நாளை முக்கியமான நாள்.. சட்டசபையில் சம்பவம் செய்ய காத்திருக்கும் ஸ்டாலின்.. என்னவா இருக்கும்?
கச்சத்தீவை திரும்பப் பெற அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு மேற்கொள்ள வலியுறுத்தி, தமிழ்நாடு சட்டப்பேரவையில் நாளை தீர்மானம் கொண்டு வருகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

கச்சத்தீவை மீட்பது குறித்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் நாளை தீர்மானம் கொண்டு வர இருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின். கச்சத்தீவை திரும்பப் பெற அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு மேற்கொள்ள வலியுறுத்தி, தமிழ்நாடு சட்டப்பேரவையில் நாளை தீர்மானம் கொண்டு வருகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இலங்கை கடற்படையால் தமிழ்நாடு மீனவர்களுக்கு ஏற்படும் இன்னல்களைப் போக்கிட இதுவே நிரந்தரத் தீர்வாக அமையும் என ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
கச்சத்தீவு சர்ச்சை:
கச்சத்தீவு தொடர்பாக இந்தியா மற்றும் இலங்கை இடையே நீண்டகால சர்ச்சை உள்ளது. 1974 ஆம் ஆண்டு, இந்திய அரசு இலங்கையுடன் ஒரு ஒப்பந்தம் செய்து, இந்த தீவை இலங்கைக்கு விட்டுக்கொடுத்தது. இந்த முடிவு இந்திய மீனவர்கள், குறிப்பாக தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள், தங்கள் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளை இழந்ததாகக் கருதுவதால் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதையும் படிக்க: Nithyananda: பிரபல சாமியார் நித்தியானந்தா மரணம்? இதுதான் காரணமா? சகோதரி மகன் வெளியிட்ட வீடியோவால் அதிர்ச்சி!
இந்த ஒப்பந்தத்தின் படி, இந்திய மீனவர்கள் தீவுக்கு செல்ல பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. தற்போது கச்சத்தீவு இலங்கையின் கட்டுப்பாட்டில் உள்ளது. கச்சத்தீவை இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரஸ் அரசு இலங்கைக்கு தாரை வார்த்துவிட்டதாகவும் இதற்கு கருணாநிதி தலைமையிலான தி.மு.க. அரசு துணை போனதாகவும் பாஜக குற்றம்சாட்டி வருகிறது.
சட்டப்பேரவையில் நாளை முக்கிய தீர்மானம்:
கடந்தாண்டு மக்களவை தேர்தலின்போது கூட, இந்த விவகாரம் பேசுபொருளானது. கச்சத்தீவை ஒப்பந்தத்தின் காரணமாகவே வாட்ஜ் பேங்க் பகுதி இந்தியாவுக்கு தரப்பட்டதாகவும் இலங்கையில் பாதிப்புக்குள்ளான 6 லட்சம் தமிழர்கள் இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டதாகவும் காங்கிரஸ் சார்பில் அப்போது விளக்கம் அளிக்கப்பட்டது.
இந்த நிலையில், கச்சத்தீவை திரும்பப் பெற அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு மேற்கொள்ள வலியுறுத்தி, தமிழ்நாடு சட்டப்பேரவையில் நாளை தீர்மானம் கொண்டு வருகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
இதையும் படிக்க: Japan Earthquake: உலுக்கப்போகும் நிலநடுக்கம்! 3 லட்சம் மக்கள் உயிருக்கு ஆபத்து: ஜப்பான் அரசு வெளியிட்ட பகீர் அறிவிப்பு!


தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

