மேலும் அறிய

தமிழ்நாட்டில் மேற்கு மாவட்டங்களில் கவனிக்கவேண்டிய முக்கியச் செய்திகள்..

கோவை பள்ளி மாணவி தற்கொலை வழக்கு விசாரணை, பன்றிக்காய்ச்சல் பாதிப்பு, தொடரும் மழை, இலங்கை ரவுடி அங்கொடா லொக்கா கூட்டாளிகளை விசாரிக்க அனுமதி உள்ளிட்ட முக்கியச் செய்திகள் இதோ...

கோவை பள்ளி மாணவி தற்கொலை வழக்கு தொடர்பாக 4 தனிப்படைகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் மாணவியின் வீடு, கைதான ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி வீடு, பள்ளி முதல்வர் அறை, மாணவியின் நண்பர் வீடு ஆகிய இடங்களில் காவல் துறையினர் சோதனை நடத்தினர். இதில் 2 செல்போன், ஒரு மடிக்கணினி, மாணவியின் நோட்டு புத்தகங்கள் உள்ளிட்டவற்றை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவையில் பன்றிக்காய்ச்சல் பாதிப்பு இல்லை என மாவட்ட நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. கோவை மாநகராட்சி நிர்வாகம் பன்றிக்காய்ச்சல் உறுதியான இருவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்து இருந்தது. இந்நிலையில் இருவருக்கும் வீரியம் குறைந்த இன்ப்லுயன்சா ஏ வகை காய்ச்சல் பாதிப்பு தான் ஏற்பட்டதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இலங்கை போதை பொருள் கடத்தல் மன்னன் அங்கொட லொக்கவின் கூட்டாளி சனுகா தனநாயகா மற்றும் அவருக்கு அடைக்கலம் அளித்த கோபால கிருஷ்ணன் ஆகியோரை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி காவல் துறையினருக்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. கடந்த 2020 ம் ஆண்டு சரவணம்பட்டி பகுதியில் தங்கியிருந்த அங்கொட லொக்கா மர்மமான முறையில் உயிரிழந்தார். இந்த வழக்கை விசாரித்து வரும் சிபிசிஐடி காவல் துறையினர், பெங்களூருவில் பதுங்கி இருந்த இருவரையும் கைது செய்தனர்.

வட கிழக்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று மாலையும் பல்வேறு இடங்களில் மிதமான மழை பெய்தது.  

நீலகிரி மாவட்ட அதிமுக அவைத்தலைவர் பொறுப்பில் இருந்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கோபாலகிருஷ்ணன் நீக்கப்பட்டுள்ளார். தீபாவளி பண்டியையின் போது மது போதையில் நிர்வணமாக அடுத்தவரின் வீட்டிற்குள் சென்று ரகளை செய்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தமிழகத்தின் உரிமைகள் எம்.ஜி.ஆர் ஆட்சி காலத்திலேயே விட்டுக்கொடுக்கப்பட்டது என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார். முல்லைப் பெரியாறு அணையை வலுப்படுத்த திமுகதான் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டதாகவும் அவர் தெரிவித்தார்.

மேட்டூர் அணை உபரிநீரை 100 ஏரிகளில் நிரப்பும் திட்டம் கடந்த ஆட்சியில் தேர்தல் நேரத்தில் அவசரகதியில் தொடங்கப்பட்டதால், அரைகுறையாக விடப்பட்டு ஒரு சில பகுதிகளுக்கு மட்டுமே நீர் செல்கிறது என அமைச்சர் துரைமுருகன் குற்றம்சாட்டியுள்ளார். உபரிநீர் திட்டத்தை திமுக ஆட்சிதான் முழுமையாக நிறைவேற்றும் எனவும், நிலம் ஆர்ஜிதம் செய்யப்பட்ட பிறகு உபரிநீர்த்திட்டம் முழுமையாக நிறைவேற்றப்படும் எனவும் சேலத்தில் அவர் கூறினார்.

தமிழகத்தில் வனப்பகுதிகளை 33 சதவிகிதமாக அதிகரிக்க பணிகள் தீவரப்படுத்தப்பட்டுள்ளன  என வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு வனவிலங்குகளால் பாதிப்புக்கு உள்ளான வழக்குகளில் இழப்பீடு வராதவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், வனப்பகுதிகளில் மண் சார்ந்த மரங்களை அதிகரிக்க நிபுணர் குழு அமைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது எனவும் அவர் கூறினார்.

தருமபுரி மாவட்டம் அரூரில் பெய்த கன மழையால், குடியிருப்பு பகுதிகளில்  வெள்ளம் சூழ்ந்துள்ளது. மேலும் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.

தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் கிணற்றில் விழுந்த சம்பவத்தில் தந்தை, மகள் ஆகிய இருவர் உயிரிழந்தனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
6836
Active
14772
Recovered
109
Deaths
Last Updated: Tue 17 June, 2025 at 10:44 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

"மக்கள் மீது உண்மையான அக்கறை இருந்தா இதை செய்யுங்க" என்ன சொல்ல வருகிறார் விஜய்?
Premalatha: கூட்டணிக்கு 40.! கூட்டணிக்கு 40.! - தேமுதிகவின் புதிய மந்திரம் இதுதான் - என்ன விஷயம் தெரியுமா.?
கூட்டணிக்கு 40.! கூட்டணிக்கு 40.! - தேமுதிகவின் புதிய மந்திரம் இதுதான் - என்ன விஷயம் தெரியுமா.?
London Flight Cancelled: அகமதாபாத்துக்கும் லண்டனுக்கும் ராசி இல்லையோ.! விபத்துக்குப்பின் செல்ல இருந்த விமானத்தில் கோளாறு
அகமதாபாத்துக்கும் லண்டனுக்கும் ராசி இல்லையோ.! விபத்துக்குப்பின் செல்ல இருந்த விமானத்தில் கோளாறு
இனி உணவுலாம் வீணாகாது, இளைஞர்களுக்கு வேலை; தமிழக அரசுடன் ஒப்பந்தம் போட்ட ஐஐடி சென்னை- எதற்கு தெரியுமா?
இனி உணவுலாம் வீணாகாது, இளைஞர்களுக்கு வேலை; தமிழக அரசுடன் ஒப்பந்தம் போட்ட ஐஐடி சென்னை- எதற்கு தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Udhayanidhi Stalin : ’’அவர் கேட்டால் கொடுப்போம்’’ உதயநிதிக்கு PROMOTION போட்டுடைத்த ஆர்.எஸ்.பாரதிபொய் சொல்லி 2 -வது திருமணம் ரூ.18.5 லட்சம் அபேஸ் ஆட்டையை போட்ட சீரியல் நடிகைIsrael Attack | நேரலையில் செய்தி வாசித்த பெண்.. திடீரென தாக்கிய இஸ்ரேல்! பதற வைக்கும் வீடியோThirupattur | ”வெளிய வா உன்ன...” கத்தியை காட்டி மிரட்டல்!அடாவடியில் ஈடுபட்ட இளைஞர்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"மக்கள் மீது உண்மையான அக்கறை இருந்தா இதை செய்யுங்க" என்ன சொல்ல வருகிறார் விஜய்?
Premalatha: கூட்டணிக்கு 40.! கூட்டணிக்கு 40.! - தேமுதிகவின் புதிய மந்திரம் இதுதான் - என்ன விஷயம் தெரியுமா.?
கூட்டணிக்கு 40.! கூட்டணிக்கு 40.! - தேமுதிகவின் புதிய மந்திரம் இதுதான் - என்ன விஷயம் தெரியுமா.?
London Flight Cancelled: அகமதாபாத்துக்கும் லண்டனுக்கும் ராசி இல்லையோ.! விபத்துக்குப்பின் செல்ல இருந்த விமானத்தில் கோளாறு
அகமதாபாத்துக்கும் லண்டனுக்கும் ராசி இல்லையோ.! விபத்துக்குப்பின் செல்ல இருந்த விமானத்தில் கோளாறு
இனி உணவுலாம் வீணாகாது, இளைஞர்களுக்கு வேலை; தமிழக அரசுடன் ஒப்பந்தம் போட்ட ஐஐடி சென்னை- எதற்கு தெரியுமா?
இனி உணவுலாம் வீணாகாது, இளைஞர்களுக்கு வேலை; தமிழக அரசுடன் ஒப்பந்தம் போட்ட ஐஐடி சென்னை- எதற்கு தெரியுமா?
EPS CM Stalin: 80 வயது பாட்டிக்குமா? ”பாதுகாப்பில்லை, தண்டனை இருக்கு” ஸ்டாலினை ரவுண்டு கட்டிய எடப்பாடி
EPS CM Stalin: 80 வயது பாட்டிக்குமா? ”பாதுகாப்பில்லை, தண்டனை இருக்கு” ஸ்டாலினை ரவுண்டு கட்டிய எடப்பாடி
மன்னிப்பு கேட்க சொல்ல நீங்க யார் ? கமல் பக்கம் திரும்பிய உச்ச நீதிமன்றம். கர்நாடக அரசுக்கு அதிரடி உத்தரவு
மன்னிப்பு கேட்க சொல்ல நீங்க யார் ? கமல் பக்கம் திரும்பிய உச்ச நீதிமன்றம். கர்நாடக அரசுக்கு அதிரடி உத்தரவு
Asra Garg IPS: ஏடிஜிபியா இருந்தா எனக்கென்ன? எதற்கும் துணிந்த அஸ்ரா கார்க் ஐபிஎஸ் யார்?
Asra Garg IPS: ஏடிஜிபியா இருந்தா எனக்கென்ன? எதற்கும் துணிந்த அஸ்ரா கார்க் ஐபிஎஸ் யார்?
Covid 19 Lockdown: என்னாது.. கொரோனா பரவலால் ஞாயிறு முழு ஊரடங்கா? அமைச்சர் மா.சு. சொன்னது என்ன?
Covid 19 Lockdown: என்னாது.. கொரோனா பரவலால் ஞாயிறு முழு ஊரடங்கா? அமைச்சர் மா.சு. சொன்னது என்ன?
Embed widget