மேலும் அறிய

Arvind Kejriwal: டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன்.. ரோஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவு..!

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ரோஸ் அவென்யூ நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ரோஸ் அவென்யூ நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கி அவென்யூ நீதிமன்ற விடுமுறைக்கால நீதிபதி பிந்து உத்தரவிட்டுள்ளார். ஒரு லட்சம் ரூபாய் பிணைத்தொகையாக அரவிந்த் கெஜ்ரிவால் செலுத்த வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஜாமீன் உத்தரவு முதலில் சிறைக்கு வர உள்ளதால், ஆம் ஆத்மி கட்சி தலைவரும், டெல்லி முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால் நாளை சிறையில் இருந்து வெளியே வர வாய்ப்புள்ளது. 

அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த மார்ச் 21ம் தேதி அமலாக்க இயக்குநரகத்தால் (ED) மதுபான கொள்கை கொள்ளை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டார். அதை தொடர்ந்து கடந்த மே மாதம், மக்களவை தேர்தலைக் கருத்தில் கொண்டு அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உச்ச நீதிமன்றம் ஜூன் 01 வரை இடைக்கால ஜாமீன் வழங்கியது. தொடர்ந்து ஜூன் 2ம் தேதி மீண்டும் சரணடைந்தார்.

ஜாமீன்: 

முதலமைச்சர் கெஜ்ரிவாலின் ஜாமீன் மனு மீதான விசாரணை தொடர்ந்து இரண்டாவது நாளாக தில்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. முதலமைச்சர் கெஜ்ரிவாலின் வழக்கறிஞர் மற்றும் அமலாக்கத்துறையின் வாதங்களை நீதிமன்றம் கேட்டறிந்த நிலையில், நீதிமன்றம் விசாரித்து கெஜ்ரிவாலுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கியது. 

ஆம் ஆத்மி கட்சித் தலைவரும், டெல்லி அமைச்சருமான அதிஷி எக்ஸ் பக்கத்தில் “சத்யமேவ் ஜெயதே” என்று எழுதினார்.

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கப்பட்டதை தொடர்ந்து அவரது ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர்.

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ரோஸ் அவென்யூ நீதிமன்றம் ஜாமீன் வழங்கியதை அடுத்து, ஆம் ஆத்மி கட்சி எம்பி சஞ்சய் சிங் கூறுகையில், "இப்படிப்பட்ட நேரத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் சிறையில் இருந்து வெளியே வருவது ஜனநாயகத்தை வலுப்படுத்தப் போகிறது. இது டெல்லி மக்களுக்கு நல்ல செய்தி. இதுவரை ED இன் அறிக்கைகள் பொய்களை அடிப்படையாகக் கொண்டவை... இது கேஜ்ரிவாலை சிக்க வைக்க உருவாக்கப்பட்ட ஆதாரமற்ற போலி வழக்கு.” என தெரிவித்துள்ளார். 

தொடர்ந்து ஆம் ஆத்மி எம்எல்ஏ திலீப் பாண்டே கூறுகையில், “இது உண்மைக்கு கிடைத்த வெற்றி. முழு வழக்கும் போலியானது என்று முதல் நாளிலிருந்தே கூறி வருகிறோம். நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை மதிக்கிறோம்.” என தெரிவித்தார். 

மேலும் காண
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

நண்பன்னு சொல்லி இந்தியாவிற்கு ஆப்பு வைக்கும் ட்ரம்ப்; இப்படி நல்லது நடக்கவிடாம தடுக்குறீங்களே?!
நண்பன்னு சொல்லி இந்தியாவிற்கு ஆப்பு வைக்கும் ட்ரம்ப்; இப்படி நல்லது நடக்கவிடாம தடுக்குறீங்களே?!
President To SC: கோபப்பட்ட குடியரசு தலைவர் - உச்சநீதிமன்றத்திற்கு 14 கேள்விகள் - பொங்கி எழுந்த ஸ்டாலின்
President To SC: கோபப்பட்ட குடியரசு தலைவர் - உச்சநீதிமன்றத்திற்கு 14 கேள்விகள் - பொங்கி எழுந்த ஸ்டாலின்
RISAT 1B Satelite: பாதுகாப்பின் அடுத்த உச்சம் - இஸ்ரோ விண்ணில் செலுத்தும் புதிய செயற்கைகோள் - அலறும் தீவிரவாதிகள்
RISAT 1B Satelite: பாதுகாப்பின் அடுத்த உச்சம் - இஸ்ரோ விண்ணில் செலுத்தும் புதிய செயற்கைகோள் - அலறும் தீவிரவாதிகள்
உள்ளே வரத்துடிக்கும் ஓபிஎஸ்.. விரட்டி விரட்டி விடும் இபிஎஸ்! இன்னைக்கு முக்கிய முடிவு!
உள்ளே வரத்துடிக்கும் ஓபிஎஸ்.. விரட்டி விரட்டி விடும் இபிஎஸ்! இன்னைக்கு முக்கிய முடிவு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Tirupathur | “நாயா அலையவிடுறாங்க” போலி ஆதார் கார்டில் பத்திரப்பதிவு பாஜக நிர்வாகி அட்டூழியம்!TVK Vijay Madurai Meeting  | 100 வேட்பாளர்கள் ரெடி? மதுரையில் அறிவிப்பு! விஜயின் பக்கா ஸ்கெட்ச்EPS Plan | Ponmudi vs Lakshmanan  | பொன்முடி இனி டம்மி!  பவருக்கு வந்த எ.வ.வேலு  லட்சுமணன் GAME STARTS

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
நண்பன்னு சொல்லி இந்தியாவிற்கு ஆப்பு வைக்கும் ட்ரம்ப்; இப்படி நல்லது நடக்கவிடாம தடுக்குறீங்களே?!
நண்பன்னு சொல்லி இந்தியாவிற்கு ஆப்பு வைக்கும் ட்ரம்ப்; இப்படி நல்லது நடக்கவிடாம தடுக்குறீங்களே?!
President To SC: கோபப்பட்ட குடியரசு தலைவர் - உச்சநீதிமன்றத்திற்கு 14 கேள்விகள் - பொங்கி எழுந்த ஸ்டாலின்
President To SC: கோபப்பட்ட குடியரசு தலைவர் - உச்சநீதிமன்றத்திற்கு 14 கேள்விகள் - பொங்கி எழுந்த ஸ்டாலின்
RISAT 1B Satelite: பாதுகாப்பின் அடுத்த உச்சம் - இஸ்ரோ விண்ணில் செலுத்தும் புதிய செயற்கைகோள் - அலறும் தீவிரவாதிகள்
RISAT 1B Satelite: பாதுகாப்பின் அடுத்த உச்சம் - இஸ்ரோ விண்ணில் செலுத்தும் புதிய செயற்கைகோள் - அலறும் தீவிரவாதிகள்
உள்ளே வரத்துடிக்கும் ஓபிஎஸ்.. விரட்டி விரட்டி விடும் இபிஎஸ்! இன்னைக்கு முக்கிய முடிவு!
உள்ளே வரத்துடிக்கும் ஓபிஎஸ்.. விரட்டி விரட்டி விடும் இபிஎஸ்! இன்னைக்கு முக்கிய முடிவு!
SC Women CJI: 75 ஆண்டுகள் - உச்சநீதிமன்ற முதல் பெண் தலைமை நீதிபதி யார்? பதவிக்காலத்தில் ட்விஸ்ட்
SC Women CJI: 75 ஆண்டுகள் - உச்சநீதிமன்ற முதல் பெண் தலைமை நீதிபதி யார்? பதவிக்காலத்தில் ட்விஸ்ட்
Gold Rate Today: காலையிலே ஹாப்பி! மீண்டும் 70 ஆயிரத்திற்கு கீழே சென்ற தங்கம் விலை
Gold Rate Today: காலையிலே ஹாப்பி! மீண்டும் 70 ஆயிரத்திற்கு கீழே சென்ற தங்கம் விலை
Top 10 News: உச்சநீதிமன்றத்திற்கு ஜனாதிபதி கேள்வி.. ஐநா-வை சந்திக்கும் இந்தியா - 11 மணி பரபரப்பு
Top 10 News: உச்சநீதிமன்றத்திற்கு ஜனாதிபதி கேள்வி.. ஐநா-வை சந்திக்கும் இந்தியா - 11 மணி பரபரப்பு
TN Land Registration: ஓய்ந்தது தலைவலி, மீண்டும் பவுத்தி பட்டா..! ஆட்சியர்களுக்கு பறந்த உத்தரவு, தேவையான ஆவணங்கள்
TN Land Registration: ஓய்ந்தது தலைவலி, மீண்டும் பவுத்தி பட்டா..! ஆட்சியர்களுக்கு பறந்த உத்தரவு, தேவையான ஆவணங்கள்
Embed widget