மேலும் அறிய

Chennai FM Rainbow : சென்னை ஏ அலைவரிசை, ரெயின்போ பண்பலை இணைப்பு...ஊழியர்கள் வேலையை இழக்க நேரிடும் - ராமதாஸ் அறிக்கை

சென்னை வானொலி ஏ ரெயின்போ இணைப்பு தவறு என்றும் அதை திரும்பப்பெற வேண்டும் என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது...

”சென்னை வானொலி நிலையத்தின் முதன்மை அலைவரிசையான சென்னை ஏ மத்திய அலைவரிசை, பண்பலை வரிசையான ரெயின்போ ஆகியவற்றின் சேவைகள் இன்று காலை முதல் இணைக்கப் பட்டுள்ளன. அதாவது இரு அலைவரிசைகளின் நிகழ்ச்சிகள் முறையே 50% குறைக்கப்பட்டுள்ளன. இப்படி நடந்துவிடக்கூடாது என்பதற்காக கடந்த சில ஆண்டுகளாக குரல் கொடுத்து வந்த நிலையில், அதையும் மீறி சென்னை வானொலி  சேவைகளை பிரசார்பாரதி  இணைத்திருப்பது  அதிர்ச்சியளிக்கிறது.

சென்னை -ஏ என்றழைக்கப்படும் சென்னை வானொலியின் முதன்மை அலைவரிசை 720 கிலோ ஹெர்ட்ஸ்  மத்திய அலையில் ஒலிபரப்பாகி வருகிறது. விவசாயம், குடும்பநலம், இசை நிகழ்ச்சிகள், நாடகம், கிராமப்புற இசை, செய்திகள், திரை இசை, குழந்தைகள் மற்றும் பெண்களுக்கான நிகழ்ச்சிகள் என பலவகை நிகழ்ச்சிகள் இந்த அலைவரிசையில் ஒலிபரப்பப்பட்டு வருகின்றன.  அதேபோல், சென்னை ரெயின்போ வானொலி  101.4  மெகா ஹெர்ட்ஸ்  பண்பலையில் ஒலிபரப்பட்டு வருகிறது. இதில் சுவையான பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் ஒலிபரப்பட்டு வருகின்றன. இரு வானொலி சேவைகளும் இன்று காலை 5.48 மணி முதல் இணைக்கப்பட்டு ஆகாசவாணி ஒருங்கிணைந்த சேவை என்ற பெயரில் நிகழ்ச்சிகள் ஒலிபரப்படுகின்றன. இரவு 11.10 மணி வரை இந்த நிகழ்ச்சிகள் ஒலிபரப்பாகும்.

நிகழ்ச்சி தயாரிப்புச் செலவுகளைக் குறைக்கும் நோக்கில் நடவடிக்கை 

சென்னை வானொலி நிலையத்தின் நிகழ்ச்சி தயாரிப்புச் செலவுகளைக் குறைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் தான் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த இணைப்பு நடவடிக்கையின் தொடர்ச்சியாக சென்னை ஏ அலைவரிசையிலும், ரெயின்போ பண்பலையிலும் ஒரே நேரத்தில் ஒரே நிகழ்ச்சிகளைக் கேட்க முடியும். மேலோட்டமாக பார்க்கும் போது இது நல்லது தானே? என்று நினைக்கத் தோன்றும். ஆனால், உண்மை அதுவல்ல. இரு வானொலிகளின் சேவை இணைப்பு என்ற பெயரில்  இரு சேவைகளின் நிகழ்ச்சிகளும் சராசரியாக 50% ரத்து செய்யப்பட்டுள்ளன. அந்த நிகழ்ச்சிகளின் தயாரிப்புக்கு ஆகும் செலவை சேமிப்பதுதான் திட்டம் ஆகும். அடுத்த சில மாதங்களில்  சென்னை ஏ அலைவரிசையை மூடி, ஒலிபரப்பு செலவையும் குறைக்க பிரச்சார் பாரதி அமைப்பு திட்டமிட்டுள்ளது.

ஊழியர்கள் வேலையை இழக்க நேரிடும்

பிரச்சார் பாரதியின் இந்த முடிவு மூன்று தரப்பினரை கடுமையாக பாதிக்கும். பெரும்பான்மையான நிகழ்ச்சிகள், குறிப்பாக ரெயின்போ அலைவரிசையில் ஒலிபரப்பாகும் நேயர்களின் பங்களிப்புடன் கூடிய நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படும்போது நேயர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். இந்த நிகழ்ச்சிகளை தயாரிக்கும் பணியில் இருந்த நிகழ்ச்சித் தயாரிப்பாளர்கள், அறிவிப்பாளர்கள் உள்ளிட்டோர் தங்களின் வேலையை இழப்பார்கள். அடுத்தகட்டமாக சென்னை ஏ ஒலிபரப்பு நிறுத்தப்படும் போது, அதற்கான டிரான்ஸ்மிட்டர்கள் கைவிடப்பட்டு, அவற்றை பராமரித்து வந்த பொறியாளர்கள் பணிநீக்கப்படுவார்கள்.

வானொலியின் இரு சேவைகளை பிரச்சார்பாரதி இணைத்திருப்பது தவறு

சென்னை ஏ வானொலியை மூட கடந்த பல ஆண்டுகளாகவே பிரச்சார்பாரதி திட்டமிட்டு வந்தது. 2022-ஆம் ஆண்டு ஜனவரி 31-ஆம் நாளுடன் சென்னை ஏ மூடப்பட இருந்தது. பாமகவின் எதிர்ப்பால் அப்போது அந்த முடிவு கைவிடப்பட்டது. கொல்கத்தா வானொலியின் முதன்மை அலைவரிசை ஜூன் 30-ஆம் நாளுடன் மூடப்பட்டபோதும், சென்னை வானொலிக்கு அத்தகைய நிலை ஏற்பட்டுவிடக்கூடாது  என்று பாமக எச்சரித்தது. ஆனால், தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை சற்றும் புரிந்து கொள்ளாமல் சென்னை வானொலியின் இரு சேவைகளை பிரச்சார்பாரதி இணைத்திருப்பது பெரும் தவறு ஆகும்.

தமிழர்களுக்கு இழைக்கப்படும் துரோகம்

சென்னை -ஏ என்றழைக்கப்படும் சென்னை வானொலியின் முதன்மை அலைவரிசை  ஒலிபரப்பு நிறுத்தப்பட்டால், அது சென்னை வானொலி நிலைய நேயர்களுக்கு பேரிழப்பாக அமைந்து விடும். தனித்துவமான அதன் நிகழ்ச்சிகளைக் கேட்பதற்காக லட்சக்கணக்கான நேயர்கள் உள்ளனர். தமிழ்ப் பண்பாடு, கலைகள் ஆகியவற்றின் தூதராகவும் இந்த அலைவரிசை திகழ்கிறது.  இதுவரை 300 கி.மீ சுற்றளவில் கேட்கப்பட்டு வந்த இந்த நிகழ்ச்சிகளை ரெயின்போ பண்பலையில் ஒலிபரப்பும்போது, அதிகபட்சமாக 50 கி.மீ சுற்றளவில் உள்ளவர்கள் மட்டும்தான் கேட்க முடியும்.

இதனால் சென்னை வானொலியின் முதன்மை அலைவரிசை எந்த நோக்கத்திற்காக தொடங்கப்பட்டதோ, அந்த நோக்கமே சிதைந்து விடும். சென்னை வானொலியின் நூற்றாண்டு விழா வரும் ஜூலை 31-ஆம் நாள் தொடங்கவுள்ள நிலையில், பிரச்சார்பாரதியின் இந்த முடிவு தமிழர்களுக்கு இழைக்கப்படும் துரோகமாகும்.

இணைப்பை உடனடியாக திரும்பப்பெற வேண்டும்

வானொலிகள்தான் தொலைதூரத்திலும், பிற பொழுதுபோக்கு சேவைகள் சென்றடைய முடியாத இடத்திலும் வாழும் மக்களுக்கு ஒரே பொழுதுபோக்கு கருவி ஆகும். அதன் நிகழ்ச்சிகள் மக்களின் வாழ்விலும், உழவர்களின் தொழிலிலும் பின்னிப்பிணைந்தவை. செலவு குறைப்பு என்ற பெயரில்  அவற்றை அடித்தட்டு மக்களிடமிருந்து பறித்துவிடக்கூடாது. எனவே, சென்னை ஏ மத்திய அலைவரிசை, பண்பலை வரிசையான ரெயின்போ ஆகியவற்றின் சேவைகள் இணைப்பை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். இது தொடர்பாக மத்திய அரசுக்கு தமிழக அரசும் அழுத்தம் கொடுக்க வேண்டும்” இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

கட்சியில் பெயர் வாங்க கல்வி நிலையங்களை பயன்படுத்துவதா? ஆளுநரை புறக்கணித்த மாணவி- கொந்தளித்த அண்ணாமலை
கட்சியில் பெயர் வாங்க கல்வி நிலையங்களை பயன்படுத்துவதா? ஆளுநரை புறக்கணித்த மாணவி- கொந்தளித்த அண்ணாமலை
Chennai Traffic Changes: சுதந்திர தின கொண்டாட்டம்; சென்னைல முக்கிய சாலைகள்ல போக்குவரத்து மாற்றம் - முழு விவரம்
சுதந்திர தின கொண்டாட்டம்; சென்னைல முக்கிய சாலைகள்ல போக்குவரத்து மாற்றம் - முழு விவரம்
BJP Vs CONG.: குடியுரிமை இல்லாத சமயத்தில் சோனியாவுக்கு ஓட்டுரிமை வந்தது எப்படி.?; ஆதாரத்துடன் பாஜக கேள்வி
குடியுரிமை இல்லாத சமயத்தில் சோனியாவுக்கு ஓட்டுரிமை வந்தது எப்படி.?; ஆதாரத்துடன் பாஜக கேள்வி
’’தமிழ்நாட்டுக்கு எதிரானவர்’’ ஆளுநரிடம் பட்டம் பெற மறுத்த மாணவி: நெல்லையில் அதிர்ச்சி சம்பவம்!
’’தமிழ்நாட்டுக்கு எதிரானவர்’’ ஆளுநரிடம் பட்டம் பெற மறுத்த மாணவி: நெல்லையில் அதிர்ச்சி சம்பவம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Independence Day 2025: சுதந்திர தின விழா கொண்டாட்டம் ஜொலிக்கும் சென்னை 10,000 போலீசார் குவிப்பு
வகுப்பறைக்கு வந்த மாணவன் மயங்கி விழுந்து உயிரிழப்பு பதற வைக்கும் CCTV காட்சி | Student Died Classroom
முதல் மனைவியுடன் மாதம்பட்டி 2-வது மனைவியின் நிலைமை? | Joy Crizildaa | Madhampatti Rangaraj Marriage
Independence Day Rehearsal : 79-வது சுதந்திர தின விழா காவல்துறை அணிவகுப்பு ஒத்திகை தயாராகும்  கோட்டை
Nagpur Couple Viral Video : விபத்தில் இறந்த மனைவிஉதவிக்கு வராத மக்கள் பைக்கில் எடுத்து சென்ற கணவர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கட்சியில் பெயர் வாங்க கல்வி நிலையங்களை பயன்படுத்துவதா? ஆளுநரை புறக்கணித்த மாணவி- கொந்தளித்த அண்ணாமலை
கட்சியில் பெயர் வாங்க கல்வி நிலையங்களை பயன்படுத்துவதா? ஆளுநரை புறக்கணித்த மாணவி- கொந்தளித்த அண்ணாமலை
Chennai Traffic Changes: சுதந்திர தின கொண்டாட்டம்; சென்னைல முக்கிய சாலைகள்ல போக்குவரத்து மாற்றம் - முழு விவரம்
சுதந்திர தின கொண்டாட்டம்; சென்னைல முக்கிய சாலைகள்ல போக்குவரத்து மாற்றம் - முழு விவரம்
BJP Vs CONG.: குடியுரிமை இல்லாத சமயத்தில் சோனியாவுக்கு ஓட்டுரிமை வந்தது எப்படி.?; ஆதாரத்துடன் பாஜக கேள்வி
குடியுரிமை இல்லாத சமயத்தில் சோனியாவுக்கு ஓட்டுரிமை வந்தது எப்படி.?; ஆதாரத்துடன் பாஜக கேள்வி
’’தமிழ்நாட்டுக்கு எதிரானவர்’’ ஆளுநரிடம் பட்டம் பெற மறுத்த மாணவி: நெல்லையில் அதிர்ச்சி சம்பவம்!
’’தமிழ்நாட்டுக்கு எதிரானவர்’’ ஆளுநரிடம் பட்டம் பெற மறுத்த மாணவி: நெல்லையில் அதிர்ச்சி சம்பவம்!
Pakistan PM: ‘அந்நியன்‘ போல் பேசும் பாகிஸ்தான்; தண்ணீருக்காக கெஞ்சவும் செய்யுறாங்க, மிரட்டவும் செய்யுறாங்க
‘அந்நியன்‘ போல் பேசும் பாகிஸ்தான்; தண்ணீருக்காக கெஞ்சவும் செய்யுறாங்க, மிரட்டவும் செய்யுறாங்க
Chennai Power Cut: சென்னை மக்களே உஷார்.! ஆகஸ்ட் 14-ம் தேதி எங்கெங்க மின் தடை செய்யப் போறாங்கன்னு தெரிஞ்சுக்கோங்க
சென்னை மக்களே உஷார்.! ஆகஸ்ட் 14-ம் தேதி எங்கெங்க மின் தடை செய்யப் போறாங்கன்னு தெரிஞ்சுக்கோங்க
எட்றா வண்டிய அமெரிக்காவுக்கு.. அடுத்த மாதம் செல்லும் பிரதமர் மோடி..! இரக்கம் காட்டுவாரா ட்ரம்ப்?
எட்றா வண்டிய அமெரிக்காவுக்கு.. அடுத்த மாதம் செல்லும் பிரதமர் மோடி..! இரக்கம் காட்டுவாரா ட்ரம்ப்?
State Education Policy: சரமாரி எதிர்ப்புகள்; மாநில கல்விக்கொள்கை விமர்சனங்களுக்கு பாயிண்ட் போட்டு விளக்கமளித்த அரசு!
State Education Policy: சரமாரி எதிர்ப்புகள்; மாநில கல்விக்கொள்கை விமர்சனங்களுக்கு பாயிண்ட் போட்டு விளக்கமளித்த அரசு!
Embed widget