US Killed Leaders: சதாம் உசேன் முதல் கடாஃபி வரை.. அமெரிக்காவால் செத்த உலகத் தலைவர்கள்!
ஈரான் அதிபர் அல் கமேனியை அமெரிக்கா வான்வழித் தாக்குதல்களால் கொலை செய்துள்ள நிலையில், இதுவரையில் அமெரிக்காவால் உயிரிழந்த தலைவர்களின் பட்டியலை காணலாம்.

உலகின் மிகவும் முக்கியமான இஸ்லாமிய தலைவர்களில் ஒருவரும், ஈரான் அதிபருமான அல் கமேனி அமெரிக்கா நடத்திய தாக்குதலினால் கொல்லப்பட்டார். அவரது மரணம் ஒட்டுமொத்த ஈரான் மக்கள் மத்தியிலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உலகில் உள்ள அனைத்து நாடுகளுக்கும் நாட்டாமை நாடாக அமெரிக்கா திகழ்ந்து வருகிறது. அமெரிக்காவின் இதுபோன்ற ராணுவ தாக்குதலுக்கு பல முறை பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அமெரிக்கா இதுவரை எந்தெந்த நாட்டு தலைவர்களை கொலை செய்துள்ளது? என்பதை கீழே காணலாம்.
1. சதாம் உசேன்:
ஈராக் நாட்டு அதிபராக இருந்தவர் சதாம் உசேன். தொடக்கம் முதலே அமெரிக்காவிற்கும் ஈராக்கிற்கும் மோதல் போக்கு இருந்த வந்த நிலையில், அமெரிக்காவின் இரட்டைக் கோபுர தாக்குதலுக்கு பிறகு ஒசாமா பின்லேடன் தேடுதல் வேட்டையின்போது ஏற்பட்ட மோதலால் ஈராக்குடன் அமெரிக்கா போரில் ஈடுபட்டது. அந்த போரில் ஈராக் தோற்ற நிலையில், அமெரிக்கா ராணுவத்தினரால் கைது செய்யப்பட்ட சதாம் உதேன் 2006ம் ஆண்டு தூக்கிலிடப்பட்டார். ஈராக் மீது அமெரிக்கா நடத்திய போரின் பின்னணியில் ஈராக்கின் எண்ணெய் வளமே காரணமாக கூறப்படுகிறது.
2. மானுவேல் நோரிகா:
பனாமா நாட்டின் அதிபராக இருந்தவர் மானுவேல் நோரிகா. ராணுவ வீரராக வாழ்வைத் தொடங்கி ராணுவப் புரட்சி மூலமாக ஆட்சியைப் பிடித்தவர். சர்வாதிகாரி, போதைப்பொருள் கடத்தலுக்கு துணை நின்றவர் என்ற குற்றச்சாட்டுகளால், அமெரிக்காவின் எதிரி நாடுகளான கியூபா, லிபியா நாடுகளுடன் நெருக்கமான உறவு கொண்டதாலும் அமெரிக்காவால் ஆட்சியை இழந்து அமெரிக்க சிறையில் வாடிய மானுவல் நோரிகா 83 வயதில் 2017ம் ஆண்டு உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.
3. ங்கோ டிங்க் டைய்ம்:
தெற்கு வியட்நாம் நாட்டு அதிபராக பதவி வகித்து வந்தவர் இவர். தெற்கு வியட்நாமின் முதல் அதிபர் இவர் ஆவார். இவரது மரணத்தின் பின்னணியிலும் அமெரிக்காவே இருப்பதாக கூறப்படுகிறது. 1963ம் ஆண்டு நவம்பர் 2ம் தேதி இவர் படுகொலை செய்யப்பட்டார்.
4. கடாஃபி:
அமெரிக்காவுடன் மோதல்போக்கிலே இருந்து வந்த நாடு லிபியா. இந்த நாட்டின் அதிபராக பொறுப்பு வகித்தவர் கடாஃபி. எண்ணெய் வளம் அதிகம் மிகுந்த இந்த நாட்டின் மீது அமெரிக்காவிற்கு ஒரு கண் இருந்தது. உள்நாட்டுப் போர், அமெரிக்காவின் சதி ஆகியவற்றின் காரணமாக அதிபர் பதவியை பறிகொடுத்த கடாஃபி கிளர்ச்சியாளர்களால் அடித்துக் கொல்லப்பட்டார்.
உலகின் பல நாட்டுத் தலைவர்களின் மரணத்தின் பின்னணியிலும் அமெரிக்கா இருப்பதாக ஒரு வதந்தி ஒன்றும் உள்ளது. அமெரிக்காவிற்கு பெரும் தலைவலி கொடுத்து வந்த கியூபா நாட்டு அதிபராக இருந்த காஸ்ட்ரோவை கொலை செய்வதற்கும் அமெரிக்கா பல முறை முயற்சித்ததாகவும் தகவல் உண்டு.























