மேலும் அறிய

திருப்பூர்: நூல் விலை உயர்வை கண்டித்து பின்னலாடை நிறுவனங்கள் வேலைநிறுத்தம் ; 350 கோடி ரூபாய் உற்பத்தி பாதிப்பு..!

இப்போராட்டத்தால் மொத்தம் 350 கோடி ரூபாய் மதிப்பிலான பின்னலாடை உற்பத்தி முடங்கும் எனவும், மத்திய அரசு உடனடியாக நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

திருப்பூர் பின்னலாடை துறையினர் நூல் விலை உயர்வை கண்டித்து இன்று முதல் இரண்டு நாட்கள் உற்பத்தி நிறுத்தப் போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தியாவின் டாலர் நகரம், பின்னலாடை நகரம் எனப் பல பெருமைகளை திருப்பூர் கொண்டுள்ளது. சர்வதேச அளவில் ஜவுளித் துறையில் திருப்பூருக்கு முக்கிய இடம் உண்டு. இங்கு தயாராகும் ஆடைகள் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. பின்னலாடை தொழிலில் நிட்டிங், ரைசிங், காம்பாக்டிங், டையிங், பிரிண்டிங், எம்பிராய்டரிங் என 55 தொழில் அமைப்புகள் இயங்கி வருகிறது. 


திருப்பூர்: நூல் விலை உயர்வை கண்டித்து பின்னலாடை நிறுவனங்கள் வேலைநிறுத்தம் ; 350 கோடி ரூபாய் உற்பத்தி பாதிப்பு..!

இந்நிலையில் பருத்தி பஞ்சுக்கு ஏற்பட்ட செயற்கை தட்டுப்பாட்டால் நூல் விலை உயர்ந்து வருகிறது. கடந்த ஓராண்டாக நூல் விலை நிலையில்லாமல் இருந்து வருகிறது. இதன் காரணமாக பின்னலாடை தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது. இந்திய பருத்தி கழகம், பருத்தி பஞ்சு வர்த்தகத்தை வரன்முறை செய்யாததால் தொடர்பில்லாத நிறுவனங்களில் இலட்சக்கணக்கான பேல்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் செயற்கை தட்டுப்பாட்டை ஏற்படுத்தி பஞ்சு விலை அபரிதமாக உயர்த்தப்பட்டுள்ளதாகவும் பின்னலாடை துறையினர் குற்றம்சாட்டியுள்ளனர். 


திருப்பூர்: நூல் விலை உயர்வை கண்டித்து பின்னலாடை நிறுவனங்கள் வேலைநிறுத்தம் ; 350 கோடி ரூபாய் உற்பத்தி பாதிப்பு..!

356 கிலோ கொண்ட ஒரு கேண்டி பஞ்சு விலை ஒரு இலட்சம் ரூபாயை கடந்துள்ளது. வரலாறு காணாத பஞ்சு விலையால் நூற்பாலைகளும் அனைத்து ரக நூல் விலையை கடந்த 18 மாதங்களாக தொடர்ந்து உயர்த்தி வருகின்றன. நூல் விலை கடந்த மாதம் கிலோவுக்கு 30 ரூபாய் உயர்த்தப்பட்ட நிலையில், இம்மாதம் மீண்டும் 40 ரூபாய் நூல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. தொடர்ந்து நூல் விலை உயர்ந்து வருவதால் திருப்பூரில் இயங்கி வரும் பின்னலாடை உற்பத்தி கடும் பாதிப்பை சந்தித்து வருகிறது. மேலும் பனியன் உற்பத்தி சங்கிலியில் உள்ள அனைத்து வகை நிறுவனங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. 


திருப்பூர்: நூல் விலை உயர்வை கண்டித்து பின்னலாடை நிறுவனங்கள் வேலைநிறுத்தம் ; 350 கோடி ரூபாய் உற்பத்தி பாதிப்பு..!

இந்நிலையில் பஞ்சு நூல் விலையை கட்டுப்படுத்த வேண்டும், ஏற்றுமதிக்கு தடை விதிக்க வேண்டும், பருத்தியை யூக வணிகத்திலிருந்து நீக்கி அத்தியாவசிய பொருட்கள் பட்டியலில் சேர்க்கை வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை பின்னலாடை துறையினர் வலியுறுத்தி வருகின்றனர். இக்கோரிக்கைகளை வலியுறுத்தி இன்றும், நாளையும் பின்னலாடை துறையினர் உற்பத்தி நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டத்திற்கு திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம், தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர் சங்கம் உள்ளிட்ட 36 சங்கத்தினர் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதனால் இரண்டு நாட்கள் திருப்பூர் பின்னலாடை உற்பத்தி துறை முடங்கும் எனவும், 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் உற்பத்தி நிறுத்ததில் ஈடுபட்டுள்ளதாகவும் பின்னலாடை துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் இப்போராட்டத்தால் மொத்தம் 350 கோடி ரூபாய் மதிப்பிலான பின்னலாடை உற்பத்தி முடங்கும் எனவும், மத்திய அரசு உடனடியாக நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

கவுண்டம் பாளையம் படம் வெளிவராது; மிரட்டுகிறார்கள்; இனி முடிவை பாருங்கள் - நடிகர் ரஞ்சித்
கவுண்டம் பாளையம் படம் வெளிவராது; மிரட்டுகிறார்கள்; இனி முடிவை பாருங்கள் - நடிகர் ரஞ்சித்
EPS Condolence: ”இதற்காகத்தான் அதிமுக நிர்வாகி வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்” - இபிஎஸ் கூறும் பகீர் பின்னணி!
EPS Condolence: ”இதற்காகத்தான் அதிமுக நிர்வாகி வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்” - இபிஎஸ் கூறும் பகீர் பின்னணி!
Breaking News LIVE, June 5: விக்கிரவாண்டியில் திமுக வேட்பாளரை ஆதரியுங்கள் - முதல்வர் ஸ்டாலின் வீடியோவில் பரப்புரை
Breaking News LIVE, June 5: விக்கிரவாண்டியில் திமுக வேட்பாளரை ஆதரியுங்கள் - முதல்வர் ஸ்டாலின் வீடியோவில் பரப்புரை
Kohli Rohit: விண்ணை பிளந்த முழக்கம் - கோப்பையுடன் கோலி & ரோகித் செய்த சம்பவம், ரசிகர்கள் குஷி - வைரல் வீடியோ
Kohli Rohit: விண்ணை பிளந்த முழக்கம் - கோப்பையுடன் கோலி & ரோகித் செய்த சம்பவம், ரசிகர்கள் குஷி - வைரல் வீடியோ
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Namakkal woman bus fall video | பேருந்தில் இருந்து தவறி விழுந்த பெண்! பதறவைக்கும் CCTV காட்சிTeam India Victory Parade | தோளில் உலகக் கோப்பை! இந்திய வீரர்களின் ENTRY! கட்டுக்கடங்காத கூட்டம்Subramanian Swamy | ”சோனியா, ராகுலுடன் டீல்! கொலை வழக்கு பயமா மோடி?” பற்றவைத்த சுப்ரமணியன் சுவாமிTN Cabinet Reshuffle | பதறும் அமைச்சர்கள்.. கட்டம் கட்டிய ஸ்டாலின்! அமைச்சரவையில் மாற்றம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கவுண்டம் பாளையம் படம் வெளிவராது; மிரட்டுகிறார்கள்; இனி முடிவை பாருங்கள் - நடிகர் ரஞ்சித்
கவுண்டம் பாளையம் படம் வெளிவராது; மிரட்டுகிறார்கள்; இனி முடிவை பாருங்கள் - நடிகர் ரஞ்சித்
EPS Condolence: ”இதற்காகத்தான் அதிமுக நிர்வாகி வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்” - இபிஎஸ் கூறும் பகீர் பின்னணி!
EPS Condolence: ”இதற்காகத்தான் அதிமுக நிர்வாகி வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்” - இபிஎஸ் கூறும் பகீர் பின்னணி!
Breaking News LIVE, June 5: விக்கிரவாண்டியில் திமுக வேட்பாளரை ஆதரியுங்கள் - முதல்வர் ஸ்டாலின் வீடியோவில் பரப்புரை
Breaking News LIVE, June 5: விக்கிரவாண்டியில் திமுக வேட்பாளரை ஆதரியுங்கள் - முதல்வர் ஸ்டாலின் வீடியோவில் பரப்புரை
Kohli Rohit: விண்ணை பிளந்த முழக்கம் - கோப்பையுடன் கோலி & ரோகித் செய்த சம்பவம், ரசிகர்கள் குஷி - வைரல் வீடியோ
Kohli Rohit: விண்ணை பிளந்த முழக்கம் - கோப்பையுடன் கோலி & ரோகித் செய்த சம்பவம், ரசிகர்கள் குஷி - வைரல் வீடியோ
TNPL: கிரிக்கெட் ரசிகர்களே தயாரா? இன்று சேலத்தில் தொடங்கும் டிஎன்பிஎல் 8வது சீஸன்
TNPL: கிரிக்கெட் ரசிகர்களே தயாரா? இன்று சேலத்தில் தொடங்கும் டிஎன்பிஎல் 8வது சீஸன்
Rasipalan: கும்பத்துக்கு பக்தி, மீனத்துக்கு மகிழ்ச்சி -  உங்கள் ராசிக்கு என்ன பலன் தெரியுமா?
Rasipalan: கும்பத்துக்கு பக்தி, மீனத்துக்கு மகிழ்ச்சி - உங்கள் ராசிக்கு என்ன பலன் தெரியுமா?
பக்தியோட சென்ற சிறுமிக்கு பாலியல் தொந்தரவு.. முதல்வருக்கு பறந்த புகார்! சிக்கிய பாதிரியார்!
பக்தியோட சென்ற சிறுமிக்கு பாலியல் தொந்தரவு.. முதல்வருக்கு பறந்த புகார்! சிக்கிய பாதிரியார்!
Team India: இந்திய அணிக்கு 125 கோடி ரூபாயை பரிசாக வழங்கிய பிசிசிஐ.. குதூகலத்தில் வீரர்கள்!
Team India: இந்திய அணிக்கு 125 கோடி ரூபாயை பரிசாக வழங்கிய பிசிசிஐ.. குதூகலத்தில் வீரர்கள்!
Embed widget