மேலும் அறிய

" விபத்தில்லா தொப்பூர் கணவாய்" - தருமபுரி எம்பியிடம் உறுதியளித்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி

கட்ட மேட்டில் இருந்து போலீஸ் குடியிருப்பு வரை ஒரு தொகுப்பும் போலீஸ் குடியிருப்பு முதல் ரயில்வே இரட்டை பாலம் வரை உயர்மட்ட மேம்பால சாலை மற்றொரு தொகுப்பாகவும் அமைக்கப்படுகிறது.

தர்மபுரி மாவட்டம் தொப்பூர் கணவாயில் ரூ.905 கோடியில் உயர்மட்ட பால சாலை அமைக்க வனத்துறையிடம் தடையில்லா சான்று பெற்றவுடன் பணி தொடங்கும் என தர்மபுரி திமுக எம்.பி. அ.மணியிடம் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி உறுதி அளித்துள்ளார்.

தர்மபுரி மாவட்ட எல்லையில் தொப்பூர் கணவாய் உள்ளது. இக்கணவாயின் வழியாக தேசிய நெடுஞ்சாலை எண் - 44 செல்கிறது. கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. சாலையின் இருபுறமும் மலைகளால் சூழ்ந்த தொப்பூர் கணவாய் 3.5 கிலோமீட்டர் தூரம் செல்கிறது.

பாறைகளால் சூழ்ந்த இந்த கணவாய் மேடு இறக்கம் நிறைந்த பகுதியாக உள்ளதால் அதிக விபத்துகள் நடக்கிறது. தர்மபுரி மாவட்ட மக்கள் மற்றும் வாகன ஓட்டுநர்கள் மக்கள் பிரதிநிதிகள் வைத்த கோரிக்கையை ஏற்று அரசு உயர் மட்ட மேம்பாலம் சாலை அமைக்க ரூ.775 கோடி மதிப்பீடு தயாரிக்கப்பட்டது.

ரூ.905 கோடி திட்ட மதிப்பீடு

தற்போது ரூ.905 கோடியாக திட்ட மதிப்பீடு தயாரித்து நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. சாலை அமைக்க டெண்டர் விடும் பணி முடிந்து இத்திட்டத்தின் கீழ் தொப்பூர் கணவாய் மலைப்பகுதியில் ஆறு வழிச்சாலையாக அமைக்கப்பட உள்ளது.

கட்ட மேட்டில் இருந்து போலீஸ் குடியிருப்பு வரை ஒரு தொகுப்பும் போலீஸ் குடியிருப்பு முதல் ரயில்வே இரட்டை பாலம் வரை உயர்மட்ட மேம்பால சாலை மற்றொரு தொகுப்பாகவும் அமைக்கப்படுகிறது.

கிராமங்களுக்கு செல்ல ரவுண்டானா

தர்மபுரி மாவட்டத்தில் 5 கிலோமீட்டர் சேலம் மாவட்டத்தில் 1.6 கிலோமீட்டர் என மொத்தம் 6.6 km தூரம் உயர் மட்ட மேம்பாலம் சாலை அமைக்கப்படுகிறது. தொப்பூர் கிராமத்திற்கு செல்லவும், மேச்சேரி சாலையில் செல்லவும் ரவுண்டானா அமைக்கப்படுகிறது. மேலும் கணவாயில் 90-க்கும் மேற்பட்ட பில்லர்கள் 15 அடி முதல் 30 அடி உயரம் வரை பில்லர்கள் அமைக்கப்பட உள்ளது. சர்வே பணிகள் முடிந்து நிலம் எடுக்கப்பட்டுவிட்டது. வனத்துறையிடம் இருந்து 14 ஏக்கர் நிலம் எடுக்கப்படுகிறது. இதற்காக மாற்று இடம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் வனத்துறையிடம் இருந்து தடையில்லா சான்று கிடைக்க வேண்டி உள்ளது.

 

IMG-20240810-WA0036

மத்திய அமைச்சரை நேரில் சந்தித்த தர்மபுரி எம்பி. மணி

இந்த நிலையில் நேற்று தர்மபுரி திமுக எம்.பி., ஆ. மணி டெல்லியில் ஒன்றிய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரியை நேரில் சந்தித்து மனு அளித்தார். மனுவில் குறிப்பிட்டிருப்பதாவது:- தர்மபுரி மாவட்டம் தொப்பூர் கணவாய் பகுதியில் பல ஆண்டுகளாக விபத்துகள் அதிகம் நடக்கும் பகுதியாக உள்ளது. இந்த விபத்துகள் பலத்த காயங்கள் மற்றும் உயிரிழப்புகளை விளைவிப்பதால் அப்பகுதி மக்கள் மற்றும் சாலை பயன்படுத்துபவர்கள் மிகுந்த கவலை அடைந்துள்ளனர். பாதுகாப்பான பயணத்திற்கு உயர்த்தப்பட்ட நெடுஞ்சாலை மற்றும் ஆறு வழிச்சாலை ஆகியவற்றை கட்டாயமாக அமைக்க வேண்டும்.

இந்த சாலை பணிக்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டியதை  நாங்கள்  பெரிதும் பாராட்டுகிறோம். 4 கிலோ மீட்டர் தூரத்திற்கு உயர்மட்ட மேம்பால சாலையை மற்றும் ஆறு வழிச்சாலையாக மேம்படுத்தும் திட்டம் 905 கோடி ஆகும். சாலை பயனாளிகள் எதிர்கொள்ளும் தற்போதைய சிரமங்களை நிவர்த்தி செய்யும்  இதற்காக உள்கட்டமைப்பு திட்ட செயல்முறையை விரிவுபடுத்த வேண்டும்.

 தர்மபுரி தொகுதியின் எம்பி என்ற முறையில் இந்த வழித்தடத்தில் வசிப்பவர்கள் மற்றும் பயணிகள் அன்றாடம் சந்திக்கும் சவால்கள் மற்றும் ஆபத்துகளை நான் உன்னிப்பாக அறிவேன். இந்த திட்டத்தை விரைந்து முடிப்பது சாலை பாதுகாப்பை அதிகரிப்பது மட்டுமல்லாமல் மென்மையான மற்றும் நம்பகமான போக்குவரத்தை உறுதி செய்வதன் மூலம்  பொருளாதார வளர்ச்சிக்கும் பங்களிக்கும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார் மனுவை பெற்ற அமைச்சர் வனத்துறையின் தடையில்லா சான்று பெற்றவுடன் தொப்பூர் கனவாய் உயர்மட்ட மேம்பாலம் நெடுஞ்சாலை பணி தொடங்கும் என்றார்

 

 

தலைப்பு செய்திகள்

Dharmapuri power cut: தருமபுரியில் நாளை (13-08-2026) எங்கெல்லாம் பவர் கட்? - மின்வாரியம் வெளியிட்ட பட்டியல்
தருமபுரியில் நாளை (13-08-2026) எங்கெல்லாம் பவர் கட்? - மின்வாரியம் வெளியிட்ட பட்டியல்
Dharmapuri power cut: தருமபுரியில் நாளை (11-08-2026) எங்கெல்லாம் பவர் கட்? - மின்வாரியம் வெளியிட்ட பட்டியல்
தருமபுரியில் நாளை (11-08-2026) எங்கெல்லாம் பவர் கட்? - மின்வாரியம் வெளியிட்ட பட்டியல்
தருமபுரிக்கு பேருந்து சேவை வெறும் வசதியல்ல; அது சமூகநீதி ஆயுதம்! – அமைச்சருக்கு சௌமியா அன்புமணி MLA பறக்கவிட்ட அவசரக் கடிதம்!
தருமபுரிக்கு பேருந்து சேவை வெறும் வசதியல்ல; அது சமூகநீதி ஆயுதம்! – அமைச்சருக்கு சௌமியா அன்புமணி MLA பறக்கவிட்ட அவசரக் கடிதம்!
Dharmapuri power cut: தருமபுரியில் நாளை (ஜூலை 15) எங்கெல்லாம் மின் தடை: உங்க பகுதி லிஸ்டில் இருக்கா?
தருமபுரியில் நாளை (ஜூலை 15) எங்கெல்லாம் மின் தடை: உங்க பகுதி லிஸ்டில் இருக்கா?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
இனி ஆபீஸில் உட்கார முடியாது... காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம் – அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
இனி ஆபீஸில் உட்கார முடியாது! காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம்! அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
"வாக்குறுதி என்ன ஆச்சு?" - 110 விதியில் அறிவிப்பு வருமா? முதல்வருக்குப் பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை!
Vettri Investment Conclave: தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
Embed widget