மேலும் அறிய

மதுரை : பேருக்கு ஊரடங்கு! தூங்கா நகரத்துல இதுதான் நடந்துச்சு!

மக்கள் அலட்சியமாக இருந்தால், கொரோனா மூன்றாவது அலை வெகு விரைவில் வந்துவிடும் என்பது சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.

 
 

மதுரை : பேருக்கு ஊரடங்கு! தூங்கா நகரத்துல இதுதான் நடந்துச்சு!
'ஸ்.....அப்பாடி!, கொரோனா குறைஞ்சுக்கிட்டு வருது என்று மக்கள் சிறிது நிம்மதியடைந்து வருகின்றனர். இந்நிலையில் இன்று காலை 6 மணிமுதல் 5 மணிவரை அத்தியாவசிய இடங்கள் செயல்படலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இதனால் கொரோனா முழுமையாக ஒழிந்துவிட்டது போல் மக்கள் மீண்டும் கூட்டம் குவிய ஆரம்பித்துவிட்டனர். முழுமையான கட்டுப்பாடுகள் விதித்தால் நோய் கட்டுக்குள் வருகிறது. அதேசமயம் மக்கள் வறுமையில் வாடும் சூழல் ஏற்படுகிறது, என்று தளர்வுகளை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
 

மதுரை : பேருக்கு ஊரடங்கு! தூங்கா நகரத்துல இதுதான் நடந்துச்சு!
 
ஆனால் இப்போது மக்கள் எந்த விதியையும் பின்பற்றாமல் சுற்றிவருவதையும் காணமுடிந்தது. மதுரை மாவட்டத்தை பொறுத்தவரை நகர்ப்புறம், கிராமப்புறம் என அனைத்து இடங்களிலும் மக்கள் வெள்ளத்தை காணமுடிந்தது. கோரிப்பாளையம், சிம்மக்கல், அய்யர்பங்களா, ஆரப்பாளையம், கீழமாசி வீதி என மக்கள் கூட்டம் அள்ளியது. அரசு அலுவலகங்களில்  ஊரடங்கு கடைபிடிக்கவில்லை. அதேபோல் சுகாதார நிலையங்களில் கூட மக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல், சிலர் மாஸ்க் கூட அணியாமல் சுற்றிவந்ததை பார்க்க முடிந்தது. கீழமாசி உள்ளிட்ட மாசி வீதிகளில் மக்கள் சித்திரை திருவிழா கூட்டம் போல் சுற்றிவர ஆரம்பித்தனர். கொரோனா முடிந்து இயல்புநிலை திரும்பிவிட்டதோ என தோன்ற வைத்தது. கொரோனா குறைந்ததும் அரசு தளர்வுகளை அறிவித்துள்ளது. இருப்பினும் தளர்வுகளைப் பயன்படுத்தி, மக்கள் எல்லைகடந்து அலட்சியமாக இருந்தால் கொரோனா மூன்றாவது அலை வெகு விரைவில் வந்துவிடும் என்பது சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.
 

மதுரை : பேருக்கு ஊரடங்கு! தூங்கா நகரத்துல இதுதான் நடந்துச்சு!
 
தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு குறித்து மேலூரை சேர்ந்த வழக்கறிஞர் செல்லப்பாண்டி, "தற்போதைய ஊரடங்கு வரவேற்கத்தக்கது. ஆனால் இன்னும் அத்தியாவசிய பணிகளை விரிவுபடுத்தி இருக்கலாம். நீதிமன்ற வழக்குகளும் அத்தியாவசியம்தான். முன்களப்பணியாளர்கள் போலவே, நீதிமன்ற ஊழியர்களுக்கும் தளர்வு அளிக்கவேண்டும். போக்குவரத்து அனைவருக்கும் முக்கியமான ஒன்று இதனை செயல்படுத்தி கட்டுப்பாடுகள் விதிக்கலாம். பொருளாதாரம் மிகவும் சரிந்துள்ளது. எனவே தடுப்பூசி போன்றவற்றை அதிகப்படுத்திவிட்டு ஊரடங்கு தளர்வுகளையும் அதிகப்படுத்தலாம். அதே சமயம் மக்களும் அரசுக்கு ஒத்துழைப்பு கொடுத்து சமூக இடைவெளி, மாஸ்க் அணிதல், கிருமிநாசினிகள் எடுத்துக் கொள்ளுதல் உள்ளிட்ட அரசு விதிகளை தொடந்து கடைபிடிக்க வேண்டும். 
 

மதுரை : பேருக்கு ஊரடங்கு! தூங்கா நகரத்துல இதுதான் நடந்துச்சு!
 
 
 மேலும் காரைக்குடி தொகுதி ம.நீ.ம சட்ட மன்ற வேட்பாளரும், தமிழக மக்கள் மன்றத் தலைவருமான ச.மீ.இராசகுமார், ”தற்போதைய ஊரடங்கு தளர்வை மிகவும் வன்மையாக கண்டிக்கிறோம். இது மக்களை கொல்ல முயற்சிக்கும் செயலாகத்தான் பார்க்கமுடிகிறது. அலோபதிக்கு ஆதரவாகவும், மக்களுக்கு துரோகம் அளிக்கும் நடவடிக்கையாக மாறியிருக்கிறது. இதனை நான் வீட்டில் உறங்கிக் கொண்டு சொல்லவில்லை. கொரோனா நோயாளிகளுடன் தொடர்ந்து பயணித்து அவர்களுக்கு உதவி செய்த நபராகவும், அவர்களின் இறப்பை கண்டு உறைந்து போன நபர்களின் பிரதிநிதியாக கோபத்துடன் பேசுகிறேன். கொரோனா தொற்றை கட்டுப்படுத்தவும், பாதிக்கப்பட்ட நோயாளிகளை மீட்கவும் கண்டிப்பாக தொடர்ந்து 15 நாட்களுக்கு மேல் கடுமையான முழு ஊரடங்கை பிறப்பிக்க வேண்டும். சிரமமான காரியம் என்றாலும் முழு ஊரடங்கை தவிர நோய் தொற்றை கட்டுப்படுத்த வேறு வழி இல்லை" என்றார்.
 
 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

மாஸாக கம்பேக் கொடுத்த காங்கிரஸ்; ஹரியானாவில் பாஜகவுக்கு ஷாக்.. கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்வது என்ன?
மாஸாக கம்பேக் கொடுத்த காங்கிரஸ்; ஹரியானாவில் பாஜகவுக்கு ஷாக்.. கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்வது என்ன?
ஜம்மு காஷ்மீரில் டஃப் கொடுக்கும் பாஜக.. முந்துமா இந்தியா கூட்டணி? கருத்துக்கணிப்பு முடிவுகளில் ஷாக்
ஜம்மு காஷ்மீரில் டஃப் கொடுக்கும் பாஜக.. முந்துமா இந்தியா கூட்டணி? கருத்துக்கணிப்பு முடிவுகளில் ஷாக்
"பாசிசவாதிகளை கதறவிடுபவர்" பிரகாஷ்ராஜ் குறித்து ஓப்பனாக பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி!
முன்கூட்டியே தொடங்கும் வடகிழக்கு பருவமழை: அடுத்த 5 நாட்களுக்கு இந்த மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை
முன்கூட்டியே தொடங்கும் வடகிழக்கு பருவமழை: அடுத்த 5 நாட்களுக்கு இந்த மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vanathi Srinivasan | விஸ்வகர்மா விவகாரம்”சாதி முலாம் பூசும் திமுக”வெடிக்கும் வானதிMahavishnu Bail |’’சேவை தொடரும்’’ஜாமீனில் வந்த மகாவிஷ்ணு!சிறை வாசலில் உற்சாக வரவேற்புWoman Police Attack | ”நீ எவன்ட வேணா சொல்லு”பெண் போலீஸ் மீது தாக்குதல்..நடுரோட்டில் பரபரப்புVijay vs Prakash Raj : களத்தில் இறங்கும் பிரகாஷ்ராஜ்? விஜய்யின் அரசியல் வில்லன்! திமுக மாஸ்டர் PLAN

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மாஸாக கம்பேக் கொடுத்த காங்கிரஸ்; ஹரியானாவில் பாஜகவுக்கு ஷாக்.. கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்வது என்ன?
மாஸாக கம்பேக் கொடுத்த காங்கிரஸ்; ஹரியானாவில் பாஜகவுக்கு ஷாக்.. கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்வது என்ன?
ஜம்மு காஷ்மீரில் டஃப் கொடுக்கும் பாஜக.. முந்துமா இந்தியா கூட்டணி? கருத்துக்கணிப்பு முடிவுகளில் ஷாக்
ஜம்மு காஷ்மீரில் டஃப் கொடுக்கும் பாஜக.. முந்துமா இந்தியா கூட்டணி? கருத்துக்கணிப்பு முடிவுகளில் ஷாக்
"பாசிசவாதிகளை கதறவிடுபவர்" பிரகாஷ்ராஜ் குறித்து ஓப்பனாக பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி!
முன்கூட்டியே தொடங்கும் வடகிழக்கு பருவமழை: அடுத்த 5 நாட்களுக்கு இந்த மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை
முன்கூட்டியே தொடங்கும் வடகிழக்கு பருவமழை: அடுத்த 5 நாட்களுக்கு இந்த மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை
சிறைச்சாலை என்ற பள்ளிக்கூடத்தில் படித்ததால்தான் யாருடைய அரட்டலுக்கும் பயப்படுவதில்லை - முதல்வர் ஸ்டாலின்
சிறைச்சாலை என்ற பள்ளிக்கூடத்தில் படித்ததால்தான் யாருடைய அரட்டலுக்கும் பயப்படுவதில்லை - முதல்வர் ஸ்டாலின்
சென்னையில் புதிய Nissan Magnite Facelift கார் அறிமுகம்: விலை, மைலேஜ், சிறப்பம்சங்கள் என்ன தெரியுமா?
சென்னையில் புதிய Nissan Magnite Facelift கார் அறிமுகம்: விலை, மைலேஜ், சிறப்பம்சங்கள் என்ன தெரியுமா?
Video: பாம்பை சாப்பிடும் மான்: ஆச்சர்யத்தை ஏற்படுத்தும் வீடியோ.!
பாம்பை சாப்பிடும் மான்: ஆச்சர்யத்தை ஏற்படுத்தும் வீடியோ.!
ஹரியானா சட்டப்பேரவை தேர்தல்.. வாக்குப்பதிவு நிறைவு.. பாஜகவை வீழ்த்துமா காங்கிரஸ்?
ஹரியானா சட்டப்பேரவை தேர்தல்.. வாக்குப்பதிவு நிறைவு.. பாஜகவை வீழ்த்துமா காங்கிரஸ்?
Embed widget