மேலும் அறிய

”இந்தியா பெண்களுக்குப் பாதுகாப்பானதுதான்” : சைக்கிள் பயணம் செய்யும் 24 வயது வீராங்கணை

நவம்பர் 1ம் தேதி தனது சைக்கிளில் தனியாக பயணம் மேற்கொண்ட ஆஷா, அவரது சில அனுபவங்களை பகிர்ந்துள்ளார்

மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதான தடகள வீராங்கனையும், மலையேறும் வீராங்கனையுமான ஆஷா மால்வியா, இந்தியாவில் பெண்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள் என்பதை உலகுக்குக் காட்டும் விழிப்புணர்வில் ஈடுபட்டுள்ளார். நவம்பர் 1ம் தேதி தனது சைக்கிளில் தனியாக பயணம் மேற்கொண்ட ஆஷா,  திருவனந்தபுரம் சென்றடைந்தார். பெண்களின் பாதுகாப்பு மற்றும் அதிகாரமளித்தல் பற்றிய விழிப்புணர்வை உலகிற்கு ஏற்படுத்த 20,000 கி.மீ அவர் சைக்கிளில் பயணம் செய்ய உள்ளார்.

“பெண்களுக்கு இந்தியா பாதுகாப்பற்றது என்று வெளிநாடுகளில் உள்ள பலர் நம்புகிறார்கள். இதுவரை மத்தியப் பிரதேசம், குஜராத், மகாராஷ்டிரா, கோவா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் பயணம் செய்து 6,700 கி.மீ. நான் கடந்து வந்த ஆறாவது மாநிலம் கேரளா, இதுவரை எல்லா இடங்களிலிருந்தும் கிடைத்த வரவேற்பும் அனுபவமும் அமோகமாக இருக்கிறது,” என்று அடுத்து தமிழ்நாட்டை நோக்கித் தனது பயணத்தைத் தொடங்கும் ஆஷா கூறுகிறார்.  அவர் முதல்வர் பினராயி விஜயன், போக்குவரத்துத் துறை அமைச்சர் மற்றும் கவர்னர் ஆகியோரை சந்தித்துப் பேசினார்.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Aasha Malviya (@cyclist_aasha)

கொச்சியில் தனக்கு ஏற்பட்ட விரும்பத்தகாத அனுபவத்தைத் தவிர, கேரளாவில் தனது பயணம் மறக்கமுடியாதது என்று மேலும் அவர் தனது அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டார். அப்படி என்ன விரும்பத்தகாத அனுபவம் என்று கேட்டதற்கு ”நான் எர்ணாகுளம் கலெக்டரை சந்திக்க முயன்றபோது அவர் மறுத்துவிட்டார். நான் காத்திருந்தபோது கலெக்டர் எனக்கு நேரம் கொடுக்காமல் சென்று விட்டார்” என்கிறார் ஆஷா. மத்தியப் பிரதேச சுற்றுலாத் துறையின் ஆதரவுடன் இந்தப் பயணத்தைத் தொடங்கினார் ஆஷா. மத்தியப் பிரதேச அரசு ஆஷாவுக்கு ஜிபிஎஸ் பொருத்தப்பட்ட ஹைப்ரிட் சைக்கிள் ரோம்-2 மற்றும் சைக்கிள் கிட் ஆகியவற்றை வழங்கியுள்ளது.

மலையேறும் வீராங்கனையான ஆஷா, நேபாளம்-பூடான்-வங்காளதேச எல்லையில் டென்சிங் கான் (19,545 அடி) மற்றும் பிசி ராய் (20,500 அடி) ஆகியவற்றை அடைந்து நேஷனல் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் மற்றும் ஓஎம்ஜி புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் இடம்பிடித்துள்ளார். மூன்று வயதில் தந்தையை இழந்த ஆஷா, தனது வாழ்க்கையில் பல முரண்பாடுகளை எதிர்கொண்டார்.

"எனது இந்தத் தனி பயணம் ஆகஸ்ட் 2023ல் டெல்லியில் முடிவடையும், இதை அடுத்து நமது ஜனாதிபதி மற்றும் பிரதமரை சந்திக்க விரும்புகிறேன்," என்கிறார் ஆஷா. பயணத்தை முடித்ததும், ஆஷா தனியாக வேறு சில நாடுகளுக்கு சைக்கிள் பயணம் செய்ய திட்டமிட்டுள்ளார்

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
6483
Active
15945
Recovered
113
Deaths
Last Updated: Wed 18 June, 2025 at 09:41 pm | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

ஆயிரத்தில் ஒருவன்.. விமான விபத்தில் உயிர் தப்பிய அந்த ஒரு நபர்.. பதற்றத்துடன் நடந்து செல்லும் காட்சி 
ஆயிரத்தில் ஒருவன்.. விமான விபத்தில் உயிர் தப்பிய அந்த ஒரு நபர்.. யார் இந்த ரமேஷ்?
’’சரியாக வேலை செய்யவில்லை; ஏதோ தவறாக உணர்ந்தேன்’’- விபத்துக்குள்ளான விமானத்தில் பயணித்தவர் பதிவு!
’’சரியாக வேலை செய்யவில்லை; ஏதோ தவறாக உணர்ந்தேன்’’- விபத்துக்குள்ளான விமானத்தில் பயணித்தவர் பதிவு!
Air India Plane Crash: அகமதாபாத் கோர விமான விபத்துக்கு காரணம் பறவைகளா.? - DGCA கூறுவது என்ன தெரியுமா.?
அகமதாபாத் கோர விமான விபத்துக்கு காரணம் பறவைகளா.? - DGCA கூறுவது என்ன தெரியுமா.?
Vadapalani Bus Terminal: டோட்டலாக மாறப் போகும் வடபழனி; ரூ.481 கோடில என்ன வரப்போகுது தெரியுமா.? கேட்டா அசந்துடுவீங்க.!
டோட்டலாக மாறப் போகும் வடபழனி; ரூ.481 கோடில என்ன வரப்போகுது தெரியுமா.? கேட்டா அசந்துடுவீங்க.!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

பூட்டியிருந்த வீட்டில் தீ விபத்து சிலிண்டர் வெடித்ததால் பரபரப்பு பகீர் கிளப்பும் காட்சி Coimbatore Cylinder Blastசாப்பிட்டபடி பஸ் ஒட்டிய DRIVER பீதியில் உறைந்த பயணிகள்! ஆம்னி நிறுவனம் அதிரடி! | Careless Drivingகைதாகும் வேல்முருகன்?பாய்ந்தது POCSO வழக்கு சம்பவம் செய்த விஜய்! | Velmurugan TVK Vijay Controversy

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஆயிரத்தில் ஒருவன்.. விமான விபத்தில் உயிர் தப்பிய அந்த ஒரு நபர்.. பதற்றத்துடன் நடந்து செல்லும் காட்சி 
ஆயிரத்தில் ஒருவன்.. விமான விபத்தில் உயிர் தப்பிய அந்த ஒரு நபர்.. யார் இந்த ரமேஷ்?
’’சரியாக வேலை செய்யவில்லை; ஏதோ தவறாக உணர்ந்தேன்’’- விபத்துக்குள்ளான விமானத்தில் பயணித்தவர் பதிவு!
’’சரியாக வேலை செய்யவில்லை; ஏதோ தவறாக உணர்ந்தேன்’’- விபத்துக்குள்ளான விமானத்தில் பயணித்தவர் பதிவு!
Air India Plane Crash: அகமதாபாத் கோர விமான விபத்துக்கு காரணம் பறவைகளா.? - DGCA கூறுவது என்ன தெரியுமா.?
அகமதாபாத் கோர விமான விபத்துக்கு காரணம் பறவைகளா.? - DGCA கூறுவது என்ன தெரியுமா.?
Vadapalani Bus Terminal: டோட்டலாக மாறப் போகும் வடபழனி; ரூ.481 கோடில என்ன வரப்போகுது தெரியுமா.? கேட்டா அசந்துடுவீங்க.!
டோட்டலாக மாறப் போகும் வடபழனி; ரூ.481 கோடில என்ன வரப்போகுது தெரியுமா.? கேட்டா அசந்துடுவீங்க.!
பிளக்கும் சத்தம், புகை, தீ குழம்பு..நடந்தது இதுதான்! விமான விபத்தை நேரில் பார்த்தவர் பரபரப்பு பேட்டி
பிளக்கும் சத்தம், புகை, தீ குழம்பு..நடந்தது இதுதான்! விமான விபத்தை நேரில் பார்த்தவர் பரபரப்பு பேட்டி
Ahmedabad Plane Crash: ‘MAYDAY‘ அழைப்பு விடுத்த ஏர் இந்தியா விமானம்; உடனே அழைத்த கட்டுப்பாட்டு அறை - ஆனால்...
‘MAYDAY‘ அழைப்பு விடுத்த ஏர் இந்தியா விமானம்; உடனே அழைத்த கட்டுப்பாட்டு அறை - ஆனால்...
Ahmedabad Plane Crash: ‘’இந்த ஆண்டு மிகப்பெரிய விமான விபத்து நடக்கும்’’ முன்பே கணித்த ஜோதிடர்- வைரலாகும் பதிவு!
Ahmedabad Plane Crash: ‘’இந்த ஆண்டு மிகப்பெரிய விமான விபத்து நடக்கும்’’ முன்பே கணித்த ஜோதிடர்- வைரலாகும் பதிவு!
Ahmedabad Plane Crash: கண் முன்னே நொறுங்கிய குஜராத் விமானம்; மகளைப் பார்க்கச்சென்ற முன்னாள் முதல்வர் நிலை என்ன?
Ahmedabad Plane Crash: கண் முன்னே நொறுங்கிய குஜராத் விமானம்; மகளைப் பார்க்கச்சென்ற முன்னாள் முதல்வர் நிலை என்ன?
Embed widget