மேலும் அறிய

பாம்பு கடித்து பாம்பு பிடி வீரர் உயிரிழப்பு - கடலூர் அருகே சோகம்

பாம்பு பிடிக்கும் தன்னார்வலர் பாம்பு கடித்து உயிர் இழந்த பரிதாபம்; கடலூர் அருகே சோக சம்பவம்.

தீயணைப்புத் துறையினரால் மீட்கப்பட்ட பாம்பை டப்பாவுக்குள் அடைக்க முற்பட்டபோது பாம்பு கடித்து தன்னார்வலர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
 
கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் புதுத்தெருவை சேர்ந்தவர் உமர் அலி (36). இவரது மனைவி பர்ஹத் நிஷா. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். தன்னார்வலரான உமர் அலி கடலூர் மாவட்டத்தில் நெல்லிக்குப்பம், பண்ருட்டி பகுதியில் கடந்த 1½ ஆண்டுகளாக வனத்துறை மற்றும் தீயணைப்பு துறை வீரர்களுடன் இணைந்து  பாம்பு பிடிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தார்.
 
இந்த நிலையில் நேற்று இரவு பண்ருட்டி முத்தையா நகரில், கனகராஜ் என்பவரின் வீட்டில் பாம்பு புகுந்ததாக வந்த தகவலை தொடர்ந்து உமர் அலி அங்கு சென்றார். ஆனால் அவர் செல்வதற்கு முன்னதாகவே தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் கொடுத்ததால் பண்ருட்டி தீயணைப்புத் துறையினர் அந்த பாம்பினை அந்த வீட்டில் பிடித்து விட்டனர். பாம்பினை பிடித்து விட்டு அவர்கள் வெளியில் வரும் நேரம் உமர் அலி அங்கு சென்றார். பாம்பை கொடுங்கள் நான் காப்பு காட்டில் விட்டுவிடுகிறேன் என உமர் அலி கூறியதால் தீயணைப்புத் துறையினர் அந்த பாம்பினை அவரிடம் கொடுத்தார்கள். 

பாம்பு கடித்து பாம்பு பிடி வீரர் உயிரிழப்பு - கடலூர் அருகே சோகம்
 
தீயணைப்புத் துறையினரால் பிடிக்கப்பட்ட பாம்பை தன்னுடைய டப்பாவிற்கு உமர் அலி மாற்ற முயன்றபோது அந்த பாம்பு திடீரென அவரை கடித்தது. விஷம் உள்ள நல்லப்பாம்பு என்பதால் அதிர்ச்சி அடைந்த தீயணைப்பு நிலைய வீரர்கள், உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல்சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் மருத்துவமனைக்கு வரும் வழியிலேயே உமர்அலி பரிதாபமாக உயிரிழந்தார்.
 
இதுதொடர்பாக பண்ருட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பாம்பு பிடி வீரர், பாம்பு கடித்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இதே போல் கடலூரில் பாம்பு பிடி வீரராக செயல்பட்டு வந்த பூனம் சந்த் என்பவர் பாம்பு கடித்து உயிரிழந்த நிலையில் தற்போது மேலும் ஒரு தன்னார்வலர் பாம்பு கடித்து உயிரிழந்த சம்பவம் கடலூர் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
போதிய பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் கடலூர் மாவட்டத்தில் இனி வரும் காலங்களில் தன்னார்வலர்கள் பாம்பு மற்றும் கொடிய விஷம் உள்ளவைகளை பிடிக்க கூடாது தீயணைப்புத்துறை வனத்துறை அலுவலர்கள் மட்டும் தான் பிடிக்க வேண்டும் என்பது பொது மக்களிடையே கோரிக்கையாக உள்ளது.
 
மேலும் இதுதொடர்பாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் சார்பில் தன்னார்வலர் உமர் அலியின் உயிரிழப்புக்கு தமிழக அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், அவரின் மனைவிக்கு அரசு வேலை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
7400
Active
11967
Recovered
87
Deaths
Last Updated: Sat 14 June, 2025 at 04:00 pm | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

Ahmedabad Plane Crash: ‘MAYDAY‘ அழைப்பு விடுத்த ஏர் இந்தியா விமானம்; உடனே அழைத்த கட்டுப்பாட்டு அறை - ஆனால்...
‘MAYDAY‘ அழைப்பு விடுத்த ஏர் இந்தியா விமானம்; உடனே அழைத்த கட்டுப்பாட்டு அறை - ஆனால்...
Ahmedabad Plane Crash: ‘’இந்த ஆண்டு மிகப்பெரிய விமான விபத்து நடக்கும்’’ முன்பே கணித்த ஜோதிடர்- வைரலாகும் பதிவு!
Ahmedabad Plane Crash: ‘’இந்த ஆண்டு மிகப்பெரிய விமான விபத்து நடக்கும்’’ முன்பே கணித்த ஜோதிடர்- வைரலாகும் பதிவு!
Ahmedabad Plane Crash: கண் முன்னே நொறுங்கிய குஜராத் விமானம்; மகளைப் பார்க்கச்சென்ற முன்னாள் முதல்வர் நிலை என்ன?
Ahmedabad Plane Crash: கண் முன்னே நொறுங்கிய குஜராத் விமானம்; மகளைப் பார்க்கச்சென்ற முன்னாள் முதல்வர் நிலை என்ன?
Ahmedabad Plane Crash Video: கரும்புகையால் சூழப்பட்ட விமான நிலையம்.. அகமதாபாத்தின் பரபரப்பு காட்சிகள்
கரும்புகையால் சூழப்பட்ட விமான நிலையம்.. அகமதாபாத்தின் பரபரப்பு காட்சிகள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

பூட்டியிருந்த வீட்டில் தீ விபத்து சிலிண்டர் வெடித்ததால் பரபரப்பு பகீர் கிளப்பும் காட்சி Coimbatore Cylinder Blastசாப்பிட்டபடி பஸ் ஒட்டிய DRIVER பீதியில் உறைந்த பயணிகள்! ஆம்னி நிறுவனம் அதிரடி! | Careless Drivingகைதாகும் வேல்முருகன்?பாய்ந்தது POCSO வழக்கு சம்பவம் செய்த விஜய்! | Velmurugan TVK Vijay Controversy

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Ahmedabad Plane Crash: ‘MAYDAY‘ அழைப்பு விடுத்த ஏர் இந்தியா விமானம்; உடனே அழைத்த கட்டுப்பாட்டு அறை - ஆனால்...
‘MAYDAY‘ அழைப்பு விடுத்த ஏர் இந்தியா விமானம்; உடனே அழைத்த கட்டுப்பாட்டு அறை - ஆனால்...
Ahmedabad Plane Crash: ‘’இந்த ஆண்டு மிகப்பெரிய விமான விபத்து நடக்கும்’’ முன்பே கணித்த ஜோதிடர்- வைரலாகும் பதிவு!
Ahmedabad Plane Crash: ‘’இந்த ஆண்டு மிகப்பெரிய விமான விபத்து நடக்கும்’’ முன்பே கணித்த ஜோதிடர்- வைரலாகும் பதிவு!
Ahmedabad Plane Crash: கண் முன்னே நொறுங்கிய குஜராத் விமானம்; மகளைப் பார்க்கச்சென்ற முன்னாள் முதல்வர் நிலை என்ன?
Ahmedabad Plane Crash: கண் முன்னே நொறுங்கிய குஜராத் விமானம்; மகளைப் பார்க்கச்சென்ற முன்னாள் முதல்வர் நிலை என்ன?
Ahmedabad Plane Crash Video: கரும்புகையால் சூழப்பட்ட விமான நிலையம்.. அகமதாபாத்தின் பரபரப்பு காட்சிகள்
கரும்புகையால் சூழப்பட்ட விமான நிலையம்.. அகமதாபாத்தின் பரபரப்பு காட்சிகள்
Ahmedabad Plane Crash: குஜராத்தில் பயங்கரம்... விபத்தில் சிக்கிய ஏர் இந்தியா விமானம்.. 242 பயணிகளின் நிலை என்ன?
Ahmedabad Plane Crash: குஜராத்தில் பயங்கரம்... விபத்தில் சிக்கிய ஏர் இந்தியா விமானம்.. 242 பயணிகளின் நிலை என்ன?
NEET UG 2025: திட்டமிட்டபடி வெளியாகுமா நீட் தேர்வு முடிவுகள்? எப்போது? காண்பது எப்படி?
NEET UG 2025: திட்டமிட்டபடி வெளியாகுமா நீட் தேர்வு முடிவுகள்? எப்போது? காண்பது எப்படி?
என்னது… 90 டிகிரியில் பாலமா? இனி டிராபிக்கே இருக்காது- 3 லட்சம் பேர் பயன்! எங்கே?
என்னது… 90 டிகிரியில் பாலமா? இனி டிராபிக்கே இருக்காது- 3 லட்சம் பேர் பயன்! எங்கே?
ஓசி பஸ் சர்ச்சை.. வாய்விட்டு மாட்டிய எம்.எல்.ஏ.. திமுகவை வெளுத்து வாங்கிய நயினார் நகேந்திரன்..
ஓசி பஸ் சர்ச்சை.. வாய்விட்டு மாட்டிய எம்.எல்.ஏ.. திமுகவை வெளுத்து வாங்கிய நயினார் நகேந்திரன்..
Embed widget