயிச்ச லக்னோ! கம்மின்ஸ் வியூகம் காலி!
IPL 2025 SRH vs LSG: ஐதரபாத்தை ஊதித்தள்ளிய பூரண்! அசால்டாக அடிச்சு ஜெயிச்ச லக்னோ! கம்மின்ஸ் வியூகம் காலி!
இது பாஜகவுக்கு ஆரம்பம்தான்! கை கோர்த்த முதலமைச்சர்கள் ஸ்டாலின், ரேவந்த் ரெட்டி
இது பாஜகவுக்கு ஆரம்பம்தான்! கை கோர்த்த முதலமைச்சர்கள் ஸ்டாலின், ரேவந்த் ரெட்டி
TN Rain: இன்று இரவு இந்த 3 மாவட்டங்களில் மட்டும் மழை இருக்கும்- வானிலை மையம்
TN Rain: இன்று இரவு இந்த 3 மாவட்டங்களில் மட்டும் மழை இருக்கும்- வானிலை மையம்
DMK Vs ADMK: மேயருக்கு ரூ.40 லட்சத்தில் அறை...
மேயருக்கு ரூ.40 லட்சத்தில் அறை... "குடிப்பதற்கு தண்ணீர் இல்லை... மேயருக்கு குழு குழு ரூம் தேவையா?" -அதிமுக ஆவேசம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Women Issue | ”பொம்பள பொறுக்கி நாயே..!HONEYMOON போறியா டா” சண்டை போட்ட முதல் மனைவி AIRPORT-ல் கத்தி கதறிய பெண்Coimbatore | ”பொம்பள பொறுக்கி நாயே..!HONEYMOON போறியா டா” சண்டை போட்ட முதல் மனைவி AIRPORT-ல் கத்தி கதறிய பெண்Vijay vs Udhayanidhi : ஜனநாயகன் vs பராசக்தி விஜய்யுடன் மோதும் உதயநிதி! அரசியல் ஆயுதமான சினிமாEPS meets Amit shah | ஆட்சியில் பங்கு கேட்ட பாஜக கறார் காட்டிய இபிஎஸ் அ.மலைக்கு துணை முதல்வர்? ADMK

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IPL 2025 SRH vs LSG: ஐதரபாத்தை ஊதித்தள்ளிய பூரண்! அசால்டாக அடிச்சு ஜெயிச்ச லக்னோ! கம்மின்ஸ் வியூகம் காலி!
IPL 2025 SRH vs LSG: ஐதரபாத்தை ஊதித்தள்ளிய பூரண்! அசால்டாக அடிச்சு ஜெயிச்ச லக்னோ! கம்மின்ஸ் வியூகம் காலி!
இது பாஜகவுக்கு ஆரம்பம்தான்! கை கோர்த்த முதலமைச்சர்கள் ஸ்டாலின், ரேவந்த் ரெட்டி
இது பாஜகவுக்கு ஆரம்பம்தான்! கை கோர்த்த முதலமைச்சர்கள் ஸ்டாலின், ரேவந்த் ரெட்டி
TN Rain: இன்று இரவு இந்த 3 மாவட்டங்களில் மட்டும் மழை இருக்கும்- வானிலை மையம்
TN Rain: இன்று இரவு இந்த 3 மாவட்டங்களில் மட்டும் மழை இருக்கும்- வானிலை மையம்
DMK Vs ADMK: மேயருக்கு ரூ.40 லட்சத்தில் அறை...
மேயருக்கு ரூ.40 லட்சத்தில் அறை... "குடிப்பதற்கு தண்ணீர் இல்லை... மேயருக்கு குழு குழு ரூம் தேவையா?" -அதிமுக ஆவேசம்
Shruthi Narayanan: சிவகார்த்திகேயனை துபாயில் சந்தித்த ஸ்ருதி நாராயணன்! எதற்காக? என்ன நடந்தது?
Shruthi Narayanan: சிவகார்த்திகேயனை துபாயில் சந்தித்த ஸ்ருதி நாராயணன்! எதற்காக? என்ன நடந்தது?
என்ன வேணும் உங்களுக்கு? காட்டமாக கேட்ட அப்பாவு! திகைத்துப் போன ஜி.கே.மணி!
என்ன வேணும் உங்களுக்கு? காட்டமாக கேட்ட அப்பாவு! திகைத்துப் போன ஜி.கே.மணி!
தாம்பரம் - ராமேஸ்வரம் இடையே புதிய ரயில்: மத்திய அமைச்சகம் அதிரடி அறிவிப்பு:  எப்போது?
தாம்பரம் - ராமேஸ்வரம் இடையே புதிய ரயில்: மத்திய அமைச்சகம் அதிரடி அறிவிப்பு: எப்போது?
TN TRB: இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள்; அசத்தல் அறிவிப்பை வெளியிட்ட டிஆர்பி!- என்ன தெரியுமா?
TN TRB: இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள்; அசத்தல் அறிவிப்பை வெளியிட்ட டிஆர்பி!- என்ன தெரியுமா?
Embed widget