மேலும் அறிய

Death Threats: உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கு கொலை மிரட்டல்..வாட்ஸ்அப்பில் துபாய் கேங் அனுப்பிய மெசேஜ்..நடந்தது என்ன?

கடந்த ஜூலை 12ஆம் தேதி இரவு 7 மணியளவில் சர்வதேச எண்ணிலிருந்து வாட்ஸ்அப் மெசஞ்சரில் அவருக்கு மெசேஜ் அனுப்பப்பட்டுள்ளது.

அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள், பிரபலங்களுக்கு கொலை மிரட்டல் விடுப்பது தொடர் கதையாகி வருகிறது. சமீபத்தில் கூட, தெற்கு மும்பையில் உள்ள சர் எச்.என். ரிலையன்ஸ் அறக்கட்டளை மருத்துவமனைக்கு அடையாளம் தெரியாத நபர் ஒருவர் போன் செய்து, அங்கு வெடிகுண்டு வெடிக்க வைக்க போவதாக மிரட்டினார்.

கடந்தாண்டு ஆகஸ்ட் மாதத்திலும், இதேபோன்று ரிலையன்ஸ் அறக்கட்டளை மருத்துவமனைக்கு போன் செய்த நபர், தொழிலதிபர் முகேஷ் அம்பானி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்தார். பின்னர், அது நகைக்கடைக்காரர் என தெரிய வந்து, அவர் கைது செய்யப்படடார்.

ஏழு உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கு கொலை மிரட்டல்:

இதன் தொடர்ச்சியாக, தற்போது நீதிமன்ற நீதிபதிகளுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. ஒன்று அல்ல, இரண்டு அல்ல, ஏழு உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதியின் தகவல் தொடர்பு அதிகாரி அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மத்திய சிஇஎன் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் அடையாளம் தெரியாத சந்தேக நபர்களுக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பு தெரிவித்துள்ளது.

பகீர் கிளப்பும் துபாய் கும்பல்:

கடந்த ஜூலை 14ஆம் தேதி, நீதிபதி கே. முரளிதர் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூலை 12ஆம் தேதி இரவு 7 மணியளவில் சர்வதேச எண்ணிலிருந்து வாட்ஸ்அப் மெசஞ்சரில் அவருக்கு மெசேஜ் அனுப்பப்பட்டுள்ளது. குறிப்பிட்ட அந்த மொபைல் எண், அவருக்கு உயர் நீதிமன்றத்தால் அதிகாரப்பூர்வமாக வழங்கப்பட்டது.

ஐந்து மொபைல் எண்களில் இருந்து இந்து, ஆங்கிலம், உருது ஆகிய மொழிகளில் மெசேஜ் அனுப்பப்பட்டுள்ளது. நீதிபதி முரளிதர், நீதிபதி முகமது நவாஸ், நீதிபதி எச்.டி.நரேந்திர பிரசாத், நீதிபதி அசோக் ஜி நிஜகன்னவர் (ஓய்வு), நீதிபதி ஹெச்.பி.சந்தேஷ், நீதிபதி கே.நடராஜன் மற்றும் நீதிபதி பி.வீரப்பா (ஓய்வு ) உள்ளிட்ட ஏழு பேருக்கு துபாய் கும்பல் ஒன்று கொலை மிரட்டல் விடுத்ததாக காவல்துறையினர் தகவல் கூறுகின்றனர்.

இதுகுறித்து கடந்த ஜூலை 14ஆம் தேதி பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையில், பாகிஸ்தானில் உள்ள வங்கிக் கணக்கில் 50 லட்சம் ரூபாய் பணம் செலுத்த வேண்டும் என மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

இந்திய தண்டனைச் சட்டம் பிரிவுகள் 506, 507 மற்றும் 504 மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் 75 மற்றும் 66(F) ஆகியவற்றின் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. போலீஸார் அதை முதன்மை கூடுதல் தலைமை பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Hathras satsang : ஆன்மிக நிகழ்வில் சோகம்! அதிகரிக்கும் உயிரிழப்புகள்! நடந்தது என்ன?Anurag Thakur INDIA Alliance : Constitution-ல எத்தனை பக்கம் இருக்கு தெரியுமா? திகைத்து போன I.N.D.I.AVillupuram Kallasarayam | மீண்டும் கள்ளச்சாரயம்..பட்டப்பகலில் ஆசாமி அலப்பறை விழுப்புரத்தில் பரபரப்புBJP Cadre cheating | ”பணத்தை ஆட்டைய போட்டபாஜக நிர்வாகி!” கதறும் பெண்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!!  சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!! சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Embed widget