மேலும் அறிய

Manipur Tension: உச்சகட்ட பதற்றம்? மற்ற மாநிலங்களுக்கும் பரவும் இனக்கலவரம்..மிசோரத்தில் இருந்து வெளியேறும் மெய்தி சமூகத்தினர்

மிசோரமில் வசிக்கும் மற்றும் பணிபுரியும் மெய்தி சமூக மக்கள் நேற்று முதல் மாநிலத்தில் இருந்து வெளியேறத் தொடங்கியுள்ளனர்.

மணிப்பூரில் பழங்குடியினர் (ST) அந்தஸ்தை கேட்டு போராடிவரும் மெய்தி சமூகத்திற்கும், அதை எதிர்த்து வரும் குக்கி பழங்குடி சமூகத்திற்கு இடையே நடந்து வரும் இனக்கலவரம் நாட்டியை உலுக்கி வருகிறது. மணிப்பூரில் அரசியல் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் முன்னேறிய சாதி பிரிவினராக இருப்பவர்கள் மெய்தி சமூகத்தினர்.

அதேபோல, கல்வி ரீதியாகவும் சமூக ரீதியாகவும் மலைப் பிரதேசத்தில் எந்த வித வசதிகளும் இன்றி வாழ்ந்து வருபவர்கள் பழங்குடியினரான குக்கி சமூகத்தினர். இவர்கள் இருவருக்கும் இடையே நடந்து வரும் இனக்கலவரத்தால் மோசமாக பாதிக்கப்பட்டவர்கள் குக்கி சமூகத்தை சேர்ந்த பெண்கள்தான்.

தேசத்தின் மனசாட்சியை உலுக்கிய மணிப்பூர் சம்பவம்:

பழங்குடி பெண்களை நிர்வாணமாக்கி, ஊர்வலமாக அழைத்து சென்று, கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய சம்பவம் இந்தியா மட்டும் இன்றி உலக நாடுகள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒரு மாதம், இரண்டு மாதத்திற்கு முன்பு நடந்த சம்பவங்கள் எல்லாம் மெல்ல வெளிச்சத்திற்கு வர தொடங்கியுள்ளது.

மற்ற மாநிலங்களில் தொடரும் பதற்றம்:

இந்த நிலையில், பழங்குடியினருக்கு எதிராக நடத்தப்பட்ட வன்முறை சம்பவங்களால் அண்டை மாநிலங்களில் பதற்றம் நிலவி வருகிறது.  தங்களின் சொந்த பாதுகாப்பை கருத்தில் கொண்டு, மிசோரத்தில் இருந்து வெளியேறும்படி மெய்தி சமூகத்தினரை பாம்ரா (PAMRA) அமைப்பு கேட்டு கொண்டதாக கூறப்படுகிறது. பிரிவினைவாதிகளாக இருந்தவர்கள் ஒன்றிணைந்து தொடங்கிய அமைப்புதான் பாம்ரா. 

இதையடுத்து, மிசோரத்தில் வசிக்கும் மற்றும் பணிபுரியும் மெய்தி சமூக மக்கள் நேற்று முதல் மாநிலத்தில் இருந்து வெளியேறத் தொடங்கியுள்ளனர். இம்பாலின் துலிஹால் விமான நிலையத்திற்கு விமானம் மூலம் 60 பேர் வந்து இறங்கியுள்ளதாக விமான நிறுவனத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அய்ஸ்வால் மற்றும் மிசோரத்தின் பிற பகுதிகளிலிருந்து பேருந்துகள் மற்றும் டாக்சிகள் மூலம் மெய்தி மக்கள் பலர் வெளியேறியுள்ளதாக கூறப்படுகிறது. மணிப்பூர் அரசு வெளியிட்ட தகவலின்படி, "மிசோரம் பல்கலைக்கழகத்தில் ஆசிரியர்கள் உட்பட மிசோரமில் சுமார் 2,000 மெய்தி சமூகத்தை சேர்ந்தவர்கள் உள்ளனர். அவர்களில் 50 விழுக்காட்டினர் மணிப்பூரைச் சேர்ந்தவர்கள். மற்ற பாதி பேர் பெரும்பாலும் தெற்கு அஸ்ஸாமைச் சேர்ந்தவர்கள்.

இதுகுறித்து மிசோரமின் டிஐஜி லல்லியன்மாவியா, மிசோரம் ஆயுதப் படை மற்றும் இந்திய ரிசர்வ் பட்டாலியனின் தளபதிகளுக்கு எழுதியுள்ள கடிதத்தில், "அய்ஸ்வாலில் உள்ள மெய்தி சமூக மக்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும்" என குறிப்பிட்டுள்ளார்.

மெய்தி சமூகத்தினரை வெளியேறும்படி பாம்ரா அமைப்பு எச்சரிக்கை விடுத்ததை தொடர்ந்து, மிசோரம் அரசு அய்ஸ்வால் பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளது. மிசோரமில் உள்ள மிசோ சமூகத்தவரும் குக்கி சமூகத்தவரும் இன ரீதியாக தொடர்புடையவர்கள். 

அதேபோல, மியான்மரில் உள்ள சின்ஸ் சமூகத்தவரும் வங்க தேசத்தில் உள்ள சின் குக்கி சமூகத்தவரும் குக்கி சமூகத்தவருக்கு தொடர்புடையவராக கருதப்படுகிறார்கள். 

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

முதலமைச்சர் ஆவேன் என என்றுமே நினைக்கவில்லை... எடப்பாடி பழனிசாமி பரபரப்பு பேட்டி
முதலமைச்சர் ஆவேன் என என்றுமே நினைக்கவில்லை... எடப்பாடி பழனிசாமி பரபரப்பு பேட்டி
Tamilnadu Roundup:  விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்.. பீகார் புறப்பட்ட முதல்வர் - 10 மணி வரை இன்று
Tamilnadu Roundup: விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்.. பீகார் புறப்பட்ட முதல்வர் - 10 மணி வரை இன்று
Vinayagar Chaturthi 2025: இன்று விநாயகர் சதுர்த்தி.. தமிழ்நாட்டில் கோலாகல கொண்டாட்டம்... பரவசத்தில் பக்தர்கள்!
Vinayagar Chaturthi 2025: இன்று விநாயகர் சதுர்த்தி.. தமிழ்நாட்டில் கோலாகல கொண்டாட்டம்... பரவசத்தில் பக்தர்கள்!
Coolie Box Office: கூலிக்கு இன்று கூட்டம் வருமா..? இந்தியாவில் மட்டும் 300 கோடியை அடிப்பாரா ரஜினி?
Coolie Box Office: கூலிக்கு இன்று கூட்டம் வருமா..? இந்தியாவில் மட்டும் 300 கோடியை அடிப்பாரா ரஜினி?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

EPS Thangamani : பிரச்சாரத்திற்கு வந்த தங்கமணி சிக்ஸர் அடிக்கும் எடப்பாடி சர்ச்சைகளுக்கு ENDCARD!
ஜெகதீப் தன்கர் எங்கே போனார்?ஒரு மாதத்தில் கிடைத்த முதல் தகவல் வெளிவந்த ரகசியம்..! | Jagdeep Dhankhar
”TARGET திமுக கூட்டணி”விஜய்-ன் அதிரடி அறிவிப்புகள்? சம்பவம் செய்யுமா தவெக மாநாடு? | TVK Vijay Speech
CM-ஐ கன்னத்தில் அறைந்த நபர் முடியை இழுத்து தாக்குதல் டெல்லியில் நடந்தது என்ன? | Rekha Gupta Attacked
“கால உடைச்சிட்டாங்க அம்மா”காரின் முன்பு விழுந்த விவசாயி ஆக்‌ஷன் எடுத்த ஆட்சியர் | Pudukkottai Farmer Issue

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
முதலமைச்சர் ஆவேன் என என்றுமே நினைக்கவில்லை... எடப்பாடி பழனிசாமி பரபரப்பு பேட்டி
முதலமைச்சர் ஆவேன் என என்றுமே நினைக்கவில்லை... எடப்பாடி பழனிசாமி பரபரப்பு பேட்டி
Tamilnadu Roundup:  விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்.. பீகார் புறப்பட்ட முதல்வர் - 10 மணி வரை இன்று
Tamilnadu Roundup: விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்.. பீகார் புறப்பட்ட முதல்வர் - 10 மணி வரை இன்று
Vinayagar Chaturthi 2025: இன்று விநாயகர் சதுர்த்தி.. தமிழ்நாட்டில் கோலாகல கொண்டாட்டம்... பரவசத்தில் பக்தர்கள்!
Vinayagar Chaturthi 2025: இன்று விநாயகர் சதுர்த்தி.. தமிழ்நாட்டில் கோலாகல கொண்டாட்டம்... பரவசத்தில் பக்தர்கள்!
Coolie Box Office: கூலிக்கு இன்று கூட்டம் வருமா..? இந்தியாவில் மட்டும் 300 கோடியை அடிப்பாரா ரஜினி?
Coolie Box Office: கூலிக்கு இன்று கூட்டம் வருமா..? இந்தியாவில் மட்டும் 300 கோடியை அடிப்பாரா ரஜினி?
FIR on Actors: விளம்பரத்துல வந்தது ஒரு குத்தமா.?! ஷாருக்கான், தீபிகா படுகோன் மீது FIR- எதற்கு தெரியுமா.?
விளம்பரத்துல வந்தது ஒரு குத்தமா.?! ஷாருக்கான், தீபிகா படுகோன் மீது FIR- எதற்கு தெரியுமா.?
Edappadi Palanisamy: கோயம்புத்தூர் மாஸ்டர் பிளான் 2041; ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் ஊழல் நடக்க வாய்ப்பு - இபிஎஸ்
கோயம்புத்தூர் மாஸ்டர் பிளான் 2041; ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் ஊழல் நடக்க வாய்ப்பு - இபிஎஸ்
மருத்துவக் கல்லூரிகளில் NRI இட ஒதுக்கீட்டில் மாபெரும் மோசடி! அதிர்ச்சியில் அமலாக்கத்துறை- பின்னணி என்ன?
மருத்துவக் கல்லூரிகளில் NRI இட ஒதுக்கீட்டில் மாபெரும் மோசடி! அதிர்ச்சியில் அமலாக்கத்துறை- பின்னணி என்ன?
Xiaomi Offer: ஜியோமி போன் வச்சுருக்கீங்களா.? உடனே முந்துங்க.! இந்த வாய்ப்பு அப்புறம் கிடைக்காது - விவரம் உள்ளே
ஜியோமி போன் வச்சுருக்கீங்களா.? உடனே முந்துங்க.! இந்த வாய்ப்பு அப்புறம் கிடைக்காது - விவரம் உள்ளே
Embed widget