Breaking News LIVE: வெடிகுண்டு மிரட்டல்.. நெல்லை ரயில் நிலையத்தில் பரபரப்பு!
Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் காண, ஏபிபி இணைய செய்தி தளத்துடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.
LIVE

Background
Breaking News LIVE: வெடிகுண்டு மிரட்டல்.. நெல்லையில் பரபரப்பு!
நெல்லை ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மோப்பநாய் உதவியுடன் தற்போது காவல் துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். ரயில்வே பாதுகாப்பு படையினர் மற்றும் தீயணைப்புத்துறையினரும் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருவள்ளூரில் தனியார் பெயிண்ட் குடோனில் திடீர் தீ விபத்து - தீயை அணைக்க போராட்டம்
திருவள்ளூர் மாவட்டம் மணலி புதூரில் தனியார் பெயிண்ட் குடோனில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்.
Breaking News LIVE: சிவராஜ் சிங் சவுகானுக்கு சிறப்பான வரவேற்பு
மத்திய அமைச்சராக பதவியேற்ற பிறகு முதல் முறையாக போபால் வந்தடைந்த மத்திய அமைச்சரும், மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வருமான சிவராஜ் சிங் சவுகானுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
#WATCH | Union Minister and former Madhya Pradesh CM Shivraj Singh Chouhan received a grand welcome as he arrived in Bhopal for the first time after taking oath as Union Minister pic.twitter.com/jCpQxNowkh
— ANI (@ANI) June 16, 2024
Breaking News LIVE: உலகின் மிக உயரமான ரயில்வே பாலம்
ராம்பன் மாவட்டத்தில் உள்ள சங்கல்தான் மற்றும் ரியாசி இடையே புதிதாக கட்டப்பட்ட உலகின் மிக உயரமான ரயில்வே பாலம்-செனாப் ரயில் பாலத்தை ரயில்வே அதிகாரிகள் விரிவான ஆய்வு செய்தனர். இந்த வழித்தடத்தில் விரைவில் ரயில் சேவை தொடங்கும்.
#WATCH | J&K: Railway officials conducted an extensive inspection of the newly constructed world's highest railway bridge-Chenab Rail Bridge, built between Sangaldan in Ramban district and Reasi. Rail services on the line will start soon. pic.twitter.com/48ETYT1GpB
— ANI (@ANI) June 16, 2024
Breaking News LIVE: நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் - அகிலேஷ் யாதவ்
நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக மாணவர்களுக்கு வழங்கப்பட்ட கருணை மதிப்பெண்கள் ரத்து செய்யப்பட்டன. இதனிடையே நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி, முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் போர்க்கொடி தூக்கி வருகின்றனர்.
அந்த வகையில் தற்போது நீட் தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும் என உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.
நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பதே ஒரே நாடு; ஒரே கோரிக்கை எனவும் வலியுறுத்தியுள்ளார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

