மேலும் அறிய

Emergency Declared Day: எமர்ஜென்சி அமலுக்கு வந்த நாள் - இந்திரா காந்தியின் முடிவுக்கான காரணங்கள் தெரியுமா?

Emergency Declared Day: இந்தியாவில் எமர்ஜென்சியை அமல்படுத்தி இன்றுடன் 50 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.

Emergency Declared Day: எமர்ஜென்சியை அமல்படுத்த இந்திரா காந்தியை உந்தித் தள்ளிய, முக்கிய நிகழ்வுகள் கீழே விவரிக்கப்பட்டுள்ளன.

1975ல் இந்தியாவில் அவசரநிலை பிரகடனம்:

ஜூன் 25, 1975 அன்று நள்ளிரவில், அன்றைய பிரதமர் இந்திரா காந்தியின் ஆலோசனையின் பேரில், அப்போதைய குடியரசு தலைவர் ஃபக்ருதீன் அலி அகமது இந்தியாவில் அவசர நிலையை பிரகடனப்படுத்தினார். இந்த அறிவிப்பு மார்ச் 21, 1977 வரை அமலில் இருந்தது. இந்திரா காந்தி மக்களவக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது என்று நீதிமன்றம் தீர்ப்பளித்த சிறிது நேரத்திலேயே, அவசர நிலையை பிரகடனப்படுத்துவதாக அகில இந்திய வானொலியில் ஒலிபரப்பில் இந்த அறிவிப்பை இந்திரா காந்தி வெளியிட்டார் . அப்போது, "குடியரசு தலைவர் அவசரநிலையை அறிவித்துள்ளார். பீதி அடையத் தேவையில்லை" என தெரிவித்தார்.  

அவசர நிலைக்கான காரணங்கள்:

தேர்தல் வெற்றி செல்லாது என நீதிமன்றம் தீர்ப்பளித்தது மட்டுமே அவசர நிலையை அமல்படுத்தியதற்கான காரணம் அல்ல. 1971ம் ஆண்டு வங்கதேச போரை வென்று இருந்தாலும், அடுத்தடுத்து பல்வேறு பிரச்னைகளை அவர் எதிர்கொள்ள வேண்டி இருந்தது.

  • குறிப்பாக போரால் இந்திய பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டு இருந்தது. 
  • எதேச்சதிகார அணுகுமுறை மற்றும் நீதித்துறை போன்ற நிறுவனங்களின் அந்தஸ்தை தகர்த்தது மற்றும் பிரதமர் அலுவலகத்திடம் அதிகாரத்தை குவிப்பது ஆகியவற்றால் நாடு இதுவரை கண்டிராத அமைதியின்மையை எதிர்கொண்டது
  • பொதுத் தலைவர்கள் மீது கொலை முயற்சிகள் அரங்கேற, ரயில்வே அமைச்சர் லலித் நாராயண் மிஸ்ரா வெடிகுண்டு தாக்குதலில் உயிரிழந்தார்
  • குஜராத்தில் மாநில அரசுக்கு எதிராக வெடித்த போராட்டட்தால் ஆட்சி கவிழ்ப்பு அரங்கேறியது
  • இந்த நிகழ்சுகள் முழு நாட்டிலும் வளர்ந்து வந்த சட்டம் மற்றும் ஒழுங்கு பிரச்சனையை சுட்டிக்காட்டியது. இதுதொடர்பாக ஆலோசகர்கள் பலமுறை இந்திரா காந்தியை எச்சரித்தனர்
  • 1974ம் ஆண்டு மே மாதம் நாட்டின் மிகப்பெரிய தொழிற்சங்கமான ரயில்வே ஊழியர் சங்கம், நாடு தழுவிய ரயில்வே வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டது. இந்திரா காந்தி அரசாங்கத்தால் கொடூரமாக நசுக்கப்பட்டது, இது ஆயிரக்கணக்கான ஊழியர்களைக் கைது செய்தது மற்றும் அவர்களது குடும்பங்களை குடியிருப்புகளிலிருந்து வெளியேற்றியது.

அவசர நிலை பரிந்துரையும், இந்திரா காந்தி முடிவும்..!

இதுபோன்ற அடுத்தடுத்த நிகழ்வுகளால் உள்நாட்டில் அமைதியின்மை ஏற்பட்டு, அரசுக்கு எதிரான மனநிலை வலுவாக இருந்தது. எனவே,”உள்நாட்டு கலவரங்களால் இந்தியாவின் பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் அபாயம் உள்ளது” என குறிப்பிட்டு மேற்கு வங்கத்தின் அப்போதைய முதலமைச்சர் சித்தார்த்த ஷங்கர் ரே அவசர நிலையை முன்மொழிந்துள்ளார். ஆனால், முதலில் இந்திரா காந்தி அதனை நிராகரித்துள்ளார். இத்தகைய சூழலில் அவரது வெற்றியே செல்லாது என நீதிமன்றம் தீர்ப்பளிக்க, உடனடியாக நாடு முழுவதும் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டது.

இந்திரா காந்தியின் வாக்குறுதியும், உண்மையான கள நிலவரமும்..!

அவசரநிலை பிரகடனம் தொடர்பாக மக்கள் அச்சப்பட வேண்டாம் என இந்திரா காந்தி வாக்குறுதி அளித்தார். ஆனால், அந்த சட்டத்தின் விளைவு மிக மோசமாக இருந்தது என்பதே உண்மை. ஒவ்வொரு ஆறு மாதத்திற்கு பிறகும் இந்த அவசர நிலை புதுப்பிக்கப்பட்டு அமலுக்கு வந்தது. அந்த வகையிலான  இந்த கொடூரமான 21 மாதங்களில், சிவில் உரிமைகள் கடுமையாக கட்டுப்படுத்தப்பட்டன. பத்திரிக்கை சுதந்திரம் குறைக்கப்பட்டது மற்றும் வெளியிடப்படும் எந்தவொரு தகவலும் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் ஒப்புதலை பெற வேண்டும்.  மனித உரிமை மீறல்கள் தினசரி நடக்க, பல இடங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பல எதிர்க்கட்சி தலைவர்கள் உட்பட மக்களை விசாரணையின்றி போலீசார் சிறையில் தள்ளினர். ஒருவழியாக அவசரநிலை முடிவுக்கு வந்து 1977ம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற தேர்தலில், இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது. இந்திய வரலாற்றின் கருப்பு தினங்களாக இன்றளவும் கருதப்படும் இந்த அவசர நிலை காலகட்டமானது, இன்றளவும் காங்கிரசின் தீராப்பழியாக தொடர்கிறது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

CM Stalin: அடுத்த தேர்தல் அல்ல, தலைமுறையை சிந்திக்கும் அரசு; 75 ஆயிரம் காலியிடங்கள் நிரப்பப்படும்- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
அடுத்த தேர்தல் அல்ல, தலைமுறையை சிந்திக்கும் அரசு; 75 ஆயிரம் காலியிடங்கள் நிரப்பப்படும்- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
Ayodhya: முதல் மழைக்கே அயோத்தி கோயில் மேற்கூரையில் கசிவு, வடிகால் வசதி இல்லை -  தலைமை அர்ச்சகர்
Ayodhya: முதல் மழைக்கே அயோத்தி கோயில் மேற்கூரையில் கசிவு, வடிகால் வசதி இல்லை - தலைமை அர்ச்சகர்
AFG Vs BAN, T20 Worldcup: வங்கதேச புலிகளை வேட்டையாடிய ஆஃப்கானிஸ்தான் அரையிறுதிக்கு தகுதி - ஆஸ்திரேலியா வெளியேற்றம்
AFG Vs BAN, T20 Worldcup: வங்கதேச புலிகளை வேட்டையாடிய ஆஃப்கானிஸ்தான் அரையிறுதிக்கு தகுதி - ஆஸ்திரேலியா வெளியேற்றம்
TN Assembly Session LIVE: அடுத்த தேர்தலை அல்ல.. அடுத்த தலைமுறையை பற்றி சிந்திக்கிறோம் - முதலமைச்சர் ஸ்டாலின்
TN Assembly Session LIVE: அடுத்த தேர்தலை அல்ல.. அடுத்த தலைமுறையை பற்றி சிந்திக்கிறோம் - முதலமைச்சர் ஸ்டாலின்
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Accident News :  BIKE-ல் மோதிய பேருந்து..தூக்கி வீசப்பட்ட இளைஞர் பதற வைக்கும் CCTV காட்சிNEET Exam  : நீட் மறு தேர்வு..எழுத வராத மாணவர்கள்! நடந்தது என்ன?Amudha IAS Transfer? : இப்படி பண்ணிட்டிங்களே. அமுதா IAS Transfer? அப்செட்டில் ஸ்டாலின்!Trichy Surya |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Stalin: அடுத்த தேர்தல் அல்ல, தலைமுறையை சிந்திக்கும் அரசு; 75 ஆயிரம் காலியிடங்கள் நிரப்பப்படும்- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
அடுத்த தேர்தல் அல்ல, தலைமுறையை சிந்திக்கும் அரசு; 75 ஆயிரம் காலியிடங்கள் நிரப்பப்படும்- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
Ayodhya: முதல் மழைக்கே அயோத்தி கோயில் மேற்கூரையில் கசிவு, வடிகால் வசதி இல்லை -  தலைமை அர்ச்சகர்
Ayodhya: முதல் மழைக்கே அயோத்தி கோயில் மேற்கூரையில் கசிவு, வடிகால் வசதி இல்லை - தலைமை அர்ச்சகர்
AFG Vs BAN, T20 Worldcup: வங்கதேச புலிகளை வேட்டையாடிய ஆஃப்கானிஸ்தான் அரையிறுதிக்கு தகுதி - ஆஸ்திரேலியா வெளியேற்றம்
AFG Vs BAN, T20 Worldcup: வங்கதேச புலிகளை வேட்டையாடிய ஆஃப்கானிஸ்தான் அரையிறுதிக்கு தகுதி - ஆஸ்திரேலியா வெளியேற்றம்
TN Assembly Session LIVE: அடுத்த தேர்தலை அல்ல.. அடுத்த தலைமுறையை பற்றி சிந்திக்கிறோம் - முதலமைச்சர் ஸ்டாலின்
TN Assembly Session LIVE: அடுத்த தேர்தலை அல்ல.. அடுத்த தலைமுறையை பற்றி சிந்திக்கிறோம் - முதலமைச்சர் ஸ்டாலின்
Breaking News LIVE: தங்க விலை குறைவு.. இன்றைய நிலவரம் என்ன?
Breaking News LIVE: தங்க விலை குறைவு.. இன்றைய நிலவரம் என்ன?
Russia jobs scam : “இளைஞர்களே உஷார் !!! ரஷ்யாவில் வேலை, நல்ல சம்பளம் என வலைவிரிக்கும் கும்பல்” நம்பினால் கெட்டீர்கள்..!
Russia jobs scam : “இளைஞர்களே உஷார் !!! ரஷ்யாவில் வேலை, நல்ல சம்பளம் என வலைவிரிக்கும் கும்பல்” நம்பினால் கெட்டீர்கள்..!
Julian Assange Is Free: விக்கி லீக்ஸ் நிறுவனர் ஜுலியன் அசாஞ்சே விடுதலை - 1901 நாள் சிறைவாசம் முடிவடைந்தது எப்படி?
Julian Assange Is Free: விக்கி லீக்ஸ் நிறுவனர் ஜுலியன் அசாஞ்சே விடுதலை - 1901 நாள் சிறைவாசம் முடிவடைந்தது எப்படி?
Team India Squad: ஷ்ரேயாஸ் ஐயர் முதல் நடராஜன் வரை.. ஜிம்பாப்வே அணியில் தேர்வு பெறாத தகுதியுள்ள வீரர்கள்..!
ஷ்ரேயாஸ் ஐயர் முதல் நடராஜன் வரை.. ஜிம்பாப்வே அணியில் தேர்வு பெறாத தகுதியுள்ள வீரர்கள்..!
Embed widget