மேலும் அறிய

மரக்கன்று நடணும்.. அந்தந்த பகுதி மாணவர்கள் பராமரிக்கணும் - தென்காசியில் சூப்பர் சுதந்திர தினம்

தொடர்ந்து சமாதான புறாவும்,  மூவர்ண பலூன்களையும் மாவட்ட ஆட்சியர்  பறக்கவிட்டார்.

தென்காசியில் தனியார் பள்ளியில் 75-வது சுதந்திர தினத்தை போற்றும் விதமாக, 75 அடி நீளத்தில் இந்திய வரைபடத்தை வரைந்தும்,  அதை மரக்கன்றுகள் கொண்டு அலங்கரித்தும் பசுமை விழாவாக கொண்டாடினர்.

நமது இந்திய நாட்டின் 75-வது சுதந்திர தின விழா இன்று நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இன்று தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளிகள் என அனைத்து இடங்களிலும் மூவர்ணக் கொடி ஏற்றப்பட்டது. அதே போல் தென்காசியிலும் சுதந்திர தின விழா சிறப்பாக  கொண்டாடப்பட்டது.  தென்காசியில் ஈஸ்வரன் பிள்ளை அரசு ஆண்கள் பள்ளியில் தென்காசி மாவட்ட ஆட்சியர் கோபால சுந்தர் ராஜ் 9:05 மணிக்கு தேசிய கொடியை ஏற்றி வைத்தார். இந்நிகழ்வில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் கலந்து கொண்டார். மாவட்ட ஆட்சியர் காவல் துறையினர் நடத்திய அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். அதனைத் தொடர்ந்து சுதந்திரப் போராட்ட தியாகிகள் கௌரவிக்கப்பட்டனர்.

தொடர்ந்து சமாதான புறாவும்,  மூவர்ண பலூண்களையும் மாவட்ட ஆட்சியர்  பறக்கவிட்டார். கொரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றிய காவலர்கள், மருத்துவர்கள், தூய்மை பணியாளர்கள் ஆகியோர்க்கு  நற்சான்றிதழ் வழங்கி கெளரவித்தார்.

இதே போல் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் உள்ள தனியார் பள்ளியில், 75-வது சுதந்திர தின விழாவை பசுமை விழாவாக கொண்டாடினர். 75-வது சுதந்திர தினத்தை நினைவுபடுத்தும் வகையில் 75 அடி நீளத்திற்கு இந்திய வரைபடத்தை வரைந்து அதனுள் 1500 மரக்கன்றுகளை வைத்து இந்திய வரைபடம் அலங்கரிக்கப்பட்டிருந்தது.


மரக்கன்று நடணும்.. அந்தந்த பகுதி மாணவர்கள் பராமரிக்கணும் - தென்காசியில் சூப்பர் சுதந்திர தினம்

இங்கு வைக்கப்பட்டிருக்கும் மரக்கன்றுகள் அரசு அலுவலகங்கள் அரசு பள்ளிகளில் வைத்து பராமரிக்கப்பட உள்ளது. முதற்கட்டமாக இன்று மட்டும் 750 மரக்கன்றுகள் நடப்பட உள்ளது. மரங்களை நடுவதோடு மட்டும் இன்றி அந்த மரங்களை சுற்றி வேலி அமைத்தல் மற்றும் அந்த மரக்கன்றுகளுக்கான பராமரிப்பு பணிகளையும் அந்தந்த பகுதிகளை சேர்ந்த மாணவர்களே மேற்கொள்ளும் வண்ணம் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

தேசப்பற்றோடு இணையும்  அனைவரும்  சமூகப்பற்றையும் வளர்த்து  கொள்ள வேண்டும், இயற்கையை பாதுகாக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி 75-வது சுதந்திர தின விழா பசுமை விழாவாக கொண்டாடப் பட்டது என்று தெரிவித்துள்ளனர். இந்திய வரைபடம் பசுமையாக காட்சியளித்தது காண்போரை கண்கவர செய்தது. மேலும் இந்நிகழ்வில் தென்காசி மாவட்ட கல்வி அலுவலர், சிவகங்கை மாவட்ட ஏடிஎஸ்பி இராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.


மரக்கன்று நடணும்.. அந்தந்த பகுதி மாணவர்கள் பராமரிக்கணும் - தென்காசியில் சூப்பர் சுதந்திர தினம்

கொரோனா பரவல் காரணமாக கொரோனா தடுப்பு விதிமுறைகளுக்கு உட்பட்டு மாணவர்கள் இன்றி சுதந்திர தின விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. மேலும் சுதந்திர தினத்திற்காக தொடங்கப்பட்ட மரக்கன்றுகள் நடும் நிகழ்வு இனி வரும் காலங்களிலும் மாணவர்கள் தொடர்ந்து ஈடுபடுவார்கள் என்று பள்ளி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வாசிக்க: 

Ola Electric Scooter: தீவிரமாக களமிறங்கும் மின்சார வாகனங்கள்.. சாதக, பாதகங்கள் என்னென்ன? 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Trump Vs Iran: ட்ரம்ப் மிரட்டலுக்கு பணிந்ததா ஈரான்.? பதில் கடிதத்தில் என்ன சொல்லியிருக்காங்க தெரியுமா.?
ட்ரம்ப் மிரட்டலுக்கு பணிந்ததா ஈரான்.? பதில் கடிதத்தில் என்ன சொல்லியிருக்காங்க தெரியுமா.?
TVK Vijay Speech: ”மாண்புமிகு மன்னராட்சி முதல்வர் ஸ்டாலின் அவர்களே”விட்டு விளாசிய தவெக தலைவர் விஜய் - அனல் பறந்த பேச்சு
TVK Vijay Speech: ”மாண்புமிகு மன்னராட்சி முதல்வர் ஸ்டாலின் அவர்களே”விட்டு விளாசிய தவெக தலைவர் விஜய் - அனல் பறந்த பேச்சு
TVK Vijay Speech: தமிழ்நாட்டிடம் விளையாடாதீங்க பிரதமர் சார்! – பொதுக்குழுவில் அனல் தெறிக்க பேசிய விஜய்
TVK Vijay Speech: தமிழ்நாட்டிடம் விளையாடாதீங்க பிரதமர் சார்! – பொதுக்குழுவில் அனல் தெறிக்க பேசிய விஜய்
மனைவியைக் கொன்று உடலை சூட்கேஸில் அடைத்துவிட்டு தப்பிச் சென்ற கணவர்; புனேவில் சிக்கியது எப்படி?
மனைவியைக் கொன்று உடலை சூட்கேஸில் அடைத்துவிட்டு தப்பிச் சென்ற கணவர்; புனேவில் சிக்கியது எப்படி?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK Meeting : தவெக முதல் பொதுக்குழு கூட்டம்விஜய்யின் முக்கிய முடிவுகள்!ஆட்டத்தை தொடங்கிய ஆதவ்Women Issue | ”பொம்பள பொறுக்கி நாயே..!HONEYMOON போறியா டா” சண்டை போட்ட முதல் மனைவி AIRPORT-ல் கத்தி கதறிய பெண்Coimbatore | ”பொம்பள பொறுக்கி நாயே..!HONEYMOON போறியா டா” சண்டை போட்ட முதல் மனைவி AIRPORT-ல் கத்தி கதறிய பெண்Vijay vs Udhayanidhi : ஜனநாயகன் vs பராசக்தி விஜய்யுடன் மோதும் உதயநிதி! அரசியல் ஆயுதமான சினிமா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trump Vs Iran: ட்ரம்ப் மிரட்டலுக்கு பணிந்ததா ஈரான்.? பதில் கடிதத்தில் என்ன சொல்லியிருக்காங்க தெரியுமா.?
ட்ரம்ப் மிரட்டலுக்கு பணிந்ததா ஈரான்.? பதில் கடிதத்தில் என்ன சொல்லியிருக்காங்க தெரியுமா.?
TVK Vijay Speech: ”மாண்புமிகு மன்னராட்சி முதல்வர் ஸ்டாலின் அவர்களே”விட்டு விளாசிய தவெக தலைவர் விஜய் - அனல் பறந்த பேச்சு
TVK Vijay Speech: ”மாண்புமிகு மன்னராட்சி முதல்வர் ஸ்டாலின் அவர்களே”விட்டு விளாசிய தவெக தலைவர் விஜய் - அனல் பறந்த பேச்சு
TVK Vijay Speech: தமிழ்நாட்டிடம் விளையாடாதீங்க பிரதமர் சார்! – பொதுக்குழுவில் அனல் தெறிக்க பேசிய விஜய்
TVK Vijay Speech: தமிழ்நாட்டிடம் விளையாடாதீங்க பிரதமர் சார்! – பொதுக்குழுவில் அனல் தெறிக்க பேசிய விஜய்
மனைவியைக் கொன்று உடலை சூட்கேஸில் அடைத்துவிட்டு தப்பிச் சென்ற கணவர்; புனேவில் சிக்கியது எப்படி?
மனைவியைக் கொன்று உடலை சூட்கேஸில் அடைத்துவிட்டு தப்பிச் சென்ற கணவர்; புனேவில் சிக்கியது எப்படி?
TVK: த.வெ.க. முதல் பொதுக்குழு கூட்டம்; விஜய் என்ன பேசினார்? தீர்மானங்கள் - ஹைலைட்ஸ்!
TVK: த.வெ.க. முதல் பொதுக்குழு கூட்டம்; விஜய் என்ன பேசினார்? தீர்மானங்கள் - ஹைலைட்ஸ்!
Myanmar Earthquake: மியான்மரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: தரைமட்டமான கட்டடங்கள்! தலைதெறிக்க ஓடிய மக்கள்
Myanmar Earthquake: மியான்மரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: தரைமட்டமான கட்டடங்கள்! தலைதெறிக்க ஓடிய மக்கள்
Udhayanidhi: ”டெல்லியில் 3 கார் ஏறிய எடப்பாடி” - விளையாட்டு வீரர்களுக்கு காப்பீடு - DY CM உதயநிதி அறிவிப்பு
Udhayanidhi: ”டெல்லியில் 3 கார் ஏறிய எடப்பாடி” - விளையாட்டு வீரர்களுக்கு காப்பீடு - DY CM உதயநிதி அறிவிப்பு
Karthigai Deepam: கண்டிஷன் போடும் கார்த்தி! கண்டுகொள்ளாத ரேவதி! வேண்டா வெறுப்பாக கல்யாணம்!
Karthigai Deepam: கண்டிஷன் போடும் கார்த்தி! கண்டுகொள்ளாத ரேவதி! வேண்டா வெறுப்பாக கல்யாணம்!
Embed widget