”மோடி ஜி போராளி! அவர் மேல நம்பிக்கை இருக்கு” பாராட்டி தள்ளிய ரஜினி
என் பிரதமர் மோடி ஜி மேல எனக்கு நம்பிக்கை இருக்கு அவர் ஒரு போராளி காஷ்மீர் விவகாரத்தில் தரமான பதிலடி கொடுப்பார் என்று மோடியை நடிகர் ரஜினிகாந்த் புகழந்து தள்ளியுள்ளது கவனம் பெற்றுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கி வைக்கப்படும் நான்கு நாள் உலக ஆடியோ விஷுவல் மற்றும் பொழுதுபோக்கு உச்சி மாநாடு WAVES வியாழக்கிழமையான இன்று மும்பையில் உள்ள ஜியோ வேர்ல்ட் சென்டரில் தொடங்கியது.உலகளாவிய அதிகார மையமாக இந்தியாவின் குரலை விரிவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டு இந்த விழா நடதப்படுகிறது.
இதில் நெட்ஃபிக்ஸ், அமேசான், கூகிள் , மெட்டா, சோனி , ரிலையன்ஸ் போன்றப்100க்கும் மேற்பட்ட முன்னணி கண்காட்சியாளர்கள் அடுத்த தலைமுறை கண்டுபிடிப்பாளர்களுடன் சேர்ந்து WAVES இல் பங்கேற்கின்றனர். மேலும் திரைத்துறை பிரபலங்கள், அரசியல்வாதிகள் என பலர் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் ரஜினிகாந்த் பேசியதாவது பஹல்காமில் காட்டுமிராண்டித்தனமான, இரக்கமற்ற சம்பவம் நடந்தப் பிறகு, பலர் என்னிடம், இது பொழுதுபோக்கு சார்ந்த நிகழ்ச்சி என்பதால் இந்த நான்கு நாள் நிகழ்ச்சியை அரசு தள்ளிப்போடும்' என்று கூறினர். ஆனால், நான் இந்த நிகழ்ச்சி கட்டாயம் நடக்கும் என்று நம்பிக்கையோடு இருந்தேன். காரணம், எனக்கு என் பிரதமர் மோடிஜி மீது நம்பிக்கை உள்ளது.
ஏனெனில் அவர் ஒரு போராளி. அவர் எந்தவொரு சவாலையும் எதிர்கொள்வார். இதை அவர் நிரூபித்தும் உள்ளார். கடந்த 10 ஆண்டுகளாக அதை நாம் பார்த்து தான் வருகிறோம்.பிரதமர் காஷ்மீர் சம்பவத்தை தைரியமாகவும், அழகாகவும் கையாள்வார். காஷ்மீரில் நிச்சயம் அமைதியையும், நம் நாட்டிற்கு பெருமையையும் கொண்டு வருவார். நான் இந்த நிகழ்ச்சியில் பங்குகொள்வதற்கு மகிழ்ச்சியடைகிறேன். மத்திய அரசுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள் என்று பேசியுள்ளார்.





















