Accident News | கட்டுப்பாட்டை இழந்த வேன் கவிழ்ந்து விபத்து பதற வைக்கும் CCTV வீடியோ | Puducherry
கட்டுப்பாட்டை இழந்த
வேன் கவிழ்ந்து விபத்து
பதற வைக்கும் CCTV வீடியோ
விழுப்புரம் நாகப்பட்டினம் நான்கு வழி சாலையில் திருவாண்டார் கோயில் அருகே வேன் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இதன் சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி தேங்காய்தட்டு பகுதியை சேர்ந்த வெங்கடேசன் தனியார் மருத்துவ கம்பெனியின் பிரதிநிதி. இவரது மனைவி சுசித்ராவின் வளைகாப்பு நிகழ்ச்சிக்காக கோயமுத்தூரில் இருந்து கைக்குழந்தைகளுடன் 25க்கும் மேற்பட்ட உறவினர்கள் புதுச்சேரி வந்தனர். விழா முடிந்து திரும்பி செல்லும் பொழுது விழுப்புரம்- நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலை திருவண்டார்கோயில் மேம்பாலத்தின் அருகே ஓட்டுனரின் கட்டுப்பாடு மீறி வேன் கவிழ்ந்தது. அதிர்ஷ்டவசமாக லேசான காயங்களுடன் அனைவரும் உயிர் தப்பினார்கள்.
வேகமாக வந்த வேன் சாலையில் வைக்கப்பட்டிருந்த தடுப்பின் மீது மோதாமல் இருக்க ஓட்டுநர் வேனை திருப்பி போது ஏற்பட்ட விபத்தில் சிசிடிவி காட்சி தற்பொழுது வெளியாகி உள்ளது. இதுகுறித்து வில்லியனூர் போக்குவரத்து போலீசார் ஓட்டுனர் காமேஸ்வரன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்..























